சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

திருக்கேதீச்சரம்

“மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரு மிவ்வானின் இலங்கைக் குறியுறுஞ்
சாருந் தில்லைவனத் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுனை மிவைசிவ பூமியே”

எனச் சிறப்பாகத் திருமந்திரத்திற் கூறப்படும் சிவபூமியாகய ஈழநாட்டிற் கீர்த்தி வாய்ந்த அதிபுராதன. சிவாலயங்கள் பலவுள. அவற்றுள் திருக்கேதீச்சரமும் ஒன்றாகும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியன மூன்றும் முறையாக அமைந்த பதி திருக்கேதீச்சரம். கேது, மயன், மகாதுவட்டா, மண்டோதரி இராமன், அகத்தியர் முதலாம் பெருந்தவத்தோர்கள் குறைநீங்க வழிபட்டு
அருள்பெற்றுய்ந்த வரலாறுடைய தலம் இதுவாகும்
. தேவர்கள் இங்கு அர்த்தசாமப் பூசை செய்வதாக ஓர் ஐதிகமும் உண்டு. புரட்டாதி மாதப் பூர்வபட்ச சதுர்த்தசித் திதியே தேவர்கள் அர்த்தசாமப் பூசை நாளாகும்.

கேது வழிபட்ட தலமாதலின் இது கேதிச்சரமெனப் பெயர் பெற்றதாம்.
விசயன் இந்நாட்டிற்கு வந்தபோது வடக்கே சரிமல்ச்சாரலிலே திருத்தம்பலேசுவரன் கோயிலையும், கிழக்கில் கோணேசார் கோயிலையும், தெற்கில் சந்திரசேகர ஈசுவரன் கோயிலையும் (மாத்தறையில் அழிபாடடைந்துவிட்ட கோயில். இக்கோயிலின் அழகிய நந்தி ஒன்று 1956 பெப்பிரவரி ஸ்ரீலங்கா சஞ்சிகையில் வெளியாகியிருந்தது. மேற்கில் திருக்கேதீச்சரத்தையும் வழிபட்டுத் திருப்பணி வேலைகள் பல செய்ததாகவும் வரலாறு கூறுகின்றது. திருக்சேதீச்சரம் இருக்கும் இடத்திற்கு “மாதோட்டம்” எனப்பெயர் வந்த காரணம், சூரபன்மனுடைய மனைவியின் தகப்பனுடையதகப்பன் பெயர் துவட்டா என்பதனாலாம். அவன் நெடுங்காலம்பிள்ளைப் பேறில்லா இருந்து, திருக்கேதீச்சரத்திற்கு வந்து பாலாவியில் நீராடி, கேதீச்சரப் பெருமானை வழிபட்டு
வத்தமையால் பிள்ளைப்பாக்கியம் கிடைத்ததாம். இதனால் அவன் அவ்விடத்தை ஒரு நகரமாக்கி அங்கு வாழத் தலைப்பட்டானாம் “துவட்டா” என்னும் பெயர்கொண்ட அவனால் உண்டாக்கப்பெற்ற நகரமானமையால் அது “துவட்டா” ஆகிப் பெருநகரமானபோது “மாதுவட்டா” ஆயதாகவும், காலக்கிரமத்தில்
அச்சொல் திரிபடைந்து “மாதோட்டம்” எனப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாலய மகாலிங்கத்தைப் பூசித்த தேவர்களும் முனிவர்களும் சித்தி முத்திளைப் பெற்றிருப்பதனால், இவ்வாலயம் மூர்த்தி விசேடம் பெற்று விளங்குகின்றது.
தன்னை அடைந்து இறந்தோர்க்குப் பிரணவ உபதேசஞ் செய்யும் இடமாக திருக்கேதீச்சரம் இருப்பதால், தலவிசேடம் மிக்க தலமாகவும் விளங்குகின்றது.

