சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

ஏழாம் திருமுறை – இரண்டாம் பகுதி

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி

7.51 திருவாரூர்

பண் – பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்

518பத்திமையும் அடிமையையுங் கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுவிதனைப் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாட் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
7.51.1
519ஐவணமாம் பகழியுடை அடல்மதனன் பொடியாகச்
செவ்வணமாந் திருநயனம் விழிசெய்த சிவமூர்த்தி
மையணவு கண்டத்து வளர்சடையெம் மாரமுதை
எவ்வணம்நான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
7.51.2
520சங்கலக்குந் தடங்கடல்வாய் விடஞ்சுடவந் தமரர்தொழ
அங்கலக்கண் தீர்த்துவிடம் உண்டுகந்த அம்மானை
இங்கலக்கும் உடற்பிறந்த அறிவிலியேன் செறிவின்றி
எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
7.51.3
521இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப் பிறந்தயர்வேன் அயராமே
அங்ஙனம்வந் தெனையாண்ட அருமருந்தென் ஆரமுதை
வெங்கனல்மா மேனியனை மான்மருவுங் கையானை
எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
7.51.4
522செப்பரிய அயனொடுமால் சிந்தித்துந் தெரிவரிய
அப்பெரிய திருவினையே அறியாதே அருவினையேன்
ஒப்பரிய குணத்தானை இணையிலியை அணைவின்றி
எப்பரிசு பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
7.51.5
523வன்னாகம் நாண்வரைவில் அங்கிகணை அரிபகழி
தன்னாகம் உறவாங்கிப் புரமெரித்த தன்மையனை
முன்னாக நினையாத மூர்க்கனேன் ஆக்கைசுமந்
தென்னாகப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
7.51.6
524வன்சயமாய் அடியான்மேல் வருங்கூற்றின் உரங்கிழிய
முன்சயமார் பாதத்தால் முனிந்துகந்த மூர்த்திதனை
மின்செயும்வார் சடையானை விடையானை அடைவின்றி
என்செயநான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
7.51.7
525முன்னெறிவா னவர்கூடித் தொழுதேத்தும் முழுமுதலை
அந்நெறியை அமரர்தொழும் நாயகனை அடியார்கள்
செந்நெறியைத் தேவர்குலக் 
கொழுந்தைமறந் திங்ஙனம்நான்
என்னறிவான் பிரிந்திருக்கேன் 
என்னாரூர் இறைவனையே.
7.51.8
526கற்றுளவான் கனியாய கண்ணுதலைக் கருத்தார
உற்றுளனாம் ஒருவனைமுன் இருவர்நினைந் தினிதேத்தப்
பெற்றுளனாம் பெருமையனைப் பெரிதடியேன் கையகன்றிட்
டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
7.51.9
527ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்தந் தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
7.51.10
528வங்கமலி கடல்நஞ்சை வானவர்கள் தாமுய்ய
நுங்கிஅமு தவர்க்கருளி நொய்யேனைப் பொருட்படுத்துச்
சங்கிலியோ டெனைப்புணர்த்த தத்துவனைச் சழக்கனேன்
எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
7.51.11
529பேரூரும் மதகரியின் உரியானைப் பெரியவர்தஞ்
சீரூருந் திருவாரூர்ச் சிவனடியே திறம்விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன் அடியன்சொல் அகலிடத்தில்
ஊரூரன் இவைவல்லார் உலகவர்க்கு மேலாரே.
7.51.12


இது திருவொற்றியூரிற் சங்கிலிநாச்சியாருடன் 
இருக்கும்போது வீதிவிடங்கப்பெருமானுடைய
திருவோலக்கதரிசன ஞாபகம்வர ஓதியருளிய பதிகம்.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.52 திருவாலங்காடு 
பண் – பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

530முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையா ளுமைபங்கா
சித்தா சித்தித் திறங்காட்டுஞ் சிவனே தேவர் சிங்கமே
பத்தா பத்தர் பலர்போற்றும் பரமா பழைய னூர்மேய
அத்தா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.1
531பொய்யே செய்து புறம்புறமே திரிவேன் றன்னைப் போகாமே
மெய்யே வந்திங் கெனையாண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே
பையா டரவம் அரைக்கசைத்த பரமா பழைய னூர்மேய
ஐயா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.2
532தூண்டா விளக்கின் நற்சோதீ தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பைப் புரமூன்றும் பொடியாச் செற்ற புண்ணியனே
பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும் பரமா பழைய னூர்மேய
ஆண்டா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.3
533மறிநேர் ஒண்கண் மடநல்லார் வலையிற் பட்டு மதிமயங்கி
அறிவே அழிந்தே னையாநான் மையார் கண்ட முடையானே
பறியா வினைக ளவைதீர்க்கும் பரமா பழைய னூர்மேய
அறிவே ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.4
534வேலங் காடு தடங்கண்ணார் வலையுட் பட்டுன் நெறிமறந்து
மாலங் காடி மறந்தொழிந்தேன் மணியே முத்தே மரகதமே
பாலங் காடி நெய்யாடி படர்புன் சடையாய் பழையனூர்
ஆலங் காடா உன்னுடைய அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.5
535எண்ணார் தங்கள் எயிலெய்த எந்தாய் எந்தை பெருமானே
கண்ணாய் உலகங் காக்கின்ற கருத்தா திருத்த லாகாதாய்
பண்ணா ரிசைக ளவைகொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.6
536வண்டார் குழலி உமைநங்கை பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்க ளெரிசெய்த விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும் பரமா பழைய னூர்மேய
அண்டா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.7
537பேழ்வா யரவி னணையானும் பெரிய மலர்மே லுறைவானுந்
தாழா துன்றன் சரண்பணியத் தழலாய் நின்ற தத்துவனே
பாழாம் வினைக ளவைதீர்க்கும் பரமா பழையனூர் தன்னை
ஆள்வாய் ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.8
538எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழேழ் படிகால் எமையாண்ட
பெம்மான் ஈமப் புறங்காட்டிற் பேயோ டாடல் புரிவானே
பன்மா மலர்க ளவைகொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
7.52.9
539பத்தர் சித்தர் பலரேத்தும் பரமன் பழைய னூர்மேய
அத்தன் ஆலங் காடன்றன் அடிமைத் திறமே அன்பாகிச்
சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச் சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள்
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே.
7.52.10


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஊர்த்துவதாண்டவேசுவரர், தேவியார் – வண்டார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.53 திருக்கடவூர் மயானம் 
பண் – பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

540மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந் தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
7.53.1
541விண்ணோர் தலைவர் வெண்புரிநூல் மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர் கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெரிசெய்த இறைவ ருமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
7.53.2
542காயும் புலியின் அதளுடையர் கண்டர் எண்டோ ட் கடவூரர்
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் தாமே யாய தலைவனார்
பாயும் விடையொன் றதுவேறிப் பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
7.53.3
543நறைசேர் மலரைங் கணையானை நயனத் தீயாற் பொடிசெய்த
இறையா ராவர் எல்லார்க்கும் இல்லை யென்னா தருள்செய்வார்
பறையார் முழவம் பாட்டோ டு பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்
பிறையார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
7.53.4
544கொத்தார் கொன்றை மதிசூடிக் கோள்நா கங்கள் பூணாக
மத்த யானை உரிபோர்த்து மருப்பும் ஆமைத் தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆடப் பலிகொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
7.53.5
545துணிவார் கீளுங் கோவணமுந் துதைந்து சுடலைப் பொடியணிந்து
பணிமே லிட்ட பாசுபதர் *பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்
திணிவார் குழையார் புரமூன்றுந் தீவாய்ப் படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. 
* பஞ்சவடியாவது மயிர்ப்பூணநூல். இது மாவிரதியரென்னும் 
உட்சமயத்தாரணிவது. மேலும் அவர்களணியுமணி எலும்பினாலாகிய 
மணிகள். இவற்றை மானக்கஞ்சாறநாயனார் புராணத்து 23-வது 
திருவிருத்தத்தானுமுணர்க.
7.53.6
546காரார் கடலின் நஞ்சுண்ட கண்டர் கடவூர் உறைவாணர்
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து சிதைய விரலா லூன்றினார்
ஊர்தான் ஆவ துலகேழும் உடையார்க் கொற்றி யூராரூர்
பேரா யிரவர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
7.53.7
547வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்
கோடார் கேழற் பின்சென்று குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணஞ் செருச்செய்து ஆவ நாழி நிலையருள்செய்
பீடார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
7.53.8
548வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்
ஆழி அளிப்பர் அரிதனக்கன் றானஞ் சுகப்பர் அறமுரைப்பர்
ஏழைத் தலைவர் கடவூரில் இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
7.53.9
549மாட மல்கு கடவூரில் மறையோ ரேத்தும் மயானத்துப்
பீடை தீர அடியாருக் கருளும் பெருமா னடிகள்சீர்
நாடி நாவ லாரூரன் நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடு மடியார் கேட்பார்மேற் பாவ மான பறையுமே.
7.53.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பிரமபுரீசுவரர், தேவியார் – மலர்க்குழல்மின்னம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.54 திருவொற்றியூர் 
பண் – தக்கேசி

திருச்சிற்றம்பலம்

550அழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன் அதுவும் நான்படப் பாலதொன் றானாற்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள் பிழைப்பன் ஆகிலுந் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால் மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.1
551கட்ட னேன்பிறந் தேன்உனக் காளாய் காதற் சங்கிலி காரண மாக
எட்டி னாற்றிக ழுந்திரு மூர்த்தி என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்
பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை
ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.2
552கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே கட்டி யேபலர்க் குங்களை கண்ணே
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்
சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி
ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும்ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.3
553ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றா லியாவ ராகிலென் அன்புடை யார்கள்
தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற் சொல்லு வாரைஅல் லாதன சொல்லாய்
மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண் கொள்வ தேகணக் குவழக் காகில்
ஊன்று கோல்எனக் காவதொன் றருளாய்ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.4
554வழித்த லைப்படு வான்முயல் கின்றேன் உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன்
சுழித்த லைப்பட்ட நீரது போலச் சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளங்
கழித்த லைப்பட்ட நாயது போல ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை
ஒழித்து நீயரு ளாயின செய்யாய்ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.5
555மானை நோக்கியர் கண்வலைப் பட்டு வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்
தேனை ஆடிய கொன்றையி னாய்உன் சீல முங்குண முஞ்சிந்தி யாதே
நானும் இத்தனை வேண்டுவ தடியேன் உயிரொ டும்நர கத்தழுந் தாமை
ஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய்ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.6
556மற்றுத் தேவரை நினைந்துனை மறவேன் எஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன்
பெற்றி ருந்து பெறாதொழி கின்ற பேதை யேன்பிழைத் திட்டதை அறியேன்
முற்றும் நீஎனை முனிந்திட அடியேன் கடவ தென்னுனை நான்மற வேனேல்
உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய்ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.7
557கூடினாய் மலை மங்கையை நினையாய் கங்கை ஆயிர முகம்உடை யாளைச்
சூடி னாயென்று சொல்லிய புக்கால் தொழும்ப னேனுக்குஞ் சொல்லலு மாமே
வாடி நீயிருந் தென்செய்தி மனனே வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி
ஊடி னாலினி ஆவதொன் றுண்டேஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.8
558மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானாய் மைந்த னேமணி யேமண வாளா
அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால் அழையேற் போகுரு டாஎனத் தரியேன்
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன் முக்க ணாமுறை யோமறை யோதீ
உகைக்குந் தண்கடல் ஓதம்வந் துலவும் ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7.54.9
559ஓதம் வந்துல வுங்கரை தன்மேல் ஒற்றி யூருறை செல்வனை நாளும்
ஞாலந் தான்பர வப்படு கின்ற நான்ம றையங்கம் ஓதிய நாவன்
சீலந் தான்பெரி தும்மிக வல்ல சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த
பாடல் பத்திவை வல்லவர் தாம்போய்ப் பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே.
7.54.10


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – படம்பக்கநாதர் – மாணிக்கத்தியாகர்,
தேவியார் – வடிவுடையம்மை.

இது உன்னைப்பிரிந்துபோவதில்லையென்று சங்கிலி நாச்சியாருக்குச் 
சூளுரைசெய்து மணந்துமகிழ்ந் திருக்கையில் திருவாரூர் 
வீதிவிடங்கப்பெருமானுடய திருவோலக்கத் தரிசனஞ்செய்வதற்கின்றி 
நெடுநாள் பிரிந்திருக்கின்றோமேயென்னும் ஞாபகமுண்டாகப் 
பரமசிவத்தின் திருவிளையாட்டால் முன்கூறிய சூளுரையைமறந்து 
திருவொற்றியூரெல்லையைக் கடந்தவளவில் நேத்திரங்களுக்கு 
அபாவந்தோன்ற வருந்தித் துதிசெய்த பதிகம்.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.55 திருப்புன்கூர் 
பண் – தக்கேசி

திருச்சிற்றம்பலம்

560அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்றமர் நலியின் இவன்மற் றென்னடி யானென விலக்குஞ்
சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன்செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
7.55.1
561வைய கமுற்றும் மாமழை மறந்து வயலில் நீரிலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை என்ன ஒலிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளுஞ்
செய்கை கண்டுநின் றிருவடி அடைந்தேன்செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
7.55.2
562ஏத நன்னிலம் ஈரறு வேலி ஏயர் கோனுற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோத னங்களின் பால்கறந் தாட்டக் கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற எறிந்ததண் டிக்குன் சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
பூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன்பூம்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
7.55.3
563நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன் நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே.
7.55.4
564கோல மால்வரை மத்தென நாட்டிக் கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த
ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய அமரர் கட்கருள் புரிவது கருதி
நீல மார்கடல் விடந்தனை உண்டு கண்டத் தேவைத்த பித்தநீ செய்த
சீலங் கண்டுநின் றிருவடி அடைந்தேன்செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
7.55.5
565இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல்புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி அதனை அர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு
திகைப்பொன் றின்றிநின் றிருவடி அடைந்தேன்செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
7.55.6
566போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப் பொழில்கொள் ஆல்நிழற் கீழறம் புரிந்து
பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத் தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கைநங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த
தீர்த்த னேநின்றன் றிருவடி அடைந்தேன்செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
7.55.7
567மூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில் இருவர் நின்றிருக் கோயிலின் வாய்தல்
காவ லாளரென் றேவிய பின்னை ஒருவ நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழமணிமு ழாமுழக் கஅருள் செய்த
தேவ தேவநின் றிருவடி அடைந்தேன்செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
7.55.8
568அறிவி னால்மிக்க அறுவகைச் சமயம் அவ்வ வர்க்கங்கே ஆரருள் புரிந்து
எறியு மாகடல் இலங்கையர் கோனைத் துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக் கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் றிருவடி அடைந்தேன்செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
7.55.9
569கம்ப மால்களிற் றின்னுரி யானைக் காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச்
செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச் செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானை
உம்பர் ஆளியை உமையவள் கோனை ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந்
தன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோடைந்தும் வல்லவர் அருவினை இலரே.
7.55.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சிவலோகநாதர், தேவியார் – சொக்கநாயகியம்மை.

