சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.028 முன்பெலாம் இளைய

திருச்சிற்றம்பலம்

முன்பெலாம் இளைய காலம் 
  மூர்த்தியை நினையா தோடிக்
கண்கண இருமி நாளுங் 
  கருத்தழிந் தருத்த மின்றிப்
பின்பக லுணங்கல் அட்டும் 
  பேதைமார் போன்றேன் உள்ளம்
அன்பனாய் வாழ மாட்டேன் 
  அதிகைவீ ரட்ட னீரே.   1 
  
 
கறைப்பெருங் கண்டத் தானே 
  காய்கதிர் நமனை யஞ்சி
நிறைப்பெருங் கடலுங் கண்டேன் 
  நீள்வரை யுச்சி கண்டேன்
பிறைப்பெருஞ் சென்னி யானே 
  பிஞ்ஞகா இவைய னைத்தும்
அறுப்பதோர் உபாயங் காணேன் 
  அதிகைவீ ரட்ட னீரே.   2 
 

நாதனா ரென்ன நாளும் 
  நடுங்கின ராகித் தங்கள்
ஏதங்கள் அறிய மாட்டார் 
  இணையடி தொழுதோம் என்பார்
ஆதனா னவனென் றெள்கி 
  அதிகைவீ ரட்ட னேநின்
பாதநான் பரவா துய்க்கும் 
  பழவினைப் பரிசி லேனே.   3 
 

சுடலைசேர் சுண்ண மெய்யர் 
  சுரும்புண விரிந்த கொன்றைப்
படலைசேர் அலங்கல் மார்பர் 
  பழனஞ்சேர் கழனித் தெங்கின்
மடலைநீர் கிழிய வோடி 
  அதனிடை மணிகள் சிந்துங்
கெடிலவீ ரட்ட மேய 
  கிளர்சடை முடிய னாரே.   4 
 

மந்திர முள்ள தாக 
  மறிகட லெழுநெய் யாக
இந்திரன் வேள்வித் தீயில் 
  எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ்
சிந்திர மாக நோக்கித் 
  தெருட்டுவார் தெருட்ட வந்து
கந்திரம் முரலுஞ் சோலைக் 
  கானலங் கெடிலத் தாரே.   5 
      
இப்பதிகத்தில் 6-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 6

     
இப்பதிகத்தில் 7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 8

 
இப்பதிகத்தில் 9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 9

 மைஞ்ஞல மனைய கண்ணாள் 
  பங்கன்மா மலையை யோடி
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க 
  விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு 
  காதலால் இனிது சொன்ன
கின்னரங் கேட்டு கந்தார் 
  கெடிலவீ ரட்ட னாரே.

சுவாமி:வீரட்டானேஸ்வரர்;அம்பாள்:திரிபுரசுந்தரி.10


திருச்சிற்றம்பலம்

Audio


அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : நான்காம்-திருமுறை

பண் : திருநேரிசை

நாடு : நடுநாடு

தலம் : அதிகை வீரட்டானம்

Author : மதுரை முத்துக்குமரன்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.