இவ்வாலயத் இர்த்தமாய பாலாவிக் கரையிற் பிதிர்க்கடன் செய்வோர்க்குக் காயாவிற் செய்யும் சிராத்த புண்ணிய பலன் கூடும் என்பதனால், இங்கு நீராடிக் கேதீச்சரப் பெருமானை வழிபடுவோருக்குப் பிரமகத்தி முதலிய பாவங்கள் நீங்குகின்றதனால் தீர்த்த விசேடமும் பெற்ற தலமாகின்றது இவ்வாலயம். இந்நாட்டு
ஆதிக்குடிகளாகிய நாகர்களது தலையாய வணக்கத்தலமாக விளங்கியதும் கேதீசரமேயாகும். இதனால் நாகநாதர் என்ற பழம்பெயர் ஒன்றும் கேதீச்சரப் பெருமானுக்குண்டு. இது நாகர்களது தொன்மையை
எடுத்துக் காட்டுவதுடன், இந்நாட்டுச் சைவநெறியினதும், திருக்கேதீச்சரத்தனதும் தொன்மையையும் வலியுறுத்துஞ் சான்றுமாகின்றது.

7ஆம் 8ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சிவானுபூதிச் செல்வர்களாகிய திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளாலும், சுந்தரமூர்த்தி சுவாமிகளாலும் தேவாரத் திருப்பதிகங்கள் பாடப்பட்ட பேரருள் மிக்க பெருஞ் சிவத்தலம் இதுவாகும். அப்பர், சுவாமிகளின் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் “பூதியணி
பொன்னிறத்தர்” என்ற பாடலிலும், சுந்தரரின் இருநாட்டுத். தொகையில் “ஈழநாட்டு மாதோட்டம்” என்ற பாடலிலும் சேக்கிழாரின் பெரியபுராணத் இதில் “அந்நகரில் அமர்ந்தங்கண்-மன்னுமிரா மேசுரத்து” என்னும் பாடலிலும் திருக்கேதீச்சரம் இடம்பெற்றிருக்கின்றமை பெருமைக்குரியதாகும். சோழரும் பாண்டியரும் திருப்பணிகள் பல செய்ததும் வன்னி நாட்டரசரதும், யாழ்ப்பாணத்தரசரதும் இறை
உணர்ச்சியால் நித்திய நைமித்தியங்கள் நியமமாகச் செய்து வளர்க்கப்பட்ட பெருமைக்குரியதுமான, பெரும் பதி இதுவாகும். இத்திறச் சீரும் சிறப்பும் பழம் பெருமையும் மகிமையும் வாய்ந்த ஈழத் தமிழரின்
இப் புண்ணிய திருத்தலம், காலச் சுழற்சியிற் சிக்குண்டு சிதைவுற்று அழிந்து மண்மேடாகும் நிலை ஏற்பட்டது. திருக்கேதீச்சரம் இருக்கும் இடம் “வன்னிநாடு” என்று கூறப்படும். இவ்வன்னி நாடு 3000 சதுரமைல் பரப்பளவு கொண்டதாகும். இவ்வன்னி நாட்டிலுஞ் சிறப்பாக திருக்கேதீச்சர ஆலயச் சூழலில் மேலும் பல
திருத்தலங்கள் அக்காலத்தில் இருந்ததாகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவர்கள் கூற்றுப்படி திருக்கேதீச்சரம் அந்நாளில் ஒரு கோயிற் பட்டினம் (City of Temple) எனப்படுகின்றது.

அந்நாளில் இவ்வாலயக் கோட்டஞ் சிற்பத்தில்வல்ல தபதிகளுக்கு உறைவிடமாக, இருந்ததாகக் கருதப்படுகின்றது. இன்று காடுமண்டிக் கிடக்கும் வளமிக்க வன்னிப் பிரதேசத்தில் திருக்கேதீச்சரம் போன்ற பல உன்னத சிவாலயங்கள் இருந்திருக்கின்றன என்பதும், அவை இன்று கண்ணுக்கு எட்டாது அழிந்தும், மறைந்துங் கிடக்கின்றன என்பதும் அகழ்வாராய்ச்சியாளர் தேற்றமாகும். அன்றைய. பாலாவியின் முகத்துவாரத்தில் மாந்தைத் துறைமுகம் அமைந்து இருந்தது. அங்கே மலைபோன்ற அலைகள் எழுந்தும் விழுந்தும் காட்சியளித்தன. களஞ்சியக் கட்டடங்களும், பாலத்துறையும் பாலாவியின் தென்கரையில் அமைந்து விளங்கின. அவ்விடம் இன்றும் “வங்காலை” (வங்கம் – கப்பல் காலை- தங்கும் நிலையம். கப்பல்கள் தங்கும் நிலையம்) என்ற பெயருடன் நிலவக் காணலாம்.