சுந்தரமூர்த்திசுவாமிகள் திருப்புன்கூருக்கெழுந்தருளியபோது அந்தத்தலத்தார் 
கண்டு தொழுது சுவாமீ! இங்கு நெடுநாளாக மழைபொழிதலின்றி
வருந்துகிறோம், ஆதலால் கிருபைபாலிக்கவேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய, 
மழைபொழிந்தால் சுவாமிக்கியாது தருவீர்களென்ன, அவர்கள் பன்னிரண்டு
வேலி நிலந்தருகிறோமென்னக் கிருபை கூர்ந்து இந்தப்பதிகமோதியருளலும், 
மழை அதிகமாய்ப்பெய்ய அவர்களுடையவேண்டுதலினால் மழை தணிந்து 
பெய்யும்படிசெய்து முன்னமவர்கள் சொல்லிய பன்னிரண்டுவேலி நிலமேயன்றி 
மீட்டும் பன்னிரண்டுவேலி நிலங்கொடுக்கப்பெற்றருளியது.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.56 திருநீடூர் 
பண் – தக்கேசி

திருச்சிற்றம்பலம்

570ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை ஒண்ணு தல்தனிக் கண்ணுத லானைக்
கார தார்கறை மாமிடற் றானைக் கருத லார்புரம் மூன்றெரித் தானை
நீரில் வாளை வரால்குதி கொள்ளும் நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப்
பாரு ளார்பர வித்தொழ நின்ற பரம னைப்பணி யாவிட லாமே.
7.56.1
571துன்னு வார்சடைத் தூமதி யானைத் துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப்
பன்னு நான்மறை பாடவல் லானைப் பார்த்த னுக்கருள் செய்தபி ரானை
என்னை இன்னருள் எய்துவிப் பானை ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப்
புன்னை மாதவி போதலர் நீடூர்ப் புனித னைப்பணி யாவிட லாமே.
7.56.2
572கொல்லும் மூவிலை வேலுடை யானைக் கொடிய காலனை யுங்குமைத் தானை
நல்ல வாநெறி காட்டுவிப் பானை நாளும் நாம்உகக் கின்ற பிரானை
அல்ல லில்லரு ளேபுரி வானை ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க்
கொல்லை வெள்ளெரு தேறவல் லானைக் கூறி நாம்பணி யாவிட லாமே.
7.56.3
573தோடு காதிடு தூநெறி யானைத் தோற்ற முந்துறப் பாயவன் றன்னைப்
பாடு மாமறை பாடவல் லானைப் பைம்பொ ழிற்குயில் கூவிட மாடே
ஆடு மாமயில் அன்னமோ டாட அலைபு னற்கழ னித்திரு நீடூர்
வேட னாயபி ரானவன் றன்னை விரும்பி நாம்பணி யாவிட லாமே.
7.56.4
574குற்ற மொன்றடி யாரிலர் ஆனாற் கூடு மாறத னைக்கொடுப் பானைக்
கற்ற கல்வியி லும்மினி யானைக் காணப் பேணும வர்க்கெளி யானை
முற்ற அஞ்சுந் துறந்திருப் பானை மூவ ரின்முத லாயவன் றன்னைச்
சுற்று நீள்வயல் சூழ்திரு நீடூர்த் தோன்ற லைப்பணி யாவிட லாமே.
7.56.5
575காடில் ஆடிய கண்ணுத லானைக் கால னைக்கடிந் திட்டபி ரானைப்
பாடி ஆடும்பரி சேபுரிந் தானைப் பற்றி னோடுசுற் றம்மொழிப் பானைத்
தேடி மாலயன் காண்பரி யானைச் சித்த முந்தெளி வார்க்கெளி யானைக்
கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க் கூத்த னைப்பணி யாவிட லாமே.
7.56.6
576விட்டி லங்கெரி யார்கையி னானை வீடி லாதவி யன்புக ழானைக்
கட்டு வாங்கந் தரித்தபி ரானைக் காதி லார்கன கக்குழை யானை
விட்டி லங்குபுரி நூலுடை யானை வீந்த வர்தலை யோடுகை யானைக்
கட்டி யின்கரும் போங்கிய நீடூர்க் கண்டு நாம்பணி யாவிட லாமே.
7.56.7
577மாய மாய மனங்கெடுப் பானை மனத்து ளேமதி யாய்இருப் பானைக்
காய மாயமும் ஆக்குவிப் பானைக் காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானை
ஓயு மாறுரு நோய்புணர்ப் பானை ஒல்லை வல்வினை கள்கெடுப் பானை
வேய்கொள் தோள்உமைப் பாகனை நீடூர் வேந்த னைப்பணி யாவிட லாமே.
7.56.8
578கண்ட முங்கறுத் திட்டபி ரானைக் காணப் பேணும வர்க்கெளி யானைத்
தொண்ட ரைப்பெரி தும்முகப் பானைத் துன்ப முந்துறந் தின்பினி யானைப்
பண்டை வல்வினை கள்கெடுப் பானைப் பாக மாமதி யாயவன் றன்னைக்
கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க் கேண்மை யாற்பணி யாவிட லாமே.
7.56.9
579அல்லல் உள்ளன தீர்த்திடு வானை அடைந்த வர்க்கமு தாயிடு வானைக்
கொல்லை வல்லர வம்மசைத் தானைக் கோல மார்கரி யின்னுரி யானை
நல்ல வர்க்கணி யானவன் றன்னை நானுங் காதல்செய் கின்றபி ரானை
எல்லி மல்லிகை யேகமழ் நீடூர் ஏத்தி நாம்பணி யாவிட லாமே.
7.56.10
580பேரோர் ஆயிர மும்முடை யானைப் பேரி னாற்பெரி தும்மினி யானை
நீரூர் வார்சடை நின்மலன் றன்னை நீடூர் நின்றுகந் திட்டபி ரானை
ஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய் ஆத ரித்தழைத் திட்டவிம் மாலை
பாரூ ரும்பர வித்தொழ வல்லார் பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே.
7.56.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சோமநாதேசுவரர், தேவியார் – வேயுறுதோளியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.57 திருவாழ்கொளிபுத்தூர் 
பண் – தக்கேசி

திருச்சிற்றம்பலம்

581தலைக்க லன்றலை மேல்தரித் தானைத்
தன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக்
கொலைக்கை யானைஉரி போர்த்துகந் தானைக்கூற்றுதைத் தகுரை சேர்கழ லானை
அலைத்த செங்கண்விடை ஏறவல் லானைஆணை யால்அடி யேன்அடி நாயேன்
மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.1
582படைக்கட் சூலம் பயிலவல் லானைப் பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானைக்
கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்
சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை
மடைக்கண்நீ லம்அலர் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.2
583வெந்த நீறுமெய் பூசவல் லானைவேத மால்விடை ஏறவல் லானை
அந்தம் ஆதிஅறி தற்கரி யானைஆறலைத் தசடை யானைஅம் மானைச்
சிந்தை யென்றடு மாற்றறுப் பானைத்தேவ தேவனென் சொல்முனி யாதே
வந்தென் உள்ளம்புகும் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.3
584தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத் தன்னடிக் கேசெல்லு மாறுவல் லானைப்
படங்கொள் நாகம்அரை ஆர்த்துகந் தானைப்பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை
நடுங்க ஆனைஉரி போர்த்துகந் தானைநஞ்சம் உண்டுகண் டங்கறுத் தானை
மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.4
585வளைக்கை முன்கைமலை மங்கை மணாளன்மார னார்உடல் நீறெழச் செற்றுத்
துளைத்த அங்கத்தொடு தூமலர்க் கொன்றை தோலும்நூ லுந்துதைந் தவரை மார்பன்
திளைக்குந் தெவ்வர் திரிபுரம் மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
வளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.5.
586திருவின் நாயகன் ஆகிய மாலுக் கருள்கள் செய்திடும் தேவர் பிரானை
உருவி னானைஒன் றாவறி வொண்ணா மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்
செருவில் ஏந்தியோர் கேழற்பின் சென்று செங்கண் வேடனாய் என்னொடும் வந்து
மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.6
587எந்தை யைஎந்தை தந்தை பிரானை ஏத மாயஇடர் தீர்க்கவல் லானை
முந்தி யாகிய மூவரின் மிக்க மூர்த்தி யைமுதற் காண்பரி யானைக்
கந்தின் மிக்ககரி யின்மருப் போடுகார கில்கவ ரிம்மயிர் மண்ணி
வந்து வந்திழி வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.7
588தேனை ஆடிய கொன்றையி னானைத் தேவர் கைதொழுந் தேவர் பிரானை
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானைக்
கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த கள்ளப் பிள்ளைக்குங் காண்பரி தாய
வான நாடனை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.8
589காளை யாகி வரையெடுத் தான்றன் கைகள் இற்றவன் மொய்தலை எல்லாம்
மூளை போத ஒருவிரல் வைத்த மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப்
பாளை தெங்கு பழம்விழ மண்டிச் செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும்
வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.9
590திருந்த நான்மறை பாடவல் லானைத் தேவர்க் குந்தெரி தற்கரி யானைப்
பொருந்த மால்விடை ஏறவல் லானைப்பூதிப் பைபுலித் தோலுடை யானை
இருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும் ஏச நின்றவன் ஆருயிர்க் கெல்லாம்
மருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.10
591மெய்யனை மெய்யின் நின்றுணர் வானைமெய்யி லாதவர் தங்களுக் கெல்லாம்
பொய்ய னைப்புரம் மூன்றெரித் தானைப்புனித னைப்புலித் தோலுடை யானைச்
செய்ய னைவெளி யதிரு நீற்றில்திகழு மேனியன் மான்மறி ஏந்தும்
மைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
7.57.11
592வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனென்
றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன்சடையன் காதலன் வனப்பகை அப்பன்
நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த
பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேல் பறையு மாஞ்செய்த பாவங்கள் தானே.
7.57.12


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மாணிக்கவண்ணர்,
தேவியார் – வண்டமர்பூங்குழலம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.58 திருக்கழுமலம் 
பண் – தக்கேசி

திருச்சிற்றம்பலம்

593சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத் தன்னருள் தந்தஎந் தலைவனை மலையின்
மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியைவருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரைஎண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்
காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.1
594மற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன்வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்
சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன்துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை
முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.2
595திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என்செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்
ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன்உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்
விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்
கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.3
596மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப் பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்
குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்
கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக்கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.4
597குண்டலங் குழைதிகழ் காதனே என்றுங்கொடுமழு வாட்படைக் குழகனே என்றும்
வண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும்வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே
பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்பசுபதி பதிவின விப்பல நாளுங்
கண்டலங் கழிக்கரை ஓதம்வந் துலவுங்கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.5
598வரும்பெரும் வல்வினை என்றிருந் தெண்ணிவருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்திவேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே
அரும்பினை அலரினை அமுதினைத் தேனைஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங்
கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.6
599அயலவர் பரவவும் அடியவர் தொழவும்அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்
முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப்
புயலினைத் திருவினைப் பொன்னின தொளியைமின்னின துருவை என்னிடைப் பொருளைக்
கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.7
600நினைதரு பாவங்கள் நாசங்க ளாகநினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரை
மலைதரு மலைமகள் கணவனை வானோர் மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப்
புனைதரு புகழினை எங்கள தொளியைஇருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக்
கனைதரு கருங்கடல் ஓதம்வந் துலவுங்கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.8
601மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாயத்
துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த உண்மை யெனுந்தக வின்மையை ஓரேன்
பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப்பேரரு ளாளனைக் காரிருள் போன்ற
கறையணி மிடறுடை அடிகளை அடியேன் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
7.58.9
602செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும் விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட்
டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால் அறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன்சடையன்றன் காதலன் பாடிய பத்துந்
தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத் துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே.
7.58.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பிரமபுரியீசுவரர்,
தேவியார் – திருநிலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.59 திருவாரூர் 
பண் – தக்கேசி

திருச்சிற்றம்பலம்

603பொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானைப்போக முந்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்தணி ஆரூ ரானை மறக்கலு மாமே.
7.59.1
604கட்ட மும்பிணி யுங்களை வானைக் காலற் சீறிய காலுடை யானை
விட்ட வேட்கைவெந் நோய்களை வானைவிரவி னால்விடு தற்கரி யானைப்
பட்ட வார்த்தை படநின்ற வார்த்தைவாரா மேதவி ரப்பணிப் பானை
அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை ஆரூ ரானை மறக்கலு மாமே.
7.59.2
605கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்கலைக்கெ லாம்பொரு ளாயுடன் கூடிப்
பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்பகலுங் கங்குலும் ஆகிநின் றானை
ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னைஉணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை
ஆர்க்கின் றகட லைமலை தன்னைஆரூ ரானை மறக்கலு மாமே.
7.59.3
606செத்த போதினில் முன்னின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்
வைத்த சிந்தைஉண் டேமனம் உண்டேமதிஉண் டேவிதி யின்பயன் உண்டே
முத்தன் எங்கள்பி ரானென்று வானோர் தொழநின் றதிமில் ஏறுடை யானை
அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானைஆரூ ரானை மறக்கலு மாமே.
7.59.4
607செறிவுண் டேல்மனத் தாற்றெளி வுண்டேல்தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல்
மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல்வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்
பொறிவண் டாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றைப் பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை
அறிவுண் டேஉட லத்துயிர் உண்டேஆரூ ரானை மறக்கலு மாமே.
7.59.5
608பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்றுபொருளுஞ் சுற்றமும் போகமும் ஆகி
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாரா மேதவிர்க் கும்விதி யானை
வள்ளல் எந்தமக் கேதுணை என்று நாள்நா ளும்அம ரர்தொழு தேத்தும்
அள்ள லங்கழ னிப்பழ னத்தணி ஆரூ ரானை மறக்கலு மாமே.
7.59.6
609கரியா னைஉரி கொண்டகை யானைக்கண்ணின் மேலொரு கண்ணுடை யானை
வரியா னைவருத் தங்களை வானைமறையா னைக்குறை மாமதி சூடற்
குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம்ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க்
கரியா னைஅடி யேற்கெளி யானைஆரூ ரானை மறக்கலு மாமே.
7.59.7
610வாளா நின்று தொழும்அடி யார்கள் வான்ஆ ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்
நாணா ளும்மலர் இட்டுவணங் கார் நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்
கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன்கிளைக்கெ லாந்துணை யாமெனக் கருதி
ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன்ஆரூ ரானை மறக்கலு மாமே.
7.59.8
611விடக்கை யேபெருக் கிப்பல நாளும் வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக்
கடக்கி லேன்நெறி காணவும் மாட்டேன்கண்கு ழிந்திரப் பார்கையி லொன்றும்
இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச் சடையா னைஉமை யாளையோர் பாகத்
தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை ஆரூ ரானை மறக்கலு மாமே.
7.59.9
612ஒட்டி ஆட்கொண்டு போயொளித் திட்ட உச்சிப் போதனை நச்சர வார்த்த
பட்டி யைப்பக லையிருள் தன்னைப்பாவிப் பார்மனத் தூறுமத் தேனைக்
கட்டி யைக்கரும் பின்றெளி தன்னைக்காத லாற்கடல் சூர்தடிந் திட்ட
செட்டி யப்பனைப் பட்டனைச் செல்வ ஆரூ ரானை மறக்கலு மாமே.
7.59.10
613ஓரூ ரென்றுல கங்களுக் கெல்லாம் உரைக்க லாம்பொரு ளாயுடன் கூடிக்
காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை முடியன் காரிகை காரண மாக
ஆரூ ரைம்மறத் தற்கரி யானை அம்மான் றன்றிருப் பேர்கொண்ட தொண்டன்
ஆரூ ரன்னடி நாயுரை வல்லார் அமர லோகத் திருப்பவர் தாமே.
7.59.11


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.60 திருவிடைமருதூர் 
பண் – தக்கேசி

திருச்சிற்றம்பலம்

614கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற் கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நான்உழன் றுள்தடு மாறிப் படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனேஅங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கோர் உய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே.
7.60.1
615நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னேநன்றி யில்வினை யேதுணிந் தெய்த்தேன்
அரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன்அஞ்சி னேன்நம னாரவர் தம்மை
உரைப்பன் நானுன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத
இரைப்ப னேனுக்கோர் உய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே.
7.60.2
616புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற் போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்
என்னெ னக்கினி இற்றைக்கு நாளை என்றி ருந்திடர் உற்றனன் எந்தாய்
முன்ன மேஉன சேவடி சேரா மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
இன்னம் என்றனக் குய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே.
7.60.3
617முந்திச் செய்வினை இம்மைக்கண் நலியமூர்க்க னாகிக் கழிந்தன காலம்
சிந்தித் தேமனம் வைக்கவும் மாட்டேன்சிறுச்சிறி தேஇரப் பார்கட்கொன் றீயேன்
அந்தி வெண்பிறை சூடும்எம் மானே ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தை நீயெனக் குய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே.
7.60.4
618அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்ஐவ ரும்புர வாசற ஆண்டு
கழித்துக் காற்பெய்து போயின பின்னைக்கடைமு றைஉனக் கேபொறை ஆனேன்
விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னைவேண்டேன் மானுட வாழ்க்கையீ தாகில்
இழித்தேன் என்றனக் குய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே.
7.60.5
619குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக்கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக்
கற்றி லேன்கலை கள்பல ஞானங் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்
பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்பாவி யேன்பல பாவங்கள் செய்தேன்
எற்று ளேன்எனக் குய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே.
7.60.6
620கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக்குற்றஞ் செற்றம் இவைமுத லாக
விடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும்வேண்டில் ஐம்புலன் என்வசம் அல்ல
நடுக்கம் உற்றதோர் மூப்புவந் தெய்தநமன்த மர்நர கத்திடல் அஞ்சி
இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே.
7.60.7
621ஐவ கையர் ஐயரவ ராகி ஆட்சி கொண்டொரு காலவர் நீங்கார்
அவ்வ கையவர் வேண்டுவ தானால்அவர வர்வழி ஒழுகிநான் வந்து
செய்வ கையறி யேன்சிவ லோகாதீவ ணாசிவ னேயெரி யாடீ
எவ்வ கையெனக் குய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே.
7.60.8
622ஏழை மானுட இன்பினை நோக்கிஇளைய வர்வயப் பட்டிருந் தின்னம்
வாழை தான்பழுக் கும்நமக் கென்று வஞ்ச வல்வினை யுள்வலைப் பட்டுக்
கூழை மாந்தர்தஞ் செல்கதிப் பக்கம்போக மும்பொருள் ஒன்றறி யாத
ஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய்இடைம ருதுறை எந்தைபி ரானே.
7.60.9
623அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி ஐவ னஞ்சுமந் தார்த்திரு பாலும்
இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல் இடைம ருதுறை எந்தைபி ரானை
உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலைஉள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள்
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றிநாதன் சேவடி நண்ணுவர் தாமே.
7.60.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மருதீசுவரர், தேவியார் – நலமுலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.61 திருவேகம்பம் 
பண் – தக்கேசி

