சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில்

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குத் தென்மேற்காகக் கடல்களால் சூழப்பட்ட பல தீவுக் கூட்டங்கள் உள. இவைகள் “சப்த இவுகள்” எனவும்படும். இத்தீவுகளுக்குந் தமிழ் நாட்டிற்கும் வழிபாட்டிலும், வாணிபத் துறையிலும் பண்டை நாட்களில் பெருந் தொடர்புகள் இருந்திருக்கின்றன. அந்நாளில் இராமேசுவரப் பெருமானுக்கு நெடுந்தீவில் (பசுத்தீவு) இருந்து பாலும், கச்சைதீவில் இருந்து பூசைக்கு வேண்டிய பூக்களும் யாழ்ப்பாணத்தரகர்களால் அனுப்பப்பட்டு வந்ததாக வரலாறு உண்டு. இப்படியான இத்தீவுக் கூட்டங்களுள் வரலாற்றுச் சிறப்புமிக்கது நயினாதீவு ஆகும். வரலாற்றுச் சிறப்போடு சைவார்களது வணக்கத்துக்குரிய புராதன சக்திபீடத் தலமகிமை பொருந்தியதும் இதுவாகும். பண்டைநாளில் தமிழ் நாட்டவர்கள்யாத்திரை செய்யும் ஈழத்துத் திருத்தலங்களுள் இவ்வாலயமும் ஒன்றாக விளங்கி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னரெல்லாம் யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகர் சென்று, வத்தைகளிலும், வள்ளங்களிலுமே நயினாவு செல்வர். இப்பொழுது புங்குடுதீவுவரை நெடுஞ்சாலை வசதி உண்டு. இதனால் இப்போ புங்குடுதீவிலிருந்து இயந்திரப்படகு மூலம் இங்கு செல்கின்றனர். இதுவே இக்காலச் சுருக்கமானதும், சுலபமானதுமான வழியாகும்.

ஈழத்தின் வடகோடியில் ஆதியில் நாகர் என்ற இனத்தவார் வாழ்ந்து வந்தனர். இவர்கள் சிவ வணக்கத்தினராவர். இவர்கள் கடவுள் பத்தியிலும், தவத்திலும், சீர்திருத்தத்திலும் மிகவுஞ் சிறந்திருந்தனர். இவர்கள் தங்களுக்குத் தண்டனையைத் தேடிக் கொடுக்கின்ற ஐந்து புலன்களையும் அடக்கி, தங்களுக்கு நித்திய பேரின்ப வாழ்வு அருளவேண்டுமென்ற நினைப்பில் கடவுளை வழிபாடு செய்து வந்தனர். இதற்காகப் பல கோவில்களைக் கட்டிச் சிலை வைத்து வணங்கிவந்தனர். அப்படியான நாகரிக வாழ்வு வாழ்ந்த நாகர்கள் காலத்தில் உருவாய கோவில்களில் ஒன்றுதான் நயினாதீவு நாகபூஷணியம்மன் கோவிலாகும் இந் நாகர்களையும் இவர்களது வழிபாட்டினையும் நினைவுபடுத்தவனவே வடமராட்சி கிழக்கிலுள்ள நாகர் கோயிலில் அமைந்துள்ள நாகதம்பிரான் கோயில், யாழ் மாவட்டக் கரைச்சிப் பகுதி ஊர்களில் ஒன்றாகய புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோயில், மாங்குளத்தையடுத்த புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் கோயில், மூதூரிலுள்ள கட்டை மறிச்சாள் நாகதம்பிரான் கோயில், கொக்கட்டிச்சோலை பண்டாரிவெளி நாகதம்பிரான் போன்ற கோயில்களாம், ஆதிநாகர் கட்டி வழிபட்ட புராதன ஐந்தலை நாகவழிபாட்டுத் திருத்தலங்களின் அழிபாடுகள் “மதவுவைத்த குளம், ‘குருந்துக்குளம் போன்ற இடங்களில் உள. இன்னும் இன்றும் பூநகரியில் நாகதேவன்துறை என்னும் பெயருடைய துறை ஒன்று இருந்து வருவதும் ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் நாகர், நாகநாதன், நாகய்பர், நாகமணி, நாகேந்திரன், நாகராசா, நாகையர், நாகலிங்கம், நாகம்மா, நாகேசுவரி, நாகபூஷணி, நாகநந்தினி, நாகலட்சுமி, நாகரத்தினம் போன்ற இன்றைய வழக்காற்றுப் பெயர்களும் இந்நாட்டுப் பண்டை நாகரை எமக்கு நினைவூட்டும் காரண இக்குறிப் பெயர்களேயாம். இன்னும் நாகர்களால் வழிபடப்பட்ட ஆலயங்களில் ஒன்றே மாதோட்டத்திலுள்ள திருக்கேடச்சரமாகும். திருக்கேதீச்சரநாதருக்கு “நாகநாதர்” என்ற இன்னொரு திருப்பெயர் இருப்பது இதனை வலியுறுத்துகின்றது. எப்படி நாகர் இந்நாட்டுத் தொன்மைமிக்க நாகரிக மக்களாகக் கருதப்படுகின்றனரோ, அப்படியான தொன்மை சைவத்திற்கும் நயினை நாகபூஷணி கோயிலுக்கும் ஈழத்தில் உண்டு என்பது தேற்றம்.