பாலாவியின் வடகரையில் திருக்கேதீச்சர ஆலயம் அமைந்து திகழ்ந்தது. அதை அடுத்து அதன் பரிபாலகர்களின் இல்லங்களும், மக்கள் வாழ்ந்த வளம்மிக்க மாளிகைகளும் காணப்பட்டன. அந்நாளில் மாளிகைகள் நிலவிய உயர்ந்தவிடம் “மாளிகைத்திடல்” என்றும், அந்தணர்க்குரிய இடங்கள் “பாப்பாமோட்டை” என்றும் கோயில் நிலத்திற்கு நீர்பாய்ச்சும் குளம் “கோயிற்குளம்” என்றும், இருந்தவை, இன்றும் அதே பெயர்களில் இருந்து வருவதை நாம் காணலாம். திருவிராமேசுவரமுடைய மகாதேவன் கோவில் என இன்னோர் கோவில் இங்கு இருந்ததாகவும் வரலாறு இருக்கின்றது. பத்தாம், பதினோராம். நூற்றாண்டுகளில். திருக்கேதீச்சரம் “இராசராசேசுவர மகாதேவன் கோவில்” எனச்சோழர்களால் அழைக்கப்பட்டு வந்தது.

புத்த தந்தம் பகையரசன் கைக்குப் போகாது பாதுகாத்தற்காகக் கலிங்கத்திலிருந்து கொண்டு வரப்பட்டபோது, கொண்டு வந்தவர் மாந்தோட்டையில் இறங்கியதாகவும், அன்று இரவு அவர் ஓர் ஆலயத்தில் தங்கியதாகவும் கூறப்படுகின்றது. அவ்வாலயம் பெரும்பாலும் திருக்கேதீச்சரம் ஆகவே இருக்கக்கூடுமென ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். சிதம்பரத்தில் உள்ள கல்வெட்டு ஒன்றின்படி 12ஆம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியன் என்பவனால் இவ்வாலயம் பிற்காலப் பாண்டியர் சிற்பமுறையில் திருப்பிக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இவ்வாலயம் போர்த்துக்கேயரினால் இடிக்கப்பட்டபோது, இடித்த ஆலயத்திற் சூறையாடப்பட்ட விக்கிரகங்கள் மாதோட்டத்தில் முதலாவதாகப் போர்த்துக்கேயரினால் கட்டப்பட்ட தேவாலய அத்திவாரத்தில் இடப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
மூன்று முழுநூற்றாண்டுகள் இருந்த இடமே தெரியாமல் இருந்த திருக்கேதீச்சர நிலத்தை வாங்கி, அதில் கோயில் எடுத்துப் பழைமை நாட்டப்பட வேண்டுமென அவாரவியவர் சைவசமயத்தை விளக்கமுறச் செய்ய, அவதாரமூர்த்திபோல் வந்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களேயாம். இவர்கள் “யாழ்ப்பாணத்துச்
சமயநிலை” என்னும் துண்டுப் பிரசுரத்தில் இது பற்றி வெளியிடப்பட்டதை அறிந்த கொழும்பு தம்பையா முதலியாரும், சுபதார் வைத்திலிங்கமும், மாத்தளை தபாற்கோச்சு ஒப்பந்தக்காரராகிய ஆசைப்பிள்ளையும் அவர் கனவை நனவாக்க முன்வந்தனர்.

ஆயின், 1887 இல் நடந்த ஏலத்தில், அரசாட்சியார் விதித்த நிபந்தனைகளின் கொடூரம் காரணமாக இவர்கள் இதனைக் கொள்ள இயலாதவராயினர். 1890இல் கண்ணியமுள்ள சைவப்பெரியோர் சிலர் யாழ்ப்பாண மாவட்ட அதிபரைக் கேட்டதையொட்டி,
சைவர்களுக்கே இந்நிலத்தைக் கொடுக்கும்படி அரசினர்க்குத் தனது அறிக்கையில். அவர் பரிவுரை செய்துள்ளார். இத் திருக்கேதீச்சரத் தலத்திற்கு வேறு எப்பாடல் பெற்ற சிவத் தலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பொன்று உண்டு. அது, “கோயிலோ, உருவமோ, பூசையோ யாதொன்றுமே இன்றி மூன்று முழு நூற்றாண்டுகளுக்கு மேலான காலம் தமிழ் வேதமாகிய தேவாரதி திருவுருவில் மட்டுமே.
கேதீச்சரப்பெருமான் உறைந்திருந்தார்” என்பதாம்.
இந் நிலைக்கு உள்ளாகி இருந்த இத் திருப்பதியின் பழைய இடத்தைக்கண்டறிந்து, அதில் கோயில் எடுத்துப் பழைமையை நிலைநாட்ட வேண்டுமென்ற முயற்சியில் முதன் முதலீடுபட்டவர், 19ஆம் நூற்றாண்டில் சைவத்தின் விடிவெள்ளியாக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். அவர்கள் ஆவர்.

