சமீபத்திய செய்தி
திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
திருவீழிமிழலை – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
509 | கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார் கந்தமா தனத்துளார் காளத் தியார் மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்த அயில்வாய சூலமுங் காபா லமும்அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி வெயிலாய சோதி விளங்கு நீற்றார்வீழி மிழலையே மேவி னாரே. | 6.51.1 |
510 | பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர் கேதிசர மேவினார் கேதா ரத்தார்கெடில வடவதிகை வீரட் டத்தார் மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்மழபாடி மேய மழுவா ளனார் வேதி குடியுளார் மீயச் சூரார்வீழி மிழலையே மேவி னாரே. | 6.51.2 |
511 | அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார்அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில் உண்ணாழி கையார் உமையா ளோடும்இமையோர் பெருமானார் ஒற்றி யூரார் பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானைமாடத்தார் கூடத்தார் பேரா வூரார் விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த வீழி மிழலையே மேவி னாரே. | 6.51.3 |
512 | வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார் பண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார்பராய்த்துறையார் சிராப்பள்ளி யுள்ளார் பண்டோ ர் வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி உரித்துரிவை போர்த்த விடலை வேடம் விண்காட்டும் பிறைநுதலி யஞ்சக் காட்டிவீழி மிழலையே மேவி னாரே. | 6.51.4 |
513 | புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார் உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச் சிமேற் றளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார் கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார்கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலி யோடும் விடைசூழ்ந்த வெல்கொடியர் மல்கு செல்வ வீழி மிழலையே மேவி னாரே. | 6.51.5 |
514 | பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழியார்பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார் இரும்புதலார் இரும்பூளை யுள்ளா ரேரார் இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற் கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்கருப்பறிய லூரார் கரவீ ரத்தார் விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த வீழி மிழலையே மேவி னாரே. | 6.51.6 |
515 | மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார் கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்கற்குடியார் விற்குடியார் கானப் பேரார் பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப் பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோ ர் மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்வீழி மிழலையே மேவி னாரே. | 6.51.7 |
516 | அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார் தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்சாந்தை அயவந்தி தங்கி னார்தாம் நஞ்சைத் தமக்கமுதா உண்ட நம்பர்நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார் வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார்வீழி மிழலையே மேவி னாரே. | 6.51.8 |
517 | கொண்டலுள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார்கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார் தண்டலையார் தலையாலங் காட்டி னுள்ளார்தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம் வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர் வலஞ்சுழியார் வைகலின்மேன் மாடத் துள்ளார் வெண்டலைமான் கைக்கொண்ட விகிர்த வேடர்வீழி மிழலையே மேவி னாரே. | 6.51.9 |
518 | அரிச்சந் திரத்துள்ளார் அம்ப ருள்ளார்அரிபிரமர் இந்திரர்க்கு மரிய ரானார் புரிச்சந் திரத்துள்ளார் போகத் துள்ளார்பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகி எரிச்சந்தி வேட்கு மிடத்தா ரேமக்கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர் விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர்வீழி மிழலையே மேவி னாரே. | 6.51.10 |
519 | புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான் தலைகளொடு மலைகளன தாளுந் தோளும் பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர் மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்வீழி மிழலையே மேவி னாரே. | 6.51.11 |
திருவீழிமிழலை – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
520 | கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண்கந்திருவம் பாட்டிசையிற் காட்டு கின்ற பண்ணவன்காண் பண்ணவற்றின் றிறலா னான்காண்பழமாகிச் சுவையாகிப் பயக்கின் றான்காண் மண்ணவன்காண் தீயவன்காண் நீரா னான்காண்வந்தலைக்கும் மாருதன்காண் மழைமே கஞ்சேர் விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண்விண்ணிழிதண் வீழி மிழலை யானே. | 6.52.1 |
521 | ஆலைப் படுகரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண் சீல முடையடியார் சிந்தை யான்காண்திரிபுரமூன் றெரிபடுத்த சிலையி னான்காண் பாலினொடு தயிர்நறுநெய் யாடி னான்காண்பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண் வேலை விடமுண்ட மிடற்றி னான்காண்விண்ணிழிதண் வீழி மிழலை யானே. | 6.52.2 |
522 | தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண்சக்கரம் புட்பாகற் கருள்செய் தான்காண் கண்ணுமொரு மூன்றுடைய காபா லிகாண்காமனுடல் வேவித்த கண்ணி னான்காண் எண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண்இருவர்க் கெரியா யருளி னான்காண் விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்விண்ணிழிதண் வீழி மிழலை யானே. | 6.52.3 |
523 | காதிசைந்த சங்கக் குழையி னான்காண்கனக மலையனைய காட்சி யான்காண் மாதிசைந்த மாதவமுஞ் சோதித் தான்காண்வல்லேன வெள்ளெயிற்றா பரணத் தான்காண் ஆதியன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்ஐந்தலைமா நாகம்நா ணாக்கி னான்காண் வேதியன்காண் வேதவிதி காட்டி னான்காண்விண்ணிழிதண் வீழி மிழலை யானே. | 6.52.4 |
524 | நெய்யினொடு பாலிளநீ ராடி னான்காண்நித்தமண வாளனென நிற்கின் றான்காண் கையின்மழு வாளொடுமான் ஏந்தி னான்காண்காலனுயிர் காலாற் கழிவித் தான்காண் செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண்செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னான்காண் வெய்ய கனல்விளையாட் டாடி னான்காண்விண்ணிழிதண் வீழி மிழலை யானே. | 6.52.5 |
525 | கண்டுஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக்கண்ணிடந்து சூட்டக்கண் டருளு வான்காண் வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்வான்கங்கைச் சடைக்கரந்த மாதே வன்காண் பண்டங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண் வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்விண்ணிழிதண் வீழி மிழலை யானே. | 6.52.6 |
526 | கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழிகருமாலுக் கருள்செய்த கருணை யான்காண் விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண்வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண் தற்பரமாந் தற்பரமாய் நிற்கின் றான்காண்சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண் வெற்பரையன் பாவை விருப்பு ளான்காண்விண்ணிழிதண் வீழி மிழலை யானே. | 6.52.7 |
527 | மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம்விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும் பொய்த்தவன்காண் புத்தன் மறவா தோடி எறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண் உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரைஉலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும் வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும் விண்ணிழிதண் வீழி மிழலை யானே. | 6.52.8 |
528 | சந்திரனைத் திருவடியாற் தளர்வித் தான்காண்தக்கனையும் முனிந்தெச்சன் தலைகொண் டான்காண் இந்திரனைத் தோள்முறிவித் தருள்செய் தான்காண்ஈசன்காண் நேசன்காண் நினைவோர்க் கெல்லாம் மந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண்மாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம் வெந்தழலின் விரிசுடரா யோங்கி னான்காண்விண்ணிழிதண் வீழி மிழலை யானே. | 6.52.9 |
529 | ஈங்கைப்பேர் ஈமவனத் திருக்கின் றான்காண்எம்மான்காண் கைம்மாவி னுரிபோர்த் தான்காண் ஓங்குமலைக் கரையன்றன் பாவை யோடும் ஓருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண் கோங்குமலர்க் கொன்றையந்தார்க் கண்ணி யான்காண்கொல்லேறு வெல்கொடிமேற் கூட்டி னான்காண் வேங்கைவரிப் புலித்தோல்மே லாடை யான்காண்விண்ணிழிதண்வீழி மிழலை யானே. | 6.52.10 |
திருவீழிமிழலை – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
530 | மானேறு கரமுடைய வரதர் போலும்மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும் கானேறு கரிகதற வுரித்தார் போலுங்கட்டங்கங் கொடிதுடிகைக் கொண்டார் போலுந் தேனேறு திருஇதழித் தாரார் போலுந்திருவீழி மிழலையமர் செல்வர் போலும் ஆனேற தேறும் அழகர் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. | 6.53.1 |
531 | சமரமிகு சலந்தரன்போர் வேண்டி னானைச் சக்கரத்தாற் பிளப்பித்த சதுரர் போலும் நமனையொரு கால்குறைத்த நாதர் போலும்நாரணனை இடப்பாகத் தடைத்தார் போலுங் குமரனையும் மகனாக வுடையார் போலுங்குளிர்வீழி மிழலையமர் குழகர் போலும் அமரர்கள்பின் அமுதுணநஞ் சுண்டார் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. | 6.53.2 |
532 | நீறணிந்த திருமேனி நிமலர் போலும்நேமிநெடு மாற்கருளிச் செய்தார் போலும் ஏறணிந்த கொடியுடையெம் மிறைவர் போலும்எயில்மூன்று மெரிசரத்தா லெய்தார் போலும் வேறணிந்த கோலமுடை வேடர் போலும்வியன்வீழி மிழலையுறை விகிர்தர் போலும் ஆறணிந்த சடாமகுடத் தழகர் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. | 6.53.3 |
533 | கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலுஞ் செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலுந்திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும் மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும் ஐவேள்வி ஆறங்க மானார் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. | 6.53.4 |
534 | துன்னத்தின் கோவணமொன் றுடையார் போலுஞ்சுடர்மூன்றுஞ் சோதியுமாய்த் தூயார் போலும் பொன்னொத்த திருமேனிப் புனிதர் போலும்பூதகணம் புடைசூழ வருவார் போலும் மின்னொத்த செஞ்சடைவெண் பிறையார் போலும்வியன்வீழி மிழலைசேர் விமலர் போலும் அன்னத்தேர் அயன்முடிசேர் அடிகள் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. | 6.53.5 |
535 | மாலாலும் அறிவரிய வரதர் போலும்மறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும் நாலாய மறைக்கிறைவ ரானார் போலும்நாமவெழுத் தஞ்சாய நம்பர் போலும் வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும்வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும் ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. | 6.53.6 |
536 | பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்பைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும் மஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும்வடகயிலை மலையுடைய மணாளர் போலுஞ் செஞ்சடைக்கண் வெண்பிறைகொண் டணிந்தார் போலுந்திருவீழி மிழலையமர் சிவனார் போலும் அஞ்சடக்கும் அடியவர்கட் கணியார் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. | 6.53.7 |
537 | குண்டரொடு பிரித்தெனையாட் கொண்டார் போலுங்குடமூக்கி லிடமாக்கிக் கொண்டார் போலும் புண்டரிகப் புதுமலரா தனத்தார் போலும்புள்ளரசைக் கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும் வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும்வியன்வீழி மிழலைநக ருடையார் போலும் அண்டத்துப் புறத்தப்பா லானார் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. | 6.53.8 |
538 | முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும்மொய்பவளக் கொடியனைய சடையார் போலும் எத்தனையும் பத்திசெய்வார்க் கினியார் போலும்இருநான்கு மூர்த்திகளு மானார் போலும் மித்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும்வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும் அத்தனொடும் அம்மையெனக் கானார் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. | 6.53.9 |
539 | கரியுரிசெய் துமைவெருவக் கண்டார் போலுங்கங்கையையுஞ் செஞ்சடைமேற் கரந்தார் போலும் எரியதொரு கைதரித்த இறைவர் போலும்ஏனத்தின் கூனெயிறு பூண்டார் போலும் விரிகதிரோ ரிருவரைமுன் வெகுண்டார் போலும்வியன்வீழி மிழலையமர் விமலர் போலும் அரிபிரமர் துதிசெயநின் றளித்தார் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. | 6.53.10 |
540 | கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக் கால்விரலால் அடர்த்தருளிச் செய்தார் போலுங் குயிலாய மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் கூத்தாட வல்ல குழகர் போலும் வெயிலாய சோதிவிளக் கானார் போலும்வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும் அயிலாய மூவிலைவேற் படையார் போலும்அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. | 6.53.11 |
திருப்புள்ளிருக்குவேளூர் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
541 | ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டுஅடியோடு முடியயன்மா லறியா வண்ணம் நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னைநேமிவான் படையால்நீ ளுரவோ னாகங் கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்கேடிலியைக் கிளர்பொறிவாள் அரவோ டென்பு பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | 6.54.1 |
542 | சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே திகழ்ந்தானைச் சிவன்றன்னைத் தேவ தேவைக் கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக் குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம் பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப் பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப் போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | 6.54.2 |
543 | பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்பாமாலை பாடப் பயில்வித் தானை எத்தேவு மேத்தும் இறைவன் றன்னைஎம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும் அத்தேனை அமுதத்தை ஆவின் பாலைஅண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப் புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | 6.54.3 |
544 | இருளாய உள்ளத்தி னிருளை நீக்கிஇடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்சிவலோக நெறியறியச் சிந்தை தந்த அருளானை ஆதிமா தவத்து ளானைஆறங்கம் நால்வேதத் தப்பால் நின்ற பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | 6.54.4 |
545 | மின்னுருவை விண்ணகத்தி லொன்றாய் மிக்கு வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத் தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தைவளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப் பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | 6.54.5 |
546 | அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக் கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்கடல்நாகைக் காரோணங் கருதி னானை இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | 6.54.6 |
547 | நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானைநீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற விருப்பவனை வேதியனை வேத வித்தைவெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி இருப்பவனை இடைமருதோ டீங்கோய் நீங்கா இறையவனை எனையாலுங் கயிலை யென்னும் பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | 6.54.7 |
548 | பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும் வாராத செல்வம் வருவிப் பானைமந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | 6.54.8 |
549 | பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் றன்னைப்படர்சடைமேற் புனல்கரந்த படிறன் றன்னை நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானைநான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கள் கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்காரணனை நாரணனைக் கமலத் தோங்கும் புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | 6.54.9 |
550 | இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்அலைகடலில் ஆலால முண்டு கண்டங் கறுத்தானைக் கண்ணழலாற் காம னாகங்காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | 6.54.10 |
திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
551 | வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றிமீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றிஓவாத சத்தத் தொலியே போற்றி ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றிஆறங்கம் நால்வேத மானாய் போற்றி காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.1 |
552 | பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றிபிறவி யறுக்கும் பிரானே போற்றி வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றிமருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றிபோகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி கச்சாக நாக மசைத்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.2 |
553 | மருவார் புரமூன்று மெய்தாய் போற்றிமருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றிஉள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி திருவாகி நின்ற திறமே போற்றிதேசம் பரவப் படுவாய் போற்றி கருவாகி யோடு முகிலே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.3 |
554 | வானத்தார் போற்றும் மருந்தே போற்றிவந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி ஊனத்தை நீக்கு முடலே போற்றிஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி தேனத்தை வார்த்த தெளிவே போற்றிதேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி கானத்தீ யாட லுகந்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.4 |
555 | ஊராகி நின்ற உலகே போற்றிஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி பேராகி யெங்கும் பரந்தாய் போற்றிபெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி நீராவி யான நிழலே போற்றிநேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி காராகி நின்ற முகிலே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.5 |
556 | சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றிதேவ ரறியாத தேவே போற்றி புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றிபோகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றிபற்றி உலகை விடாதாய் போற்றி கல்லுயிராய் நின்ற கனலே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.6 |
557 | பண்ணின் இசையாகி நின்றாய் போற்றிபாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றிஎன்சிந்தை நீங்கா இறைவா போற்றி விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றிமேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி கண்ணின் மணியாகி நின்றாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.7 |
558 | இமையா துயிரா திருந்தாய் போற்றிஎன்சிந்தை நீங்கா இறைவா போற்றி உமைபாக மாகத் தணைத்தாய் போற்றிஊழியே ழான ஒருவா போற்றி அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றிஆதி புராணனாய் நின்றாய் போற்றி கமையாகி நின்ற கனலே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.8 |
559 | மூவாய் பிறவாய் இறவாய் போற்றிமுன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றிசென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றிஅல்லல் நலிய அலந்தேன் போற்றி காவாய் கனகத் திரளே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.9 |
560 | நெடிய விசும்போடு கண்ணே போற்றிநீள அகல முடையாய் போற்றி அடியும் முடியும் இகலி போற்றிஅங்கொன் றறியாமை நின்றாய் போற்றி கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றிகோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி கடிய உருமொடு மின்னே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.10 |
561 | உண்ணா துறங்கா திருந்தாய் போற்றிஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றிஇறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றிபண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.55.11 |
திருக்கயிலாயம் – போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
562 | பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றிபூதப் படையாள் புனிதா போற்றி நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றிநீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி மறையுடைய வேதம் விரித்தாய் போற்றிவானோர் வணங்கப் படுவாய் போற்றி கறையுடைய கண்ட முடையாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.56.1 |
563 | முன்பாகி நின்ற முதலே போற்றிமூவாத மேனிமுக் கண்ணா போற்றி அன்பாகி நின்றார்க் கணியாய் போற்றிஆறேறு சென்னிச் சடையாய் போற்றி என்பாக வெங்கு மணிந்தாய் போற்றிஎன்சிந்தை நீங்கா இறைவா போற்றி கண்பாவி நின்ற கனலே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.56.2 |
564 | மாலை யெழுந்த மதியே போற்றிமன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி மேலை வினைக ளறுப்பாய் போற்றிமேலாடு திங்கள் முடியாய் போற்றி ஆலைக் கரும்பின் தெளிவே போற்றிஅடியார்கட் காரமுத மானாய் போற்றி காலை முளைத்த கதிரே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.56.3 |
565 | உடலின் வினைக ளறுப்பாய் போற்றிஒள்ளெரி வீசும் பிரானே போற்றி படருஞ் சடைமேல் மதியாய் போற்றிபல்கணக் கூத்தப் பிரானே போற்றி சுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றிதோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி கடலி லொளியாய முத்தே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.56.4 |
566 | மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றிமாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றி பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றிபோகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி மெய்சேரப் பால்வெண்ணீ றாடி போற்றிமிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி கைசேர் அனலேந்தி யாடீ போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.56.5 |
567 | ஆறேறு சென்னி முடியாய் போற்றிஅடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி நீறேறு மேனி யுடையாய் போற்றிநீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி கூறேறு மங்கை மழுவா போற்றிகொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி காறேறு கண்ட மிடற்றாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.56.6 |
568 | அண்டமே ழன்று கடந்தாய் போற்றிஆதி புராணனாய் நின்றாய் போற்றி பண்டை வினைக ளறுப்பாய் போற்றிபாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றி தொண்டர் பரவு மிடத்தாய் போற்றிதொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.56.7 |