திருச்சிற்றம்பலம்

624ஆலந் தானுகந் தமுதுசெய் தானைஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
7.61.1
625உற்ற வர்க்குத வும்பெரு மானை ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்
பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானை
அற்ற மில்புக ழாள்உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
7.61.2
626திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச் செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்காம னைக்கன லாவிழித் தானை
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை மருவி யேத்தி வழிபடப் பெற்ற
*பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 
*காமாட்சியம்மையால் பூசிக்கப்பட்ட ஏகாம்பர
நாதரே பெரியகம்பர்.
7.61.3
627குண்ட லந்திகழ் காதுடை யானைக்கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம் புமலர்க் கொன்றையி னானைவாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வறே.
7.61.4
628வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானைவேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானைஅரும றையவை அங்கம்வல் லானை
எல்லை யிற்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
*நல்ல கம்பனை எங்கள் பிரானை காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 
*உருத்திரராற் பூசிக்கப்பட்ட சிவலிங்கப் பெருமானுக்கு 
நல்லகம்பனென்றுபெயர்.
7.61.5
629திங்கள் தங்கிய சடையுடை யானைத்தேவ தேவனைச் செழுங்கடல் வளருஞ்
சங்க வெண்குழைக் காதுடை யானைச்சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பனெம் மானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
7.61.6
630விண்ண வர்தொழு தேத்தநின் றானைவேதந் தான்விரித் தோதவல் லானை
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னைநாளும் நாம்உகக் கின்றபி ரானை
எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
7.61.7
631சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள் சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை
அந்த மில்புக ழாள்உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பனெம் மானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
7.61.8
632வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் வாலி யபுரம் மூன்றெரித் தானை
நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை பரவி யேத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பனெம் மானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
7.61.9
633எள்க லின்றி இமையவர் கோனைஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட
*கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 

*திருமாலாற் பூசிக்கப்பட்ட சிவலிங்கப்
பெருமானுக்கு கள்ளக்கம்பனென்றுபெயர்.
7.61.10
634பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்பெரிய எம்பெரு மானென்றெப் போதுங்
கற்ற வர்பர வப்படு வானைக் காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தனெம் மானைக்குளிர்பொ ழிற்றிரு நாவலா ரூரன்
நற்ற மிழ்இவை ஈரைந்தும் வல்லார்நன்னெ றிஉல கெய்துவர் தாமே.
7.61.11


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஏகாம்பரநாதர், தேவியார் – காமாட்சியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.62 திருக்கோலக்கா 
பண் – தக்கேசி

திருச்சிற்றம்பலம்

635புற்றில் வாளர வார்த்த பிரானைப்பூத நாதனைப் பாதமே தொழுவார்
பற்று வான்துணை எனக்கெளி வந்த பாவ நாசனை மேவரி யானை
முற்ற லார்திரி புரமொரு மூன்றும் பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக்
கொற்ற வில்லங்கை ஏந்திய கோனைக்கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
7.62.1
636அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும் ஆய நம்பனை வேய்புரை தோளி
தங்கு மாதிரு உருவுடை யானைத்தழல்ம திச்சடை மேற்புனைந் தானை
வெங்கண் ஆனையின் ஈருரி யானைவிண்ணு ளாரொடு மண்ணுளார் பரசுங்
கொங்கு லாம்பொழிற் குரவெறி கமழுங்கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
7.62.2
637பாட்ட கத்திசை யாகிநின் றானைப்பத்தர் சித்தம் பரிவினி யானை
நாட்ட கத்தேவர் செய்கையு ளானைநட்ட மாடியை நம்பெரு மானைக்
காட்ட கத்துறு புலியுரி யானை கண்ணோர் மூன்றுடை அண்ணலை அடியேன்
கோட்ட கப்புன லார்செழுங் கழனிக்கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
7.62.3
638ஆத்தம் என்றெனை ஆளுகந் தானைஅமரர் நாதனைக் குமரனைப் பயந்த
வார்த்த யங்கிய முலைமட மானை வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த
தீர்த்த னைச்சிவ னைச்செழுந் தேனைத் தில்லை அம்பலத் துள்நிறைந் தாடுங்
கூத்த னைக்குரு மாமணி தன்னைக்கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
7.62.4
639அன்று வந்தெனை அகலிடத் தவர்முன்ஆள தாகஎன் றாவணங் காட்டி
நின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த நித்தி லத்திரள் தொத்தினை முத்திக்
கொன்றி னான்றனை உம்பர் பிரானைஉயரும் வல்லர ணங்கெடச் சீறுங்
குன்ற வில்லியை மெல்லிய லுடனே கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
7.62.5
640காற்றுத் தீப்புன லாகிநின் றானைக்கடவு ளைக்கொடு மால்விடை யானை
நீற்றுத் தீயுரு வாய்நிமிர்ந் தானை நிரம்பு பல்கலை யின்பொ ருளாலே
போற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப் போக்கு வான்உயிர் நீக்கிடத் தாளாற்
கூற்றைத் தீங்குசெய் குரைகழ லானைக்கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
7.62.6
641அன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண் டமர ருக்கருள் வெளிப்படுத் தானைத்
துன்று பைங்கழ லிற்சிலம் பார்த்த சோதி யைச்சுடர் போலொளி யானை
மின்ற யங்கிய இடைமட மங்கை மேவும் ஈசனை வாசமா முடிமேற்
கொன்றை யஞ்சடைக் குழகனை அழகார் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
7.62.7
642நாளும் இன்னிசை யாற்றமிழ் பரப்பும் ஞான சம்பந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்குந் தன்மை யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும் அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சுங்
கோளி லிப்பெருங் கோயிலுள் ளானைக்கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
7.62.8
643அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டுக் கன்றி ரங்கிய வென்றியி னானைப்
பரக்கும் பாரளித் துண்டுகந் தவர்கள் பரவி யும்பணி தற்கரி யானைச்
சிரக்கண் வாய் செவி மூக்குயர் காயம்ஆகித் தீவினை தீர்த்தஎம் மானைக்
குரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
7.62.9
644கோட ரம்பயில் சடையுடைக் கரும்பைக்கோலக் காவுளெம் மானைமெய்ம் மானப்
பாட ரங்குடி அடியவர் விரும்பப் பயிலும் நாவலா ரூரன்வன் றொண்டன்
நாடி ரங்கிமுன் அறியுமந் நெறியால் நவின்ற பத்திவை விளம்பிய மாந்தர்
காட ரங்கென நடம்நவின் றான்பாற் கதியும் எய்துவர் பதியவர்க் கதுவே.
7.62.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சத்தபுரீசுவரர், தேவியார் – ஓசைகொடுத்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.63 நம்பி என்ற திருப்பதிகம் 
பண் – தக்கேசி

திருச்சிற்றம்பலம்

645மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பிவேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி
கையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பிகண்ணு மூன்றுடை யாயொரு நம்பி
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்தநம் பியென்னை ஆளுடை நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
7.63.1
646திங்கள் நம்பிமுடி மேலடி யார்பால் சிறந்தநம் பிபிறந் தஉயிர்க் கெல்லாம்
அங்கண் நம்பியருள் மால்விசும் பாளும் அமரர் நம்பிகும ரன்முதல் தேவர்
தங்கள் நம்பிதவத் துக்கொரு நம்பி தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும்
எங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
7.63.2
647வருந்த அன்றுமத யானை உரித்த வழக்கு நம்பிமுழக் குங்கடல் நஞ்சம்
அருந்தும் நம்பிஅம ரர்க்கமு தீந்த அருளென் நம்பிபொரு ளால்வரு நட்டம்
புரிந்த நம்பிபுரி நூலுடை நம்பி பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி
இருந்த நம்பிஎன்னை ஆளுடை நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
7.63.3
648ஊறு நம்பிஅமு தாஉயிர்க் கெல்லாம் உரிய நம்பிதெரி யம்மறை அங்கங்
கூறு நம்பிமுனி வர்க்கருங் கூற்றைக் குமைத்த நம்பிகுமை யாப்புலன் ஐந்துஞ்
சீறு நம்பிதிரு வெள்ளடை நம்பி செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு தென்றும்
ஏறு நம்பிஎன்னை ஆளுடை நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
7.63.4
649குற்ற நம்பிகுறு காரெயில் மூன்றைக்குலைத்த நம்பிசிலை யாவரை கையிற்
பற்று நம்பிபர மானந்த வெள்ளம் பணிக்கும் நம்பிஎனப் பாடுத லல்லால்
மற்று நம்பிஉனக் கென்செய வல்லேன்மதியி லேன்படு வெந்துயர் எல்லாம்
எற்று நம்பிஎன்னை ஆளுடை நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
7.63.5
650அரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய்ஆண்ட நம்பிமுன்னை ஈண்டுல கங்கள்
தெரித்த நம்பிஒரு சேவுடை நம்பிசில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடந்
தரித்த நம்பிசம யங்களின் நம்பி தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை
இரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
7.63.6
651பின்னை நம்பும்புயத் தான்நெடு மாலும் பிரமனும் என்றிவர் நாடியுங் காணா
உன்னை நம்பிஒரு வர்க்கெய்த லாமேஉலகு நம்பிஉரை செய்யும தல்லால்
முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட
தென்னை நம்பிஎம் பிரானாய நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
7.63.7
652சொல்லை நம்பிபொரு ளாய்நின்ற நம்பிதோற்றம் ஈறுமுத லாகிய நம்பி
வல்லை நம்பிஅடி யார்க்கருள் செய்யவருந்தி நம்பிஉனக் காட்செய கில்லார்
அல்லல் நம்பிபடு கின்றதென் நாடி அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற
இல்ல நம்பியிடு பிச்சைகொள் நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
7.63.8
653காண்டு நம்பிகழற் சேவடி என்றுங் கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை
ஆண்டு நம்பியவர் முன்கதி சேர அருளும் நம்பிகுரு மாப்பிறை பாம்பைத்
தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத் திருத்து நம்பிபொய்ச் சமண்பொரு ளாகி
ஈண்டு நம்பிஇமை யோர்தொழு நம்பிஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
7.63.9
654கரக்கும் நம்பிகசி யாதவர் தம்மை கசிந்தவர்க் கிம்மையோ டம்மையில் இன்பம்
பெருக்கும் நம்பி பெருகக் கருத்தா… 
………… ………… ………… ……….. 
………… ………… ………… ………..
7.63.10


இச்செய்யுளின் பிற்பகுதி சிதைந்து போயிற்று. 
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.64 திருத்தினை நகர் 
பண் – தக்கேசி

திருச்சிற்றம்பலம்

655நீறு தாங்கிய திருநுத லானைநெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையி னானைக் குற்றம் இல்லியைக் கற்றையஞ் சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க் கரிய சோதியை வரிவரால் உகளுஞ்
சேறு தாங்கிய திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
7.64.1
656பிணிகொள் ஆக்கை பிறப்பிறப் பென்னும் இதனைநீக்கி ஈசன் திருவடி யிணைக்காள்
துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள்நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர்வாழ் மதின்மூன்
றணிகொள் வெஞ்சிலை யால்உகச் சீறும் ஐயன் வையகம் பரவிநின் றேத்துந்
திணியும் வார்பொழில் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
7.64.2
657வடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால் மயல துற்றுவஞ் சனைக்கிட மாகி
முடியு மாகரு தேலெரு தேறும் மூர்த்தி யைமுத லாயபி ரானை
அடிகள் என்றடி யார்தொழு தேத்தும் அப்பன் ஒப்பிலா முலைஉமை கோனைச்
செடிகொள் கான்மலி திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
7.64.3
658பாவ மேபுரிந் தகலிடந் தன்னிற் பலப கர்ந்தல மந்துயிர் வாழ்க்கைக்
காவ என்றுழந் தயர்ந்துவீ ழாதே அண்ணல் தன்றிறம் அறிவினாற் கருதி
மாவின் ஈருரி உடைபுனைந் தானை மணியை மைந்தனை வானவர்க் கமுதைத்
தேவ தேவனைத் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
7.64.4
659ஒன்ற லாவுயிர் வாழ்க்கையை நினைந்திட் டுடல்த ளர்ந்தரு மாநிதி இயற்றி
என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும் இதுவும் பொய்யென வேநினை உளமே
குன்று லாவிய புயமுடை யானைக்கூத்த னைக்குலா விக்குவ லயத்தோர்
சென்றெ லாம்பயில் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
7.64.5
660வேந்த ராயுல காண்டறம் புரிந்துவீற்றி ருந்தஇவ் வுடலிது தன்னைத்
தேய்ந்தி றந்துவெந் துயருழந் திடுமிப் பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே
பாந்த ளங்கையில் ஆட்டுகந் தானைப்பரமனைக் கடற் சூர்தடிந் திட்ட
சேந்தர் தாதையைத் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
7.64.6
661தன்னில் ஆசறு சித்தமு மின்றித்தவ முயன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டியென் பணிந்தாற்பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர் மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
7.64.7
662பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும்பலருங் கண்டழு தெழவுயிர் உடலைப்
பிரிந்து போமிது நிச்சயம் அறிந்தாற் பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து
கருந்த டங்கண்ணி பங்கனை உயிரைக்கால காலனைக் கடவுளை விரும்பிச்
செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
7.64.8
663நமையெ லாம்பலர் இகழ்ந்துரைப் பதன்முன்நன்மை ஒன்றிலாத் தேரர்புன் சமணாஞ்
சமய மாகிய தவத்தினார் அவத்தத்தன்மை விட்டொழி நன்மையை வேண்டில்
உமையோர் கூறனை ஏறுகந் தானைஉம்பர் ஆதியை எம்பெரு மானைச்
சிமய மார்பொழில் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
7.64.9
664நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து நீங்க லாமென்று மனத்தினைத் தெருட்டிச்
சேடு லாம்பொழில் திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைத் திருவடி யிணைதான்
நாடெ லாம்புகழ் நாவலூ ராளிநம்பி வன்றொண்ட னூரன் உரைத்த
பாட லாந்தமிழ் பத்திவை வல்லார் முத்தி யாவது பரகதிப் பயனே.
7.64.10


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – திருநந்தீசுவரர், தேவியார் – இளங்கொம்பம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.65 திருநின்றியூர் 
பண் – தக்கேசி

திருச்சிற்றம்பலம்

665திருவும் வண்மையுந் திண்டிறல் அரசுஞ்சிலந்தி யார்செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்க ணான்றனக் களித்த வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன்
பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப் பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்
தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித் திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே.
7.65.1
666அணிகொள் ஆடையம் பூண்மணி மாலைஅமுது செய்தமு தம்பெறு சண்டி
இணைகொள் ஏழெழு நூறிரு பனுவல் ஈன்ற வன்றிரு நாவினுக் கரையன்
கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற காத லின்னருள் ஆதரித் தடைந்தேன்
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.
7.65.2
667மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி மூன்று நூறுவே தியரொடு நுனக்கு
ஒத்த பொன்மணிக் கலசங்க ளேந்திஓங்கு நின்றியூர் என்றுனக் களிப்பப்
பத்தி செய்தவப் பரசுரா மற்குப் பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன்
சித்தர் வானவர் தானவர் வணங்குஞ் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.
7.65.3
668இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன்முலைக் கலசங்க ளேந்திச்
சுரபி பால்சொரிந் தாட்டிநின் பாதந் தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப்
பரவி உள்கிவன் பாசத்தை அறுத்துப் பரம வந்துநுன் பாதத்தை அடைந்தேன்
நிரவி நித்திலம் அத்தகு செம்பொன் அளிக்குந் தென்றிரு நின்றியூ ரானே.
7.65.4
669வந்தோர் இந்திரன் வழிபட மகிழ்ந்துவான நாடுநீ ஆள்கென அருளிச்
சந்தி மூன்றிலுந் தாபரம் நிறுத்திச் சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச்
சிந்து மாமணி அணிதிருப் பொதியிற் சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.
7.65.5
670காது பொத்தரைக் கின்னரர் உழுவைகடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயங்
கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக் கோல ஆல்நிழற் கீழறம் பகர
ஏதஞ் செய்தவர் எய்திய இன்பம் யானுங் கேட்டுநின் இணையடி அடைந்தேன்
நீதி வேதியர் நிறைபுகழ் உலகில் நிலவு தென்றிரு நின்றியூ ரானே.
7.65.6
671கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்கநலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதே
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற பெற்றி கேட்டுநின் பொற்கழல் அடைந்தேன்
பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறும் நிலவு தென்றிரு நின்றியூ ரானே.
7.65.7
 இப்பதிகத்தில் 8-10ம் செய்யுட்கள் சிதைந்து போயின.7.65.8-10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – இலட்சுமிவரதர், தேவியார் – உலகநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.66 திருவாவடுதுறை 
பண் – தக்கேசி