நயினாதீவு நான்கு மைல் சுற்றளவு கொண்ட ஊர். அதில் 150 பரப்பு நிலம் கோயிலும் கோயில் சார்ந்த இடங்களுமாகும். நயினாவுக்கு நாகதீவு, “மணிபல்லவம்”, மணித்தீவு பிராமணத்தீவு போன்ற பெயர்களுமுண்டு. “மணிமேகலை” என்ற காவியத்தில் வரும் “மணிபல்லவம்” இதுதான் என்பது பெரும்பாலான ஆராய்ச்சியாளர் முடிபு. இங்கு கோயில் கொண்டிருக்கும் பெருமாட்டி நாகம்மாள் என்றும், நாகேசுவரி என்றும் போற்றப்படுவாள். இவ்வாலயம் எப்போது தொடக்கப்பட்டதென அறுதியிட்டுக் கூறமுடியாததாகும். உமையம்மைக்குரிய கீர்த்திவாய்ந்த 64 சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்றெனக் கூறப்படுகின்றது. ஆலயம் பற்றிய கர்ண பரம்பரைக் கதை, முன்னொருகாலத்தில் நயினாதவிலுள்ள அம்பிகையின் படிமத்தை அயற்றிவான புளியந்தீவிலிருந்த நாகமொன்று பூசித்து வந்ததாகவும், ஒருநாள் அந்நாகம் அர்ச்சனை செய்தற்காகப் பூக்களைக் கொய்து கொண்டுவரும் வழியில், கருடன் (பருந்து) ஒன்றைக் கண்டஞ்சக், கடற்கரைக்கு அண்மையிலுள்ள கல்லொன்றினைச் சுற்றிக்கொண்டிருந்ததாகவும் . கருடனும் இதனைக் கொல்லும் நோக்குடன் எதிரிருந்த கல்லொன்றில் இருந்ததாகவும், இந்நேரம் இவ்விரண்டினதும் பகைமையை அக்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்த வணிகன் ஒருவன் கண்டு அவற்றைச் சமாதானம் செய்யும் நோக்கோடு தான் சென்றுகொண்டிருந்த கலத்தை நிறுத்து, கருடனை அவ்விடத்தை விட்டு விலகும்படி கேட்டதாகவும், அதற்குக் கருடன் உனது செல்வம் யாவற்றையும் கொணர்ந்து என் முன் வைத்தால் விலகுவேன் என்றதாகவும், ௮வனும் அப்படியே செய்யக் கருடன் விலகியதாகவும், ஊர் திரும்பிய வணிகனது வீட்டிலே பேரொளி ஓன்று தோன்றியதாகவும். அங்கெல்லாம் கண்ணைப் பறிக்கும் நாகரத்ததினக் கற்கள் காணப்பட்டதாகவும், இவை நயினாதீவு, அம்பிகையின் திருவருட் செயலென எண்ணிய வணிகன் யாத்திரை புறப்பட்டு வந்து ௮ம்பான் கோயிலைப் பெரிதாகக் கட்டி நயினாபட்டர் என்பவரைப் பூசைக்கமர்த்து ஆலயத்தை நிர்வகித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. இப்பொழுதும் பாம்பு சுற்றிய கல், கருடனிருந்த கல் என இரு கற்களைப் பொதுமக்கள் காட்டும் வழக்கம் இங்கு உண்டு.