569 | பெருகி யலைக்கின்ற ஆறே போற்றிபேராநோய் பேர விடுப்பாய் போற்றி உருகி நினைவார்தம் முள்ளாய் போற்றிஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றிஆரு மிகழப் படாதாய் போற்றி கருகிப் பொழிந்தோடு நீரே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.56.8 |
570 | செய்ய மலர்மேலான் கண்ணன் போற்றி தேடி யுணராமை நின்றாய் போற்றி பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றிபொருளாக என்னையாட் கொண்டாய் போற்றி மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றிமிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.56.9 |
571 | மேல்வைத்த வானோர் பெருமான் போற்றிமேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி கோலத்தாற் குறைவில்லான் றன்னை யன்றுகொடிதாகக் காய்ந்த குழகா போற்றி காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.56.10 |
திருக்கயிலாயத்திருமலை – போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
572 | பாட்டான நல்ல தொடையாய் போற்றிபரிசை யறியாமை நின்றாய் போற்றி சூட்டான திங்கள் முடியாய் போற்றிதூமாலை மத்த மணிந்தாய் போற்றி ஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றிஅடங்கார் புரமெரிய நக்காய் போற்றி காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.57.1 |
573 | அதிரா வினைக ளறுப்பாய் போற்றிஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி சதுரா சதுரக் குழையாய் போற்றிசாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி எதிரா உலக மமைப்பாய் போற்றிஎன்றுமீ ளாவருள் செய்வாய் போற்றி கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.57.2 |
574 | செய்யாய் கரியாய் வெளியாய் போற்றிசெல்லாத செல்வ முடையாய் போற்றி ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றிஆகாச வண்ண முடியாய் போற்றி வெய்யாய் தணியா யணியாய் போற்றிவேளாத வேள்வி யுடையாய் போற்றி கையார் தழலார் விடங்கா போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.57.3 |
575 | ஆட்சி யுலகை யுடையாய் போற்றிஅடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி சூட்சி சிறிது மிலாதாய் போற்றிசூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி மாட்சி பெரிது முடையாய் போற்றிமன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி காட்சி பெரிது மரியாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.57.4 |
576 | முன்னியா நின்ற முதல்வா போற்றிமூவாத மேனி யுடையாய் போற்றி என்னியா யெந்தை பிரானே போற்றிஏழி னிசையே யுகப்பாய் போற்றி மன்னிய மங்கை மணாளா போற்றிமந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி கன்னியார் கங்கைத் தலைவா போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.57.5 |
577 | உரியாய் உலகினுக் கெல்லாம் போற்றிஉணர்வென்னு மூர்வ துடையாய் போற்றி எரியாய தெய்வச் சுடரே போற்றிஏசுமா முண்டி யுடையாய் போற்றி அரியாய் அமரர்கட் கெல்லாம் போற்றிஅறிவே அடக்க முடையாய் போற்றி கரியானுக் காழியன் றீந்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.57.6 |
578 | எண்மேலும் எண்ண முடையாய் போற்றிஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி பண்மேலே பாவித் திருந்தாய் போற்றிபண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி விண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றிமேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.57.7 |
579 | முடியார் சடையின் மதியாய் போற்றிமுழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி துடியா ரிடையுமையாள் பங்கா போற்றிசோதித்தார் காணாமை நின்றாய் போற்றி அடியா ரடிமை அறிவாய் போற்றிஅமரர் பதியாள வைத்தாய் போற்றி கடியார் புரமூன்று மெய்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.57.8 |
580 | போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றிபுண்ணியனே நண்ண லரியாய் போற்றி ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றிஎண்ணா யிரநூறு பேராய் போற்றி நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றிநான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றி காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. | 6.57.9 |
இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 6.57.10 |
திருவலம்புரம் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
581 | மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை மறையவனும் வானவருஞ் சூழ நின்று கண்மலிந்த திருநெற்றி யுடையா ரொற்றைக் கதநாகங் கையுடையார் காணீ ரன்றே பண்மலிந்த மொழியவரு மியானு மெல்லாம் பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல மண்மலிந்த வயல்புடைசூழ் மாட வீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. | 6.58.1 |
582 | சிலைநவின்ற தொருகணையாற் புரமூன் றெய்த தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக் கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக்கூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்ல கலைநவின்ற மறையவர்கள் காணக் காணக்கடுவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல் மலைமகளுங் கங்கையுந் தாமு மெல்லாம் வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. | 6.58.2 |
583 | தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர் ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போலஅருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும் நோக்கா ரொருவிடத்து நூலுந் தோலுந்துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி வாக்கால் மறைவிரித்து மாயம் பேசிவலம்புரமே புக்கிங்கே மன்னி னாரே. | 6.58.3 |
584 | மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி மூவர் உருவாய முதல்வ ரிந்நாள் கோவாத எரிகணையைச் சிலைமேற் கோத்த குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே போவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப்புறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழ வாவா வெனவுரைத்து மாயம் பேசிவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. | 6.58.4 |
585 | அனலொருகை யதுவேந்தி அதளி னோடே ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப் புனல்பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல் மேனிப் புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச் சினவிடையை மேற்கொண்டு திருவா ரூருஞ்சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல மனமுருக வளைகழல மாயம் பேசிவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. | 6.58.5 |
586 | கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக் காலினாற் காய்ந்துகந்த காபா லியார் முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்திமுனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந் தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச் சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசிவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. | 6.58.6 |
587 | பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம் பசுஞ்சாந்தங் கொண்டணிந்து பாதம் நோவ இட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க் கெவ்வூரீர் எம்பெருமா னென்றேன் ஆவி விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கிவேறோர் பதிபுகப் போவார் போல வட்டணைகள் படநடந்து மாயம் பேசிவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. | 6.58.7 |
588 | பல்லார் பயில்பழனப் பாசூ ரென்றும்பழனம் பதிபழமை சொல்லி நின்றார் நல்லார் நனிபள்ளி யின்று வைகிநாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார் சொல்லார் ஒருவிடமாத் தோள்கை வீசிச்சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கும் மல்லார் வயல்புடைசூழ் மாடவீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. | 6.58.8 |
589 | பொங்கா டரவொன்று கையிற் கொண்டுபோர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர் தங்கா ரொருவிடத்துந் தம்மேல் ஆர்வந் தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர் எங்கே யிவர்செய்கை யொன்றொன் றொவ்வாஎன்கண்ணில் நின்றகலா வேடங் காட்டி மங்குல் மதிதவழும் மாட வீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. | 6.58.9 |
590 | செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ் சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப் பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ அங்கொருதன் றிருவிரலால் இறையே யூன்றிஅடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள் வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. | 6.58.10 |
திருவெண்ணியூர் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
591 | தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும் புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம் பொங்குதழற் பிழம்பாய புராண னாரும் வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்வானவர்க்காய் நஞ்சுண்ட மைந்த னாரும் விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. | 6.59.1 |
592 | நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும் பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லாரும்பூந்துருத்தி நகர்மேய புராண னாரும் மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும் விருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. | 6.59.2 |
593 | கையுலாம் மூவிலைவே லேந்தி னாருங்கரிகாட்டி லெரியாடுங் கடவு ளாரும் பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்பரவுவார் பாவங்கள் பாற்று வாருஞ் செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும் மெய்யுலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. | 6.59.3 |
594 | சடையேறு புனல்வைத்த சதுர னாருந்தக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும் உடையேறு புலியதள்மேல் நாகங் கட்டி உண்பலிக்கென் றூரூரி னுழிதர் வாரும் மடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடு துறையுறையும் மணாள னாரும் விடையேறு வெல்கொடியெம் விமல னாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. | 6.59.4 |
595 | மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும் பண்ணிலங்கு பாடலோ டாட லாரும்பருப்பதமும் பாசூரும் மன்னி னாருங் கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக் கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும் விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. | 6.59.5 |
596 | வீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்வேலைவிட முண்டிருண்ட கண்டத் தாருங் கூடலர்தம் மூவெயிலு மெரிசெய் தாருங்குரைகழலாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும் ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்ஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும் வேடுவனாய் மேல்விசயற் கருள்செய் தாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. | 6.59.6 |
597 | மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிமடவா ளவளோடு மானொன் றேந்திச் சிட்டிலங்கு வேடத்தா ராகி நாளுஞ்சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங் கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த காலன்றன் கால மறுப்பார் தாமும் விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. | 6.59.7 |
598 | செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்திருவால வாயுறையுஞ் செல்வ னாரும் அஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும்ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும் மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும் வெஞ்சினத்த வேழமது வுரிசெய் தாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. | 6.59.8 |
599 | வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங் களங்கொளவென் சிந்தையுள்ளே மன்னி னாருங்கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும் உளங்குளிர அமுதூறி அண்ணிப் பாரும்உத்தமராய் எத்திசையும் மன்னி னாரும் விளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. | 6.59.9 |
600 | பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப் புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங் கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந் தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்திருவிரலா லடர்த்தவனுக் கருள்செய் தாரும் மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. | 6.59.10 |
திருக்கற்குடி – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
601 | மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன் றார்த்தவனை அக்கரவம் ஆர மாக அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த வன்போ டேத்தவனை இறுவரையிற் றேனை ஏனோர்க்கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங் காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. | 6.60.1 |
602 | செய்யானை வெளியானைக் கரியான் றன்னைத்திசைமுகனைத் திசையெட்டுஞ் செறிந்தான் றன்னை ஐயானை நொய்யானைச் சீரி யானைஅணியானைச் சேயானை ஆனஞ் சாடும் மெய்யானைப் பொய்யாது மில்லான் றன்னைவிடையானைச் சடையானை வெறித்த மான்கொள் கையானைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. | 6.60.2 |
603 | மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கைவயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டை விண்ணதனி லொன்றை விரிக திரைத்தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க எண்ணதனில் எழுத்தையே ழிசையைக் காமன் எழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக் கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. | 6.60.3 |
604 | நற்றவனைப் புற்றரவ நாணி னானைநாணாது நகுதலையூண் நயந்தான் றன்னை முற்றவனை மூவாத மேனி யானைமுந்நீரின் நஞ்சமுகந் துண்டான் றன்னைப் பற்றவனைப் பற்றார்தம் பதிகள் செற்ற படையானை அடைவார்தம் பாவம் போக்கக் கற்றவனைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. | 6.60.4 |
605 | சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் றன்னைச்சங்கரனைத் தழலுறுதாள் மழுவாள் தாங்கும் அங்கையனை அங்கமணி ஆகத் தானைஆகத்தோர் பாகத்தே அமர வைத்த மங்கையனை மதியொடுமா சுணமுந் தம்மின் மருவவிரி சடைமுடிமேல் வைத்த வானீர்க் கங்கையனைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. | 6.60.5 |
606 | பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப்பிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வாணி விண்ணவனை விண்ணவர்க்கு மேலா னானைவேதியனை வேதத்தின் கீதம் பாடும் பண்ணவனைப் பண்ணில்வரு பயனா னானைப்பாரவனைப் பாரில்வாழ் உயிர்கட் கெல்லாங் கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. | 6.60.6 |
607 | பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் றன்னைப்பாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம் உண்டானை உமிழ்ந்தானை உடையான் றன்னைஒருவருந்தன் பெருமைதனை அறிய வொண்ணா விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும் வெவ்வழலில் வெந்துபொடி யாகி வீழக் கண்டானைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. | 6.60.7 |
608 | வானவனை வானவர்க்கு மேலா னானைவணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க தேனவனைத் தேவர்தொழு கழலான் றன்னைச்செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக் கோனவனைக் கொல்லைவிடை யேற்றி னானைக்குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல கானவனைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. | 6.60.8 |
609 | கொலையானை யுரிபோர்த்த கொள்கை யானைக்கோளரியைக் கூரம்பா வரைமேற் கோத்த சிலையானைச் செம்மைதரு பொருளான் றன்னைத்திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த தலையானைத் தத்துவங்க ளானான் றன்னைத்தையலோர் பங்கினனைத் தன்கை யேந்து கலையானைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. | 6.60.9 |
610 | பொழிலானைப் பொழிலாரும் புன்கூ ரானைப்புறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானை எழிலானை இடைமருதி னிடங்கொண் டானைஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் றன்னை அழலாடு மேனியனை அன்று சென்றக் குன்றெடுத்த அரக்கன்றோள் நெரிய வூன்றுங் கழலானைக் கற்குடியில் விழுமி யானைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. | 6.60.10 |
திருக்கன்றாப்பூர் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
611 | மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவாமதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம் நாதனே யென்றென்று பரவி நாளும் நைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டுவைகல் மறவாது வாழ்த்தி யேத்திக் காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. | 6.61.1 |
612 | விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசிவெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச் செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ்செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந் துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்சுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங் கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. | 6.61.2 |
613 | எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி உவராதே அவரவரைக் கண்ட போது உகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. | 6.61.3 |
614 | இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத் திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்குமெய்யன்பு மிகப்பெய்து பொய்யை நீக்கித் துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம் உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக் கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. | 6.61.4 |
615 | விருத்தனே வேலைவிட முண்ட கண்டாவிரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும் ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்திநுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள் பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும் புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக் கருத்தினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. | 6.61.5 |
616 | பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப் பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார் வசியினா லகப்பட்டு வீழா முன்னம்வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக் கசிவினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. | 6.61.6 |
617 | ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு ஆவியார் போவதுமே அகத்தார் கூடி மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டிமயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும் ஐயனார்க் காளாகி அன்பு மிக்குஅகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங் கையினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. | 6.61.7 |
618 | திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்திகையாதே சிவாயநம என்னுஞ் சிந்தைச் சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப் பருதிதனைப் பற்பறித்த பாவ நாசாபரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங் கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. | 6.61.8 |
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 6.61.9 | |
619 | குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தா யென்றுங்கூற்றுதைத்த குரைகழற்சே வடியா யென்றுந் தனஞ்சயற்குப் பாசுபத மீந்தா யென்றுந்தசக்கிரிவன் மலையெடுக்க விரலா லூன்றி முனிந்தவன்றன் சிரம்பத்துந் தாளுந் தோளும் முரணழித்திட் டருள்கொடுத்த மூர்த்தி யென்றுங் கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. | 6.61.10 |
திருவானைக்கா – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
620 | எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார் செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லைசிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக் காவுடைய செல்வா என்றன் அத்தாவுன் பொற்பாத மடையப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. | 6.62.1 |
621 | ஊனாகி உயிராகி யதனுள் நின்ற உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய் நானேதும் அறியாமே யென்னுள் வந்துநல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய் தேனாருங் கொன்றையனே நின்றி யூராய்திருவானைக் காவிலுறை சிவனே ஞானம் ஆனாயுன் பொற்பாத மடையப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. | 6.62.2 |
622 | ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான்ஒன்றலாத் தவத்தாரோ டுடனே நின்று துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன் திறமறந்து திரிவேனைக் காத்து நீவந் தெப்பாலும் நுண்ணுணர்வே யாக்கி யென்னை ஆண்டவனே எழிலானைக் காவா வானோர் அப்பாவுன் பொற்பாத மடையப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. | 6.62.3 |
623 | நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வாநிறைமதியஞ் சடைவைத்தாய் அடையா துன்பால் முனைத்தவர்கள் புரமூன்று மெரியச் செற்றாய்முன்னானைத் தோல்போர்த்த முதல்வா வென்றுங் கனைத்துவரும் எருதேறுங் காள கண்டாகயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன் அனைத்துலகும் ஆள்வானே ஆனைக் காவாஅல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. | 6.62.4 |
624 | இம்மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத்திடைச்சுழிப்பட் டிளைப்பேனை இளையா வண்ணங் கைம்மான மனத்துதவிக் கருணை செய்துகாதலரு ளவைவைத்தாய் காண நில்லாய் வெம்மான மதகரியி னுரிவை போர்த்த வேதியனே தென்னானைக் காவுள் மேய அம்மான்நின் பொற்பாத மடையப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. | 6.62.5 |
625 | உரையாரும் புகழானே ஒற்றி யூராய்கச்சியே கம்பனே காரோ ணத்தாய் விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய் திரையாரும் புனற்பொன்னித் தீர்த்த மல்கு திருவானைக் காவிலுறை தேனே வானோர் அரையாவுன் பொற்பாத மடையப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. | 6.62.6 |
626 | மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்மான்மறியு மாமழுவும் அனலு மேந்துங் கையானே காலனுடல் மாளச் செற்ற கங்காளா முன்கோளும் விளைவு மானாய் செய்யானே திருமேனி யரியாய் தேவர்குலக்கொழுந்தே தென்னானைக் காவுள் மேய ஐயாவுன் பொற்பாத மடையப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. | 6.62.7 |
627 | இலையாருஞ் சூலத்தாய் எண்தோ ளானேஎவ்விடத்தும் நீயலா தில்லை யென்று தலையாரக் கும்பிடுவார் தன்மை யானேதழல்மடுத்த மாமேரு கையில் வைத்த சிலையானே திருவானைக் காவுள் மேய தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம் அலையாதே நின்னடியே அடையப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. | 6.62.8 |
628 | விண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேதநெறியானே எறிகடலின் நஞ்ச முண்டாய் எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான்என்றென்றே நாவினிலெப் பொழுதும் உன்னிக் கண்ணாரக் கண்டிருக்கக் களித்தெப் போதுங்கடிபொழில்சூழ் தென்னானைக் காவுள் மேய அண்ணாநின் பொற்பாத மடையப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. | 6.62.9 |
