சமீபத்திய செய்தி
கேது வழிபட்ட ஈஸ்வரம் என்பதனால் கேதீஸ்வரம் என பெயர் பெற்றது.
சுந்தரர், சம்பந்தர் இருவரும் இராமேசுரத்தில் இருந்தவாறு, இப்பதியைப் பாடினர்.
தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் :
சம்பந்தர் – விருது குன்றமா (2.107);
சுந்தரர் – நத்தார் புடை ஞானம்
பாடல்கள் : சேக்கிழார் – அந்நகரில் அமர்ந்து (12.28.890) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,
மன்னும் இராமேச்சரத்து (12.37.109) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.
ஆலயத்தின் சிறப்புகள்
இத் தலம் ஈழ நாட்டில் மாதோட்ட நகரில் பாலாவி ஆற்றங்கரையில் உள்ளது. வெள்ளையரினால் அளிக்கப்பட்ட போது லிங்கம் மண்ணுக்குள் புதைந்து நூற்றாண்டுகளுக்கு பின்னர் தானாக வெளியே வந்து காட்சியளித்தது. பிரமாண்டமான கட்டுமானபணிகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன.
அமைவிடம் நாடு : இலங்கை இலங்கையில் மன்னார் தீவுக்கு செல்ல முன்னதாக திருக்கேதீஸ்வரம் பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. அழகிய இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் திருக்கேதீஸ்வரம் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதி சைவர்களினால், சூழப்பட்டுள்ளது.
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.