சமீபத்திய செய்தி
திருச்சிற்றம்பலம்
வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே என்கின் றாளாற் சினபவளத் திண்டோ ள்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன் என்கின் றாளால் அனபவள மேகலையோ டப்பாலைக் கப்பாலான் என்கின் றாளாற் கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 1
வண்டுலவு கொன்றை வளர்புன் சடையானே என்கின் றாளால் விண்டலர்ந்து நாறுவதோர் வெள்ளெருக்க நாண்மலருண் டென்கின் றாளால் உண்டயலே தோன்றுவதோர் உத்தரியப் பட்டுடையன் என்கின் றாளாற் கண்டயலே தோன்றுங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 2
பிறந்திளைய திங்களெம் பெம்மான் முடிமேல தென்கின் றாளால் நிறங்கிளருங் குங்குமத்தின் மேனி யவன்நிறமே யென்கின் றாளால் மறங்கிளர்வேற் கண்ணாள் மணிசேர் மிடற்றவனே யென்கின் றாளாற் கறங்கோத மல்குங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 3
இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தியோர் வெண்மழுவன் என்கின் றாளாற் சுரும்பார் மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றவனே என்கின் றாளாற் பெரும்பால னாகியோர் பிஞ்ஞக வேடத்தன் என்கின் றாளாற் கரும்பானல் பூக்குங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 4
பழியிலான் புகழுடையன் பால்நீற்றன் ஆனேற்றன் என்கின் றாளால் விழியுலாம் பெருந்தடங்கண் இரண்டல்ல மூன்றுளவே என்கின் றாளாற் சுழியுலாம் வருகங்கை தோய்ந்த சடையவனே என்கின் றாளாற் கழியுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 5
பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின் றாளால் எண்ணார் புரமெரித்த எந்தை பெருமானே என்கின் றாளாற் பண்ணார் முழவதிரப் பாடலொ டாடலனே என்கின் றாளாற் கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 6
முதிருஞ் சடைமுடிமேல் மூழ்கும் இளநாகம் என்கின் றாளால் அதுகண் டதனருகே தோன்றும் இளமதியம் என்கின் றாளாற் சதுர்வெண் பளிக்குக் குழைகாதின் மின்னிடுமே என்கின் றாளாற் கதிர்முத்தஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 7
ஓரோத மோதி உலகம் பலிதிரிவான் என்கின் றாளால் நீரோத மேற நிமிர்புன் சடையானே என்கின் றாளாற் பாரோத மேனிப் பவளம் அவனிறமே என்கின் றாளாற் காரோத மல்குங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 8
வானுலாந் திங்கள் வளர்புன் சடையானே என்கின் றாளால் ஊனுலாம் வெண்டலைகொண் டூரூர் பலிதிரிவான் என்கின் றாளாற் தேனுலாங் கொன்றை திளைக்குந் திருமார்பன் என்கின் றாளாற் கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ. 9
அடர்ப்பரிய இராவணனை அருவரைக்கீழ் அடர்த்தவனே என்கின் றாளாற் சுடர்ப்பெரிய திருமேனிச் சுண்ணவெண் ணீற்றவனே என்கின் றாளால் மடற்பெரிய ஆலின்கீழ் அறம்நால்வர்க் கன்றுரைத்தான் என்கின் றாளாற் கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமி : பால்வண்ணநாதர்; அம்பாள் :வேதநாயகியம்மை . 10
திருச்சிற்றம்பலம்
௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம்-திருமுறை
பண் : காந்தாரம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை
தலம் : கழிப்பாலை
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.