மன்னாருக்குச் சமீபத்திலுள்ள மாதோட்டத்தில் “திருக்கேதீச்சரம்” என்னும் தேன்பொந்து ஒன்று உளது. அங்கு மருந்து ஒன்று மறைந்திருக்கின்றது. அதனைச் சென்றடையுங்கள் என ஆங்கில ஆண்டு ஐப்பரி மாசம் (1872) சைவ உலகிற்கு விஞ்ஞாபனம் ஒன்றை நாவலர் பெருமான் விடுத்தார்கள். இதனைக் கேள்விப்பட்டு அப்போது இதில் முதலாவதாக முயற்சித்தவர் திருக்கேதீச்சரத்திற்கு அண்மையில்
உள்ள விடத்தல்தீவு என்னும் ஊரினராகய திரு. வி. வேலுப்பிள்ளை என்பவராவர்.
இன்றைய திருக்கேதீச்சரத் திருப்பணிச் சபைக்கு மூல வித்திட்டவர் நாவலர் ஐயா அவர்களே என்பதும், திருக்கேதீச்சரம் புனர்நிருமாணம் பெறவேண்டுமென முதன் முதலாகக் குரல் கொடுத்த சபை “யாழ்ப்பாணம் சைவபரிபாலனசபை” என்பதும் இங்கு நினைவு கூரற்பாலனவையாம்.

மாவட்ட அதிபர் விதப்புரைப்படி, விஜய ஆண்டு கார்த்திகை 29ஆம் நாள் (13-12-1893) புதன்கிழமை அவிட்ட நன்நாளில் நடைபெற்ற ஏலத்தில் பழைய கோவில் இருந்த இடத்தோடு கூடிய 43 ஏக்கர் 3 றுட் 33 போர்ச் காடடைந்த நிலம் நாட்டுக்கோட்டை நகரத்தவராகிய சைவப்பெரியார் ராம. அரு.பழனியப்பசெட்டியார் அவர்களால், 3,100 ரூபாவுக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் கொள்வனவு செய்யப்பட்டது.
1894ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வண்ணை சித. மு. பசுபதிச்செட்டியார் அவர்கள் திருவாளர்கள் இ. இராமுப்பிள்ளை வைத்தியர்வை. ஆறுமுகப்பிள்ளை, தா. இராகவப்பிள்ளை முதலானோர் உதவியுடன் மேற்கொண்ட முயற்சியால், ஐய ஆண்டு ஆனி. முதலாம் நாள் (13-06-1894) புதன்கிழமையன்று பழைய ஆலயம் இருந்த இடமும், தீர்த்தக் கிணறு ஒன்றும், பழைய ஆலயப் பிரதிட்டாலிங்கம் ஒன்றும், திருநந்தி,
சோமஸ்கந்தர், கணேசர் ஆகிய மூர்த்திகளது சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. இதன் நிமித்தம் இன்று கோயிலுள்ள இடத்தில் சிறு கோயில் ஒன்று கட்டப்பட்டு, அங்குநூதனப் பிரதிட்டை செய்யப்பட்ட மூர்த்திகளுக்கு, சோபகிருது ஆண்டு. ஆனித்திங்கள் 14ஆம் நாள் (28-6-1903) ஞாயிற்றுக்கிழமை வளர்பிறைச் சதுர்த்தசியும், அவிட்ட நட்சத்தரமும் கூடிய நன்னாளில் முதலாவது திருக்குட, முழுக்குச் செய்யப்பட்டது. அன்று ஆதி மூலக் கருவறையில் பிரதிட்டை செய்யப்பட்ட சிவலிங்கம் காசியிலிருந்து
கொண்டுவரப்பட்டுக் குடமுமுக்குச் செய்யப்பட்டதாக திருவிராமேசுவர வரலாறுகள் கூறுகின்றன. இதன் பின்னர் நித்திய பூசைகள் செய்யப்படுதற்கேற்ற ஒழுங்குகளும் செய்யப்பட்டன.