திருச்சிற்றம்பலம்

672மறைய வனொரு மாணிவந் தடையவார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்
கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் கடந்த காரணங் கண்டுகண் டடியேன்
இறைவன் எம்பெரு மானென்றெப் போதும்ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்
அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன்ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
7.66.1
673தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி சித்தி ரப்பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாயது தன்னைச்சோழன் ஆக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அருண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
7.66.2
674திகழும் மாலவன் ஆயிரம் மலரால் ஏத்து வானொரு நீண்மலர் குறையப்
புகழி னாலவன் கண்ணிடந் திடலும்புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன்
திகழும் நின்றிருப் பாதங்கள் பரவித்தேவ தேவநின் றிறம்பல பிதற்றி
அகழும் வல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
7.66.3
675வீரத் தாலொரு வேடுவ னாகி விசைத்தோர் கேழலைத் துரந்துசென் றணைந்து
போரைத் தான்விச யன்றனக் கன்பாய்ப் புரிந்து வான்படை கொடுத்தல்கண் டடியேன்
வாரத் தாலுன நாமங்கள் பரவி வழிபட் டுன்றிற மேநினைந் துருகி
ஆர்வத் தோடும்வந் தடியிணை அடைந்தேன்ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
7.66.4
676ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவஉன்னை உன்னிய மூவர்நின் சரணம்
புக்கு மற்றவர் பொன்னுல காளப் புகழி னாலருள் ஈந்தமை அறிந்து
மிக்க நின்கழ லேதொழு தரற்றிவேதி யாஆதி மூர்த்திநின் அரையில்
அக்க ணிந்தஎம் மானுனை அடைந்தேன்ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
7.66.5
 இப்பதிகத்தில் 6-10ம் செய்யுட்கள் சிதைந்து போயின.7.66.6-10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மாசிலாமணியீசுவரர், தேவியார் – ஒப்பிலாமுலையம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.67 திருவலிவலம் 
பண் – தக்கேசி

திருச்சிற்றம்பலம்

677ஊனங் கத்துயிர்ப் பாயுல கெல்லாம் ஓங்கா ரத்துரு வாகிநின் றானை
வானங் கத்தவர்க் கும்மளப் பரிய வள்ள லையடி யார்கள்தம் உள்ளத்
தேனங் கத்தமு தாகியுள் ளூறுந் தேச னைத்திளைத் தற்கினி யானை
மானங் கைத்தலத் தேந்தவல் லானைவலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.67.1
678பல்லடி யார்பணிக் குப்பரி வானைப்பாடியா டும்பத்தர்க் கன்புடை யானைச்
செல்லடி யேநெருக் கித்திறம் பாது சேர்ந்தவர்க் கேசித்தி முத்திசெய் வானை
நல்லடி யார்மனத் தெய்ப்பினில் வைப்பைநானுறு குறையறிந் தருள்புரி வானை
வல்லடி யார்மனத் திச்சை உளானைவலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.67.2
679ஆழிய னாய்அகன் றேஉயர்ந் தானைஆதியந் தம்பணி வார்க்கணி யானைக்
கூழைய ராகிப்பொய் யேகுடிஓம்பிக்குழைந்து மெய்யடி யார்குழுப் பெய்யும்
வாழியர்க் கேவழு வாநெறி காட்டி மறுபி றப்பென்னை மாசறுத் தானை
மாழையொண் கண்ணுமை யைமகிழ்ந் தானைவலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.67.3
680நாத்தான் உன்றிற மேதிறம் பாது நண்ணியண் ணித்தமு தம்பொதிந் தூறும்
ஆத்தா னைஅடி யேன்றனக் கென்றும் அளவி றந்தபல தேவர்கள் போற்றுஞ்
சோத்தா னைச்சுடர் மூன்றிலும் ஒன்றித்துருவி மால்பிர மன்னறி யாத
மாத்தா னைமாத் தெனக்குவைத் தானைவலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.67.4
681நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்கரசரும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்தொண்ட னேன்அறி யாமை அறிந்து
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக் கழலடி காட்டியென் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்க நின்றானைவலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.67.5
682பாடுமா பாடிப் பணியுமா றறியேன்பனுவுமா பனுவிப் பரவுமா றறியேன்
தேடுமா தேடித் திருத்துமா றறியேன்செல்லுமா செல்லச் செலுத்துமா றறியேன்
கூடுமா றெங்ஙன மோவென்று கூறக் குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டு
வாடிநீ வாளா வருந்தலென் பானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.67.6
683பந்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப்படுக டற்பரப் புத்தவிர்ப் பானைச்
சந்தித் ததிற லாற்பணி பூட்டித் தவத்தை ஈட்டிய தம்மடி யார்க்குச்
சிந்தித் தற்கெளி தாய்த்திருப் பாதஞ்சிவலோ கந்திறந் தேற்றவல் லானை
வந்திப் பார்தம் மனத்தினுள் ளானைவலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.67.7
684எவ்வவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறந் தார்கள்மற் றெங்கும்நின் றேத்த
அவ்வவர் வேண்டிய தேஅருள் செய்துஅடைந்தவர்க் கேஇட மாகிநின் றானை
இவ்வவர் கருணையெங் கற்பகக் கடலைஎம்பெரு மான்அரு ளாய்என்ற பின்னை
வவ்வியென் ஆவி மனங்கலந் தானைவலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.67.8
685திரியும் முப்புரஞ் செற்றதுங் குற்றத் திறல ரக்கனைச் செறுத்ததும் மற்றைப்
பெரிய நஞ்சமு துண்டதும் முற்றும் பின்னை யாய்முன்ன மேமுளைத் தானை
அரிய நான்மறை அந்தணர் ஓவா தடிப ணிந்தறி தற்கரி யானை
வரையின் பாவை மணாளனெம் மானைவலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.67.9
686ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மாலுதி ரத்தினை ஏற்றுத்
தோன்று தோண்மிசைக் களேபரந் தன்னைச் சுமந்த மாவிர தத்தகங் காளன்
சான்று காட்டுதற் கரியவன் எளியவன்றன்னைத் தன்னி லாமனத் தார்க்கு
மான்று சென்றணை யாதவன் றன்னைவலிவ லந்தனில் வந்துகண் டேனே.
7.67.10
687கலிவ லங்கெட ஆரழல் ஓம்புங்கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும்
வலிவ லந்தனில் வந்துகண் டடியேன் மன்னும் நாவலா ரூரன்வன் றொண்டன்
ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும் உள்ளத் தாலுகந் தேத்தவல் லார்போய்
மெலிவில் வானுல கத்தவர் ஏத்தவிரும்பி விண்ணுல கெய்துவர் தாமே.
7.67.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மனத்துணைநாதர், தேவியார் – மாழையங்கண்ணியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.68 திருநள்ளாறு 
பண் – தக்கேசி

திருச்சிற்றம்பலம்

688செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்கரிய கண்டனை மால்அயன் காணாச்
சம்பு வைத்தழல் அங்கையி னானைச்சாம வேதனைத் தன்னொப்பி லானைக்
கும்ப மாகரி யின்னுரி யானைக் கோவின் மேல்வருங் கோவினை எங்கள்
நம்ப னைநள் ளாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.1
689விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை வேத கீதனை மிகச்சிறந் துருகிப்
பரசு வார்வினைப் பற்றறுப் பானைப்பாலொ டானஞ்சும் ஆடவல் லானைக்
குரைக டல்வரை ஏழுல குடைய கோனை ஞானக் கொழுந்தினைத் தொல்லை
நரைவிடை யுடையநல் லாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.2
690பூவில் வாசத்தைப் பொன்னினை மணியைப்புவியைக் காற்றினைப் புனல்அனல் வெளியைச்
சேவின் மேல்வருஞ் செல்வனைச் சிவனைத்தேவ தேவனைத் தித்திக்குந் தேனைக்
காவி யங்கண்ணிப் பங்கனைக் கங்கைச் சடைய னைக்கா மரத்திசை பாட
நாவில் ஊறும்நள் ளாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.3
691தஞ்சம் என்றுதன் தாளது வடைந்த பாலன் மேல்வந்த காலனை உருள
நெஞ்சில் ஓர்உதை கொண்ட பிரானைநினைப்ப வர்மனம் நீங்ககில் லானை
விஞ்சை வானவர் தானவர் கூடிக் கடைந்த வேலையுள் மிக்கெழுந் தெரியும்
நஞ்சம் உண்டநள் ளாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.4
692மங்கை பங்கனை மாசிலா மணியைவான நாடனை ஏனமோ டன்னம்
எங்கு நாடியுங் காண்பரி யானை ஏழை யேற்கெளி வந்தபி ரானை
அங்கம் நான்மறை யால்நிறை கின்ற அந்த ணாளர் அடியது போற்றும்
நங்கள் கோனைநள் ளாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.5
693கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்காம கோபனைக் கண்ணுத லானைச்
சொற்ப தப்பொருள் இருளறுத் தருளுந் தூய சோதியை வெண்ணெய் நல்லூரில்
அற்பு தப்பழ ஆவணங் காட்டி அடிய னாஎன்னை ஆளது கொண்ட
நற்ப தத்தைநள் ளாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.6
694மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற மாய னைநால்வர்க் காலின்கீழ் உரைத்த
அறவ னைஅம ரர்க்கரி யானைஅமரர் சேனைக்கு நாயக னான
குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறைவி ரியும்நள் ளாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.7
695மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானைமணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்
வேத னைவேத வேள்வியர் வணங்கும் விமல னையடி யேற்கெளி வந்த
தூதனைத் தன்னைத் தோழமை அருளித் தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்
நாத னைநள் ளாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.8
696இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை எடுப்ப ஆங்கிம வான்மகள் அஞ்சத்
துலங்கு நீண்முடி ஒருபதுந் தோள்கள்இருப துந்நெரித் தின்னிசை கேட்டு
வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த வள்ள லைப்பிள்ளை மாமதிச் சடைமேல்
நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதைநாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.9
697செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ் சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை
மறந்து நான்மற்று நினைப்பதே தென்றுவனப்ப கையப்பன் ஊரன்வன் றொண்டன்
சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ்சிந்தையுள் ளுருகிச் செப்ப வல்லார்க்
கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி இன்பவெள் ளத்துள் இருப்பர்க ளினிதே.
7.68.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – தெர்ப்பாரணியயீசுவரர்,
தேவியார் – போகமார்த்தபூண்முலையம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.69 திருவடமுல்லைவாயில் 
பண் – தக்கேசி

திருச்சிற்றம்பலம்

698திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்களென் றெண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்துமூடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லைவாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே.
7.69.1
699கூடிய இலயம் சதிபிழை யாமைக் கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளேஅங்கணா எங்குற்றா யென்று
தேடிய வானோர் சேர்திரு முல்லைவாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே.
7.69.2
700விண்பணிந் தேத்தும் வேதியா மாதர் வெருவிட வேழமன் றுரித்தாய்
செண்பகச் சோலை சூழ்திரு முல்லைவாயிலாய் தேவர்தம் மரசே
தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்சங்கிலிக் காஎன்கண் கொண்ட
பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
7.69.3
701பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்
பொறிவரி வண்டிசை பாட
அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும் அலவன்வந் துலவிட அள்ளல்
செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்பாசுப தாபரஞ் சுடரே.
7.69.4
702சந்தன வேருங் காரகிற் குறடுந்தண்மயிற் பீலியுங் கரியின்
தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
வந்திழி பாலி வடகரை முல்லைவயிலாய் மாசிலா மணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே.
7.69.5
703மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்கொள்கையால் மிகைபல செய்தேன்
செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே.
7.69.6
704மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய வார்குழல் மாமயிற் சாயல்
அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார் அருநடம் ஆடல றாத
திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற் செல்வனே எல்லியும் பகலும்
பணியது செய்வேன் படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே.
7.69.7
705நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில் நாயினேன் தன்னையாட் கொண்ட
சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந்தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்தேடியான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே.
7.69.8
706மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும் மாணிதன் மேல்மதி யாதே
கட்டுவான் வந்த காலனை மாளக் காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற் செல்வனே செழுமறை பகர்ந்த
பட்டனே அடியேன் படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே.
7.69.9
707சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட் டருளிய இறைவனே என்றும்
நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில் நாதனே நரைவிடை ஏறீ
பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்பாசுப தாபரஞ் சுடரே.
7.69.10
708விரைதரு மலர்மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்டஎம் மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற் செல்வனை நாவலா ரூரன்
உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும் உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையு மின்றிநண்ணுவர் விண்ணவர்க் கரசே.
7.69.11


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மாசிலாமணியீசுவரர், தேவியார் – கொடியிடைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.70 திருவாவடுதுறை 
பண் – தக்கேசி

திருச்சிற்றம்பலம்

709கங்கை வார்சடை யாய்கண நாதாகால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானேபூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனேதீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7.70.1
710மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே
கண்ணி லேன்உடம் பில்லடு நோயாற் கருத்த ழிந்துனக் கேபொறை ஆனேன்
தெண்ணி லாஎறிக் குஞ்சடை யானேதேவ னேதிரு வாவடு துறையுள்
அண்ண லேயெனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7.70.2
711ஒப்பி லாமுலை யாளொரு பாகாஉத்த மாமத்த மார்தரு சடையாய்
முப்பு ரங்களைத் தீவளைத் தங்கே மூவ ருக்கருள் செய்யவல் லானே
செப்ப ஆல்நிழற் கீழிருந் தருளுஞ்செல்வ னேதிரு வாவடு துறையுள்
அப்ப னேயெனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7.70.3
712கொதியி னால்வரு காளிதன் கோபங் குறைய ஆடிய கூத்துடை யானே
மதியி லேன்உடம் பில்லடு நோயால் மயங்கி னேன்மணி யேமண வாளா
விதியி னாலிமை யோர்தொழு தேத்தும் விகிர்த னேதிரு வாவடு துறையுள்
அதிப னேயெனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7.70.4
713வந்த வாளரக் கன்வலி தொலைத்து வாழும் நாள்கொடுத் தாய்வழி முதலே
வெந்த வெண்பொடி பூசவல் லானேவேட னாய்விச யற்கருள் புரிந்த
இந்து சேகர னேஇமை யோர்சீர் ஈச னேதிரு வாவடு துறையுள்
அந்த ணாஎனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7.70.5
714குறைவி லாநிறை வேகுணக் குன்றேகூத்த னேகுழைக் காதுடை யானே
உறவி லேன்உனை அன்றிமற் றடியேன் ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச் செம்பொ னேதிரு வாவடு துறையுள்
அறவ னேயெனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7.70.6
715வெய்ய மாகரி ஈருரி யானேவேங்கை ஆடையி னாய்விதி முதலே
மெய்ய னேஅடல் ஆழியன் றரிதான் வேண்ட நீகொடுத் தருள்புரி விகிர்தா
செய்ய மேனிய னேதிகழ் ஒளியே செங்க ணாதிரு வாவடு துறையுள்
ஐய னேயெனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7.70.7
716கோதி லாவமு தேஅருள் பெருகு கோல மேஇமை யோர்தொழு கோவே
பாதி மாதொரு கூறுடை யானே பசுப தீபர மாபர மேட்டீ
தீதி லாமலை யேதிரு வருள்சேர் சேவ காதிரு வாவடு துறையுள்
ஆதி யேயெனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7.70.8
717வான நாடனே வழித்துணை மருந்தேமாசி லாமணி யேமறைப் பொருளே
ஏன மாவெயி றாமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்புடை யானே
தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானேதேவ னேதிரு வாவடு துறையுள்
ஆனை யேயெனை அஞ்சலென் றருளாய்ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
7.70.9
718வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும்வேரி மத்தமும் விரவிமுன் முடித்த
இண்டை மாமலர்ச் செஞ்சடை யானைஈச னைத்திரு வாவடு துறையுள்
அண்ட வாணனைச் சிங்கடி யப்பன்அணுக்க வன்றொண்டன் ஆர்வத்தால் உரைத்த
தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள் சாத லும்பிறப் பும்மறுப் பாரே.
7.70.10


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.71 திருமறைக்காடு 
பண் – காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

719யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான்இடம் பேணில் 
தாழைப்பொழி லூடேசென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங் குண்ணும்மறைக் காடே.
7.71.1
720சிகரத்திடை இளவெண்பிறை வைத்தான்இடந் தெரியில்
முகரத்திடை முத்தின்னொளி பவளத்திரள் ஓதத்
தகரத்திடை தாழைத்திரள் ஞாழற்றிரள் நீழல்
மகரத்தொடு சுறவங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே.
7.71.2
721அங்கங்களும் மறைநான்குடன் விரித்தானிடம் அறிந்தோம்
தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்வீழ்மணற் படப்பைச்
சங்கங்களும் இலங்கிப்பியும் வலம்புரிகளும் இடறி
வங்கங்களும் உயர்கூம்பொடு வணங்கும்மறைக் காடே.
7.71.3
722நரைவிரவிய மயிர்தன்னொடு பஞ்சவடி மார்பன்
உரைவிரவிய உத்தமனிடம் உணரல்லுறு மனமே
குரைவிரவிய குலசேகரக் கொண்டற்றலை விண்ட
வரைபுரைவன திரைபொருதிழிந் தெற்றும்மறைக் காடே.
7.71.4
723சங்கைப்பட நினையாதெழு நெஞ்சேதொழு தேத்தக்
கங்கைச்சடை முடியுடையவர்க் கிடமாவது பரவை
அங்கைக்கடல் அருமாமணி உந்திக்கரைக் கேற்ற
வங்கத்தொடு சுறவங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே.
7.71.5
724அடல்விடையினன் மழுவாளினன் அலராலணி கொன்றைப்
படருஞ்சடை முடியுடையவர்க் கிடமாவது பரவைக்
கடலிடையிடை கழியருகினிற் கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு மணிநீர்மறைக் காடே.
7.71.6
725முளைவளரிள மதியுடையவன் முன்செய்தவல் வினைகள்
களைகளைந்தெனை ஆளல்லுறு கண்டன்னிடஞ் செந்நெல்
வளைவிளைவயற் கயல்பாய்தரு குணவார்மணற் கடல்வாய்
வளைவளையொடு சலஞ்சலங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே.
7.71.7
726நலம்பெரியன சுரும்பார்ந்தன நங்கோனிடம் அறிந்தோம்
கலம்பெரியன சாருங்கடற் கரைபொருதிழி கங்கைச்
சலம்புரிசடை முடியுடையவர்க் கிடமாவது பரவை
வலம்புரியொடு சலஞ்சலங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே.
7.71.8
727குண்டாடியுஞ் சமணாடியுங் குற்றுடுக்கையர் தாமுங்
கண்டார்கண்ட காரணம்மவை கருதாதுகை தொழுமின்
எண்டோ ளினன் முக்கண்ணினன் ஏழிசையினன் அறுகால்
வண்டாடுதண் பொழில்சூழ்ந்தெழு மணிநீர்மறைக் காடே.
7.71.9
728பாரூர்பல புடைசூழ்வள வயல்நாவலர் வேந்தன்
வாரூர்வன முலையாள்உமை பங்கன்மறைக் காட்டை
ஆரூரன தமிழ்மாலைகள் பாடும்மடித் தொண்டர்
நீரூர்தரு நிலனோடுயர் புகழாகுவர் தாமே.
7.71.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மறைக்காட்டீசுவரர், தேவியார் – யாழைப்பழித்தநாயகி.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.72 திருவலம்புரம் 
பண் – காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

729எனக்கினித் தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன்
பனைக்கனிப் பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும்
மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே.
7.72.1
730புரமவை எரிதர வளைந்தவில் லினன்அவன்
மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்
அரவுரி இரந்தவன் இரந்துண விரும்பிநின்
றிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே.
7.72.2
731நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடுமழு ஏந்தியோர் கையினன்
ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்
ளேறணி அடிகள்தம் இடம்வலம் புரமே.
7.72.3
732கொங்கணை சுரும்புண நெருங்கிய குளிரிளந்
தெங்கொடு பனைபழம் படுமிடந் தேவர்கள்
தங்கிடும் இடந்தடங் கடற்றிரை புடைதர
எங்கள தடிகள்நல் இடம்வலம் புரமே.
7.72.4
733கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன்
நெடுமதில் சிறுமையின் நிரவவல் லவனிடம்
படுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமந்
திடுமணல் அடைகரை இடம்வலம் புரமே.
7.72.5
734கருங்கடக் களிற்றுரிக் கடவுள திடங்கயல்
நெருங்கிய நெடும்பெணை அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந்
திருங்கடல் அணைகரை இடம்வலம் புரமே.
7.72.6
735நரிபுரி காடரங் காநடம் ஆடுவர்
வரிபுரி பாடநின் றாடும்எம் மான்இடம்
புரிசுரி வரிகுழல் அரிவையோர் பால்மகிழ்ந்
தெரியெரி யாடிதன் இடம்வலம் புரமே.
7.72.7
736பாறணி முடைதலை கலனென மருவிய
நீறணி நிமிர்சடை முடியினன் நிலவிய
மாறணி வருதிரை வயலணி பொழிலது
ஏறுடை அடிகள்தம் இடம்வலம் புரமே.
7.72.8
737சடசட விடுபெணை பழம்படும் இடவகை
படவட கத்தொடு பலிகலந் துலவிய
கடைகடை பலிதிரி கபாலிதன் இடமது
இடிகரை மணலடை இடம்வலம் புரமே.
7.72.9
738குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர்
கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல்
தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன்
எண்டிசைக் கொருசுடர் இடம்வலம் புரமே.
7.72.10
739வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல்
இருங்குலப் பிறப்பர்தம் இடம்வலம் புரத்தினை
அருங்குலத் தருந்தமிழ் ஊரன்வன் றொண்டன்சொல்
பெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே.
7.72.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வலம்புரநாதர், தேவியார் – வடுவகிர்க்கண்ணம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.73 திருவாரூர் 
பண் – காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

740கரையுங் கடலும் மலையுங் காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன் வானவர் தானவர்க் கெல்லாம்
அரையனி ருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.73.1
741தனியனென் றெள்கி அறியேன் தம்மைப் பெரிது முகப்பன்
முனிபவர் தம்மை முனிவன் முகம்பல பேசி மொழியேன்
கனிகள் பலவுடைச் சோலைக் காய்க்குலை ஈன்ற கமுகின்
இனிய னிருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.73.2
742சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன் தொடர்ந்தவர்க் குந்துணை அல்லேன்
கல்லில் வலிய மனத்தேன் கற்ற பெரும்புல வாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான் அருமறை ஆறங்கம் ஓதும்
எல்லை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.73.3
743நெறியும் அறிவுஞ் செறிவும் நீதியும் நான்மிகப் பொல்லேன்
மிறையுந் தறியும் உகப்பன் வேண்டிற்றுச் செய்து திரிவன்
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செஞ்சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.73.4
744நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண் டகஞ்செய்து வாழ்வேன்
வேதியர் தம்மை வெகுளேன் வெகுண்டவர்க் குந்துணை ஆகேன்
சோதியிற் சோதிஎம் மானைச் சுண்ணவெண் ணீறணிந் திட்ட
ஆதி இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.73.5
745அருத்தம் பெரிதும் உகப்பேன் அலவலை யேன்அலந் தார்கள்
ஒருத்தர்க் குதவியேன் அல்லேன் உற்றவர்க் குந்துணை அல்லேன்
பொருத்தமே லொன்று மிலாதேன் புற்றெடுத் திட்டிடங் கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.73.6
746சந்தம் பலஅறுக் கில்லேன் சார்ந்தவர் தம்மடிச் சாரேன்
முந்திப் பொருவிடை யேறி மூவுல குந்திரி வானே
கந்தங் கமழ்கொன்றை மாலைக் கண்ணியன் விண்ணவ ரேத்தும்
எந்தை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.73.7
747நெண்டிக் கொண்டேயுங் கிலாய்ப்பன் நிச்சய மேயிது திண்ணம்
மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன் மெய்ப்பொரு ளன்றி உணரேன்
பண்டங் கிலங்கையர் கோனைப் பருவரைக் கீழடர்த் திட்ட
அண்டன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.73.8
748நமர்பிறர் என்ப தறியேன் நான்கண்ட தேகண்டு வாழ்வேன்
தமரம் பெரிதும் உகப்பன் தக்கவா றொன்றும் இலாதேன்
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.73.9
749ஆசை பலஅறுக் கில்லேன் ஆரையும் அன்றி உரைப்பேன்
பேசிற் சழக்கலாற் பேசேன் பிழைப்புடை யேன்மனந் தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன் ஒலிகடல் நஞ்சமு துண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
7.73.10
750எந்தை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ என்று
சிந்தை செயுந்திறம் வல்லான் திருமரு வுந்திரள் தோளான்
மந்த முழவம் இயம்பும் வளவயல் நாவலா ரூரன்
சந்தம் இசையொடும் வல்லார் தாம்புகழ் எய்துவார் தாமே.
7.73.11


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.74 திருத்துருத்தியும் – திருவேள்விக்குடியும்

பண் – காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

751மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானைஎன்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை.
7.74.1
752கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி
மாடுமா கோங்கமே மருதமே பொருதுமலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப் பழவினை உள்ளன பற்றறுத் தானை.
7.74.2
753கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார் கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப்
புல்கியுந் தாழ்ந்தும் போந்து தவஞ்செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத் தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை.
7.74.3
754பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும் பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக்
கறியுமா மிளகொடு கதலியும் உந்திக் கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்
எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை அருவினை உள்ளன ஆசறுத் தானை.
7.74.4
755பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும்பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டிஎண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே
சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானைஉற்றநோய் இற்றையே உறவொழித் தானை.
7.74.5
756புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும் பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி
அகழுமா அருங்கரை வளம்படப் பெருகிஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித்
திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
இகழுமா றறிகிலேன் எம்பெரு மானைஇழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை.
7.74.6
757வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது
கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க் காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்
விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை உலகறி பழவினை அறவொழித் தானை.
7.74.7
758ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப்புள்ளினம் பலபடிந் தொண்கரை உகளக்
காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித்
தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை.
7.74.8
759புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப்பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப
இலங்குமார் முத்தினோ டினமணி இடறிஇருகரைப் பெருமரம் பீழந்துகொண் டெற்றிக்
கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை மேலைநோய் இம்மையே வீடுவித் தானை.
7.74.9
760மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறிமாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற
அங்கையான் கழலடி அன்றிமற் றறியான்அடியவர்க் கடியவன் தொழுவனா ரூரன்
கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல்
தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார் தவநெறி சென்றம ருலகம்ஆள் பவரே.
7.74.10


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.75 திருவானைக்கா 
பண் – காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

761மறைகள் ஆயின நான்கும் மற்றுள பொருள்களு மெல்லாந்
துறையுந் தோத்திரத் திறையுந் தொன்மையும் நன்மையு மாய
அறையும் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே.
7.75.1
762வங்கம் மேவிய வேலை நஞ்செழ வஞ்சர்கள் கூடித்
தங்கள் மேல்அட ராமை உண்ணென உண்டிருள் கண்டன்
அங்கம் ஓதிய ஆனைக் காவுடை ஆதியை நாளும்
எங்கள் ஈசனென் பார்கள் எம்மையும் ஆளுடை யாரே.
7.75.2
763நீல வண்டறை கொன்றை நேரிழை மங்கையோர் திங்கள்
சால வாளர வங்கள் தங்கிய செஞ்சடை எந்தை
ஆல நீழலுள் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
ஏலு மாறுவல் லார்கள் எம்மையும் ஆளுடை யாரே.
7.75.3
764தந்தை தாயுல குக்கோர் தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
பந்த மாயின பெருமான் பரிசுடை யவர்திரு வடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே.
7.75.4
765கணைசெந் தீயர வந்நாண் கல்வளை யுஞ்சிலை யாகத்
துணைசெய் மும்மதில் மூன்றுஞ் சுட்டவ னேயுல குய்ய
அணையும் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
இணைகொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே.
7.75.5
766விண்ணின் மாமதி சூடி விலையிலி கலன்அணி விமலன்
பண்ணின் நேர்மொழி மங்கை பங்கினன் பசுவுகந் தேறி
அண்ண லாகிய ஆனைக் காவுடை ஆதியை நாளும்
எண்ணு மாறுவல் லார்கள் எம்மையும் ஆளுடை யாரே.
7.75.6
767தார மாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுத்தும்
நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே
ஆரங் கொண்டவெம் மானைக் காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடை யாரே.
7.75.7
768உரவம் உள்ளதோர் உழையின் உரிபுலி அதளுடை யானை
விரைகொள் கொன்றையி னானை விரிசடை மேற்பிறை யானை
அரவம் வீக்கிய ஆனைக் காவுடை ஆதியை நாளும்
இரவும் எல்லியும் பகலும் ஏத்துவார் எமையுடை யாரே.
7.75.8
769வலங்கொள் வாரவர் தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து
கலங்கக் காலனைக் காலாற் காமனைக் கண்சிவப் பானை
அலங்கல் நீர்பொரும் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே.
7.75.9
770ஆழி யாற்கருள் ஆனைக் காவுடை ஆதிபொன் னடியின்
நீழ லேசர ணாக நின்றருள் கூர நினைந்து
வாழ வல்லவன் றொண்டன் வண்டமிழ் மாலைவல் லார்போய்
ஏழு மாபிறப் பற்று எம்மையும் ஆளுடை யாரே.
7.75.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சம்புகேசுவரர்,
தேவியார் – அகிலாண்டநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.76 திருவாஞ்சியம் 
பண் – பியந்தைக்காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

771பொருவ னார்புரி நூலர் புணர்முலை உமையவ ளோடு
மருவ னார்மரு வார்பால் வருவதும் இல்லைநம் அடிகள்
திருவ னார்பணிந் தேத்துந் திகழ்திரு வாஞ்சியத் துறையும்
ஒருவ னார்அடி யாரை ஊழ்வினை நலிய வொட்டாரே.
7.76.1
772தொறுவில் ஆனிள ஏறு துண்ணென இடிகுரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓடச் செங்கயல் பங்கயத் தொதுங்கக்
கறுவி லாமனத் தார்கள் காண்டகு வாஞ்சியத் தடிகள்
மறுவி லாதவெண் ணீறு பூசுதல் மன்னுமொன் றுடைத்தே.
7.76.2
773தூர்த்தர் மூவெயி லெய்து சுடுநுனைப் பகழிய தொன்றாற்
பார்த்த னார்திரள் தோள்மேற் பன்னுனைப் பகழிகள் பாய்ச்சித்
தீர்த்த மாமலர்ப் பொய்கைத் திகழ்திரு வாஞ்சியத் தடிகள்
சாத்து மாமணிக் கச்சங் கொருதலை பலதலை யுடைத்தே.
7.76.3
774சள்ளை வெள்ளையங் குருகு தானது வாமெனக் கருதி
வள்ளை வெண்மலர் அஞ்சி மறுகியோர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத் துறைமல்கு வாஞ்சியத் தடிகள்
வெள்ளை நுண்பொடிப் பூசும் விகிர்தமொன் றொழிகிலர் தாமே.
7.76.4
775மைகொள் கண்டர்எண் டோ ளர் மலைமக ளுடனுறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலங் கழனி கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்
பைதல் வெண்பிறை யோடு பாம்புடன் வைப்பது பரிசே.
7.76.5
776கரந்தை கூவிள மாலை கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்
பரந்த பாரிடஞ் சூழ வருவர்நம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு திகழ்திரு வாஞ்சியத் துறையும்
மருந்த னார்அடி யாரை வல்வினை நலிய வொட்டாரே.
7.76.6
777அருவி பாய்தரு கழனி அலர்தரு குவளையங் கண்ணார்
குருவி யாய்கிளி சேப்பக் குருகினம் இரிதரு கிடங்கிற்
பருவ ரால்குதி கொள்ளும் பைம்பொழில் வாஞ்சியத் துறையும்
இருவ ராலறி யொண்ணா இறைவன தறைகழல் சரணே.
7.76.7
778களங்க ளார்தரு கழனி அளிதரக் களிதரு வண்டு
உளங்க ளார்கலிப் பாடல் உம்பரில் ஒலித்திடுங் காட்சி
குளங்க ளானிழற் கீழ்நற் குயில்பயில் வாஞ்சியத் தடிகள்
விளங்கு தாமரைப் பாதம் நினைப்பவர் வினைநலி விலரே.
7.76.8
779வாழை யின்கனி தானும் மதுவிம்மு வருக்கையின் சுளையுங்
கூழை வானரந் தம்மிற் கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையந் தண்டாற் செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்
ஏழை பாகனை யல்லால் இறையெனக் கருதுத லிலமே.
7.76.9
780செந்நெ லங்கலங் கழனித் திகழ்திரு வாஞ்சியத் துறையும்
மின்ன லங்கலஞ் சடையெம் இறைவன தறைகழல் பரவும்
பொன்ன லங்கனல் மாடப் பொழிலணி நாவலா ரூரன்
பன்ன லங்கனல் மாலை பாடுமின் பத்தரு ளீரே.
7.76.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சுகவாஞ்சிநாதர்,
தேவியார் – வாழவந்தநாயகி.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.77 திருவையாறு 
பண் – காந்தாரபஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

781பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
7.77.1
782எங்கே போவே னாயிடினும் அங்கே வந்தென் மனத்தீராய்ச்
சங்கை யொன்றும் இன்றியே தலைநாள் கடைநாள் ஒக்கவே
கங்கை சடைமேற் கரந்தானே கலைமான் மறியுங் கனல்மழுவுந்
தங்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
7.77.2
783மருவிப் பிரிய மாட்டேன்நான் வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன்
பருவி விச்சி மலைச்சாரற் பட்டை கொண்டு பகடாடிக்
குருவி ஓப்பிக் கிளிகடிவார் குழன்மேல் மாலை கொண்டோ ட்டந்
தரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
7.77.3
784பழகா நின்று பணிசெய்வார் பெற்ற பயனொன் றறிகிலேன்
இகழா துமக்காட் பட்டோ ர்க்கு வேக படமொன் றரைச்சாத்தி
குழகா வாழைக் குலைத்தெங்கு கொணர்ந்து கரைமேல் எறியவே
அழகார் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
7.77.4
785பிழைத்த பிழையொன் றறியேன்நான் பிழையைத் தீரப் பணியாயே
மழைக்கண் நல்லார் குடைந்தாட மலையும் நிலனுங் கொள்ளாமைக்
கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங் கழனி மண்டிக் கையேறி
அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
7.77.5
786கார்க்கொள் கொன்றைச் சடைமேலொன் றுடையாய் விடையாய் கையினால்
மூர்க்கர் புரமூன் றெரிசெய்தாய் முன்னீ பின்னீ முதல்வன்நீ
வார்க்கொள் அருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னுங்கொண்
டார்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
7.77.6
787மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் பற்றி உலகம் பலிதேர்வாய்
சிலைக்கொள் கணையால் எயிலெய்த செங்கண் விடையாய் தீர்த்தன்நீ
மலைக்கொள் ளருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னுங்கொண்
டலைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
7.77.7
788போழும் மதியும் புனக்கொன்றைப் புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச்சோதீ உன்னைத் தொழுவார் துயர்போக
வாழு மவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
7.77.8
789கதிர்கொள் பசியே ஒத்தேநான் கண்டேன் உம்மைக் காணாதேன்
எதிர்த்து நீந்த மாட்டேன்நான் எம்மான் றம்மான் றம்மானே
விதிர்த்து மேகம் மழைபொழிய வெள்ளம் பரந்து நுரைசிதறி
அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
7.77.9
790கூசி அடியார் இருந்தாலுங் குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
தேச வேந்தன் திருமாலும் மலர்மேல் அயனுங் காண்கிலாத்
தேச மெங்குந் தெளித்தாடத் தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும்
வாசந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
7.77.10
791கூடி அடியார் இருந்தாலுங் குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மைத் தொண்டன் ஊரனேன்
தேடி யெங்குங் காண்கிலேன் திருவா ரூரே சிந்திப்பன்
ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
7.77.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – செம்பொற்சோதியீசுவரர், தேவியார் – அறம் வளர்த்த நாயகியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.78 திருக்கேதாரம் 
பண் – நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

792வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனுங்
கீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெ னீரே.
7.78.1
793பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்
குறிகூவிய கூற்றங்கொளும் நாளாலறம் உளவே
அறிவானிலும் அறிவானல நறுநீரொடு சோறு
கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே.
7.78.2
794கொம்பைப்பிடித் தொருக்காலர்கள் இருக்கால்மலர் தூவி
நம்பன்னமை ஆள்வானென்று நடுநாளையும் பகலுங்
கம்பக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவிச்
செம்பொற்பொடி சிந்துந்திருக் கேதாரமெ னீரே.
7.78.3
795உழக்கேயுண்டு படைத்தீட்டிவைத் திழப்பார்களுஞ் சிலர்கள்
வழக்கேயெனிற் பிழைக்கேமென்பர் மதிமாந்திய மாந்தர்
சழக்கேபறி நிறைப்பாரொடு தவமாவது செயன்மின்
கிழக்கேசல மிடுவார்தொழு கேதாரமெ னீரே.
7.78.4
796வாளோடிய தடங்கண்ணியர் வலையிலழுந் தாதே
நாளோடிய நமனார்தமர் நணுகாமுனம் நணுகி
ஆளாயுய்ம்மின் அடிகட்கிடம் அதுவேயெனில் இதுவே
கீளோடர வசைத்தானிடங் கேதாரமெ னீரே.
7.78.5
797தளிசாலைகள் தவமாவது தம்மைப்பெறி லன்றே
குளியீருளங் குருக்கேத்திரங் கோதாவிரி குமரி
தெளியீருளஞ் சீபர்ப்பதந் தெற்குவடக் காகக்
கிளிவாழையொண் கனிகீறியுண் கேதாரமெ னீரே.
7.78.6
798பண்ணின்றமிழ் இசைபாடலின் பழவேய்முழ வதிரக்
கண்ணின்னொளி கனகச்சுனை வயிரம்மவை சொரிய
மண்ணின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண் டெறியக்
கிண்ணென்றிசை முரலுந்திருக் கேதாரமெ னீரே.
7.78.7
799முளைக்கைப்பிடி முகமன்சொலி முதுவேய்களை இறுத்துத்
துளைக்கைக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவி
வளைக்கைப்பொழி மழைகூர்தர மயில்மான்பிணை நிலத்தைக்
கிளைக்கமணி சிந்துந்திருக் கேதாரமெ னீரே.
7.78.8
800பொதியேசுமந் துழல்வீர்பொதி அவமாவதும் அறியீர்
மதிமாந்திய வழியேசென்று குழிவீழ்வதும் வினையாற்
கதிசூழ்கடல் இலங்கைக்கிறை மலங்கவரை அடர்த்துக்
கெதிபேறுசெய் திருந்தானிடங் கேதாரமெ னீரே.
7.78.9
801நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவன் அடியார்களுக் கடியானடித் தொண்டன்
தேவன்றிருக் கேதாரத்தை ஊரன்னுரை செய்த
பாவின்தமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே.
7.78.10


இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கேதாரேசுவரர், தேவியார் – கேதாரேசுவரியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.79 திருப்பருப்பதம் 
பண் – நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

802மானும்மரை இனமும்மயில் இனமுங்கலந் தெங்குந்
தாமேமிக மேய்ந்துதடஞ் சுனைநீர்களைப் பருகிப்
பூமாமரம் உரிஞ்சிப்பொழி லூடேசென்று புக்குத்
தேமாம்பொழில் நீழல்துயில் சீபர்ப்பத மலையே.
7.79.1
803மலைச்சாரலும் பொழிற்சாரலும் புறமேவரும் இனங்கள்
மலைப்பாற்கொணர்ந் திடித்தூட்டிட மலங்கித்தன களிற்றை
அழைத்தோடியும் பிளிறீயவை அலமந்துவந் தெய்த்துத்
திகைத்தோடித்தன் பிடிதேடிடுஞ் சீபர்ப்பத மலையே.
7.79.2
804மன்னிப்புனங் காவல்மட மொழியாள்புனங் காக்கக்
கன்னிக்கிளி வந்துகவைக் கோலிக்கதிர் கொய்ய
என்னைக்கிளி மதியாதென்று எடுத்துக்கவண் ஒலிப்பத்
தென்னற்கிளி திரிந்தேறிய சீபர்ப்பத மலையே.
7.79.3
805மையார்தடங் கண்ணாள்மட மொழியாள்புனங் காக்கச்
செவ்வேதிரிந் தாயோவெனப் போகாவிட விளிந்து
கைபாவிய கவணால்மணி எறியஇரிந் தோடிச்
செவ்வாயன கிளிபாடிடுஞ் சீபர்ப்பத மலையே.
7.79.4
806ஆனைக்குலம் இரிந்தோடித்தன் பிடிசூழலிற் றிரியத்
தானப்பிடி செவிதாழ்த்திட அதற்குமிக இரங்கி
மானக்குற அடல்வேடர்கள் இலையாற்கலை கோலித்
தேனைப்பிழிந் தினிதூட்டிடுஞ் சீபர்ப்பத மலையே.
7.79.5
807மாற்றுக்களி றடைந்தாயென்று மதவேழங்கை யெடுத்தும்
ஊற்றித்தழல் உமிழ்ந்தும்மதம் பொழிந்தும்முகஞ் சுழியத்
தூற்றத்தரிக் கில்லேனென்று சொல்லிஅயல் அறியத்
தேற்றிச்சென்று பிடிசூழறுஞ் சீபர்ப்பத மலையே.
7.79.6
808அப்போதுவந் துண்டீர்களுக் கழையாதுமுன் னிருந்தேன்
எப்போதும்வந் துண்டாலெமை எமர்கள்சுழி யாரோ
இப்போதுமக் கிதுவேதொழில் என்றோடியக் கிளியைச்
செப்பேந்திள முலையாள்எறி சீபர்ப்பத மலையே.
7.79.7
809திரியும்புரம் நீறாக்கிய செல்வன்றன கழலை
அரியதிரு மாலோடயன் றானும்மவர் அறியார்
கரியின்னினம் ஓடும்பிடி தேனுண்டவை களித்துத்
திரிதந்தவை திகழ்வாற்பொலி சீபர்ப்பத மலையே.
7.79.8
810ஏனத்திரள் கிளைக்கஎரி போலமணி சிதறத்
தீயென்றவை மலைச்சாரலிற் றிரியுங்கர டீயும்
மானும்மரை இனமும்மயில் மற்றும்பல வெல்லாந்
தேனுண்பொழில் சோலைமிகு சீபர்ப்பத மலையே.
7.79.9
811நல்லாரவர் பலர்வாழ்தரு வயல்நாவல வூரன்
செல்லல்லுற அரியசிவன் சீபர்ப்பத மலையை
அல்லலவை தீரச்சொன தமிழ்மாலைகள் வல்லார்
ஒல்லைச்செல உயர்வானகம் ஆண்டங்கிருப் பாரே.
7.79.10


இத்தலம் வடநாட்டிலுள்ளது. இது ஸ்ரீசைலம் என்றும்
மல்லிகார்ச்சுனம் என்றும் பெயர்பெறும்.
சுவாமிபெயர் – பருவதநாதர், தேவியார் – பருவதநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.80 திருக்கேதீச்சரம் 
பண் – நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

812நத்தார்புடை ஞானம்பசு ஏறிந்நனை கவிழ்வாய்
மத்தம்மத யானைஉரி போர்த்தமழு வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேற்
செத்தாரெலும் பணிவான்றிருக் கேதீச்சரத் தானே.
7.80.1
813சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறைக் கீளுங்
கடமார்களி யானைஉரி அணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற்
திடமாஉறை கின்றான்றிருக் கேதீச்சரத் தானே.
7.80.2
814அங்கம்மொழி அன்னாரவர் அமரர்தொழு தேத்த
வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்
பங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேற்
செங்கண்ணர வசைத்தான்றிருக் கேதீச்சரத் தானே.
7.80.3
815கரியகறைக் கண்டனல்ல கண்மேலொரு கண்ணான்
வரியசிறை வண்டியாழ்செயும் மாதோட்டநன் னகருட்
பரியதிரை எறியாவரு பாலாவியின் கரைமேற்
றெரியும்மறை வல்லான்றிருக் கேதீச்சரத் தானே.
7.80.4
816அங்கத்துறு நோய்களடி யார்மேலொழித் தருளி
வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்
பங்கஞ்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேற்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே.
7.80.5
817வெய்யவினை யாயஅடி யார்மேலொழித் தருளி
வையம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரிற்
பையேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேற்
செய்யசடை முடியான்றிருக் கேதீச்சரத் தானே.
7.80.6
818ஊனத்துறு நோய்களடி யார்மேலொழித் தருளி
வானத்துறு மலியுங்கடல் மாதோட்டநன் னகரிற்
பானத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரைமேல்
ஏனத்தெயி றணிந்தான்றிருக் கேதீச்சரத் தானே.
7.80.7
819அட்டன்னழ காகவரை தன்மேலர வார்த்து 
மட்டுண்டுவண் டாலும்பொழில் மாதோட்டநன் னகரிற்
பட்டவரி நுதலாளொடு பாலாவியின் கரைமேற்
சிட்டன்நமை யாள்வான்றிருக் கேதீச்சரத் தானே.
7.80.8
820மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்டநன் னகரிற்
பாவம்வினை யறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல்
தேவன்னெனை ஆள்வான்றிருக் கேதீச்சரத் தானே.
7.80.9
821கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருட்
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித் தொண்டனுரை செய்த
குறையாத்தமிழ் பத்துஞ்சொலக் கூடாகொடு வினையே.
7.80.10


இத்தலம் ஈழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கேதீசுவரர், தேவியார் – கௌரியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.81 திருக்கழுக்குன்றம் 
பண் – நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

822கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே
நின்ற பாவம் வினைகள் தாம்பல நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடங்
கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.
7.81.1
823இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே
பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம்
நிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி
கறங்கு வெள்ளை அருவித் தண்கழுக் குன்றமே.
7.81.2
824நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்
தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையுந் தண்கழுக் குன்றமே.
7.81.3
825வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை
முளிறி லங்குமழு வாளன் முந்தி உறைவிடம்
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம்மதம் மூன்றுடைக்
களிறி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.
7.81.4
826புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப் படையன் எந்தை பிரானிடம்
முலைகள் உண்டு தழுவிக் குட்டி யொடுமுசுக்
கலைகள் பாயும் புறவில் தண்கழுக் குன்றமே.
7.815
827மடமு டைய அடியார் தம்மனத் தேஉற
விடமு டைய மிடறன் விண்ணவர் மேலவன்
படமு டைய அரவன் றான்பயி லும்மிடங்
கடமு டைய புறவில் தண்கழுக் குன்றமே.
7.81.6
828ஊன மில்லா அடியார் தம்மனத் தேஉற
ஞான மூர்த்தி நட்ட மாடிநவி லும்மிடந்
தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடியே
கான மஞ்சை உறையுந் தண்கழுக் குன்றமே.
7.81.7
829அந்த மில்லா அடியார் தம்மனத் தேஉற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே
கந்தம் நாறும் புறவில் தண்கழுக் குன்றமே.
7.81.8
830பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன் றானுறை யும்மிடம்
மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை
குழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே.
7.81.9
831பல்லில் வெள்ளைத் தலையன் றான்பயி லும்மிடம்
கல்லில் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை
மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினாற்
சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே.
7.81.10


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வேதகிரியீசுவரர், தேவியார் – பெண்ணினல்லாளம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.82 திருச்சுழியல் 
பண் – நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

832ஊனாய்உயிர் புகலாய்அக லிடமாய் முகில்பொழியும்
வானாய்வரு மதியாய்விதி வருவானிடம் பொழிலின்
தேனாதரித் திசைவண்டினம் மிழற்றுந்திருச் சுழியல்
நானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே.
7.82.1
833தண்டேர்மழுப் படையான்மழ விடையான்எழு கடல்நஞ்
சுண்டேபுரம் எரியச்சிலை வளைத்தான்இமை யவர்க்காத்
திண்டேர்மிசை நின்றானவன் உறையுந்திருச் சுழியல்
தொண்டேசெய வல்லாரவர் நல்லார்துயர் இலரே.
7.82.2
834கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங்கரைக் கேற்றக்
கொவ்வைத்துவர் வாயார்குடைந் தாடுந்திருச் சுழியல்
தெய்வத்தினை வழிபாடுசெய் தெழுவாரடி தொழுவார்
அவ்வத்திசைக் கரசாகுவர் அலராள்பிரி யாளே.
7.82.3
835மலையான்மகள் மடமாதிட மாகத்தவள் மற்றுக்
கொலையானையின் உரிபோர்த்தவெம் பெருமான்றிருச் சுழியல்
அலையார்சடை யுடையானடி தொழுவார்பழு துள்ளம்
நிலையார்திகழ் புகழால்நெடு வானத்துயர் வாரே.
7.82.4
836உற்றான்நமக் குயரும்மதிச் சடையான்புலன் ஐந்துஞ்
செற்றார்திரு மேனிப்பெரு மானூர்திருச் சுழியல்
பெற்றான்இனி துறையத்திறம் பாமைத்திரு நாமங்
கற்றாரவர் கதியுட்செல்வர் ஏத்தும்மது கடனே.
7.82.5
837மலந்தாங்கிய பாசப்பிறப் பறுப்பீர்துறைக் கங்கைச்
சலந்தாங்கிய முடியான்அமர்ந் திடமாந்திருச் சுழியல்
நிலந்தாங்கிய மலராற்கொழும் புகையால்நினைந் தேத்துந்
தலந்தாங்கிய புகழாம்மிகு தவமாஞ்சது ராமே.
7.82.6
838சைவத்தசெவ் வுருவன்றிரு நீற்றன்னுரு மேற்றன்
கைவைத்தொரு சிலையால்அரண் மூன்றும்மெரி செய்தான்
தெய்வத்தவர் தொழுதேத்திய குழகன்றிருச் சுழியல்
மெய்வைத்தடி நினைவார்வினை தீர்தல்லெளி தன்றே.
7.82.7
839பூவேந்திய பீடத்தவன் றானும்மடல் அரியுங்
கோவேந்திய வினையத்தொடு குறுகப்புகல் அறியார்
சேவேந்திய கொடியானவன் உறையுந்திருச் சுழியல்
மாவேந்திய கரத்தான்எம சிரத்தான்றன தடியே.
7.82.8
840கொண்டாடுதல் புரியாவரு தக்கன்பெரு வேள்விச்
செண்டாடுதல் புரிந்தான்திருச் சுழியற்பெரு மானைக் 
குண்டாடிய சமண்ஆதர்கள் குடைச்சாக்கியர் அறியா
மிண்டாடிய அதுசெய்தது வானால்வரு விதியே.
7.82.9
841நீரூர்தரு நிமிலன்றிரு மலையார்க்கயல் அருகே
தேரூர்தரும் அரக்கன்சிரம் நெரித்தான்றிருச் சுழியல்
பேரூரென உரைவானடி பெயர்நாவலர் கோமான்
ஆரூரன தமிழ்மாலைபத் தறிவார்துயர் இலரே.
7.82.10


இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – இணைத்திருமேனிநாதர், தேவியார் – துணைமாலைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.83 திருவாரூர் 
பண் – புறநீர்மை

திருச்சிற்றம்பலம்

842அந்தியும் நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லி
முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத் தென்றிரு வாரூர்புக்
கெந்தை பிரானாரை யென்றுகொல் எய்துவதே.
7.83.1
843நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதுந்
துன்று மலரிட்டுச் சூழும் வலஞ்செய்து
தென்றல் மணங்கமழுந் தென்றிரு வாரூர்புக்
கென்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே.
7.83.2
844முன்னை முதற்பிறவி மூதறி யாமையினாற்
பின்னை நினைந்தனவும் பேதுற வும்மொழியச்
செந்நெல் வயற்கழனித் தென்றிரு வாரூர்புக்
கென்னுயிர்க் கின்னமுதை என்றுகொல் எய்துவதே.
7.83.3
845நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆருயிரைக்
கொல்ல நினைப்பனவுங் குற்றமும் அற்றொழியச்
செல்வ வயற்கழனித் தென்றிரு வாரூர்புக்
கெல்லை மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே.
7.83.4
846கடுவரி மாக்கடலுட் காய்ந்தவன் தாதையைமுன்
சுடுபொடி மெய்க்கணிந்த சோதியை வன்றலைவாய்
அடுபுலி ஆடையனை ஆதியை ஆரூர்புக்
கிடுபலி கொள்ளியைநான் என்றுகொல் எய்துவதே.
7.83.5
847சூழொளி நீர்நிலந்தீத் தாழ்வளி ஆகாசம்
வானுயர் வெங்கதிரோன் வண்டமிழ் வல்லவர்கள்
ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர்புக்
கேழுல காளியைநான் என்றுகொல் எய்துவதே.
7.83.6
848கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த
வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமராச்
செம்பொனை நன்மணியைத் தென்றிரு வாரூர்புக்
கென்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே.
7.83.7
849ஆறணி நீண்முடிமேல் ஆடர வஞ்சூடிப்
பாறணி வெண்டலையிற் பிச்சைகொள் நச்சரவன்
சேறணி தண்கழனித் தென்றிரு வாரூர்புக்
கேறணி எம்மிறையை என்றுகொல் எய்துவதே.
7.83.8
850மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்
அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடுந்
திண்ணிய மாமதில்சூழ் தென்றிரு வாரூர்புக்
கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே.
7.83.9
851மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆரூரை
நன்னெடுங் காதன்மையால் நாவலர் கோன்ஊரன்
பன்னெடுஞ் சொல்மலர்கொண் டிட்டன பத்தும்வல்லார்
பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே.
7.83.10


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.84 திருக்கானப்பேர் 
பண் – புறநீர்மை

திருச்சிற்றம்பலம்

852தொண்ட ரடித்தொழலுஞ் சோதி இளம்பிறையுஞ் சூதன மென்முலையாள் பாகமு மாகிவரும்
புண்டரி கப்பரிசாம் மேனியும் வானவர்கள் பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமருங்
கொண்ட லெனத்திகழுங் கண்டமும் எண்டோ ளுங்கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக்
கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன்கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
7.84.1
853கூத லிடுஞ்சடையுங் கோளர வும்விரவுங் கொக்கிற குங்குளிர்மா மந்தமும் ஒத்துனதாள்
ஓத லுணர்ந்தடியார் உன்பெரு மைக்குநினைந் துள்ளுரு காவிரசும் ஓசையைப் பாடலும்நீ
ஆத லுணர்ந்தவரோ டன்பு பெருத்தடியேன் அங்கையின் மாமலர்கொண் டென்கண தல்லல்கெடக்
காத லுறத்தொழுவ தென்றுகொ லோவடியேன்கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
7.84.2
854நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை நற்பத மென்றுணர்வார் சொற்பத மார்சிவனைத்
தேனிடை இன்னமுதை மற்றத னிற்றெளிவைத்தேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனை
வானிடை மாமதியை மாசறு சோதியனைமாருத மும்மனலும் மண்டல மும்மாய
கானிடை மாநடனென் றெய்துவ தென்றுகொலோகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
7.84.3
855செற்றவர் முப்புரம்அன் றட்ட சிலைத்தொழிலார் சேவக முந்நினைவார் பாவக முந்நெறியுங்
குற்றமில் தன்னடியார் கூறும் இசைப்பரிசுங்கோசிக மும்மரையிற் கோவண மும்மதளும்
மற்றிகழ் திண்புயமும் மார்பிடை நீறுதுதைமாமலை மங்கையுமை சேர்சுவ டும்புகழக்
கற்றன வும்பரவிக் கைதொழல் என்றுகொலோகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
7.84.4
856கொல்லை விடைக்கழகுங் கோல நறுஞ்சடையிற் கொத்தல ரும்மிதழித் தொத்தும் அதனருகே
முல்லை படைத்தநகை மெல்லிய லாளொருபால் மோகம் மிகுத்திலங்குங் கூறுசெய் யெப்பரிசுந்
தில்லை நகர்ப்பொதுவுற் றாடிய சீர்நடமுந் திண்மழு வுங்கைமிசைக் கூரெரி யும்மடியார்
கல்ல வடப்பரிசுங் காணுவ தென்றுகொலோகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
7.84.5
857பண்ணு தலைப்பயனார் பாடலும் நீடுதலும்பங்கய மாதனையார் பத்தியும் முத்தியளித்
தெண்ணு தலைப்பெருமான் என்றெழு வாரவர்தம் ஏசற வும்மிறையாம் எந்தையை யும்விரவி
நண்ணு தலைப்படுமா றெங்ஙனம் என்றயலே நைகிற என்னைமதித் துய்யும்வண் ணமருளுங்
கண்ணு தலைக்கனியைக் காண்பதும் என்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
7.84.6
858மாவை உரித்ததள்கொண் டங்கம் அணிந்தவனைவஞ்சர் மனத்திறையும் நெஞ்சணு காதவனை
மூவர் உருத்தனதாம் மூல முதற்கருவைமூசிடு மால்விடையின் பாகனை ஆகமுறப்
பாவக மின்றிமெய்யே பற்று மவர்க்கமுதைப்பால்நறு நெய்தயிரைந் தாடு பரம்பரனைக்
காவல் எனக்கிறையென் றெய்துவ தென்றுகொலோகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
7.84.7
859தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ்
சுண்டத னுக்கிறவா தென்றும் இருந்தவனைஊழி படைத்தவனோ டொள்ளரி யும்முணரா
அண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும் ஆதியை மேதகுசீர் ஓதியை வானவர்தங்
கண்டனை அன்பொடுசென் றெய்துவ தென்றுகொலோகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
7.84.8
860நாதனை நாதமிகுத் தோசைய தானவனைஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரை
மாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும் பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
தூதனை என்றனையாள் தோழனை நாயகனைத்தாழ்மக ரக்குழையுந் தோடும் அணிந்ததிருக்
காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
7.84.9
861கன்னலை இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப்பேருறை காளையைஒண் சீருறை தண்டமிழால்
உன்னி மனத்தயரா உள்ளுரு கிப்பரவும் ஒண்பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன்
பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார்பத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழ
மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும்மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே.
7.84.10


இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே காளையார் கோயில்.
சுவாமிபெயர் – காளைநாதேசுவரர், தேவியார் – பொற்கொடியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.85 திருக்கூடலையாற்றூர் 
பண் – புறநீர்மை

திருச்சிற்றம்பலம்

862வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடுங்
கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில்
அடிகளிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
7.85.1
863வையகம் முழுதுண்ட மாலொடு நான்முகனும்
பையர விளவல்குற் பாவையொ டும்முடனே
கொய்யணி மலர்ச்சோலைக் கூடலை யாற்றூரில்
ஐயனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
7.85.2
864ஊர்தொறும் வெண்டலைகொண் டுண்பலி இடுமென்று
வார்தரு மென்முலையாள் மங்கையொ டும்முடனே
கூர்நுனை மழுவேந்திக் கூடலை யாற்றூரில்
ஆர்வனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
7.85.3
865சந்தண வும்புனலுந் தாங்கிய தாழ்சடையன்
பந்தண வும்விரலாள் பாவையொ டும்முடனே
கொந்தண வும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்
அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே.
7.85.4
866வேதியர் விண்ணவரும் மண்ணவ ருந்தொழநற்
சோதிய துருவாகிச் சுரிகுழல் உமையோடுங்
கோதிய வண்டறையுங் கூடலை யாற்றூரில்
ஆதியிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
7.85.5
867வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு
முத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடனே
கொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்
அத்தனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
7.85.6
868மழைநுழை மதியமொடு வாளர வஞ்சடைமேல்
இழைநுழை துகிலல்குல் ஏந்திழை யாளோடுங்
குழையணி திகழ்சோலைக் கூடலை யாற்றூரில்
அழகனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
7.85.7
869மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக்
குறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில்
அறவனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
7.85.8
870வேலையின் நஞ்சுண்டு விடையது தானேறிப்
பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே
கோலம துருவாகிக் கூடலை யாற்றூரில்
ஆலனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
7.85.9
871கூடலை யாற்றூரிற் கொடியிடை யவளோடும்
ஆடலு கந்தானை அதிசயம் இதுவென்று
நாடிய இன்றமிழால் நாவல வூரன்சொற்
பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே.
7.85.10


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நெறிகாட்டுநாயகர், தேவியார் – புரிகுழலாளம்மை.

இது திருப்புறம்பயமென்னுந் தலத்தினின்று மெழுந்தருளித் திருக்கூடலையாற்றூருக்குச் 
சமீபமாகச்செல்லுகின்றவர், அந்தத் தலத்துக்குள் செல்லாமல், திருமுதுகுன்றை 
நோக்கிச்செல்லுங் கருத்தினராக, அந்தமார்க்கத்தில் பரமசிவம் ஒரு பிராமணராய் 
நிற்கக்கண்டு ஐயரே திருமுதுகுன்றுக்கு மார்க்கமெதுவென்ன, இந்தக் கூடலையாற்றூர் 
மார்க்கமாச் செல்லுகின்றதென்று சொல்லி வழிகாட்டிப் பின்செல்ல, சுந்தரமூர்த்தி 
சுவாமிகள் முன்சென்று கூடலையாற்றூருக்குச் சமீபமாகச் சார்ந்தபோது 
பின்வந்த பிராமணர் மறையக்கண்டு அதிசயங்கொண்டு ஓதியபதிகம்.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.86 திருவன்பார்த்தான்பனங்காட்டூர் 
பண் – சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

872விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை
அடையில்அன் புடையானை யாவர்க்கும் அறியொண்ணா
மடையில்வா ளைகள்பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
சடையிற்கங்கை தரித்தானைச் சாராதார் சார்பென்னே.
7.86.1
873அறையும்பைங் கழலார்ப்ப அரவாட அனலேந்திப்
பிறையுங்கங் கையுஞ்சூடிப் பெயர்ந்தாடும் பெருமானார்
பறையுஞ்சங் கொலிஓவாப் படிறன்றன் பனங்காட்டூர்
உறையுமெங்கள் பிரானாரை உணராதார் உணர்வென்னே.
7.86.2
874தண்ணார்மா மதிசூடித் தழல்போலுந் திருமேனிக்
கெண்ணார்நாண் மலர்கொண்டங் கிசைந்தேத்தும் அடியார்கள்
பண்ணார்பா டல்அறாத படிறன்றன் பனங்காட்டூர்ப்
பெண்ணாணா யபிரானைப் பேசாதார் பேச்சென்னே.
7.86.3
875நெற்றிக்கண் ணுடையானை நீறேறுந் திருமேனிக்
குற்றமில் குணத்தானைக் கோணாதார் மனத்தானைப்
பற்றிப்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்ப்
பெற்றொன்றே றும்பிரானைப் பேசாதார் பேச்சென்னே.
7.86.4
876உரமென்னும் பொருளானை உருகிலுள் ளுறைவானைச்
சிரமென்னுங் கலனானைச் செங்கண்மால் விடையானை
வரம்முன்ன மருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
பரமன்எங் கள்பிரானைப் பரவாதார் பரவென்னே.
7.86.5
877எயிலார்பொக் கம்எரித்த எண்டோ ள்முக் கண்இறைவன்
வெயிலாய்க்காற் றெனவீசி மின்னாய்த்தீ எனநின்றான்
மயிலார்சோ லைகள்சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
பயில்வானுக் கடிமைக்கட் பயிலாதார் பயில்வென்னே.
7.86.6
878மெய்யன்வெண் பொடிபூசும் விகிர்தன்வே தமுதல்வன்
கையில்மான் மழுவேந்திக் காலன்கா லம்அறுத்தான்
பைகொள்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்
ஐயன்எங் கள்பிரானை அறியாதார் அறிவென்னே.
7.86.7
879வஞ்சமற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியைப்
பஞ்சிச்சீ றடியாளைப் பாகம்வைத் துகந்தானை
மஞ்சுற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத்தெங் கள்பிரானை நினையாதார் நினைவென்னே.
7.86.8
880மழையானுந் திகழ்கின்ற மலரோனென் றிருவர்தாம்
உழையாநின் றவருள்க உயர்வானத் துயர்வானைப்
பழையானைப் பனங்காட்டூர் பதியாகத் திகழ்கின்ற
குழைகாதற் கடிமைக்கட் குழையாதார் குழைவென்னே.
7.86.9
881பாரூரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானைச்
சீரூருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் அடித்தொண்டன் 
அடியன்சொல் அடிநாய்சொல்
ஊரூரன் உரைசெய்வார் உயர்வானத் துயர்வாரே.
7.86.10


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பனங்காட்டீசுவரர், தேவியார் – அமிர்தவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.87 திருப்பனையூர் 
பண் – சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