இக்கோயிலுக்கும் வணிகச் செட்டிகளுக்கும் தொடர்புண்டென்பதை இவ்வாலயத்து நகரத்தார் மடம் தெளிவு படுத்துகின்றது, மேலும், இத்தீவு நீண்டகாலம் கப்பற்போக்குவரத்துத் துறைமுகமாக இருந்ததென்பதை இத்தீவின் மேற்குக் கடற்கரையிலுள்ள படகுத்துறை என்னும் பெயர் கொண்ட இடமும், இத்தீவில் கண்டெடுக்கப்பட்ட 12-ஆம் நூற்றாண்டுப் பொலநறுவை அரசனாகிய பராக்கரமவாகுவின் கற்சாசனம் ஒன்றும் வலியுறுத்துகின்றன.

இப்படியாகப் பெரும்புகழுக்கும், மகிமைக்கும், உறைபதியாக விளங்கியதுடன், கடல் வணிகரின் காவற் தெய்வமாகவுமிருந்து அருள்பாலித்து வந்த அன்னையின் இக்கோவிலும் ஏனைய கோவில்கள் போன்று பறங்கியர்களினால் இடித்தழிக்கப்பட்டது. இடித்தழிக்கப்பட்டாலும் புத்தளப்பகுதிமிலுள்ள காரைத்தீவுக் கோயில், கற்பிட்டியிலிருந்த நாச்சியம்மன் கோயில், நீர்கொழும்பிலிருந்த மீனாட்டு அம்மன் கோயில் (மீனாட்சி ஓடையில்), பெந்தோட்டை (டீநவெழவய) காளி கோயில் போன்ற பழம்பெருந் தேவி கோயில்களுக்கு நேர்ந்த கதி இவ்வாலயத்திற்கு நிகழவில்லை. காரணம் இவ்வாலயச் சூழலிலிலுள்ளோர் சமயம் விட்டுச் சமயம் மாறாதிருந்தமையேயாம். மேற்கூறிய பிரதேசக் கோவில்கள் அழிவோடு அழிந்தமைக்குக் காரணம் சைவராக அவ்விடங்களில் வாழ்ந்தோர் தம் சமயம் மாறியிருந்தமையேயாம்.

மேலும், பறங்கியரால் இடியுண்ட நயினை ஆலயம் ஒல்லாந்தர் காலத்தில் சிறிய அளவிற் கட்டப்பட்டது. பின்னர் காலத்துக்குக்காலம் அடியவர்களது நன்நிதியங்கொண்டு திருப்பணிவேலைகள் நடைபேற்று இன்று முழுமையான ஒரு பெருங் கோவிலாக விளங்குகின்றது. கோயிலின் கிழக்கு வாயிலைக் கம்பீரத் தோற்றத்துடன் அணிசெய்வது 1935இல் கட்டி முடிக்கப்பட்ட தூலலிங்கமாகிய கோபுரமாகும்.

ஆலயத்தின் இப்போதுள்ள விமானம், இன்றைய திருக்கேதச்சரம் திருப்பணிகளை மேற்கொண்டு நிறைவுசெய்த காரைக்குடிச் சிற்ப வல்லுனர் திரு. எம். செல்லக்கண்ணு ஸ்தபதியாரினால் பாண்டி நாட்டுச் சிற்பமுறையில் அமைக்கப்பட்டு 25-4-51இல் குடமுழுக்குச் செய்யப்பட்டதாகும்.

உற்சவ காலத்தில் இப்போது அம்பாள் உலா வருந்தேர் “தேர்த் திருப்பணிச் சபை” என ஏற்பாடு செய்யப்பட்ட சபை ஒன்றின்மூலம் செய்துமுடிக்கப்பட்டு, 8-7-57இல் வெள்ளோட்டத்திற்குவிடப்பட்டதாகும். இதனைப் பூர்த்திசெய்தவர் அருட்டிரு குன்றக்குடி அடிகளாரின் ஆலோசனைப்படி அழைக்கப்பட்ட தமிழ் நாட்டு நாகர் கோயிலைச் சேர்ந்த திரு, எஸ். குமாரசாமி ஆசாரியார் ஆவார். இத்தோர் இன்று ஈழத்திலுள்ள முதன்மை பெற்ற சித்திரலங்காரச் செய்கைத் தோர்களுள் ஒன்றாகும்.

இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறுகாலப் பூசைகள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. உற்சவம் ஆனிப் பூரணையில் தீர்த்தமும். அதற்கு முதல் நாள் தேரும் வரக்கூடியதாகப் பதினைந்து நாட்கள் நடைபெறும். உற்சவ காலத்தில் திரள் திரளாக நாகம்மாளைத்தரிசிக்க அடியார்கள் யாத்திரை செய்வர். அம்பாள் தேரில் திருஉலா வரும்போது மெய்யுருகும் அடியார்கள் இடும் “அரோகரா” ஒலிபாம்பன் கடல் ஒலியுடன் கலந்து வானளாவும். அம்பாளின் தேர் இருப்புக்கு வரும்வரை எந்த ஒரு அடியாரும் படகோட்டிகள் கூட ஆலயத்தை விட்டு அடி நகரமாட்டார்கள். கேணித் தீர்த்தம் முடிந்த மறுநாள் இரவு இங்கு தெப்போற்சவம் நடைபெறும். இவ்வாலயத் தனிச்சிறப்பு அம்சங்களுள் இதுவும் ஒன்றாகும், மேலும் நவராத்திரிக் காலத்தில் பார்க்கும் அடியவர் மனதில் பக்தி அநுபவப் பெருக்கு ஏற்படுமாறு விரிவாக இங்கு நடைபெற்று வரும் ஸ்ரீசக்கர பூசையும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தலம் பல மகான்களுக்கும், அறிஞர்களுக்கும், சாதனையாளர்களுக்கும், புலவர்களுக்கும் இருப்பிடமாய் அமைந்துள்ளது. இங்கு ஒரு தனியான ஆத்மீக அலை உண்டு. அந்த அலைதான். பூசை, நேர்த்திக்கடன் என்று கூறிக்கொண்டு நாளாந்தம் ஆட்களை அள்ளுப்பட்டுத் தன்னிடம் ஓடிவரச் செய்கிறது.

இன்று இவ்வாலயம் ஒன்பது பேர் கொண்ட அறங்காவலர் சபை ஒன்றின் மூலமே நிர்வகிக்கப்படுகறது. இவ்வாலயப் பிரதம குருக்களாக விளங்குபவர்தான் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவரான சிவபூசாதுரந்தரர் பிரதஷ்டாபூஷணம் சிவஸ்ரீ ஐ. கைலாயநாதக்குருக்கள் ஆவார்.

இவ்வாலய ஊஞ்சல்பாட்டு வண்ணை ம, அமரசிங்கப் புலவரினால் பாடப்பெற்றதாகும். ஆலயச் சிறப்புப் பற்றிக் கூறும் ஏனை நூல்கள் :

ஆசிரியர் பெயர் நூற்பெயர்
1. அராலி முத்துக்குமாருப்புலவர் நமினாஜவு நாகேஸ்வரியம்மை பதிகம்
2. வேலணை தம்பு உபாத்தியாயர்
நயினை நாகாம்பிகை பதிகம், நாகை
திருவிரட்டை மணிமாலை, திரு நாக திருப்பதிகம்
3. நயினாதவுச்சுவாமி ஸ்ரீ நாகபூஷணி அந்தாதி மாலை.
4. நயினை நாகமணிப் புலவர் நயினை நீரோட்ட யமக அந்தாதி நயினை மான்மியம்.
5. நயினை வ. சூ. சரவணபவன நயினை நாகாம்பிகை பதிகம்.
6. யோமூ சுத்தானந்தபாரதியார் மனோன்மணி மாலை.
7. நயினை க, இராமச்சந்திரன் தேவி பஞ்சகம்.
8. நயினை வே. செல்வநாயகம் நாகேஸ்வரி பதிகம், நாகராஜேஸ்வரி இருவிரட்டை மணிமாலை,
9. வை.சி.வைத்தியலிங்கம் நயினைநாயக தோத்திரம்
10. நயினை நா.க.சண் மூகநாதபிள்ளை நமினை நாகம்மாள் பதிகம்.
11. கரவை கவிராயர் சிவராசசிங்கம் நயினை நாகபூஷணியம்மை பிள்ளைத் தமிழ்.