இத்தலத்தில் மேலும் தொடர்ந்து பல திருப்பணிகள் செய்யப்பட்டு கி. பி. 1910இல் இன்னொரு திருக்குட முழுக்குஞ் செய்யப்பட்டது. இத்தலத்திற் கொண்டிருந்த பத்திசிரத்தையினாற் திரு. பசுபதிச்செட்டியார் தனது ஆன்மார்த்த பூசையில்
திருக்கேதீச்சரப் பெருமானையே ஆவாகித்துப் பூசித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட ஆலயமும், பழுதடைந்து காடு மண்டிக் கிடந்ததினால், இதனைப் புதுப்பிக்க வேண்டிய நிலை இத்நாட்டுச் சைவர்களுக்கு ஏற்படலாயிற்று. பல சைவப் பெரியோரின் பல ஆண்டு முயற்சியால் இந்நாட்டுச் சைவார்களை விழிப்படைய செய்யவும், திருக்கேதீச்சரசத்தைப் பழைய
உன்னத நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கத்திற்காகவும், “ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம்” என்ற பெயரில் இயங்கவந்த சைவ தாபனத்தின் தொண்டர்கள் சார்பில், 1948ஆம் ஆண்டு
ஒக்தோபர் 3ஆம், 4ஆம் திகதிகளில் திருக்கேகீச்சரத்தில் சைவமாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அம்மாநாட்டிற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தகை சான்ற சைவப்பெரியோர் பலர் வருகை தந்திருந்தனர்.
இக் கூட்டத்தைக் கூட்ட முன்னோடியாக நின்று அயராது உழைத்தவர்கள் வேலணையூரைச் சேர்ந்த திரு. வி. கே. செல்லப்பாச்சாமி அவர்களும், திருக்கேதீச்சரத் திருவாசக மடத்தின் கர்த்தாவாகிய திரு.சி. சரவணமுத்துச்சாமி அவர்களும், வழக்கறிஞர் திரு. சு. சிவசுப்பிரமணியம் அவர்களுமாவர். அன்று அங்கு
கூடிய அம் மாநாடு திருக்கேதீச்சரம் புனர் நிருமாணம் பெறவேண்டுமென்ற விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. அப்பெருவிருப்பை அடித்தளமாகக் கொண்டு 1948 ஐப்பசி 28இல் கொழும்பு பம்பலப்பிட்டி நகரத்தார் கதிரேசன் கோயிலிற் கூட்டிய மன்றில் உதயமான சபைதான் இன்றைய
திருக்கேதீச்சரம் ஆலயத் திருப்பணிச்சபை ஆகும். இதன் முதற், தலைவர் சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் அவர்கள், செயலாளர் பணடிதர் அ.சிற்றம்பலம் ஆவார். திருப்பணிச்சபை உதயமாகிய பின்னரும் கோயில் உரிமைகள் நாட்டுக்கோட்டை நகரத்தவரிடமே இருந்துவந்தன. 2-8-1956 இல் கூட்டப்பட்ட ஆலய பஞ்சாயக் கூட்டத்திற் செய்துகொண்ட யோசனைப்படி 14-9-1956 இல் இருக்கேதீச்சர ஆலயத்தில் விசேட அபிடேக ஆராதனைகள் செய்து, மங்களகரமான
நல்லோரையில் நகரத்தாரின் நல்லிணக்கத்துடன் அவர்களிடமிருந்து திருப்பணிச் சபையார் ஆலய பரிபாலனத்தைப் பொறுப்பேற்றனர். கோவில் சம்பந்தமான கணக்குகளை நகரத்தார் 8-11-56 இல் சபையாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பணி :
இத்திருப்பணிச்சபையாரின் வேண்டுகோட்படி தமிழ் நாட்டைச் சேர்ந்த திருவாளர்கள் மு. செல்லக்கண்ணுஸ்தபதி. மு. வைத்தியநாதஸ்தபதி ஆகியவர்களினால் கோயிற் சிற்பாகமமுறைப்படி வரைவு செய்யப்பட்டு; காவா: சிவஸ்ரீ ஈசான சிவாசாரியார் அச்சுவேலி சிவஸ்ரீ குமாரசாமிக்குருக்கள், சைவப்பெரியார் திரு சு.சிவபாதசுந்தரம் கட்டடக்கலைஞர் திரு. வி. நரசிம்மன் ஆகியோரது அங்கீகாரம்பெற்ற வரைபடத்திற்கு
அமைய சுவாமி அம்பாள் கோவிற்கருவறைகளும், அவற்றோடிணைந்த அர்த்தமண்டபம் வரையான பகுதிகள் கருங்கற் திருப்பணியாகவும், விமானம், இராசகோபுரம், விநாயகர் முதலான, பரிவார கோட்டங்கள் பலவும் கலவைக்கட்டாகவும், நாட்டின் நாற்றிசையோரதும்-கடல் கடந்த நாடுகளாகிய
மலேசியா, சிங்கப்பூர், தென்னாடு ஆகியவற்றிலுள்ள அடியார்களதும் பெரும் பொருட்செலவில் எழுந்திருக்கும் பெரும்கோயிலே இன்று நாம் காணும் திருக்கேதீச்சரம். இதற்குத் திருக்குடத் திருமஞ்சனம்
நடந்த நாள் நள ஆண்டு ஆனி உக (4-7-1976). இத்திருப்பணிக்காக இவ்வாலயம் பாலத்தாபனம் செய்யப்பட்ட நாள் 6-6-71 ஆகும். இப்போதைய கௌரியம்பாள் கோவிற் கருங்கற் திருப்பணிகள் முழுவதும் மலேசியநாட்டுக் கிளைச் சங்கத்தனராற் கட்டிமுடிக்கப்பட்டதாகும். இப்பொழுது இவ்வாலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் திருப்படிவங்களிற் பெரும்பாலானவை,
தமிழ்நாட்டு மாமல்லபுரத்துச் சிற்பக்கலைக் கல்லூரியிற் செய்யப்பட்டனவாகும்.
பலவித சிறப்பம்சங்களுடன் பொலிவுதரும் இப் புதுக்கோயில் இந்நாட்டில் காணப்படாச் சில புதுப் பெர்லிவுகளுடனும் அமைந்திருக்கின்றது. ஐம்பொன்னால் வார்க்கப்பட்டிருக்கும் சோமஸ்கந்தரும், திருமுறைக் கோயிலும், சந்தானாசாரியர் கோயிலும் திருக்கேதீச்சரத்தின் கீர்த்தியையும் கவர்ச்சியையும்
மேலும் மேலும் உயர்த்துவனவாகும்.