629 | கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக்குறட்பூதங் கூத்தாட நீயு மாடி வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தாமதிலானைக் காவுளாய் மாகா ளத்தாய் படியேயுங் கடலிலங்கைக் கோமான் றன்னைப் பருமுடியுந் திரள்தோளு மடர்த்து கந்த அடியேவந் தடைந்தடிமை யாகப் பெற்றால்அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. | 6.62.10 |
திருவானைக்கா – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
630 | முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னைமூவாத சிந்தையே மனமே வாக்கே தன்னானை யாப்பண்ணி யேறி னானைச்சார்தற் கரியானைத் தாதை தன்னை என்னானைக் கன்றினையென் ஈசன் றன்னைஎறிநீர்த் திரையுகளுங் காவி ரிசூழ் தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. | 6.63.1 |
631 | மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானைவளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் னுள்ளத் திருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானைஇமையவர்தம் பெருமானை உமையா ளஞ்சக் கருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக்கனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர் திரிந்தானைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. | 6.63.2 |
632 | முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானைமுந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும் உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானைஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம் பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் றன்னைப்பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ் செற்றானைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. | 6.63.3 |
633 | காராரு மணிமிடற்றெம் பெருமான் றன்னைக்காதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத் தாரானைப் புலியதளி னாடை யானைத்தானன்றி வேறொன்று மில்லா ஞானப் பேரானை மணியார மார்பி னானைப்பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட தேரானைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. | 6.63.4 |
634 | பொய்யேது மில்லாத மெய்யன் றன்னைப்புண்ணியனை நண்ணாதார் புரநீ றாக எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் றன்னைஏறமரும் பெருமானை இடமா னேந்து கையானைக் கங்காள வேடத் தானைக்கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச் செய்யானைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. | 6.63.5 |
635 | கலையானைப் பாசுபதப் பாணி யானைக்கனவயிரத் திரளானை மணிமா ணிக்க மலையானை யென்றலையி னுச்சி யானைவார்தருபுன் சடையானை மயான மன்னும் நிலையானை வரியரவு நாணாக் கோத்து நினையாதார் புரமெரிய வளைத்த மேருச் சிலையானைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. | 6.63.6 |
636 | ஆதியனை எறிமணியின் ஓசை யானைஅண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க சோதியனைத் தூமறையின் பொருளான் றன்னைச்சுரும்பமரும் மலர்க்கொன்றைத் தொன்னூல் பூண்ட வேதியனை அறமுரைத்த பட்டன் றன்னைவிளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச் சேதியனைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. | 6.63.7 |
637 | மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் றன்னைமறவாது கழல்நினைந்து வாழ்த்தி யேத்திப் புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப்பூதகணப் படையானைப் புறங்காட் டாடல் உகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானைஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே திகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. | 6.63.8 |
638 | நசையானை நால்வேதத் தப்பா லானைநல்குரவுந் தீப்பிணிநோய் காப்பான் றன்னை இசையானை எண்ணிறந்த குணத்தான் றன்னைஇடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின் மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும்மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத் திசையானைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. | 6.63.9 |
639 | பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப்பண்டயன்மா லிருவர்க்கும் அறியா வண்ணஞ் சீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத்தேவர்கள்தம் பெருமானைத் திறமுன் னாதே ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன் ஆண்மையெலாங் கெடுத்தவன்றன் இடரப் போதே தீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச்செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. | 6.63.10 |
திருவேகம்பம் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
640 | கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண்குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண் காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல் ஏற்றவன்காண் எழிலாறும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.64.1 |
641 | பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும்பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத் துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண்தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த மருந்தவன்காண் வையங்கள் பொறைதீர்ப் பான்காண்மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.64.2 |
642 | நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண்நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில் தோற்றவன்காண் தோற்றக்கே டில்லா தான்காண்துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம் போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண்பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.64.3 |
643 | தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத் தத்துவன்காண் மலைமங்கை பங்கா வென்பார் வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண்வானவர்க்குந் தானவர்க்கும் மண்ணு ளோர்க்குஞ் சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத் திருவடியே உள்கிநினைந் தெழுவா ருள்ளம் ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.64.4 |
644 | அடுத்தானை யுரித்தான் காண் … … … … … … இச்செய்யுளில் எஞ்சிய பாகம் சிதைந்து போயிற்று. | 6.64.5 |
645 | அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால்ஐயாறும் இடைமருதும் ஆள்வான் றான்காண் பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள் பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண் சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந் தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.64.6 |
646 | அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணிஅழல்வண்ணத் தில்லடியும் முடியுந் தேடப் பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும் பான்மையன்காண் பரவிநினைந் தெழுவார் தம்பால் கசிந்தவன்காண் கரியினுரி போர்த்தான் றான்காண்கடலில்விட முண்டமரர்க் கமுத மீய இசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.64.7 |
647 | முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால் வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம் பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண்பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண்முழங்கியுரு மெனத்தோன்று மழையாய் மின்னி இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.64.8 |
648 | வருந்தான்காண் மனமுருகி நினையா தார்க்கு வஞ்சகன்காண் அஞ்செழுத்து நினைவார்க் கென்றும் மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்வானகமும் மண்ணகமு மற்று மாகிப் பரந்தவன்காண் படர்சடையெட் டுடையான் றான்காண்பங்கயத்தோன் றன்சிரத்தை யேந்தி யூரூர் இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.64.9 |
649 | வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண்வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பி விம்மாநின் றழுவார்கட் களிப்பான் றான்காண்விடையேறித் திரிவான்காண் நடஞ்செய் பூதத் தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண்அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்ற எம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.64.10 |
650 | அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்டஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்கை செறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் றான்காண்திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையிற் பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து பொருகயிலை யெடுத்தவன்றன் முடிதோள் நாலஞ் சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.64.11 |
திருவேகம்பம் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
651 | உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்கஓங்காரத் தொருவன்காண் உணர்மெய்ஞ் ஞானம் விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண்வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால் எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.65.1 |
652 | நேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக் கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை வாசன்காண் மலைமங்கை பங்கன் றான்காண்வானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும் ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.65.2 |
653 | பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும் புண்ணியன்காண் நண்ணியபுண் டரிகப் போதின் மறையவன்காண் மறையவனைப் பயந்தோன் றான்காண்வார்சடைமா சுணமணிந்து வளரும் பிள்ளைப் பிறையவன்காண் பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப் பேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும் இறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.65.3 |
654 | பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வந் தான்காண்பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற சீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ்செறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தை செய்யும் பேரவன்காண் பேராயி ரங்க ளேத்தும் பெரியவன்காண் அரியவன்காண் பெற்ற மூர்ந்த ஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.65.4 |
655 | பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண்பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும் மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண் அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.65.5 |
656 | ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்க மாறும்அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை காய்ந்தவன்காண் கண்ணழலாற் காம னாகங்கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப் பாய்ந்தவன்காண் பண்டுபல சருகாற் பந்தர் பயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம் ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.65.6 |
657 | உமையவளை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்உகந்தொலிநீர்க் கங்கைசடை யொழுக்கி னான்காண் இமய வடகயிலைச் செல்வன் றான்காண்இல்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்ந் தான்காண் சமயமவை ஆறினுக்குந் தலைவன் றான்காண்தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய இமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.65.7 |
658 | தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் றான்காண்தூமலர்ச்சே வடியிணையெஞ் சோதி யான்காண் உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண்ஒலிகடலி லமுதமரர்க் குதவி னான்காண் வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண்வாண்மதியாய் நாண்மீனு மாயி னான்காண் எண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.65.8 |
659 | முந்தைகாண் மூவரினு முதலா னான்காண்மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத் தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத் தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச் சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச் சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும் எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.65.9 |
660 | பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் றான்காண்பூதகண நாதன்காண் புலித்தோ லாடை தன்னிசைய வைத்தவெழி லரவி னான்காண்சங்கவெண் குழைக்காதிற் சதுரன் றான்காண் மின்னிசையும் வெள்ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்கவடி அடர்ப்பமீண் டவன்றன் வாயில் இன்னிசைகேட் டிலங்கொளிவாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே. | 6.65.10 |
திருநாகேச்சரம் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
661 | தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்தலையவனை மலையவனை உலக மெல்லாம் ஆயவனைச் சேயவனை அணியான் றன்னைஅழலவனை நிழலவனை அறிய வொண்ணா மாயவனை மறையவனை மறையோர் தங்கள் மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. | 6.66.1 |
662 | உரித்தானை மதவேழந் தன்னை மின்னார் ஒளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந் தரித்தானைத் தரியலர்தம் புரமெய் தானைத்தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம் அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க் கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந் தெரித்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. | 6.66.2 |
663 | காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக்காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் வாரானை மதிப்பவர்தம் மனத்து ளனைமற்றொருவர் தன்னொப்பா ரொப்பி லாத ஏரானை இமையவர்தம் பெருமான் றன்னைஇயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்க சீரானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. | 6.66.3 |
664 | தலையானை எவ்வுலகுந் தானா னானைத்தன்னுருவம் யாவர்க்கு மறிய வொண்ணா நிலையானை நேசர்க்கு நேசன் றன்னைநீள்வான முகடதனைத் தாங்கி நின்ற மலையானை வரியரவு நாணாக் கோத்து வல்லசுரர் புரமூன்று மடிய வெய்த சிலையானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. | 6.66.4 |
665 | மெய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்குவிரும்பாத அரும்பாவி யவர்கட் கென்றும் பொய்யானைப் புறங்காட்டி லாட லானைப்பொன்பொலிந்த சடையானைப் பொடிகொள் பூதிப் பையானைப் பையரவ மசைத்தான் றன்னைப்பரந்தானைப் பவளமால் வரைபோல் மேனிச் செய்யானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. | 6.66.5 |
666 | துறந்தானை அறம்புரியாத் துரிசர் தம்மைத்தோத்திரங்கள் பலசொல்லி வானோ ரேத்த நிறைந்தானை நீர்நிலந்தீ வெளிகாற் றாகிநிற்பனவும் நடப்பனவு மாயி னானை மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மைஅஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர்க் கென்றுஞ் சிறந்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. | 6.66.6 |
667 | மறையானை மால்விடையொன் றூர்தி யானைமால்கடல்நஞ் சுண்டானை வானோர் தங்கள் இறையானை என்பிறவித் துயர்தீர்ப் பானைஇன்னமுதை மன்னியசீர் ஏகம் பத்தில் உறைவானை ஒருவருமீங் கறியா வண்ணம் என்னுள்ளத் துள்ளே யொளித்து வைத்த சிறையானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. | 6.66.7 |
668 | எய்தானைப் புரமூன்றும் இமைக்கும் போதில்இருவிசும்பில் வருபுனலைத் திருவார் சென்னிப் பெய்தானைப் பிறப்பிலியை அறத்தில் நில்லாப் பிரமன்றன் சிரமொன்றைக் கரமொன் றினாற் கொய்தானைக் கூத்தாட வல்லான் றன்னைக்குறியிலாக் கொடியேனை அடியே னாகச் செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. | 6.66.8 |
669 | அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னைவான்பயிரை அப்பயிரின் வாட்டந் தீர்க்குந் துளியானை அயன்மாலுந் தேடிக் காணாச் சுடரானைத் துரிசறத் தொண்டு பட்டார்க் கெளியானை யாவர்க்கு மரியான் றன்னைஇன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறற் தெளியானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. | 6.66.9 |
670 | சீர்த்தானை உலகேழுஞ் சிறந்து போற்றச் சிறந்தானை நிறைந்தோங்கு செல்வன் றன்னைப் பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப்பனிமதியஞ் சடையானைப் புனிதன் றன்னை ஆர்த்தோடி மலையெடுத்த அரக்க னஞ்ச அருவிரலா லடர்த்தானை அடைந்தோர் பாவந் தீர்த்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. | 6.66.10 |
திருக்கீழ்வேளூர் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
671 | ஆளான அடியவர்கட் கன்பன் றன்னைஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க தாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச்சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த தோளானைத் தோளாத முத்தொப் பானைத்தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த கீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே. | 6.67.1 |
672 | சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை நற்பான்மை அறியாத நாயி னேனைநன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப் பற்பாவும் வாயாரப் பாடி யாடிப்பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்கக் கிற்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே. | 6.67.2 |
673 | அளைவாயில் அரவசைத்த அழகன் றன்னைஆதரிக்கு மடியவர்கட் கன்பே யென்றும் விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானைவித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக் குளைவானை அல்லாதார்க் குளையா தானைஉலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு கிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே. | 6.67.3 |
674 | தாட்பாவு கமலமலர் தயங்கு வானைத் தலையறுத்து மாவிரதந் தரித்தான் றன்னைக் கோட்பாவு நாளெல்லா மானான் றன்னைக்கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால் மீட்பானை வித்துருவின் கொத்தொப் பானைவேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை கேட்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே. | 6.67.4 |
675 | நல்லானை நரைவிடையொன் றூர்தி யானைநால்வேதத் தாறங்கம் நணுக மாட்டாச் சொல்லானைச் சுடர்மூன்று மானான் றன்னைத்தொண்டாகிப் பணிவார்கட் கணியான் றன்னை வில்லானை மெல்லியலோர் பங்கன் றன்னைமெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க கில்லானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே. | 6.67.5 |
676 | சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றைதூமத்தம் வாளரவஞ் சூடி னானை அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவஆலால நஞ்சதனை யுண்டான் றன்னை விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழமெல்லியலோர் பங்கனைமுன் வேனி லானைக் கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே. | 6.67.6 |
677 | உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற ஓங்காரத் துட்பொருள்தா னாயி னானை விளரொளியை விடுசுடர்கள் இரண்டு மொன்றும் விண்ணொடுமண் ஆகாச மாயி னானை வளரொளியை மரகதத்தி னுருவி னானைவானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தி யேத்துங் கிளரொளியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே. | 6.67.7 |
678 | தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத்தன்னடைந்த மாணிக்கன் றருள்செய் தானை உடுத்தானைப் புலியதளோ டக்கும் பாம்பும்உள்குவார் உள்ளத்தி னுள்ளான் றன்னை மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்கவானவர்கள் கூடியஅத் தக்கன் வேள்வி கெடுத்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே. | 6.67.8 |
679 | மாண்டார் எலும்பணிந்த வாழ்க்கை யானைமயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்பு பூண்டானைப் புறங்காட்டி லாட லானைப்போகாதென் னுட்புகுந் திடங்கொண் டென்னை ஆண்டானை அறிவரிய சிந்தை யானைஅசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங் கீண்டானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே. | 6.67.9 |
680 | முறிப்பான பேசிமலை யெடுத்தான் றானும் முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப் பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டி னானைப்பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது பொறித்தானைப் புரமூன்று மெரிசெய் தானைப்பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக் கிறிப்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கேடிலியை நாடுமவர் கேடி லாரே. | 6.67.10 |
திருமுதுகுன்றம் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
681 | கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக்கருதுவார்க் காற்ற எளியான் றன்னைக் குருமணையைக் கோளரவ மாட்டு வானைக்கொல்வேங்கை யதளனைக்கோ வணவன் றன்னை அருமணியை அடைந்தவர்கட் கமுதொப் பானைஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க திருமணியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. | 6.68.1 |
682 | காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக்காபாலி கட்டங்க மேந்தி னானைப் பாரொளியை விண்ணொளியைப் பாதாளத் தானைப்பான்மதியஞ் சூடியோர் பண்பன் றன்னைப் பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் றன்னைப்பேணுவார் தம்வினையைப் பேணி வாங்குஞ் சீரொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. | 6.68.2 |
683 | எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானைஏறூர்ந்த பெம்மானை யெம்மா னென்று பத்தனாய்ப் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்பாமாலை பாடப் பயில்வித் தானை முத்தினை யென்மணியை மாணிக் கத்தைமுளைத்தெழுந்த செம்பவளக் கொழுந்தொப் பானைச் சித்தனையென் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. | 6.68.3 |
684 | ஊன்கருவின் உள்நின்ற சோதி யானைஉத்தமனைப் பத்தர்மனம் குடிகொண் டானைக் கான்றிரிந்து காண்டீப மேந்தி னானைக்கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத் தான்றெரிந்தங் கடியேனை யாளாக் கொண்டு தன்னுடைய திருவடியென் றலைமேல் வைத்த தீன்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. | 6.68.4 |
685 | தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித்தாமரையான் நான்முகனுந் தானே யாகி மிக்கதொரு தீவளிநீர் ஆகா சமாய்மேலுலகுக் கப்பாலாய் இப்பா லானை அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க்கங்கங்கே அறுசமய மாகி நின்ற திக்கினையென் றிருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. | 6.68.5 |
686 | புகழொளியைப் புரமெரித்த புனிதன் றன்னைப்பொன்பொதிந்த மேனியனைப் புராணன் றன்னை விழவொலியும் விண்ணொலியு மானான் றன்னை வெண்காடு மேவிய விகிர்தன் றன்னைக் கழலொலியுங் கைவளையு மார்ப்ப வார்ப்பக்கடைதோறு மிடுபிச்சைக் கென்று செல்லுந் திகழொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. | 6.68.6 |
687 | போர்த்தானை யின்னுரிதோல் பொங்கப் பொங்கப்புலியதளே உடையாகத் திரிவான் றன்னைக் காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றுங்காலனையுங் குரைகழலாற் காய்ந்தான் றன்னை மாத்தாடிப் பத்தராய் வணங்குந் தொண்டர்வல்வினைவே ரறும்வண்ணம் மருந்து மாகித் தீர்த்தானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. | 6.68.7 |
