சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச்சென்று கைதை மடற்புல்கு தென்கழிப் பாலை யதனுறைவாய் பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறியோம் எய்தப் பெறின்இரங் காதுகண் டாய்நம் மிறையவனே. 1
பருமா மணியும் பவளமுத் தும்பரந் துந்திவரை பொருமால் கரைமேற் றிரைகொணர்ந் தெற்றப் பொலிந்திலங்குங் கருமா மிடறுடைக் கண்டனெம் மான்கழிப் பாலையெந்தை பெருமா னவனென்னை யாளுடை யானிப் பெருநிலத்தே. 2
நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற் றிங்கு நமன்தமராற் கோட்பட் டொழிவதன் முந்துற வேகுளி ரார்தடத்துத் தாட்பட்ட தாமரைப் பொய்கையந் தண்கழிப் பாலையண்ணற் காட்பட் டொழிந்தமன் றேவல்ல மாயிவ் வகலிடத்தே.
சுவாமி:பால்வண்ணநாதர்;அம்பாள்:வேதநாயகி.3
திருச்சிற்றம்பலம்
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.