திருக்கேதீச்சரத் திருப்பணிச்சபை உதயமான பின்னர் திருப்பணிகள் செய்து 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருக்குடமுழுக்கு ஒன்று செய்வித்தனர். இது இன்று மதுரை திருஞானசம்பந்தர் மடத்துக் குரு முதல்வராக விளங்கும் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாசாரிய சுவாமிகள், அன்று குலசேகரபட்டினம் திரு. கே. வி. எஸ். சுந்தரம் என்னும் பூர்வாசிரமப் பெயருடையவரது செலவில் நடைபெற்றதாகும். பின்னர்
ஆலயச் சுற்றில் பூமியின் அடியிலிருந்து எடுக்கப்பட்ட பழைய மகாலிங்கத்தையும், விநாயகர், சுப்பிரமணியர், நடராசர், சண்டேசுரர் முதலான மூர்த்திகளையும் அந்தந்த மூர்த்திகளுக்குரிய திருச்சுற்று இடங்களில் பிரதிட்டைசெய்து 24- -10-1960இல் இன்னோர் திருக்குடமுழுக்குஞ் செய்யப்பட்டது. 1968இல் ஆவணி 19ஆம் நாள் இராசகோபுரத். திருக்குடத் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனோடு
திருச்சுற்றலுள்ள சோமஸ்கந்தர், மகாவிஷ்ணு, பஞ்சலிங்கம், ஆறுமுகசுவாமி, பள்ளியறை, மகாலட்சுமி, சந்திரன் முதலான கோயில்களுக்கும் திருக்குடத் திருமஞ்சனம் நடைபெற்றது. இவ்வேளையில் பண்டைய திருக்கேதீச்சரத்தை அமைப்பதற்காக ஒல்லுமட்டும் பல்லாற்றானும் பணிகளையாற்றியும் இடர்களை. அஷ்பவித்தும் பெருஞ்சோதியோடு இணைந்த சேர். கந்தையா வைத்தியநாதன் அவர்களது திருக்கேதீச்சரப் பெரும்பணிகளும், சேறும் சுரியும் நிறைந்த மண் மேடாய்க் இடந்த பாலாவியை மீண்டும் வெட்டி அணைகட்டி நீர்தேங்கி ஒடும் நிலைக்காக்கவைத்த நீர்ப்பாசனப் பொறியியலாளர் திரு. எஸ். ஆறுமுகம் அவர்களின் சேவையும் நம்மவர் நெஞ்சில் என்றென்றும் நிலைத்துநிற்கவேண்டியனவாகும்.
திருக்கேதீச்சர நித்திய நைமித்தியங்கள் நாள் நேரம் தப்பாது நியமமாக நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெறும் அதிசிறப்பு விழா மாசிமாத மகாசிவராத்திரியாகும். அன்று பல்லாயிரக்கணக்கான அடியவர் வந்து பாவம் வினையறுக்கும் பாலாவியில் நீராடி, தேவன் எம்மையாளும் திருக்கேதச்சரத்தில் வழிபாடாற்றுவர்.
திருக்கேதச்சர்த்தைச் சூழ்ந்த இடங்களில் 1887, 1925, 1928, 1950 ஆகிய ஆண்டுகளிற் புதைபொருள் ஆராய்ச்சிப் பகுதியினர் அகழ்வாராய்ச்சி நடத்தியுள்ளனர்.