688 | துறவாதே யாக்கை துறந்தான் றன்னைச்சோதி முழுமுதலாய் நின்றான் றன்னைப் பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே யாகிப்பெண்ணினோ டாணுருவாய் நின்றான் றன்னை மறவாதே தன்றிறமே வாழ்த்துந் தொண்டர்மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. | 6.68.8 |
689 | பொற்றூணைப் புலால்நாறு கபால மேந்திப்புவலோக மெல்லா முழிதந் தானை முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானைமுழுமுதலாய் மூவுலகும் முடிவொன் றில்லாக் கற்றூணைக் காளத்தி மலையான் றன்னைக்கருதாதார் புரமூன்று மெரிய அம்பாற் செற்றானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. | 6.68.9 |
690 | இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றிஎழுநரம்பின் இசைபாட லினிது கேட்டுப் புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் றன்னைப்புண்ணியனை விண்ணவர்கள் நிதியந் தன்னை மகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்துவளர்மதியஞ் சடைவைத்து மாலோர் பாகந் திகழ்ந்தானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. | 6.68.10 |
திருப்பள்ளியின்முக்கூடல் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
691 | ஆராத இன்னமுதை அம்மான் றன்னைஅயனொடுமா லறியாத ஆதி யானைத் தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் றன்னைச்சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை நீரானைக் காற்றானைத் தீயா னானைநீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. | 6.69.1 |
692 | விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானைவேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச் சடையானைச் சாமம்போற் கண்டத் தானைத்தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்கஅடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப் படையானைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. | 6.69.2 |
693 | பூதியனைப் பொன்வரையே போல்வான் றன்னைப்புரிசடைமேற் புனல்கரந்த புனிதன் றன்னை வேதியனை வெண்காடு மேயான் றன்னைவெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம் ஆதியனை ஆதிரைநன் னாளான் றன்னைஅம்மானை மைம்மேவு கண்ணி யாளோர் பாதியனைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. | 6.69.3 |
694 | போர்த்தானை ஆனையின்றோல் புரங்கள் மூன்றும்பொடியாக எய்தானைப் புனிதன் றன்னை வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் றன்னைமறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந் தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்லச்சிறிதளவில் அவனுடலம் பொடியா வங்கே பார்த்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. | 6.69.4 |
695 | அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங் கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக்கடுஞ்சினத்தோன் றன்னுடலை நேமி யாலே தடிந்தானைத் தன்னொப்பா ரில்லா தானைத்தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சிற் படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. | 6.69.5 |
696 | கரந்தானைச் செஞ்சடைமேற் கங்கை வெள்ளங்கனலாடு திருமேனி கமலத் தோன்றன் சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத்திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார் வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய்மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப் பரந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. | 6.69.6 |
697 | நதியாருஞ் சடையானை நல்லூ ரானைநள்ளாற்றின் மேயானை நல்லத் தானை மதுவாரும் பொழிற்புடைசூழ் வாய்மூ ரானைமறைக்காடு மேயானை ஆக்கூ ரானை நிதியாளன் றோழனை நீடு ரானைநெய்த்தான மேயானை ஆரூ ரென்னும் பதியானைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. | 6.69.7 |
698 | நற்றவனை நான்மறைக ளாயி னானைநல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ் செற்றவனைச் செஞ்சடைமேற் றிங்கள் சூடுந்திருவாரூர்த் திருமூலத் தான மேய கொற்றவனைக் கூரரவம் பூண்டான் றன்னைக்குறைந்தடைந்து தன்றிறமே கொண்டார்க் கென்றும் பற்றவனைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. | 6.69.8 |
699 | ஊனவனை உடலவனை உயிரா னானைஉலகேழு மானானை உம்பர் கோவை வானவனை மதிசூடும் வளவி யானைமலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற கானவனைக் கயிலாய மலையு ளானைக்கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே பானவனைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. | 6.69.9 |
700 | தடுத்தானைத் தான்முனிந்து தன்றோள் கொட்டித்தடவரையை இருபதுதோள் தலையி னாலும் எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றிஎழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக் கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக்குரை கழலாற் கூற்றுவனை மாள வன்று படுத்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. | 6.69.10 |
க்ஷேத்திரக்கோவை – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
701 | தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளிதேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர் கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்வீரட்டங் கோகரணங் கோடி காவும் முல்லைப் புறவம் முருகன் பூண்டிமுழையூர் பழையாறை சத்தி முற்றங் கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங்கயிலாய நாதனையே காண லாமே. | 6.70.1 |
702 | ஆரூர்மூ லத்தானம் ஆனைக் காவும்ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர் பேரூர் பிரமபுரம் பேரா வூரும்பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங் கூரார் குறுக்கைவீ ரட்டா னமுங்கோட்டூர் குடமூக்கு கோழம் பமுங் காரார் கழுக்குன்றுங் கானப் பேருங்கயிலாய நாதனையே காண லாமே. | 6.70.2 |
703 | இடைமரு தீங்கோ யிராமேச் சுரம்இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர் சடைமுடி சாலைக் குடிதக் களூர்தலையாலங் காடு தலைச்சங் காடு கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு கடைமுடி கானூர் கடம்பந் துறைகயிலாய நாதனையே காண லாமே. | 6.70.3 |
704 | எச்சில் இளமர் ஏம நல்லூர்இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர்ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறைக் கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக்கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங்கயிலாய நாதனையே காண லாமே. | 6.70.4 |
705 | கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர்கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும் நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவும்நின்றியூர் நீடூர் நியம நல்லூர் இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்எறும்பியூர் ஏராரும் ஏம கூடங் கடம்பை யிளங்கோயில் தன்னி லுள்ளுங்கயிலாய நாதனையே காண லாமே. | 6.70.5 |
706 | மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்வக்கரை மந்தாரம் வார ணாசி வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடிவிளமர் விராடபுரம் வேட்க ளத்தும் பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங் கண்ணை களர்க்காறை கழிப்பா லையுங்கயிலாய நாதனையே காண லாமே. | 6.70.6 |
707 | வீழி மிழலைவெண் காடு வேங்கூர்வேதி குடிவிசய மங்கை வியலூர் ஆழியகத் தியான்பள்ளி அண்ணா மலைஆலங் காடும் அரைதைப் பெரும் பாழி பழனம்பனந் தாள்பா தாளம்பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண் காழி கடல்நாகைக் காரோ ணத்துங்கயிலாய நாதனையே காண லாமே. | 6.70.7 |
708 | உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்உரித்திர கோடி மறைக்காட் டுள்ளும் மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்வீரட்டம் மாதானங் கேதா ரத்தும் வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகாவேதிச்சுரம் வீவிசுரம் வொற்றி யூருங் கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்கயிலாய நாதனையே காண லாமே. | 6.70.8 |
709 | திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளிதேவூர் சிரபுரஞ்சிற் றேமஞ் சேறை கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல்குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு அண்டர் தொழுமதிகை வீரட் டானம்ஐயா றசோகந்தி ஆமாத் தூருங் கண்டியூர் வீரட்டங் கருகா வூருங்கயிலாய நாதனையே காண லாமே. | 6.70.9 |
710 | நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறுநாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல துறையூர் சோற்றுத்துறை சூல மங்கைதோணிபுரந் துருத்தி சோமீச் சரம் உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர்ஓமாம் புலியூரோர் ஏட கத்துங் கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங்கயிலாய நாதனையே காண லாமே. | 6.70.10 |
711 | புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர் வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி நிலமலிநெய்த் தானத்தோ டெத்தா னத்தும்நிலவுபெருங் கோயில்பல கண்டாற் றொண்டீர் கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்றகயிலாய நாதனையே காண லாமே. | 6.70.11 |
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.71 திருஅடைவு – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
712 | பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்துபுலந்தழிய சலந்தரனைப் பிளந்தான் பொற்சக் கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற் சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளிசெழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார் பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே. | 6.71.1 |
713 | காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை மேவியவீ ரட்டானம் வழுவை வீரட்டம்வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாங் கோவல்நகர் வீரட்டங் குறுக்கை வீரட்டங்கோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறி நாவினவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்நமன்றமருஞ் சிவன்றமரென் றகல்வர் நன்கே. | 6.71.2 |
714 | நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான் குடி கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடிகருந்திட்டைக் குடிகடையக் குடிகா ணுங்கால் விற்குடிவேள் விக்குடிநல் வேட்டக் குடிவேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடிபுதுக்குடியும் போற்றவிடர் போகு மன்றே. | 6.71.3 |
715 | பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும் நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும் உறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும்அளப்பூரோ மாம்புலியூர் ஒற்றி யூருந் துறையூருந் துவையூருந் தோழுர் தானுந்துடையூருந் தொழவிடர்கள் தொடரா வன்றே. | 6.71.4 |
716 | பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங் கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில் திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்துதாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே. | 6.71.5 |
717 | மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்சாய்க்காடு தெள்ளுபுனற் கொள்ளிக் காடு பலர்பாடும் பழையனூர் ஆலங் காடுபனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கைவெண்காடும் அடையவினை வேறா மன்றே. | 6.71.6 |
718 | கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல் வாயில் நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில் மடுவார்தென் மதுரைநகர் ஆல வாயில்மறிகடல்சூழ் புனவாயில் மாடம் நீடு குடவாயில் குணவாயி லான வெல்லாம்புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே. | 6.71.7 |
719 | நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்சுரநாகேச் சுரநாகளேச் சுரநன் கான கோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சுரங்குக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால் ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுரம்அத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல் ஈடுதிரை இராமேச்சுர மென்றென் றேத்திஇறைவனுறை சுரம்பலவும் இயம்பு வோமே. | 6.71.8 |
720 | கந்தமா தனங்கயிலை மலை கேதாரங்காளத்தி கழுக்குன்றங் கண்ணார் அண்ணா மந்தமாம் பொழிற்சாரல் வடபர்ப் பதம்மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம் விந்தமா மலைவேதஞ் சைய மிக்கவியன் பொதியின் மலைமேரு வுதய மத்தம் இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும்ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே. | 6.71.9 |
721 | நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடுநலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந் தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்கு ளமுநல்இடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம் விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்காகோலக்கா ஆனைக்கா வியன்கோ டிகா கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்குளங்களங்கா எனவனைத்துங் கூறு வோமே. | 6.71.10 |
722 | கயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடுசிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன் பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறைபண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற் குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறைபெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு மயிலாடு துறைகடம்பந் துறையா வடுதுறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே. | 6.71.11 |
6.72 திருவலஞ்சுழி – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
723 | அலையார் புனற்கங்கை நங்கை காணஅம்பலத்தில் அருநட்ட மாடி வேடந் தொலையாத வென்றியார் நின்றி யூரும்நெடுங்களமும் மேவிவிடை யைமேற் கொண்டு இலையார் படைகையி லேந்தி யெங்கும்இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்தவலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே. | 6.72.1 |
திருவலஞ்சுழியும் – திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும்
திருச்சிற்றம்பலம்
724 | கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்கல்லால நிழற்கீ ழிருந்தான் கண்டாய் பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்பவளக்குன் றன்ன பரமன் கண்டாய் வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற்கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. | 6.73.1 |
725 | கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்கலைபயில்வோர் ஞானக்கண் ணானான் கண்டாய் அலைக்கங்கை செஞ்சடைமே லேற்றான் கண்டாய்அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய் மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னிவலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய் குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டை யூரிற்கோடீச்சரத் துறையுங் கோமான் றானே. | 6.73.2 |
726 | செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய் பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்பாலோடு நெய் தயிர்தே னாடி கண்டாய் மந்தார முந்தி வருநீர்ப் பொன்னிவலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய் கொந்தார் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. | 6.73.3 |
727 | பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய் இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய்எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய் மடலார் திரைபுரளுங் காவி ரிவாய்வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய் கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற்கோடீச்சரத் துறையுங் கோமான் றானே. | 6.73.4 |
728 | அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்அருமறைக ளாறங்க மானான் கண்டாய் தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்சதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் கண்டாய் மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னிவலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் கொக்கமரும் வயற்புடைசூழ் கொட்டை யூரிற்கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. | 6.73.5 |
729 | சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய்சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய் தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய் மண்டுபுனற் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய் கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற்கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. | 6.73.6 |
730 | அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய் பணமணிமா நாக முடையான் கண்டாய்பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் குணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற்கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. | 6.73.7 |
731 | விரைகமழு மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய் அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய்அழலாடி கண்டாய் அழகன் கண்டாய் வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய் குரவமரும் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. | 6.73.8 |
732 | தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய்தசரதன்றன் மகனசைவு தவிர்த்தான் கண்டாய் இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய் வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்மாமுனிகள் தொழுதெழுபொற் கழலான் கண்டாய் குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரிற்கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. | 6.73.9 |
733 | விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய் தண்டா மரையானும் மாலுந் தேடத்தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய் வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்மாதேவன் கண்டாய் மறையோ டங்கங் கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற்கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. | 6.73.10 |
திருநாரையூர் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
734 | சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச்சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானை அல்லானைப் பகலானை அரியான் றன்னைஅடியார்கட் கெளியானை அரண்மூன் றெய்த வில்லானைச் சரம்விசயற் கருள்செய் தானைவெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும் நல்லானைத் தீயாடு நம்பன் றன்னைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. | 6.74.1 |
735 | பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் றன்னைப்பாரொடுநீர் சுடர்படர்காற் றாயி னானை மஞ்சுண்ட வானாகி வானந் தன்னில்மதியாகி மதிசடைமேல் வைத்தான் றன்னை நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் றன்னைநெடுங்கடலைக் கடைந்தவர்போய் நீங்க வோங்கும் நஞ்சுண்டு தேவர்களுக் கமுதீந் தானைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. | 6.74.2 |
736 | மூவாதி யாவர்க்கும் மூத்தான் றன்னைமுடியாதே முதல்நடுவு முடிவா னானைத் தேவாதி தேவர்கட்குந் தேவன் றன்னைத்திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் றன்னை ஆவாத அடலேறொன் றுடையான் றன்னைஅடியேற்கு நினைதோறும் அண்ணிக் கின்ற நாவானை நாவினில்நல் லுரையா னானைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. | 6.74.3 |
737 | செம்பொன்னை நன்பவளந் திகழு முத்தைச்செழுமணியைத் தொழுமவர்தஞ் சித்தத் தானை வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கிமகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற கம்பனையெங் கயிலாய மலையான் றன்னைக்கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும் நம்பனையெம் பெருமானை நாதன் றன்னைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. | 6.74.4 |
738 | புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப்புரிசடைமேற் புனலடைத்த புனிதன் றன்னை விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானைவெண்ணீறு செம்மேனி விரவி னானை வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் றன்னைவருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை நரைவிடைநற் கொடியுடைய நாதன் றன்னைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. | 6.74.5 |
739 | பிறவாதும் இறவாதும் பெருகி னானைப்பேய்பாட நடமாடும் பித்தன் றன்னை மறவாத மனத்தகத்து மன்னி னானைமலையானைக் கடலானை வனத்து ளானை உறவானைப் பகையானை உயிரா னானைஉள்ளானைப் புறத்தானை ஓசை யானை நறவாரும் பூங்கொன்றை சூடி னானைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. | 6.74.6 |
740 | தக்கனது வேள்விகெடச் சாடி னானைத்தலைகலனாப் பலியேற்ற தலைவன் றன்னைக் கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக்கோணாகம் பூணாகக் கொண்டான் றன்னை அக்கினொடும் என்பணிந்த அழகன் றன்னைஅறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னை நக்கனைவக் கரையானை நள்ளாற் றானைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. | 6.74.7 |
741 | அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் றன்னைஅந்தகனுக் கந்தகனை அளக்க லாகா எரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானைஎண்ணாகிப் பண்ணா ரெழுத்தா னானைத் திரிபுரஞ்செற் றொருமூவர்க் கருள்செய் தானைச்சிலந்திக்கும் அரசளித்த செல்வன் றன்னை நரிவிரவு காட்டகத்தி லாட லானைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. | 6.74.8 |
742 | ஆலால மிடற்றணியா அடக்கி னானைஆலதன்கீழ் அறம்நால்வர்க் கருள்செய் தானைப் பாலாகித் தேனாகிப் பழமு மாகிப்பைங்கரும்பா யங்கருந்துஞ் சுவையா னானை மேலாய வேதியர்க்கு வேள்வி யாகிவேள்வியினின் பயனாய விமலன் றன்னை நாலாய மறைக்கிறைவ னாயி னானைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. | 6.74.9 |
743 | மீளாத ஆளென்னை உடையான் றன்னைவெளிசெய்த வழிபாடு மேவி னானை மாளாமை மறையவனுக் குயிரும் வைத்துவன்கூற்றின் உயிர்மாள உதைத்தான் றன்னைத் தோளாண்மை கருதிவரை யெடுத்த தூர்த்தன்தோள்வலியுந் தாள்வலியுந் தொலைவித் தாங்கே நாளோடு வாள்கொடுத்த நம்பன் றன்னைநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. | 6.74.10 |
திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
744 | சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்சொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி போலுங் கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும் மன்மலிந்த மணிவரைத்திண் டோ ளர் போலும்மலையரையன் மடப்பாவை மணாளர் போலுங் கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. | 6.75.1 |
745 | கானலிளங் கலிமறவ னாகிப் பார்த்தன்கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும் ஆனவிளங் கடுவிடையொன் றேறி அண்டத்தப்பாலும் பலிதிரியும் அழகர் போலுந் தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங் கூனலிளம் பிறைதடவு கொடிகொள் மாடக்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. | 6.75.2 |