 
வரலாறு கூறும் நால் 
நயினை நாகேஸ்வரி - குல சமாநாதன் 

பௌத்தர்களும் இன்று இவ்வாலய தரிசனத்திற்காக யாத்திரை செய்கின்றனர். சைவத் தமிழர்களதும், சிங்கள பௌத்தர்களதும் நல்லுறவிற்குப் பாலமாக இவ்வாலயம் இன்று அமைந்திருப்பது அன்னை பராசக்தியின் அருளேயாம்.

குறிப்பு: தங்களைக் கொண்டு பாவம் செய்விப்பதற்கு ஐந்து பகைகளாகிய ஐந்து புலன்களும், தங்களுடன் சதாகாலமுங் கூடியிருக்கின்றன என்பதை, தாங்கள் எந்நேரமும் நினைவு கூருகிறதற்காகவே ஐந்து தலை நாகபாம்பின் விக்கிரகத்தைத் தங்கள் கோயில்களிலும், வீடுகளிலும் தமிழ் மக்களிற் சிலர் வைத்திருந்ததோடு தங்கள் சரீரங்களிலும் ஐந்து தலை நாகபாம்பின் விக்கிரகத்தை அணிந்துகொண்டும் வந்தார்கள். முற்காலத் தமிழரிற் சிலர், தங்கள் கோயில்களிலும், வீடுகளிலும் கும்பிடுவதற்காகக் கடவுள் விக்கிரகத்தையும், ஞாபகத்திற்காக ஐந்து தலை நாகபாம்பின் விக்கிரகத்தையும் வைத்திருந்தார்கள், ஐந்து தலை நாகபாம்பின் விக்கிரகத்தைக் கடவுள் விக்கிரகத்தின் எதிரில் வைத்தார்கள். ஐந்து புலன்கள் என்னும் ஐந்து பெரிய பகைகள் மனிதருக்கு உண்டென்பதையும், இந்தப்பகைகளில் இருந்து தப்பிக்கொள்கிறதற்காகக் கடவுளுடைய உதவியை மனிதர் எந்நேரமும் கேட்கவேண்டுமென்பதையும், ஐந்து தலை நாகபாம்பின் விக்கிரகம் அவர்களுக்கு நினைப்பூட்டிக்கொண்டிருந்தது.

மனத்தை நாகபாம்பாகவும், கர்மேந்திரியங்களின் தொகுதியை வாலாகவும், மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐந்து பொறிகளும் அப்பாம்பு வீரித்து நின்ற ஐந்து தலைகளாகவும், அவ் ஐம்பொறிகளிலிருந்து தோன்றுகின்ற ஐந்து அவாக்களும் விஷங்களாகவும், அவ் அவா பற்றப்பட்டார்க்கு உண்டாகின்ற காமம், விஷ மயக்கமாகவும் மயங்கியவர் தம் நல்லறிவு இழத்தல், நல்லிரத்தங் கெடுதலாகவும் கொள்க. இந்த நினைப்பூட்டுதலானது பாவங்கள் செய்வதிலிருந்து மனிதரை விலக்கிக் கொண்டிருந்தது. ஒரு புலன் செய்யுந் தீங்கானது. ஒரு தலை நாகபாம்பின் நஞ்சுக்குச் சமம் என்றும், ஐந்து புலன்கள் செய்யுக் தீமையானது ஐந்து தலை நாகபாம்பின் நஞ்சுக்குச் சமமென்றும் அவர்கள் நினைத்தார்கள். ஐந்து தலை நாகபாம்பின் விஷம் மனிதனைக் கொல்வது போலவே, ஐந்து புலன்கள் தேடிக் கொடுக்கும் பாவ விஷமும் மனிதனைக் கொல்கிறது என்று அவர்கள் நம்பினார்கள். கடவுளை வேண்டிக் கொள்கிறபோது அவருடைய கிருபையானது ஐந்து புலன்களையும் அடக்குகிறதென்றும், அவ்விதமான அடக்குதலைத்தான் விஷ்ணு ஐந்து தலை நாகபாம்பின் மீது சயனிக்கிறார் என்று சொல்லுதல் என்றும் தமிழரிற் பலர் கருதினார்கள்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.