இன்று இந்நாட்டுச் சைவர்களது மனம் முழுவதும் திருக்கேதீச்சரப் பக்கமே சாய்ந்திருப்பதனால், அன்று நாயன்மாரால் பாடப்பெற்ற பாலாவியின் பண்பையும் திருக்கேதீச்சரச் சிறப்பையும் யாம் ஓரளவிற்குத் திருவருள். கடைக்கணோக்காழ் பெற்றிருக்கின்றனம். இன்று திருக்கேதீச்சரம் யாத்திரை செய்வோர் – தங்குவதற்கு ஏற்ற வசதியில் கோயிலைச் சூழப் பல திருமடங்கள் அமைக்கப்பட்டுள்ளன, திருஞானசம்பந்தர் மடம், சுந்தரர் மடம், திருவாசக மடம், நாவலர் மடம் ( அப்பாமடம்), அம்மா மடம், நகரத்தார் மடம், சிவராத்திரி மடம், திருப்பதி மடம், கௌரி மடம், நடராசர்
மடம் போன்றவை அவைகளாகும். இவற்றோடு அஞ்சலகம், குழாய்நீர், திருக்கேதீச்சரம்
சைவப்பாடசாலை, நூல்நிலையம், – கிராமச்சங்கம், மருத்துவமனை, மின்னொளி, உற்சவகாலங்களில் கிடைக்கும் அரசாங்க உதவிகள் போன்றவை திருக்கேதீச்சரத்தைப் பொலிவு செய்வனவாகும்.

இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவன் பெயர் திருக்கேதீச்சரநாதர் இறைவி பெயர் கௌரி; தீர்த்தம்
பாலாவி; தலவிருட்சம் வன்னி;

வரலாறு பற்றிக் கூறும் அழிந்த நூல்கள் போக எஞ்சியவை தட்சணகைலாய மான்மியம், மாந்தைப் பள்ளு என்பனவாம். இவையன்றி, திருக்கேதீச்சரம் பற்றிய பிற்காலத்திலெழுந்த செய்யுள் நூல்கள் திருக்கேதீச்சரநாதர் திருப்பதிகம் (1949) நயினை திரு. க.இராமச்சந்திரன், திருக்கேதீச்சரநாதர் பிள்ளை விடு தூது (2988)-புங்குடுதீவு பேராசான் திரு. சி. இ. சதாசிவம்பிள்ளை, திருக் கேதச்சரநாதன் ஊஞ்சல் (1966)-கொக்குவில் திரு. த. குமாரசாமிப்பிள்ளை, இருக்கேதீச்சரப் புராணம்
(1970)-அச்சுவேலி சிவஸ்ரீ ச.கு. வைதீஸ்வரக் குருக்கள், திருக்கேதீச்சரத்து கௌரிநாயகி பிள்ளைத்தமிழ் (1976)-புங்குடுதீவு பேராசான் சி.இ. சதாசிவம்பிள்ளை என்பனவாகும்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.