746 | நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்நிலாவலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை ஆறலைத்த சடைமுடியும் அம்பொற் றோளும்அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும் ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையார் போலும்ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலுங் கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. | 6.75.3 |
747 | தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ் செக்கரொளி பவளவொளி மின்னின் சோதிசெழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும் மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்விமிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங் கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. | 6.75.4 |
748 | காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங்காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும் ஆலதனில் அறம்நால்வர்க் களித்தார் போலும்ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும் நீலவுரு வயிரநிரைப் பச்சை செம்பொன்நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங் கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. | 6.75.5 |
749 | முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும்முளைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும் அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதிஅணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத் துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டுசுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலைபோ லிந்நாள் குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. | 6.75.6 |
750 | காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச் சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும் பாரிலங்கு புனலனல்கால் பரமா காசம்பருதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலுங் கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. | 6.75.7 |
751 | பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்துதிருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள் கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலுங்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. | 6.75.8 |
752 | பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற்பொறிகிளர்வெண் பூணநூற் புனிதர் போலுஞ் சங்கரவக் கடன்முகடு தட்ட விட்டுச்சதுரநட மாட்டுகந்த சைவர் போலும் அங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தைஅந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதே கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலுங்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. | 6.75.9 |
753 | ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனைஇப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந் தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கைசரச்வதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க் கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்தகுடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. | 6.75.10 |
754 | செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும் நெறிகொண்ட குழலியுமை பாக மாகநிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும் மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக் குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலுங்குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. | 6.75.11 |
திருப்புத்தூர் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
755 | புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண்போர்விடையின் பாகன்காண் புவன மேழும் விரிந்துபல உயிராகி விளங்கி னான்காண்விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேத நான்குந் தெரிந்துமுதல் படைத்தோனைச் சிரங்கொண் டோ ன்காண்தீர்த்தன்காண் திருமாலோர் பங்கத் தான்காண் திருந்துவயல் புடைதழுவு திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. | 6.76.1 |
756 | வாராரும் முலைமங்கை பாகத் தான்காண்மாமறைக ளாயவன்காண் மண்ணும் விண்ணுங் கூரார்வெந் தழலவனுங் காற்றும் நீருங்குலவரையும் ஆயவன்காண் கொடுநஞ் சுண்ட காராருங் கண்டன்காண் எண்டோ ளன்காண்கயிலைமலைப் பொருப்பன்காண் விருப்போ டென்றுந் தேராரும் நெடுவீதித் திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. | 6.76.2 |
757 | மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண் நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறிநற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண் பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்றபுனக்காந்தட் கைகாட்டக் கண்டு வண்டு தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. | 6.76.3 |
758 | ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும்இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண் தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந்துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம் மாடேறி முத்தீனுங் கானல் வேலிமறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. | 6.76.4 |
759 | கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண்காமருபூங் கச்சியே கம்பத் தான்காண் பெருமருவு பேருலகிற் பிணிகள் தீர்க்கும்பெரும்பற்றத் தண்புலியூர் மன்றா டீகாண் தருமருவு கொடைத்தடக்கை அளகைக் கோன்றன்சங்காத்தி ஆரூரில் தனியா னைகாண் திருமருவு பொழில்புடைசூழ் திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. | 6.76.5 |
760 | காம்பாடு தோளுமையாள் காண நட்டங்கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்ய பாம்பாடப் படுதலையிற் பலிகொள் வான்காண்பவளத்தின் பருவரைபோற் படிமத் தான்காண் தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்டசங்கரன்காண் பொங்கரவக் கச்சை யோன்காண் சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. | 6.76.6 |
761 | வெறிவிரவு மலர்க்கொன்றை விளங்கு திங்கள்வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண் பொறிவிரவு கதநாகம் அக்கி னோடுபூண்டவன்காண் பொருபுலித்தோ லாடை யான்காண் அறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண்ஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானற் செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. | 6.76.7 |
762 | புக்கடைந்த வேதியற்காய்க் காலற் காய்ந்தபுண்ணியன்காண் வெண்ணகைவெள் வளையா ளஞ்ச மிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன்காண்வெண்மதியைக் கலைசேர்த்த திண்மை யோன்காண் அக்கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலைஆரூருக் கதிபதிகாண் அந்தண் தென்றல் திக்கணைந்து வருமருங்கில் திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. | 6.76.8 |
763 | பற்றவன்காண் ஏனோர்க்கும் வானோ ருக்கும்பராபரன்காண் தக்கன்றன் வேள்வி செற்ற கொற்றவன்காண் கொடுஞ்சினத்தை யடங்கச் செற்றுஞானத்தை மேன்மிகுத்தல் கோளாக் கொண்ட பெற்றியன்காண் பிறங்கருவிக் கழுக்குன் றத்தெம்பிஞ்ஞகன்காண் பேரெழிலார் காம வேளைச் செற்றவன்காண் சீர்மருவு திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. | 6.76.9 |
764 | உரமதித்த சலந்தரன்றன் ஆகங் கீண்டஓராழி படைத்தவன்காண் உலகு சூழும் வரமதித்த கதிரவனைப் பற்கொண் டான்காண்வானவர்கோன் புயம்நெரித்த வல்லா ளன்காண் அரமதித்துச் செம்பொன்னி னாரம் பூணாஅணிந்தவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன் சிரம்நெரித்த சேவடிகாண் திருப்புத் தூரில்திருத்தளியான் காணவனென் சிந்தை யானே. | 6.76.10 |
திருவாய்மூர் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
765 | பாட வடியார் பரவக் கண்டேன்பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம் ஆடல் முழவம் அதிரக் கண்டேன்அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக் கோட லரவார் சடையிற் கண்டேன்கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன் வாடல் தலையொன்று கையிற் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. | 6.77.1 |
766 | பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன்பதினெண் கணமும் பயிலக் கண்டேன் நீல நிறமுண்ட கண்டங் கண்டேன்நெற்றி நுதல்கண்டேன் பெற்றங் கண்டேன் காலைக் கதிர்செய் மதியங் கண்டேன்கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன் மாலைச் சடையும் முடியுங் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. | 6.77.2 |
767 | மண்ணைத் திகழ நடம தாடும்வரைசிலம் பார்க்கின்ற பாதங் கண்டேன் விண்ணிற் றிகழும் முடியுங் கண்டேன்வேடம் பலவாஞ் சரிதை கண்டேன் நண்ணிப் பிரியா மழுவுங் கண்டேன்நாலு மறையங்க மோதக் கண்டேன் வண்ணப் பொலிந்திலங்கு கோலங் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. | 6.77.3 |
768 | விளைத்த பெரும்பத்தி கூர நின்றுமெய்யடியார் தம்மை விரும்பக் கண்டேன் இளைக்குங் கதநாக மேனி கண்டேன்என்பின் கலந்திகழ்ந்து தோன்றக் கண்டேன் திளைக்குந் திருமார்பில் நீறு கண்டேன்சேணார் மதின்மூன்றும் பொன்ற வன்று வளைத்த வரிசிலையுங் கையிற் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. | 6.77.4 |
769 | கான்மறையும் போதகத்தி னுரிவை கண்டேன்காலிற் கழல்கண்டேன் கரியின் றோல்கொண் டூன்மறையப் போர்த்த வடிவுங் கண்டேன்உள்க மனம்வைத்த உணர்வுங் கண்டேன் நான்மறை யானோடு நெடிய மாலும்நண்ணி வரக்கண்டேன் திண்ண மாக மான்மறி தங்கையின் மருவக் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. | 6.77.5 |
770 | அடியார் சிலம்பொலிக ளார்ப்பக் கண்டேன்அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன் முடியார் சடைமேல் அரவ மூழ்கமூரிப் பிறைபோய் மறையக் கண்டேன் கொடியா ரதன்மேல் இடபங் கண்டேன்கோவணமுங் கீளுங் குலாவக் கண்டேன் வடியாரும் மூவிலைவேல் கையிற் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. | 6.77.6 |
771 | குழையார் திருத்தோடு காதிற் கண்டேன்கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன் இழையார் புரிநூல் வலத்தே கண்டேன்ஏழிசை யாழ்வீணை முரலக் கண்டேன் தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன்தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன் மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. | 6.77.7 |
772 | பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன் பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்பாராகிப் புனலாகி நிற்கை கண்டேன் விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன் மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. | 6.77.8 |
773 | மெய்யன்ப ரானார்க் கருளுங் கண்டேன்வேடுவனாய் நின்ற நிலையுங் கண்டேன் கையம் பரனெரித்த காட்சி கண்டேன்கங்கணமும் அங்கைக் கனலுங் கண்டேன் ஐயம் பலவூர் திரியக் கண்டேன்அன்றவன் றன்வேள்வி அழித்து கந்து வையம் பரவ இருத்தல் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. | 6.77.9 |
774 | கலங்க இருவர்க் கழலாய் நீண்டகாரணமுங் கண்டேன் கருவாய் நின்று பலங்கள் தரித்துகந்த பண்புங் கண்டேன்பாடல் ஒலியெலாங் கூடக் கண்டேன் இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும்இறுத்தவனுக் கீந்த பெருமை கண்டேன் வலங்கைத் தலத்துள் அனலுங் கண்டேன்வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. | 6.77.10 |
திருவாலங்காடு – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
775 | ஒன்றா வுலகனைத்து மானார் தாமேஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமேநீர்வளிதீ யாகாச மானார் தாமே கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமேகோலப் பழனை யுடையார் தாமே சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. | 6.78.1 |
776 | மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமேவானோர் வணங்கப் படுவார் தாமே சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமேசரணென் றிருப்பார்கட் கன்பர் தாமே பலபலவும் வேடங்க ளானார் தாமேபழனை பதியா வுடையார் தாமே சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. | 6.78.2 |
777 | ஆவுற்ற ஐந்து முகந்தார் தாமேஅளவில் பெருமை யுடையார் தாமே பூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமேபுனிதப் பொருளாகி நின்றார் தாமே பாவுற்ற பாட லுகப்பார் தாமேபழனை பதியா வுடையார் தாமே தேவுற் றடிபரவ நின்றார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. | 6.78.3 |
778 | நாறுபூங் கொன்றை முடியார் தாமேநான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே மாறிலா மேனி யுடையார் தாமேமாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே பாறினார் வெண்டலையி லுண்டார் தாமேபழனை பதியா வுடையார் தாமே தேறினார் சித்தத் திருந்தார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. | 6.78.4 |
779 | அல்லும் பகலுமாய் நின்றார் தாமேஅந்தியுஞ் சந்தியு மானார் தாமே சொல்லும் பொருளெலா மானார் தாமேதோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமேபழனை பதியா வுடையார் தாமே செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. | 6.78.5 |
780 | தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமேதூநீ றணியுஞ் சுவண்டர் தாமே தண்டா மரையானும் மாலுந் தேடத்தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே பண்டா னிசைபாட நின்றார் தாமேபழனை பதியா வுடையார் தாமே திண்டோ ள்க ளெட்டு முடையார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. | 6.78.6 |
781 | மையாருங் கண்ட மிடற்றார் தாமேமயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே ஐயாறும் ஆரூரும் ஆனைக் காவும்அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமே பையா டரவ மசைத்தார் தாமேபழனை பதியா வுடையார் தாமே செய்யாள் வழிபட நின்றார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. | 6.78.7 |
782 | விண்முழுதும் மண்முழுது மானார் தாமேமிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே கண்விழியாற் காமனையுங் காய்ந்தார் தாமேகாலங்க ளூழி கடந்தார் தாமே பண்ணியலும் பாட லுகப்பார் தாமேபழனை பதியா வுடையார் தாமே திண்மழுவா ளேந்து கரத்தார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. | 6.78.8 |
783 | காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமேகயிலை மலையை யுடையார் தாமே ஊரா வேகம்பம் உகந்தார் தாமேஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே பாரார் புகழப் படுவார் தாமேபழனை பதியா வுடையார் தாமே தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. | 6.78.9 |
784 | மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமேவண்கயிலை மாமலையை வந்தி யாத நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனைநெரிய விரலா லடர்த்தார் தாமே பாலொத்த மேனி நிறத்தார் தாமேபழனை பதியா வுடையார் தாமே சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமேதிருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே. | 6.78.10 |
திருத்தலையாலங்காடு – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
785 | தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைச்சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னை அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானைஆதிரைநா ளாதரித்த அம்மான் றன்னை முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானைமூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற தண்டத்திற் றலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே. | 6.79.1 |
786 | அக்கிருந்த அரையானை அம்மான் றன்னைஅவுணர்புர மொருநொடியி லெரிசெய் தானைக் கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் றன்னைக்குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை புக்கிருந்து போகாத புனிதன் றன்னைப்புண்ணியனை எண்ணருஞ்சீர்ப் போக மெல்லாந் தக்கிருந்த தலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே. | 6.79.2 |
787 | மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தைவிளங்கிளமா மதிசூடும் விகிர்தன் றன்னை எய்த்தவமே உழிதந்த ஏழை யேனைஇடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப் பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப்புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே. | 6.79.3 |
788 | சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப் புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப்பொன்னாகி மணியாகி முத்து மாகிப் பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப்பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற தவனாய தலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே. | 6.79.4 |
789 | கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் றன்னைக்காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் றன்னை அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானைஐயாறு மேயானை ஆரூ ரானைப் பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் றன்னைப்பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச் சங்கரனைத் தலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே. | 6.79.5 |
790 | விடந்திகழும் அரவரைமேல் வீக்கி னானைவிண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை அடைந்தவரை அமருலக மாள்விப் பானைஅம்பொன்னைக் கம்பமா களிறட் டானை மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல்வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த தடங்கடலைத் தலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே. | 6.79.6 |
791 | விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானைவீரட்டம் மேயானை வெண்ணீற் றானை முடைநாறு முதுகாட்டி லாட லானைமுன்னானைப் பின்னானை அந்நா ளானை உடையாடை யுரிதோலே உகந்தான் றன்னைஉமையிருந்த பாகத்து ளொருவன் றன்னைச் சடையானைத் தலையாலங் காடன் றன்னைசாராதே சாலநாள் போக்கி னேனே. | 6.79.7 |
792 | கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை இரும்பமர்ந்த மூவிலைவே லேந்தி னானைஎன்னானைத் தென்னானைக் காவான் றன்னைச் சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந் தரும்பொருளைத் தலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே. | 6.79.8 |
793 | பண்டளவு நரம்போசைப் பயனைப் பாலைப்படுபயனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக் கண்டளவிற் களிகூர்வார்க் கெளியான் றன்னைக்காரணனை நாரணனைக் கமலத் தோனை எண்டளவி லென்னெஞ்சத் துள்ளே நின்றஎம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந் தண்டரனைத் தலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே. | 6.79.9 |
794 | கைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான்கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றிமுடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப் பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாம தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச்சாராதே சாலநாள் போக்கி னேனே. | 6.79.10 |
திருமாற்பேறு – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
795 | பாரானைப் பாரினது பயனா னானைப்படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னை ஆராத இன்னமுதை அடியார் தங்கட்கனைத்துலகு மானானை அமரர் கோனைக் காராருங் கண்டனைக் கயிலை வேந்தைக்கருதுவார் மனத்தானைக் காலற் செற்ற சீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. | 6.80.1 |
796 | விளைக்கின்ற நீராகி வித்து மாகிவிண்ணோடு மண்ணாகி விளங்கு செம்பொன் துளைக்கின்ற துளையாகிச் சோதி யாகித்தூண்டரிய சுடராகித் துளக்கில் வான்மேல் முளைக்கின்ற கதிர்மதியு மரவு மொன்றிமுழங்கொலிநீர்க் கங்கையொடு மூவா தென்றுந் திளைக்கின்ற சடையானைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. | 6.80.2 |
797 | மலைமகள்தங் கோனவனை மாநீர் முத்தைமரகதத்தை மாமணியை மல்கு செல்வக் கலைநிலவு கையானைக் கம்பன் றன்னைக்காண்பினிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை விலைபெரிய வெண்ணீற்று மேனி யானைமெய்யடியார் வேண்டுவதே வேண்டு வானைச் சிலைநிலவு கரத்தானைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. | 6.80.3 |
798 | உற்றானை உடல்தனக்கோர் உயிரா னானைஓங்காரத் தொருவனையங் குமையோர் பாகம் பெற்றானைப் பிஞ்ஞகனைப் பிறவா தானைப்பெரியனவும் அரியனவு மெல்லாம் முன்னே கற்றானைக் கற்பனவுந் தானே யாயகச்சியே கம்பனைக் காலன் வீழச் செற்றானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. | 6.80.4 |
799 | நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகிநினைவாகி நினைவினிய மலையான் மங்கை கூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக்குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர் ஆறாத ஆனந்தத் தடியார் செய்தஅனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றுஞ் சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. | 6.80.5 |
800 | மருவினிய மறைப்பொருளை மறைக்காட் டானைமறப்பிலியை மதியேந்து சடையான் றன்னை உருநிலவு மொண்சுடரை உம்ப ரானைஉரைப்பினிய தவத்தானை உலகின் வித்தைக் கருநிலவு கண்டனைக் காளத் தியைக்கருதுவார் மனத்தானைக் கல்வி தன்னைச் செருநிலவு படையானைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. | 6.80.6 |
801 | பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப்பெரியானை அரியானைப் பெண்ணா ணாய நிறத்தானை நின்மலனை நினையா தாரைநினையானை நினைவோரை நினைவோன் றன்னை அறத்தானை அறவோனை ஐயன் றன்னைஅண்ணல்தனை நண்ணரிய அமர ரேத்துந் திறத்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. | 6.80.7 |
802 | வானகத்தில் வளர்முகிலை மதியந் தன்னைவணங்குவார் மனத்தானை வடிவார் பொன்னை ஊனகத்தில் உறுதுணையை உலவா தானைஒற்றியூர் உத்தமனை ஊழிக் கன்றைக் கானகத்துக் கருங்களிற்றைக் காளத் தியைக்கருதுவார் கருத்தானைக் கருவை மூலத் தேனகத்தி லின்சுவையைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. | 6.80.8 |
803 | முற்றாத முழுமுதலை முளையை மொட்டைமுழுமலரின் மூர்த்தியை முனியா தென்றும் பற்றாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னைப்பராபரனைப் பரஞ்சுடரைப் பரிவோர் நெஞ்சில் உற்றானை உயர்கருப்புச் சிலையோன் நீறாய்ஒள்ளழல்வாய் வேவவுறு நோக்கத் தானைச் செற்றானைத் திரிபுரங்கள் திருமாற் பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. | 6.80.9 |
804 | விரித்தானை நான்மறையோ டங்க மாறும்வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றி நெரித்தானை நின்மலனை அம்மான் றன்னைநிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கை தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத்தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய் வேவச் சிரித்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே. | 6.80.10 |
திருக்கோடிகா – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
805 | கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்கன்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய் மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய் மதிற்கச்சி யேகம்ப மேயான் கண்டாய் விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய்மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய்கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. | 6.81.1 |
806 | வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய் பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய் செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்திருவாரூர்த் திருமூலத் தானன் கண்டாய் கொண்டாடு மடியவர்தம் மனத்தான் கண்டாய்கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. | 6.81.2 |
807 | அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்அடியார்கட் காரமுத மானான் கண்டாய் மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய் இலையார்ந்த திரிசூலப் படையான் கண்டாய்ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய் கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய்கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. | 6.81.3 |
808 | மற்றாருந் தன்னொப்பா ரில்லான் கண்டாய்மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய் புற்றா டரவணிந்த புனிதன் கண்டாய்பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான் கண்டாய் அற்றார்கட் கற்றானாய் நின்றான் கண்டாய்ஐயா றகலாத ஐயன் கண்டாய் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய்கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. | 6.81.4 |
809 | வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய் போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய்புகலூரை யகலாத புனிதன் கண்டாய் நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய்நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய் கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய்கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. | 6.81.5 |
810 | கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய் படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய்பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய்அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய் கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. | 6.81.6 |
811 | உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய்ஒற்றியூ ரொற்றியா வுடையான் கண்டாய் கழையாடு கழுக்குன்ற மமர்ந்தான் கண்டாய்காளத்திக் கற்பகமாய் நின்றான் கண்டாய் இழையாடு மெண்புயத்த இறைவன் கண்டாய்என்னெஞ்சத் துள்நீங்கா எம்மான் கண்டாய் குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய்கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. | 6.81.7 |
812 | படமாடு பன்னகக்கச் சசைத்தான் கண்டாய்பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் நடமாடி ஏழுலகுந் திரிவான் கண்டாய்நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய் கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய் குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய்கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. | 6.81.8 |
இப்பதிகத்தில் 9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. | 6.81.9-10 |
திருச்சாய்க்காடு – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
813 | வானத் திளமதியும் பாம்புந் தன்னில்வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலுந் தேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந்தில்லை நடமாடுந் தேவர் போலும் ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்நன்மையுந் தீமையு மானார் போலுந் தேனொத் தடியார்க் கினியார் போலுந்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. | 6.82.1 |
814 | விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும் அண்ணா மலையுறையும் அண்ணல் போலும்அதியரைய மங்கை யமர்ந்தார் போலும் பண்ணார் களிவண்டு பாடி யாடும்பராய்த்துறையுள் மேய பரமர் போலுந் திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. | 6.82.2 |
815 | கானிரிய வேழ முரித்தார் போலுங்காவிரிப்பூம் பட்டினத் துள்ளார் போலும் வானிரிய வருபுரமூன் றெரித்தார் போலும்வடகயிலை மலையதுதம் மிருக்கை போலும் ஊனிரியத் தலைகலனா வுடையார் போலும்உயர்தோணி புரத்துறையு மொருவர் போலுந் தேனிரிய மீன்பாயுந் தெண்ணீர்ப் பொய்கைத்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. | 6.82.3 |
816 | ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும்ஊழி பலகண் டிருந்தார் போலும் மானுற்ற கரதலமொன் றுடையார் போலும்மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலுங் கானுற்ற ஆட லமர்ந்தார் போலுங்காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலுந் தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. | 6.82.4 |
817 | கார்மல்கு கொன்றையந் தாரார் போலுங்காலனையும் ஓருதையாற் கண்டார் போலும் பார்மல்கி யேத்தப் படுவார் போலும்பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும் ஊர்மல்கு பிச்சைக் குழன்றார் போலும்ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலுஞ் சீர்மல்கு பாட லுகந்தார் போலுந்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. | 6.82.5 |
818 | மாவாய்ப் பிளந்துகந்த மாலுஞ் செய்யமலரவனுந் தாமேயாய் நின்றார் போலும் மூவாத மேனி முதல்வர் போலும்முதுகுன்ற மூதூ ருடையார் போலுங் கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்குரைகழலா லன்று குமைத்தார் போலுந் தேவாதி தேவர்க் கரியார் போலுந்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. | 6.82.6 |
819 | கடுவெளியோ டோ ரைந்து மானார் போலுங்காரோணத் தென்று மிருப்பார் போலும் இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும்ஏகம்பம் மேவி யிருந்தார் போலும் படியொருவ ரில்லாப் படியார் போலும்பாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலுஞ் செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலுந்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. | 6.82.7 |
820 | விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்வெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தர் போலும் மலையினார் மங்கை மணாளர் போலும்மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலுந் தொலைவிலார் புரமூன்றுந் தொலைத்தார் போலுஞ்சோற்றுத் துறைதுருத்தி யுள்ளார் போலுஞ் சிலையினார் செங்க ணரவர் போலுந்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. | 6.82.8 |
821 | அல்ல லடியார்க் கறுப்பார் போலும்அமருலகந் தம்மடைந்தார்க் காட்சி போலும் நல்லமும் நல்லூரும் மேயார் போலும்நள்ளாறு நாளும் பிரியார் போலும் முல்லை முகைநகையாள் பாகர் போலும்முன்னமே தோன்றி முளைத்தார் போலுந் தில்லை நடமாடுந் தேவர் போலுந்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. | 6.82.9 |
822 | உறைப்புடைய இராவணன்பொன் மலையைக் கையால்ஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும்நிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும் பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்பெண்ணா ணுருவாகி நின்றார் போலுஞ் சிறப்புடைய அடியார்கட் கினியார் போலுந்திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே. | 6.82.10 |
திருப்பாசூர் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
823 | விண்ணாகி நிலனாகி விசும்பு மாகிவேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகிஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக்காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. | 6.83.1 |
824 | வேதமோர் நான்காயா றங்க மாகிவிரிக்கின்ற பொருட்கெல்லாம் வித்து மாகிக் கூதலாய்ப் பொழிகின்ற மாரி யாகிக்குவலயங்கள் முழுதுமாய்க் கொண்ட லாகிக் காதலால் வானவர்கள் போற்றி யென்றுகடிமலர்க ளவைதூவி ஏத்த நின்ற பாதியோர் மாதினனைப் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. | 6.83.2 |
825 | தடவரைக ளேழுமாய்க் காற்றாய்த் தீயாய்த்தண்விசும்பாய்த் தண்விசும்பி னுச்சி யாகிக் கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞால மாகிக்காண்கின்ற கதிரவனும் மதியு மாகிக் குடமுழவச் சதிவழியே அனல்கை யேந்திக்கூத்தாட வல்ல குழக னாகிப் படவரவொன் றதுவாட்டிப் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. | 6.83.3 |
826 | நீராருஞ் செஞ்சடைமேல் அரவங் கொன்றைநிறைமதிய முடன்சூடி நீதி யாலே சீராரும் மறையோதி உலக முய்யச்செழுங்கடலைக் கடைந்தகடல் நஞ்ச முண்ட காராருங் கண்டனைக் கச்சி மேயகண்ணுதலைக் கடலொற்றி கருதி னானைப் பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப்பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. | 6.83.4 |
827 | வேடனாய் விசயன்றன் வியப்பைக் காண்பான்விற்பிடித்துக் கொம்புடைய ஏனத் தின்பின் கூடினார் உமையவளுங் கோலங் கொள்ளக்கொலைப்பகழி யுடன்கோத்துக் கோரப் பூசல் ஆடினார் பெருங்கூத்துக் காளி காணஅருமறையோ டாறங்கம் ஆய்ந்து கொண்டு பாடினார் நால்வேதம் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. | 6.83.5 |
828 | புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலாற்பொதுப்பந்தர் அதுவிழைத்துச் சருகால் மேய்ந்த சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்யச்சிவகணத்துப் புகப்பெய்தார் திறலான் மிக்க வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்புவிரவியவா கண்டதற்கு வீடு காட்டிப் பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. | 6.83.6 |
829 | இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார்இடைமருதோ டேகம்பத் தென்றும் நீங்கார் அணைவரியர் யாவர்க்கும் ஆதி தேவர்அருமந்த நன்மையெலாம் அடியார்க் கீவர் தணல்முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித்தத்துவனைச் சாந்தகிலி னளறு தோய்ந்த பணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. | 6.83.7 |
830 | அண்டவர்கள் கடல்கடைய அதனுட் டோ ன்றிஅதிர்ந்தெழுந்த ஆலாலம் வேலை ஞாலம் எண்டிசையுஞ் சுடுகின்ற ஆற்றைக் கண்டும்இமைப்பளவில் உண்டிருண்ட கண்டர் தொண்டர் வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்றுவானவர்கள் தானவர்கள் வணங்கி யேத்தும் பண்டரங்க வேடனையெம் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. | 6.83.8 |
831 | ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றைநான்முகனு மறியாத நெறியான் கையிற் சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத்தொல்லுலகிற் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக் காலத்தா லுதைசெய்து காதல் செய்தஅந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர் பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. | 6.83.9 |
832 | வேந்தன்நெடு முடியுடைய அரக்கர் கோமான்மெல்லியலாள் உமைவெருவ விரைந்திட் டோ டிச் சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத்தடக்கைகளா லெடுத்திடலுந் தாளா லூன்றி ஏந்துதிரள் திண்டோ ளுந் தலைகள் பத்தும் இறுத்தவன்றன் இசைகேட்டு விரக்கங் கொண்ட பாந்தளணி சடைமுடியெம் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. | 6.83.1 |
திருச்செங்காட்டங்குடி – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
833 | பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்எழுந்தருளி இருந்தானை எண்டோ ள் வீசி அருந்திறன்மா நடமாடும் அம்மான் றன்னைஅங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த் திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. | 6.84.1 |
834 | துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட அங்கனகத் திருமாலும் அயனுந் தேடும்ஆரழலை அனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னைவண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற செங்கனகத் திரள்தோளெஞ் செல்வன் றன்னைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. | 6.84.2 |
835 | உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனைஉம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்பேணியஅந் தணர்க்குமறைப் பொருளைப் பின்னும் முருகுவிரி நறுமலர்மே லயற்கும் மாற்கும்முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த திருகுகுழல் உமைநங்கை பங்கன் றன்னைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. | 6.84.3 |
836 | கந்தமலர்க் கொன்றையணி சடையான் றன்னைக்கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச் சந்தமலர்த் தெரிவையொரு பாகத் தானைச்சராசரநற் றாயானை நாயேன் முன்னைப் பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கேபன்னியநூற் றமிழ்மாலை பாடு வித்தென் சிந்தைமயக் கறுத்ததிரு வருளி னானைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. | 6.84.4 |
837 | நஞ்சடைந்த கண்டத்து நாதன் றன்னைநளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானைவியன்கெடில வீரட்டம் மேவி னானை மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதிமதிலாரூ ரிடங்கொண்ட மைந்தன் றன்னைச் செஞ்சினத்த திரிசூலப் படையான் றன்னைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. | 6.84.5 |
838 | கன்னியையங் கொருசடையிற் கரந்தான் றன்னைக்கடவூரில் வீரட்டங் கருதி னானைப் பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் றன்னைப்பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப் பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் றன்னைப்பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. | 6.84.6 |
839 | எத்திக்கு மாய்நின்ற இறைவன் றன்னைஏகம்பம் மேயானை இல்லாத் தெய்வம் பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப் பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப்பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித் தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. | 6.84.7 |
840 | கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்கற்றார்கள் உற்றோருங் காத லானைப் பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும்பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்கநிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றுஞ் செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. | 6.84.8 |
841 | அரியபெரும் பொருளாகி நின்றான் றன்னைஅலைகடலில் ஆலால மமுது செய்த கரியதொரு கண்டத்துச் செங்க ணேற்றுக்கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை உரியபல தொழிற்செய்யு மடியார் தங்கட்குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத் தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. | 6.84.9 |
842 | போரரவம் மால்விடையொன் றூர்தி யானைப்புறம்பயமும் புகலூரும் மன்னி னானை நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்நீங்காமை வைத்தானை நிமலன் றன்னைப் பேரரவப் புட்பகத்தே ருடைய வென்றிப்பிறங்கொளிவா ளரக்கன்முடி யிடியச் செற்ற சீரரவக் கழலானைச் செல்வன் றன்னைச்செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. | 6.84.1 |
திருமுண்டீச்சரம் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
843 | ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணாஅடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப் போர்த்தான்காண் புரிசடைமேற் புனலேற் றான்காண்புறங்காட்டி லாடல் புரிந்தான் றான்காண் காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங்கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே. | 6.85.1 |
844 | கருத்தன்காண் கமலத்தோன் றலையி லொன்றைக்காய்ந்தான்காண் பாய்ந்தநீர் பரந்த சென்னி ஒருத்தன்காண் உமையவளோர் பாகத் தான்காண்ஓருருவின் மூவுருவா யொன்றாய் நின்ற விருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்மெய்யடியா ருள்ளத்தே விரும்பி நின்ற திருத்தன்காண் திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே. | 6.85.2 |
845 | நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண்நாதன்காண் கீதத்தை நவிற்றி னான்காண் இன்பன்காண் இமையாமுக் கண்ணி னான்காண்ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட் கன்பன்காண் ஆரழல தாடி னான்காண்அவனிவனென் றியாவர்க்கும் அறிய வொண்ணாச் செம்பொன்காண் திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே. | 6.85.3 |
846 | மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண் காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண்கங்காளன் காண்கயிலை மலையி னான்காண் ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண்ஆரழலாய் அயற்கரிக்கும் அறிய வொண்ணாத் தேவன்காண் திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே. | 6.85.4 |
847 | கானவன்காண் கானவனாய்ப் பொருதான் றான்காண்கனலாட வல்லான்காண் கையி லேந்தும் மானவன்காண் மறைநான்கு மாயி னான்காண்வல்லேறொன் றதுவேற வல்லான் றான்காண் ஊனவன்காண் உலகத்துக் குயிரா னான்காண்உரையவன்காண் உணர்வவன்காண் உணர்ந்தார்க் கென்றுந் தேனவன்காண் திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே. | 6.85.5 |
848 | உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்ஒழிவற நின்றெங்கு முலப்பி லான்காண் புற்றரவே ஆடையுமாய்ப் பூணு மாகிப்புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண் நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காகநணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினாற் செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே. | 6.85.6 |
849 | உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்விஉருண்டோ டத் தொடர்ந்தருக்கன் பல்லை யெல்லாந் தகர்த்தவன்காண் தக்கன்றன் தலையைச் செற்றதலையவன்காண் மலைமகளாம் உமையைச் சால மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் வேள்விவந்தவியுண் டவரோடு மதனை யெல்லாஞ் சிதைத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே. | 6.85.7 |
850 | உரிந்தவுடை யார்துவரா லுடம்பை மூடிஉழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம் பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்ட மெல்லாம்பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை நிரந்துவரும் இருகரையுந் தடவா வோடிநின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித் திரிந்துலவு திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே. | 6.85.8 |
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 6.85.9 | |
851 | அறுத்தவன்காண் அடியவர்கள் அல்ல லெல்லாம்அரும்பொருளாய் நின்றவன்காண் அனங்க னாகம் மறுத்தவன்காண் மலைதன்னை மதியா தோடிமலைமகள்தன் மனம்நடுங்க வானோ ரஞ்சக் கறுத்தவனாய்க் கயிலாய மெடுத்தோன் கையுங்கதிர்முடியுங் கண்ணும் பிதுங்கி யோடச் செறுத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேயசிவலோகன் காணவனென் சிந்தை யானே. | 6.85.1 |
திருவாலம்பொழில் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
852 | கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக்கமலத்தோன் றலையரிந்த கபா லியை உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானைஉணர்வெலா மானானை ஓசை யாகி வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னைமறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேயதிருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. | 6.86.1 |
853 | உரித்தானைக் களிறதன் றோல் போர்வை யாகஉடையானை உடைபுலியி னதளே யாகத் தரித்தானைச் சடையதன்மேற் கங்கை யங்கைத்தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம் பரித்தானைப் பவளமால் வரையன் னானைப்பாம்பணையான் றனக்கன்றங் காழி நல்கிச் சிரித்தானைத் தென்பரம்பைக் குடியின் மேயதிருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. | 6.86.2 |
854 | உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானைஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளாற் கருவீன்ற வெங்களவை யறிவான் றன்னைக்காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக் கருளீன்ற ஆரமுதை அமரர் கோனைஅள்ளூறி எம்பெருமா னென்பார்க் கென்றுந் திருவீன்ற தென்பரம்பைக் குடியின் மேயதிருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. | 6.86.3 |
855 | பார்முழுதாய் விசும்பாகிப் பாதா ளமாம்பரம்பரனைச் சுரும்பமருங் குழலாள் பாகத் தாரமுதாம் அணிதில்லைக் கூத்தன் றன்னைவாட்போக்கி யம்மானை எம்மா னென்று வாரமதா மடியார்க்கு வார மாகிவஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ் சீரரசைத் தென்பரம்பைக் குடியின் மேயதிருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. | 6.86.4 |
856 | வரையார்ந்த மடமங்கை பங்கன் றன்னைவானவர்க்கும் வானவனை மணியை முத்தை அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்தஅம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும் புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் றன்னைப்பூந்துருத்தி மேயானைப் புகலூ ரானைத் திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேயதிருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. | 6.86.5 |
857 | விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தைவியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் றன்னை அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறாஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப் பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும்பாழ்படுப்பான் சிலைமலைநா ணேற்றி யம்பு தெரிந்தானைத் தென்பரம்பைக் குடியின் மேயதிருவாலம் பொழிலானைச்சிந்தி நெஞ்சே. | 6.86.6 |
858 | பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப்புறம்புறமே சோதித்த புனிதன் றன்னை எல்லாருந் தன்னையே இகழ அந்நாள்இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச் சொல்லாதா ரவர்தம்மைச் சொல்லா தானைத்தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச் செல்லாத நெறிசெலுத்த வல்லான் றன்னைத்திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. | 6.86.7 |
859 | ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோடயன்தேடி நாடரிய அம்மான் றன்னைப் பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப்பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் றன்னைப் பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப்பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச் சிந்தியவெந் தீவினைகள் தீர்ப்பான் றன்னைத்திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. | 6.86.8 |
860 | கையிலுண் டுழல்வாருஞ் சாக்கி யருங்கல்லாத வன்மூடர்க் கல்லா தானைப் பொய்யிலா தவர்க்கென்றும் பொய்யி லானைப்பூணாகம் நாணாகப் பொருப்பு வில்லாக் கையினார் அம்பெரிகால் ஈர்க்குக் கோலாக்கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேயதிருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. | 6.86.9 |
இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் மறைந்து போயிற்று. | 6.86.1 |
திருச்சிவபுரம் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
861 | வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண்வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண் ஆனைந்து மாடி னான்காண்ஐயன்காண் கையிலன லேந்தி யாடுங் கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்கருதுவார் இதயத்துக் கமலத் தூறுந் தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. | 6.87.1 |
862 | நக்கன்காண் நக்கரவ மரையி லார்த்தநாதன்காண் பூதகண மாட ஆடுஞ் சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண்துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வ தாகும் பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற் றான்காண்புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. | 6.87.2 |
863 | வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண்மலரவன்மால் காண்பரிய மைந்தன் றான்காண் கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண்கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண் அம்பர்நகர்ப் பெருங்கோயி லமர்கின் றான்காண்அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண் செம்பொனெனத் திகழ்கின்ற உருவத் தான்காண்சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. | 6.87.3 |
864 | பித்தன்காண் தக்கன்றன் வேள்வி யெல்லாம்பீடழியச் சாடி யருள்கள் செய்த முத்தன்காண் முத்தீயு மாயி னான்காண்முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க அத்தன்காண் புத்தூரி லமர்ந்தான் றான்காண்அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட சித்தன்காண் சித்தீச் சரத்தான் றான்காண்சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. | 6.87.4 |
865 | தூயவன்காண் நீறு துதைந்த மேனிதுளங்கும் பளிங்கனைய சோதி யான்காண் தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்சிறுமான்கொள் செங்கையெம் பெருமான் றான்காண் ஆயவன்காண் ஆரூரி லம்மான் றான்காண்அடியார்கட் காரமுத மாயி னான்காண் சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. | 6.87.5 |
866 | பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும் பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றிபிரியாது பலநாளும் வழிபட் டேத்துஞ் சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. | 6.87.6 |
867 | வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண் மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க கையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண்காமரங்கம் பொடிவீழ்த்த கண்ணி னான்காண் செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்தசிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. | 6.87.7 |
இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் மறைந்து போயின. | 6.87.8-9 | |
868 | கலையாரு நூலங்க மாயி னான்காண்கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகி மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்றமண்ணாகி விண்ணாகி நின்றான் றான்காண் தலையாய மலையெடுத்த தகவி லோனைத்தகர்ந்துவிழ ஒருவிரலாற் சாதித் தாண்ட சிலையாரும் மடமகளோர் கூறன் றான்காண்சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. | 6.87.1 |
திருவோமாம்புலியூர் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
869 | ஆராரும் மூவிலைவேல் அங்கை யானைஅலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும் ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானைஎழுபிறப்பும் எனையாளா வுடையான் றன்னை ஊராரும் படநாக மாட்டு வானைஉயர்புகழ்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ் சீராரும் வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. | 6.88.1 |
870 | ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணாஅமரர்தொழுங் கழலானை அமலன் றன்னைச் சோதிமதி கலைதொலையத் தக்க னெச்சன்சுடரிரவி அயிலெயிறு தொலைவித் தானை ஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும்உயர்புகழார் தருமோமாம் புலியூர் மன்னுந் தீதிற்றிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. | 6.88.2 |
871 | வருமிக்க மதயானை யுரித்தான் றன்னைவானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத் தருமிக்க குழலுமையாள் பாகன் றன்னைச்சங்கரனெம் பெருமானைத் தரணி தன்மேல் உருமிக்க மணிமாடம் நிலாவு வீதிஉத்தமர்வாழ் தருமோமாம் புலியூர் மன்னுந் திருமிக்க வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. | 6.88.3 |
872 | அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவஅழல்விழித்த கண்ணானை அமரர் கோனை வென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழவிளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் றன்னை ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும்உயர்புகழ்நான் மறையோமாம் புலியூர் நாளுந் தென்றல்மலி வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. | 6.88.4 |
873 | பாங்குடைய எழிலங்கி யருச்சனைமுன் விரும்பப்பரிந்தவனுக் கருள்செய்த பரமன் றன்னைப் பாங்கிலா நரகதனிற் தொண்ட ரானார்பாராத வகைபண்ண வல்லான் றன்னை ஓங்குமதிற் புடைதழுவும் எழிலோமாம் புலியூர்உயர்புகழந் தணரேத்த வுலகர்க் கென்றுந் தீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. | 6.88.5 |
874 | அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் றன்னைஆராத இன்னமுதை அடியார் தம்மேல் வருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கைமணவாள நம்பியையென் மருந்து தன்னைப் பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்பொழில்கெழுவு தருமோமாம் புலியூர் நாளுந் திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. | 6.88.6 |
875 | மலையானை வருமலையன் றுரிசெய் தானைமறையானை மறையாலும் அறிய வொண்ணாக் கலையானைக் கலையாருங் கையி னானைக்கடிவானை அடியார்கள் துயர மெல்லாம் உலையாத அந்தணர்கள் வாழு மோமாம்புலியூரெம் உத்தமனைப் புரமூன் றெய்த சிலையானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. | 6.88.7 |
876 | சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச்செழுமதியும் படஅரவும் உடன்வைத் தானைச் சார்ந்தோர்கட் கினியானைத் தன்னொப் பில்லாத்தழலுருவைத் தலைமகனைத் தகைநால் வேதம் ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர்உள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சிற் சேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. | 6.88.8 |
877 | வார்கெழுவு முலையுமையாள் வெருவ வன்றுமலையெடுத்த வாளரக்கன் றோளுந் தாளும் ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டேஇன்னிசைகேட் டிருந்தானை இமையோர் கோனைப் பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப்பைம்பொழில்சேர் தருமோமாம் புலியூர் மன்னுஞ் சீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் றன்னைச்சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. | 6.88.9 |
இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் மறைந்து போயிற்று. | 6.88.1 |
திருவின்னம்பர் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
878 | அல்லி மலர்நாற்றத் துள்ளார் போலும்அன்புடையார் சிந்தை யகலார் போலுஞ் சொல்லின் அருமறைகள் தாமே போலுந்தூநெறிக்கு வழிகாட்டுந் தொழிலார் போலும் வில்லிற் புரமூன் றெரித்தார் போலும்வீங்கிருளும் நல்வெளியு மானார் போலும் எல்லி நடமாட வல்லார் போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. | 6.89.1 |
879 | கோழிக் கொடியோன்றன் தாதை போலுங்கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும் ஊழி முதல்வருந் தாமே போலும்உள்குவார் உள்ளத்தி னுள்ளார் போலும் ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும்அடைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும் ஏழு பிறவிக்குந் தாமே போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. | 6.89.2 |
880 | தொண்டர்கள் தந்தகவி னுள்ளார் போலுந்தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும் பண்டிருவர் காணாப் படியார் போலும்பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங் கண்ட மிறையே கறுத்தார் போலுங்காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும் இண்டைச் சடைசேர் முடியார் போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. | 6.89.3 |
881 | வானத் திளந்திங்கட் கண்ணி தன்னைவளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும் ஊனொத்த வேலொன் றுடையார் போலும்ஒளிநீறு பூசு மொருவர் போலுந் தானத்தின் முப்பொழுதுந் தாமே போலுந்தம்மின் பிறர்பெரியா ரில்லை போலும் ஏனத் தெயிறிலங்கப் பூண்டார் போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. | 6.89.4 |
882 | சூழுந் துயர மறுப்பார் போலுந்தோற்றம் இறுதியாய் நின்றார் போலும் ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும்ஆட லுகந்த அழகர் போலுந் தாழ்வின் மனத்தேனை யாளாக் கொண்டுதன்மை யளித்த தலைவர் போலும் ஏழு பிறப்பு மறுப்பார் போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. | 6.89.5 |
883 | பாதத் தணையுஞ் சிலம்பர் போலும்பாரூர் விடையொன் றுடையார் போலும் பூதப் படையாள் புனிதர் போலும்பூம்புகலூர் மேய புராணர் போலும் வேதப் பொருளாய் விளைவார் போலும்வேடம் பரவித் திரியுந் தொண்டர் ஏதப் படாவண்ணம் நின்றார் போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. | 6.89.6 |
884 | பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்பத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங் கல்லாதார் காட்சிக் கரியார் போலுங்கற்றவர்கள் ஏதங் களைவார் போலும் பொல்லாத பூதப் படையார் போலும்பொருகடலும் ஏழ்மலையுந் தாமே போலும் எல்லாரு மேத்தத் தகுவார் போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. | 6.89.7 |
885 | மட்டு மலியுஞ் சடையார் போலும்மாதையோர் பாக முடையார் போலுங் கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலுங்காலன்றன் வாழ்நாள் கழிப்பார் போலும் நட்டம் பயின்றாடும் நம்பர் போலும்ஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும் எட்டுத் திசைகளுந் தாமே போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. | 6.89.8 |
886 | கருவுற்ற காலத்தே என்னை யாண்டுகழற்போது தந்தளித்த கள்வர் போலுஞ் செருவிற் புரமூன்று மட்டார் போலுந்தேவர்க்குந் தேவராஞ் செல்வர் போலும் மருவிப் பிரியாத மைந்தர் போலும்மலரடிகள் நாடி வணங்க லுற்ற இருவர்க் கொருவராய் நின்றார் போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. | 6.89.9 |
887 | அலங்கற் சடைதாழ ஐய மேற்றுஅரவ மரையார்க்க வல்லார் போலும் வலங்கை மழுவொன் றுடையார் போலும்வான்றக்கன் வேள்வி சிதைத்தார் போலும் விலங்கல் எடுத்துகந்த வெற்றி யானைவிறலழித்து மெய்ந்நரம்பாற் கீதங் கேட்டன் றிலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே. | 6.89.10 |
திருக்கஞ்சனூர் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
888 | மூவிலைவேற் சூலம்வல னேந்தி னானைமூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை நாவலனை நரைவிடையொன் றேறு வானைநால்வேத மாறங்க மாயி னானை ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவைஅயன்றிருமா லானானை அனலோன் போற்றுங் காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. | 6.90.1 |
889 | தலையேந்து கையானை என்பார்த் தானைச்சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக் குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக்கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை மலையானை மற்றொப்பா ரில்லா தானைமதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங் கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. | 6.90.2 |
890 | தொண்டர்குழாந் தொழுதேத்த அருள்செய் வானைச்சுடர்மழுவாட் படையானைச் சுழிவான் கங்கைத் தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச்செக்கர்வா னொளியானைச் சேரா தெண்ணிப் பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம்பாழ்படுத்துத் தலையறுத்துப் பற்கண் கொண்ட கண்டகனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. | 6.90.3 |
891 | விண்ணவனை மேருவில்லா வுடையான் றன்னைமெய்யாகிப் பொய்யாகி விதியா னானைப் பெண்ணவனை ஆணவனைப் பித்தன் றன்னைப்பிணமிடுகா டுடையானைப் பெருந்தக் கோனை எண்ணவனை எண்டிசையுங் கீழு மேலும்இருவிசும்பு மிருநிலமு மாகித் தோன்றுங் கண்ணவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. | 6.90.4 |
892 | உருத்திரனை உமாபதியை உலகா னானைஉத்தமனை நித்திலத்தை ஒருவன் றன்னைப் பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானைநீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக் கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. | 6.90.5 |
893 | ஏடேறு மலர்க்கொன்றை அரவு தும்பைஇளமதியம் எருக்குவா னிழிந்த கங்கைச் சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச்செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக் கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங் காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. | 6.90.6 |
894 | நாரணனும் நான்முகனு மறியா தானைநால்வேதத் துருவானை நம்பி தன்னைப் பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண் டுண்ணும்பால்வணனைத் தீவணனைப் பகலா னானை வார்பொதியும் முலையாளோர் கூறன் றன்னைமானிடங்கை யுடையானை மலிவார் கண்டங் கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. | 6.90.7 |
895 | வானவனை வலிவலமும் மறைக்காட் டானைமதிசூடும் பெருமானை மறையோன் றன்னை ஏனவனை இமவான்றன் பேதை யோடும்இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத் தேனவனைத் தித்திக்கும் பெருமான் றன்னைத்தீதிலா மறையவனைத் தேவர் போற்றுங் கானவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. | 6.90.8 |
896 | நெருப்புருவு திருமேனி வெண்ணீற் றானைநினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத் தருக்கழிய முயலகன்மேற் றாள்வைத் தானைச்சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தை விருப்பவனை விதியானை வெண்ணீற் றானைவிளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங் கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. | 6.90.9 |
897 | மடலாழித் தாமரையா யிரத்தி லொன்றுமலர்க்கணிடந் திடுதலுமே மலிவான் கோலச் சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைத்தும்பியுரி போர்த்தானைத் தோழன் விட்ட அடலாழித் தேருடைய இலங்கைக் கோனைஅருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக் கடலானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. | 6.90.10 |
திருவெறும்பியூர் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
898 | பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய தன்னையுந்தன் றிறத்தறியாப் பொறியி லேனைத்தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட தென்னெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. | 6.91.1 |
899 | பளிங்கினிழ லுட்பதித்த சோதி யானைப்பசுபதியைப் பாசுபத வேடத் தானை விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானைவேதியனை விண்ணவனை மேவி வையம் அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்அருமருந்தை ஆமா றறிந்தென் னுள்ளந் தெளிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. | 6.91.2 |
900 | கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்கடுஞ்சுடரைப் படிந்துகிடந் தமர ரேத்தும் உருவையண்டத் தொருமுதலை யோத வேலிஉலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற மருவைவென்ற குழன்மடவாள் பாகம் வைத்தமயானத்து மாசிலா மணியை வாசத் திருவெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. | 6.91.3 |
901 | பகழிபொழிந் தடலரக்கர் புரங்கள் மூன்றும்பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப் புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப்புண்ணியனைப் புவனியது முழுதும் போக உமிழுமம்பொற் குன்றத்தை முத்தின் றூணைஉமையவள்தம் பெருமானை இமையோ ரேத்துந் திகழெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. | 6.91.4 |
902 | பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்பயில்வானை அயில்வாய சூல மேந்தி நேரிடும்போர் மிகவல்ல நிமலன் றன்னைநின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும் பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ் சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. | 6.91.5 |
903 | கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முந்நீர்கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி ஊர்பலவுந் திரிவானை ஊர தாகஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடுமாலவனும் இந்திரனும் மந்திரத்தா லேத்துஞ் சீரெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. | 6.91.6 |
904 | நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றைநெறியிலங்கு மிகுகாலும் ஆகா சமும் வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்மன்னுயிரும் என்னுயிருந் தானாஞ் செம்பொன் ஆணியென்றும் அஞ்சனமா மலையே யென்றும்அம்பவளத் திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ் சேணெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. | 6.91.7 |
905 | அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தைஆரம்பக் குண்டரோ டயர்த்து நாளும் மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டாமதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற் பிறந்தநாள் நாளல்ல வாளா வீசன்பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு செறிந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. | 6.91.8 |
906 | அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றிஅறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப் பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்டபுண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்ச முண்ட குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்சடையானை மடைதோறுங் கமல மென்பூச் செறியெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. | 6.91.9 |
907 | அருந்தவத்தின் பெருவலியா லறிவ தன்றிஅடலரக்கன் றடவரையை யெடுத்தான் றிண்டோ ள் முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்றுமுன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாட இருந்தவனை ஏழுலகு மாக்கி னானைஎம்மானை கைம்மாவி னுரிவை போர்த்த திருந்தெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. | 6.91.10 |
திருக்கழுக்குன்றம் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
908 | மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னைமுதுபிணக்கா டுடையானை முதலா னானை ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனைஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப் பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக் காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. | 6.92.1 |
909 | பல்லாடு தலைசடைமே லுடையான் றன்னைப்பாய்புலித்தோ லுடையானைப் பகவன் றன்னைச் சொல்லோடு பொருளனைத்து மானான் றன்னைச்சுடருருவில் என்பறாக் கோலத் தானை அல்லாத காலனைமுன் னடர்த்தான் றன்னைஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக் கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. | 6.92.2 |
இப்பதிகத்தில் முதலிரண்டு செய்யுட்கள் தவிர ஏனைய செய்யுட்கள் மறைந்து போயின. | 6.92.3-10 | |
பலவகைத் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
910 | நேர்ந்தொருத்தி ஒருபாகத் தடங்கக் கண்டுநிலைதளர ஆயிரமா முகத்தி னோடு பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டுபடவரவும் பனிமதியும் வைத்த செல்வர் தாந்திருத்தித் தம்மனத்தை ஒருக்காத் தொண்டர்தனித்தொருதண் டூன்றிமெய் தளரா முன்னம் பூந்துருத்தி பூந்துருத்தி என்பீ ராகிற்பொல்லாப் புலாற்றுருத்தி போக்க லாமே. | 6.93.1 |
911 | ஐத்தானத் தகமிடறு சுற்றி யாங்கேஅகத்தடைந்தால் யாதொன்று மிடுவா ரில்லை மைத்தானக் கண்மடவார் தங்க ளோடுமாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் பைத்தானத் தொண்மதியும் பாம்பும் நீரும்படர்சடைமேல் வைத்துகந்த பண்பன் மேய நெய்த்தானம் நெய்த்தானம் என்பீ ராகில்நிலாவாப் புலாற்றானம் நீக்க லாமே. | 6.93.2 |
912 | பொய்யாறா வாறே புனைந்து பேசிப்புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக் கையாறாக் கரண முடையோ மென்றுகளித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர் நெய்யாறா ஆடிய நீல கண்டர்நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர் மேய ஐயாறே ஐயாறே என்பீ ராகில்அல்லல்தீர்ந் தமருலகம் ஆள லாமே. | 6.93.3 |
913 | இழவொன்று தாமொருவர்க் கிட்டொன் றீயார்ஈன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள் கழனங்கோ வையாதல் கண்டுந் தேறார்களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர் அழனம்மை நீக்குவிக்கும் அரைய னாக்கும்அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேய பழனம் பழனமே என்பீ ராகிற்பயின்றெழுந்த பழவினைநோய் பாற்ற லாமே. | 6.93.4 |
914 | ஊற்றுத் துறையொன்ப துள்நின் றோரீர்ஒக்க அடைக்கும்போ துணர மாட்டீர் மாற்றுத் துறைவழிகொண் டோ டா முன்னம்மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும்வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீ ராகிற்துயர்நீங்கித் தூநெறிக்கண் சேர லாமே. | 6.93.5 |
915 | கலஞ்சுழிக்குங் கருங்கடல்சூழ் வையந் தன்னிற்கள்ளக் கடலி லழுந்தி வாளா நலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில்நம்பன்றன் அடியிணைக்கே நவில்வா யாகில் அலஞ்சுழிக்கும் மன்னாகந் தன்னான் மேயஅருமறையோ டாறங்க மானார் கோயில் வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீ ராகில்வல்வினைகள் தீர்ந்துவா னாள லாமே. | 6.93.6 |
916 | தண்டி குண்டோ தரன்பிங் கிருடிசார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன் பண்டை உலகம் படைத்தான் றானும்பாரை யளந்தான்பல் லாண்டி சைப்பத் திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ்சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான் கண்டியூர் கண்டியூர் என்பீ ராகிற்கடுகநும் வல்வினையைக் கழற்ற லாமே. | 6.93.7 |
917 | விடமூக்கப் பாம்பேபோற் சிந்தி நெஞ்சேவெள்ளேற்றான் தன்றமரைக் கண்ட போது வடமூக்க மாமுனிவர் போலச் சென்றுமாதவத்தார் மனத்துளார் மழுவாட் செல்வர் படமூக்கப் பாம்பணையிற் பள்ளி யானும்பங்கயத்து மேலயனும் பரவிக் காணா குடமூக்கே குடமூக்கே என்பீ ராகிற்கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுக லாமே. | 6.93.8 |
918 | தண்காட்டாச் சந்தனமுந் தவள நீறுந்தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக் கண்காட்டாக் கருவரைபோ லனைய காஞ்சிக்கார்மயிலஞ் சாயலார் கலந்து காண எண்காட்டாக் காடங் கிடமா நின்றுஎரிவீசி இரவாடும் இறைவர் மேய வெண்காடே வெண்காடே என்பீ ராகில்வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே. | 6.93.9 |
919 | தந்தையார் தாயா ருடன் பிறந்தார்தாரமார் புத்திரரார் தாந்தா மாரே வந்தவா றெங்ஙனே போமா றேதோமாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா சிந்தையீர் உமக்கொன்று சொல்லக் கேண்மின்திகழ்மதியும் வாளரவுந் திளைக்குஞ் சென்னி எந்தையார் திருநாமம் நமச்சி வாயஎன்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே. | 6.93.10 |
நின்ற – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
920 | இருநிலனாய்த் தீயாகி நீரு மாகிஇயமான னாயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகிஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும்பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி நெருநலையாய் இன்றாகி நாளை யாகிநிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே. | 6.94.1 |
921 | மண்ணாகி விண்ணாகி மலையு மாகிவயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக் கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்கலையாகிக் கலைஞானந் தானே யாகிப் பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி எண்ணாகி எண்ணுக்கோ ரெழுத்து மாகிஎழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே. | 6.94.2 |
922 | கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்காவிரியாய்க் காலாறாய்க் கழியு மாகிப் புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச் சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி நெல்லாகி நிலனாகி நீரு மாகிநெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே. | 6.94.3 |
923 | காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்கனவாகி நனவாகிக் கங்கு லாகிக் கூற்றாகிக் கூற்றுதைத்தகொல் களிறு மாகிக்குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய் நீற்றானாய் நீறேற்ற மேனி யாகிநீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி ஏற்றானாய் ஏறூர்ந்த செல்வ னாகிஎழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. | 6.94.4 |
924 | தீயாகி நீராகித் திண்மை யாகித்திசையாகி அத்திசைக்கோர் தெய்வ மாகித் தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக் காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்றஇரதங்கள் நுகர்வானுந் தானே யாகி நீயாகி நானாகி நேர்மை யாகிநெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே. | 6.94.5 |
925 | அங்கமா யாதியாய் வேத மாகிஅருமறையோ டைம்பூதந் தானே யாகிப் பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்பான்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக் கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்கடலாகி மலையாகிக் கழியு மாகி எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகிஎழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. | 6.94.6 |
926 | மாதா பிதாவாகி மக்க ளாகிமறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக் கோதா விரியாய்க் குமரி யாகிக்கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப் போதாய மலர்கொண்டு போற்றி நின்றுபுனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகிஅழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே. | 6.94.7 |
927 | ஆவாகி ஆவினில் ஐந்து மாகிஅறிவாகி அழலாகி அவியு மாகி நாவாகி நாவுக்கோர் உரையு மாகிநாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப் பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்பூக்குளால் வாசமாய் நின்றா னாகித் தேவாகித் தேவர் முதலு மாகிச்செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே. | 6.94.8 |
928 | நீராகி நீளகலந் தானே யாகிநிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப் பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி ஆரேனுந் தன்னடைந்தார் தம்மை யெல்லாம்ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம் பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே. | 6.94.9 |
929 | மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப் பாலாகி எண்டிசைக்கும் எல்லை யாகிப்பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப் பூலோகப் புவலோக சுவலோ கமாய்ப்பூதங்க ளாய்ப்புராணன் றானே யாகி ஏலா தனவெலாம் ஏல்விப் பானாய்எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. | 6.94.10 |
தனி – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
930 | அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீஅன்புடைய மாமனும் மாமி யும்நீ ஒப்புடைய மாதரு மொண்பொரு ளும்நீஒருகுலமுஞ் சுற்றமும் ஓரூ ரும்நீ துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீதுணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீஇறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே. | 6.95.1 |
931 | வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்வெய்ய வினைப்பகையும் பைய நையும் எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம் அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடிஅனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்த செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்செவ்வான வண்ணரென் சிந்தை யாரே. | 6.95.2 |
932 | ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரேஅடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரேஉருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரேபணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரேகாண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே. | 6.95.3 |
933 | நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்திநலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்றசொலற்கரிய சூழலாய் இதுவுன் றன்மை நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே. | 6.95.4 |
934 | திருக்கோயி லில்லாத திருவி லூருந்திருவெண்ணீ றணியாத திருவி லூரும் பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும் விருப்போடு வெண்சங்க மூதா வூரும்விதானமும் வெண்கொடியு மில்லா வூரும் அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே. | 6.95.5 |
935 | திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற்தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில் ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில் அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே. | 6.95.6 |
936 | நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய் மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்மறைநான்கு மானாயா றங்க மானாய் பொன்னானாய் மணியானாய் போக மானாய்பூமிமேற் புகழ்தக்க பொருளே உன்னை என்னானாய் என்னானாய் என்னி னல்லால்ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே. | 6.95.7 |
937 | அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய் எத்தனையும் அரியைநீ எளியை யானாய்எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய் பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோஎம்பெருமான் றிருக்கருணை இருந்த வாறே. | 6.95.8 |
938 | குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்குற்றமே பெரிதுடையேன் கோல மாய நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தே னல்லேன்வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன் இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே. | 6.95.9 |
939 | சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தத்துதரணியொடு வானாளத் தருவ ரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில் அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே. | 6.95.10 |
தனி – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
940 | ஆமயந்தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார்அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார் தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார்தலையதனிற் பலிகொண்டார் நிறைவாந் தன்மை வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார்மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார் காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக்கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே. | 6.96.1 |
941 | முப்புரிநூல் வரைமார்பில் முயங்கக் கொண்டார்முதுகேழல் முளைமருப்புங் கொண்டார் பூணாச் செப்புருவ முலைமலையாள் பாகங் கொண்டார்செம்மேனி வெண்ணீறு திகழக் கொண்டார் துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார்சுடர்முடிசூழ்ந் தடியமரர் தொழவுங் கொண்டார் அப்பலிகொண் டாயிழையார் அன்புங் கொண்டார்அடியேனை ஆளுடைய அடிக ளாரே. | 6.96.2 |
942 | முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடுமூசுமிள நாகமுட னாகக் கொண்டார் அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்பஅடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார் வடிகொண்டார்ந் திலங்குமழு வலங்கைக் கொண்டார்மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார் துடிகொண்டார் கங்காளந் தோள்மேற் கொண்டார்சூலைதீர்த் தடியேனை யாட்கொண் டாரே. | 6.96.3 |
943 | பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார்பூதப் படைகள்புடை சூழக் கொண்டார் அக்கினொடு படவரவம் அரைமேற் கொண்டார்அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார் கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார்கொடியானை அடலாழிக் கிரையாக் கொண்டார் செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார்செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே. | 6.96.4 |
944 | அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்அருமறையைத் தேர்க்குதிரை யாக்கிக் கொண்டார் சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார் மந்தரநற் பொருசிலையா வளைத்துக் கொண்டார்மாகாளன் வாசற்காப் பாகக் கொண்டார் தந்திரமந் திரத்தரா யருளிக் கொண்டார்சமண்தீர்த்தென் றன்னையாட் கொண்டார் தாமே. | 6.96.5 |
945 | பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார்பவள நிறங்கொண்டார் பளிங்குங் கொண்டார் நீரடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார்நீலநிறங் கோலநிறை மிடற்றிற் கொண்டார் வாரடங்கு வனமுலையார் மைய லாகிவந்திட்ட பலிகொண்டார் வளையுங் கொண்டார் ஊரடங்க ஒற்றிநகர் பற்றிக் கொண்டார்உடலுறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே. | 6.96.6 |
946 | அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார்ஆலால அருநஞ்சம் அமுதாக் கொண்டார் கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார்காதலார் கோடிகலந் திருக்கை கொண்டார் மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார்மால்விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார் துணிபுலித்தோ லினையாடை யுடையாக் கொண்டார்சூலங்கைக் கொண்டார்தொண் டெனைக்கொண் டாரே. | 6.96.7 |
947 | படமூக்கப் பாம்பணையா னோடு வானோன்பங்கயனென் றங்கவரைப் படைத்துக் கொண்டார் குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார்கூற்றுதைத்தோர் வேதியனை உய்யக் கொண்டார் நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார்நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார் இடமாக்கி இடைமருதுங் கொண்டார் பண்டேஎன்னையிந்நா ளாட்கொண்ட இறைவர் தாமே. | 6.96.8 |
948 | எச்சனிணைத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார்இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார் மெச்சன்வியாத் திரன்றலையும் வேறாக் கொண்டார்விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்து உச்சநமன் றாளறுத்தார் சந்திரனை யுதைத்தார்உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம் அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார்அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே. | 6.96.9 |
949 | சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார்சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார் உடையொன்றிற் புள்ளியுழைத் தோலுங் கொண்டார்உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார் கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார்காபால வேடங் கருதிக் கொண்டார் விடைவென்றிக் கொடியதனில் மேவக் கொண்டார்வெந்துயரந் தீர்த்தென்னை யாட்கொண் டாரே. | 6.96.10 |
950 | குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார்குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார் சிராமலைதஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார்தென்றல்நெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார் பராபரனென் பதுதமது பேராக் கொண்டார்பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி இராவணனென் றவனைப்பே ரியம்பக் கொண்டார்இடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே. | 6.96.11 |
திருவினாத் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
951 | அண்டங் கடந்த சுவடு முண்டோ அனலங்கை யேந்திய ஆட லுண்டோ பண்டை யெழுவர் படியு முண்டோ பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ கண்ட மிறையே கறுத்த துண்டோ கண்ணின்மேற் கண்ணொன்று கண்ட துண்டோ தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி யுண்டோ சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே. | 6.97.1 |
952 | எரிகின்ற இளஞாயி றன்ன மேனிஇலங்கிழையோர் பாலுண்டோ வெள்ளே றுண்டோ விரிகின்ற பொறியரவத் தழலு முண்டோ வேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோ வரிநின்ற பொறியரவச் சடையு முண்டோ அச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோ சொரிகின்ற புனலுண்டோ சூல முண்டோ சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே. | 6.97.2 |
953 | நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ கலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ சுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே. | 6.97.3 |
954 | பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ உண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ கண்ணார் கழற்காலற் செற்ற துண்டோ காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ எண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே. | 6.97.4 |
955 | நீறுடைய திருமேனி பாக முண்டோ நெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோ கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ கொல்புலித்தோ லுடையுண்டோ கொண்ட வேடம் ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ அதனருகே பிறையுண்டோ அளவி லாத ஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே. | 6.97.5 |
956 | பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன்பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன் கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன் கட்டங்கக் கொடிதிண்டோ ளாடக் கண்டேன்கனமழுவாள் வலங்கையி லிலங்கக் கண்டேன் சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்தேவனைக் கனவில்நான் கண்ட வாறே. | 6.97.6 |
957 | அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன்அலர்கொன்றைத் தாரணிந்த வாறு கண்டேன் பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்பழனம் புகுவாரைப் பகலே கண்டேன் கலிக்கச்சி மேற்றளியே இருக்கக் கண்டேன்கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன் வலித்துடுத்த மான்றோ லரையிற் கண்டேன்மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே. | 6.97.7 |
958 | நீறேறு திருமேனி நிகழக் கண்டேன்நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன் கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன் ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன்அடியார்கட் காரமுத மாகக் கண்டேன் ஏறேறி இந்நெறியே போதக் கண்டேன்இவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே. | 6.97.8 |
959 | விரையுண்ட வெண்ணீறு தானு முண்டுவெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டுசூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு அரையுண்ட கோவண ஆடை யுண்டுவலிக்கோலுந் தோலு மழகா வுண்டு இரையுண் டறியாத பாம்பு முண்டுஇமையோர் பெருமா னிலாத தென்னே. | 6.97.9 |
960 | மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சிமயானத்தான் வார்சடையான் என்னி னல்லான் ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்ஓரூர னல்லனோ ருவம னில்லி அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்அவனருளே கண்ணாகக் காணி னல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே. | 6.97.10 |
961 | பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன்புலித்தோ லுடைகண்டேன் புணரத் தன்மேல் மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்மிளிர்வதொரு பாம்பும் அரைமேற் கண்டேன் அன்னத்தே ரூர்ந்த அரக்கன் றன்னைஅலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன் சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்சிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே. | 6.97.11 |
திருமறுமாற்றத் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
962 | நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யானசங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே. | 6.98.1 |
963 | அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம் புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவிஉடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோந் துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ்சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே. | 6.98.2 |
964 | வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்மாதேவா மாதேவா என்று வாழ்த்தி நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோங் காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்கன்மனமே நன்மனமாக் கரையப் பெற்றோம் பாராண்டு பகடேறித் திரிவார் சொல்லும்பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே. | 6.98.3 |
965 | உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம் நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்நமச்சிவா யஞ்சொல்ல வல்லோம் நாவாற் சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்டசுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே. | 6.98.4 |
966 | என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோஞ்சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம் ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றேஉறுபிணியார் செறலொழிந்திட் டோ டிப் போனார் பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே. | 6.98.5 |
967 | மூவுருவின் முதலுருவாய் இருநான் கானமூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர் தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ்செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும் நாவுடையார் நமையாள வுடையா ரன்றேநாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான காவலரே யேவி விடுத்தா ரேனுங்கடவமலோங் கடுமையொடு களவற் றோமே. | 6.98.6 |
968 | நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகிஅன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத் தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்ஆகின்ற தன்மையனை நன்மை யோடும் பொற்புடைய பேசக் கடவோம் பேயர்பேசுவன பேசுதுமோ பிழையற் றோமே. | 6.98.7 |
969 | ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் றன்னைஇமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச்சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற நேசனை நித்தலும் நினையப் பெற்றோம்நின்றுண்பா ரெம்மை நினையச் சொன்ன வாசக மெல்லாம் மறந்தோ மன்றேவந்தீரார் மன்னவனா வான்றா னாரே. | 6.98.8 |
970 | சடையுடையான் சங்கக் குழையோர் காதன்சாம்பலும் பாம்பு மணிந்த மேனி விடையுடையான் வேங்கை யதள்மே லாடைவெள்ளிபோற் புள்ளியுழை மான்றோல் சார்ந்த உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்உம்மோடு மற்று முளராய் நின்ற படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்பாசமற வீசும் படியோம் நாமே. | 6.98.9 |
971 | நாவார நம்பனையே பாடப் பெற்றோம்நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம் ஆவாவென் றெமையாள்வான் அமரர் நாதன்அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட தேவாதி தேவன் சிவனென் சிந்தைசேர்ந்திருந்தான் தென்றிசைக்கோன் றானே வந்து கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலுங்குணமாகக் கொள்ளோமெண் குணத்து ளோமே. | 6.98.10 |
திருப்புகலூர் – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
972 | எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோஎம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற் கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்கழலடியே கைதொழுது காணி னல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | 6.99.1 |
973 | அங்கமே பூண்டாய் அனலா டினாய்ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய் பங்கமொன் றில்லாத படர்ச டையினாய்பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய் சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்திருப்புகலூர் மேவிய தேவ தேவே. | 6.99.2 |
974 | பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய்பளிக்குக் குழையினாய் பண்ணார் இன்சொல் மைவிரவு கண்ணாளைப் பாகங் கொண்டாய்மான்மறிகை யேந்தினாய் வஞ்சக் கள்வர் ஐவரையும் என்மேற் றரவ றுத்தாய்அவர்வேண்டுங் காரியமிங் காவ தில்லை பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | 6.99.3 |
975 | தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச்சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய்மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் கென்றும் அருளாகி ஆதியாய் வேத மாகிஅலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப் பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | 6.99.4 |
976 | நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்நீங்காமை வைத்துகந்த நீதி யானே பாரேறு படுதலையிற் பலிகொள் வானேபண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா காரேறு முகிலனைய கண்டத் தானேகருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த போரேறே உன்னடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | 6.99.5 |
977 | விரிசடையாய் வேதியனே வேத கீதாவிரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச் சூராய் திரிபுரங்க ளெரிசெய்த தேவ தேவேதிருவாரூர்த் திருமூலத் தான மேயாய் மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய்வலஞ்சுழியாய் மாமறைக்காட் டெந்தா யென்றும் புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | 6.99.6 |
978 | தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று நாவார்ந்த மறைபாடி நட்ட மாடிநான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக் காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின் பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | 6.99.7 |
979 | நெய்யாடி நின்மலனே நீல கண்டாநிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே மையாடு கண்மடவாள் பாகத் தானேமான்றோ லுடையாய் மகிழ்ந்து நின்றாய் கொய்யாடு கூவிளங் கொன்றை மாலைகொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | 6.99.8 |
980 | துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித் தன்னணையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ்சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே அன்ன நடைமடவாள் பாகத் தானேஅக்காரம் பூண்டானே ஆதி யானே பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | 6.99.9 |
981 | ஒருவனையு மல்லா துணரா துள்ளம்உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற இருவரையும் மூவரையும் என்மே லேவிஇல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக் கருவரை சூழ்கானல் இலங்கை வேந்தன்கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | 6.99.10 |
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப்பதிகங்கள் ஆறாம் திருமுறை முற்றும்.
Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.