882மாடமாளிகை கோபுரத்தொடு மண்டபம்வள ரும்வளர்பொழில்
பாடல் வண்டறையும் பழனத் திருப்பனையூர்த்
தோடுபெய்தொரு காதினிற்குழை தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின்
றாடு மாறுவல்லார் அவரே அழகியரே.
7.87.1
883நாறுசெங்கழு நீர்மலர்நல்லமல்லிகை சண்பகத்தொடு
சேறுசெய் கழனிப் பழனத் திருப்பனையூர்
நீறுபூசிநெய் யாடிதன்னை நினைப்பவர்தம் மனத்தனாகிநின்
றாறு சூடவல்லார் அவரே அழகியரே.
7.87.2
884செங்கண்மேதிகள் சேடெறிந்து தடம்படிதலிற் சேலினத்தொடு
பைங்கண் வாளைகள் பாய்பழனத் திருப்பனையூர்த்
திங்கள்சூடிய செல்வனாரடி யார்தம்மேல்வினை தீர்ப்பராய்விடி
லங்கிருந் துறைவார் அவரே அழகியரே.
7.87.3
885வாளைபாய மலங்கிளங்கயல் வரிவராலுக ளுங்கழனியுள்
பாளையொண் கமுகம் புடைசூழ் திருப்பனையூர்த்
தோளுமாகமுந் தோன்றநட்டமிட் டாடுவாரடித் தொண்டர்தங்களை
ஆளு மாறுவல்லார் அவரே அழகியரே.
7.87.4
886கொங்கையார்பல ருங்குடைந் தாடநீர்க்குவ ளைமலர்தர
பங்கயம் மலரும் பழனத் திருப்பனையூர்
மங்கைபாகமும் மாலோர்பாகமுந் தாமுடையவர் மான்மழுவினோ
டங்கைத் தீயுகப்பார் அவரே அழகியரே.
7.87.5
887காவிரிபுடை சூழ்சோணாட்டவர் தாம்பரவிய கருணையங்கடலப்
பாவிரி புலவர் பயிலுந் திருப்பனையூர்
மாவிரிமட நோக்கிஅஞ்ச மதகரியுரி போர்த்துகந்தவர்
ஆவில்ஐந் துகப்பார் அவரே அழகியரே.
7.87.6
888மரங்கள்மேல்மயி லாலமண்டப மாடமாளிகை கோபுரத்தின்மேல்
திரங்கல்வன் முகவன் புகப்பாய் திருப்பனையூர்த்
துரங்கன்வாய்பிளந் தானுந்தூமலர்த் தோன்றலுமறி யாமற்றோன்றிநின்
றரங்கில் ஆடவல்லார் அவரே அழகியரே.
7.87.7
889மண்ணெலாம்முழ வம்மதிர்தர மாடமாளிகை கோபுரத்தின்மேற்
பண்ணி யாழ்முரலும் பழனத் திருப்பனையூர்
வெண்ணிலாச் சடைமேவியவிண்ணவரொடு மண்ணவர்தொழ
அண்ணலாகி நின்றார் அவரே அழகியரே.
7.87.8
890குரக்கினங்குதி கொள்ளத்தேனுகக் குண்டுதண்வயற் கெண்டைபாய்தரப்
பரக்குந் தண்கழனிப் பழனத் திருப்பனையூர்
இரக்கமில்லவர் ஐந்தொடைத்தலை தோளிருபது தாள்நெரிதர
அரக்கனை அடர்த்தார் அவரே அழகியரே.
7.87.9
891வஞ்சிநுண்ணிடை மங்கைபங்கினர் மாதவர்வள ரும்வளர்பொழில்
பஞ்சின் மெல்லடியார் பயிலுந் திருப்பனையூர்
வஞ்சியும்வளர் நாவலூரன் வனப்பகையவ ளப்பன்வன்றொண்டன்
செஞ்சொற் கேட்டுகப்பார் அவரே அழகியரே.
7.87.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சவுந்தரேசர், தேவியார் – பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.88 திருவீழிமிழலை 
பண் – சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

892நம்பினார்க்கருள் செய்யுமந்தணர் நான்மறைக்கிட மாயவேள்வியுள்
செம்பொ னேர்மடவாரணி பெற்ற திருமிழலை
உம்பரார்தொழு தேத்தமாமலை யாளொடும்முட னேஉறைவிடம்
அம்பொன் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
7.88.1
893விடங்கொள்மாமிடற் றீர்வெள்ளைச்சுருளொன் றிட்டுவிட்ட காதினீரென்று
திடங்கொள் சிந்தையினார் கலிகாக்குந் திருமிழலை
மடங்கல்பூண்டவி மானம்மண்மிசை வந்திழிச்சிய வானநாட்டையும்
அடங்கல் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
7.88.2
894ஊனைஉற்றுயிர் ஆயினீரொளி மூன்றுமாய்த்தெளி நீரோடானஞ்சின்
தேனை ஆட்டுகந்தீர் செழுமாடத் திருமிழலை
மானைமேவிய கையினீர்மழு வேந்தினீர்மங்கை பாகத்தீர்விண்ணில்
ஆன வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
7.88.3
895பந்தம்வீடிவை பண்ணினீர்படி றீர்மதிப்பிதிர்க் கண்ணியீரென்று
சிந்தை செய்திருக்குஞ் செங்கையாளர் திருமிழலை
வந்துநாடகம் வானநாடியர் ஆடமாலயன் ஏத்தநாடொறும்
அந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
7.88.4
896புரிசைமூன்றையும் பொன்றக்குன்றவில் லேந்திவேதப் புரவித்தேர்மிசைத்
திரிசெய் நான்மறையோர் சிறந்தேத்துந் திருமிழலைப்
பரிசினாலடி போற்றும்பத்தர்கள் பாடியாடப் பரிந்துநல்கினீர்
அரிய வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
7.88.5
897எறிந்தசண்டி இடந்தகண்ணப்பன் ஏத்துபத்தர்கட் கேற்றம்நல்கினீர்
செறிந்த பூம்பொழில் தேன்துளிவீசுந் திருமிழலை
நிறைந்தஅந்தணர் நித்தநாடொறும் நேசத்தாலுமைப் பூசிக்கும்மிடம்
அறிந்து வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
7.88.6
898பணிந்தபார்த்தன் பகீரதன்பல பத்தர்சித்தர்க்குப் பண்டுநல்கினீர்
திணிந்த மாடந்தொறுஞ் செல்வம்மல்கு திருமிழலை
தணிந்தஅந்தணர் சந்திநாடொறும் அந்திவானிடு பூச்சிறப்பவை
அணிந்து வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
7.88.7
899பரந்தபாரிடம் ஊரிடைப்பலி பற்றிப்பார்த்துணுஞ் சுற்றமாயினீர்
தெரிந்த நான்மறை யோர்க்கிடமாய திருமிழலை
இருந்துநீர்தமி ழோடிசைகேட்கும் இச்சையாற்காசு நித்தல்நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
7.88.8
900தூயநீரமு தாயவாறது சொல்லுகென்றுமைக் கேட்கச்சொல்லினீர்
தீயராக் குலையாளர் செழுமாடத் திருமிழலை
மேயநீர்பலி ஏற்றதென்னென்று விண்ணப்பஞ்செய் பவர்க்குமெய்ப்பொருள்
ஆய வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
7.88.9
901வேதவேதியர் வேதநீதியர் ஓதுவார்விரி நீர்மிழலையுள்
ஆதி வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுகென்று
நாதகீதம்வண் டோ துவார்பொழில் நாவலூரன்வன் றொண்டன்நற்றமிழ்
பாதம் ஓதவல்லார் பரனோடு கூடுவரே.
7.88.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.89 திருவெண்பாக்கம் 
பண் – சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

902பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்காற்
பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா கோயிலுளா யேயென்ன
உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே.
7.89.1
903இடையறியேன் தலையறியேன் எம்பெருமான் சரணமென்பேன்
அடையுடையன் நம்மடியான் என்றவற்றைப் பாராதே
விடையுடையான் விடநாகன் வெண்ணீற்றன் புலியின்றோல்
உடையுடையான் எனையுடையான் உளோம்போகீர் என்றானே.
7.89.2
904செய்வினையொன் றறியாதேன் திருவடியே சரணென்று
பொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திடநீ வேண்டாவோ
பையரவா இங்கிருந்தா யோவென்னப் பரிந்தென்னை
உய்யஅருள் செய்யவல்லான் உளோம்போகீர் என்றானே.
7.89.3
905கம்பமருங் கரியுரியன் கறைமிடற்றன் காபாலி
செம்பவளத் திருவுருவன் சேயிழையோ டுடனாகி
நம்பியிங்கே இருந்தீரே என்றுநான் கேட்டலுமே
உம்பர்தனித் துணையெனக்கு உளோம்போகீர் என்றானே.
7.89.4
906பொன்னிலங்கு நறுங்கொன்றை புரிசடைமேற் பொலிந்திலங்க
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகமா எருதேறித்
துன்னியிரு பால்அடியார் தொழுதேத்த அடியேனும்
உன்னதமாய்க் கேட்டலுமே உளோம்போகீர் என்றானே.
7.89.5
907கண்ணுதலாற் காமனையுங் காய்ந்ததிறற் கங்கைமலர்
தெண்ணிலவு செஞ்சடைமேல் தீமலர்ந்த கொன்றையினான்
கண்மணியை மறைப்பித்தாய் இங்கிருந்தா யோவென்ன
ஒண்ணுதலி பெருமானார் உளோம்போகீர் என்றானே.
7.89.6
908பார்நிலவு மறையோரும் பத்தர்களும் பணிசெய்யத்
தார்நிலவு நறுங்கொன்றைச் சடையனார் தாங்கரிய
கார்நிலவு மணிமிடற்றீர் இங்கிருந்தீ ரேயென்ன
ஊரரவம் அரைக்கசைத்தான் உளோம்போகீர் என்றானே.
7.89.7
909வாரிடங்கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள் பலசூழப் பயின்றாடும் பரமேட்டி
காரிடங்கொள் கண்டத்தன் கருதுமிடந் திருஒற்றி
யூரிடங்கொண் டிருந்தபிரான் உளோம்போகீர் என்றானே.
7.89.8
910பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க்கீ ழிருவென்று
சொன்னஎனைக் காணாமே சூளறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோவென்ன
ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம்போகீர் என்றானே.
7.89.9
911மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாந்
தோன்றஅருள் செய்தளித்தாய் என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோவென்ன
ஊன்றுவதோர் கோலருளி உளோம்போகீர் என்றானே.
7.89.10
912ஏராரும் பொழில்நிலவு வெண்பாக்கம் இடங்கொண்ட
காராறும் மிடாற்றானைக் காதலித்திட் டன்பினொடுஞ்
சீராருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் தமிழ்வல்லார்க் கடையாவல் வினைதானே.
7.89.11


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது.
சுவாமிபெயர் – வெண்பாக்கத்தீசுவரர், தேவியார் – கனிவாய்மொழியம்மை.

இது திருவொற்றியூரில் சங்கிலிநாச்சியாருக்குக் கூறிய சபதத்தை 
மறந்து திருவாரூருக்குச் செல்லுங்கருத்தினால், திருவொற்றியூரெல்லையைக் 
கடந்த அளவில் பார்வைமறைய அவ்வண்ணமேயெழுந்தருளி
வெண்பாக்கத்திற்சென்று ஆலயத்துக்குளடைந்து தரிசித்துக் 
கோயிலிலிருக்கின்றீரோவென்ன, பரமசிவம் ஊன்றுகோலொன்றருளிச்செய்து 
நாம் கோயிலுலிருக்கிறோம் நீர் போமென்று அருளிச்செய்தபோது ஓதிய பதிகம்.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.90 கோயில் 
பண் – குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

913மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழும் நாளுந்
தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடுங் கரதலத்திற் றமருகமும் எரிஅகலுங் கரியபாம்பும்
பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
7.90.1
914பேராது காமத்திற் சென்றார்போல் அன்றியே பிரியா துள்கிச்
சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன் னடிவீழுந் திருவி னாரை
ஓராது தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
7.90.2
915நரியார்தங் கள்ளத்தாற் பக்கான பரிசொழிந்து நாளும் உள்கிப்
பிரியாத அன்பராய்ச் சென்றுமுன் அடிவீழுஞ் சிந்தை யாரைத்
தரியாது தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
7.90.3
916கருமையார் தருமனார் தமர்நம்மைக் கட்டியகட் டறுப்பிப் பானை
அருமையாந் தன்னுலகந் தருவானை மண்ணுலகங் காவல் பூண்ட
உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும்
பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
7.90.4
917கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல் வெண்மதியக் கண்ணி யானை
உருமன்ன கூற்றத்தை உருண்டோ ட உதைத்துகந் துலவா இன்பம்
தருவானைத் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
7.90.5
918உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய் ஊன்கண் ஓட்டம்
எத்தாலுங் குறைவில்லை என்பர்காண் நெஞ்சமே நம்மை நாளும்
பைத்தாடும் அரவினன் படர்சடையன் பரஞ்சோதி பாவந் தீர்க்கும்
பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
7.90.6
919முட்டாத முச்சந்தி மூவா யிரவர்க்கு மூர்த்தி என்னப்
பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார் பாவமும் வினையும் போக
விட்டானை மலையெடுத்த இராவணனைத் தலைபத்தும் நெரியக் காலால்
தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
7.90.7
920கற்றானுங் குழையுமா றன்றியே கருதுமா கருத கிற்றார்க்
கெற்றாலுங் குறைவில்லை என்பர்காண் உள்ளமே நம்மைநாளுஞ்
செற்றாட்டித் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
பெற்றேறிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
7.90.8
921நாடுடைய நாதன்பால் நன்றென்றுஞ் செய்மனமே நம்மை நாளுந்
தாடுடைய தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
மோடுடைய சமணர்க்கும் முடையுடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த
பீடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
7.90.9
922பாரூரும் அரவல்குல் உமைநங்கை யவள்பங்கன் பைங்கண் ஏற்றன்
ஊரூரன் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றா மன்றே.
7.90.10


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.91 திருவொற்றியூர் 
பண் – குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

923பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே
ஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே.
7.91.1
924பந்துங் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல்
உந்துந் திரைவாய் ஒற்றி யூரே.
7.91.2
925பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்
தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல்
உகளுந் திரைவாய் ஒற்றி யூரே.
7.91.3
926என்ன தெழிலும் நிறையுங் கவர்வான்
புன்னை மலரும் புறவிற் றிகழுந்
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்
உன்னப் படுவான் ஒற்றி யூரே.
7.91.4
927பணங்கொள் அரவம் பற்றிப் பரமன்
கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி
வணங்கும் இடைமென் மடவார் இட்ட
உணங்கல் கவர்வான் ஒற்றி யூரே.
7.91.5
928படையார் மழுவன் பால்வெண் ணீற்றன்
விடையார் கொடியன் வேத நாவன்
அடையார் வினைகள் அறுப்பான் என்னை
உடையான் உறையும் ஒற்றி யூரே.
7.91.6
929சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன் வினையை வீட்ட
நன்று நல்ல நாதன் நரையே
றொன்றை உடையான் ஒற்றி யூரே.
7.91.7
930கலவ மயில்போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப் படியான்
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
உலவுந் திரைவாய் ஒற்றி யூரே.
7.91.8
931பற்றி வரையை எடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே.
7.91.9
932ஒற்றி யூரும் அரவும் பிறையும்
பற்றி யூரும் பவளச் சடையான்
ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாடக் கழியும் வினையே.
7.91.10


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.92 திருப்புக்கொளியூர் அவிநாசி 
பண் – குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

933எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே
உற்றாயென் றுன்னையே உள்குகின் றேனுணர்ந் துள்ளத்தாற்
புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.
7.92.1
934வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ
ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே
பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணியெ னைக்கிறி செய்ததே.
7.92.2
935எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்காற்
கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பாரிலை
பொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியே
எங்கோ னேயுனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே.
7.92.3
936உரைப்பார் உரையுகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
7.92.4
937அரங்காவ தெல்லா மாயிடு காடது வன்றியுஞ்
சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப்
புரங்கோட எய்தாய் புக்கொளி யூரவி நாசியே
குரங்காடு சோலைக் கோயில்கொண் டகுழைக் காதனே.
7.92.5
938நாத்தா னும்உனைப் பாடலன் றிநவி லாதெனாச்
சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளி யூரவி நாசியே
கூத்தா உனக்குநான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே.
7.92.6
939மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறஞ்
சந்திகள் தோறுஞ் சலபுட்பம் இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளி யூரவி நாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே.
7.92.7
940பேணா தொழிந்தேன் உன்னைய லாற்பிற தேவரைக்
காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளி யூரவி நாசியே
காணாத கண்கள் காட்டவல் லகறைக் கண்டனே.
7.92.8
941நள்ளாறு தெள்ளா றரத்துறை வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே.
7.92.9
942நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி யூரவி நாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே.
7.92.10


இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அவிநாசியப்பர், தேவியார் – பெருங்கருணைநாயகி.

இது முதலையுண்டபிள்ளையை அழைப்பித்தபதிகம்.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.93 திருநறையூர்ச்சித்தீச்சரம் 
பண் – குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

943நீரும் மலரும் நிலவுஞ் சடைமேல்
ஊரும் அரவம் உடையான் இடமாம்
வாரும் அருவி மணிபொன் கொழித்துச்
சேரும் நரையூர்ச் சித்தீச் சரமே.
7.93.1
944அளைப்பை அரவேர் இடையாள் அஞ்சத்
துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம்
வளைக்கை மடவார் மடுவிற் றடநீர்த்
திளைக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே.
7.93.2
945இகழுந் தகையோர் எயில்மூன் றெரித்த
பகழி யொடுவில் லுடையான் பதிதான்
முகிழ்மென் முலையார் முகமே கமலந்
திகழும் நறையூர்ச் சித்தீச் சரமே.
7.93.3
946மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம்
நறக்கொள் கமலம் நனிபள் ளியெழத்
திறக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே.
7.93.4
947முழுநீ றணிமே னியன்மொய் குழலார்
எழுநீர் மைகொள்வான் அமரும் இடமாம்
கழுநீர் கமழக் கயல்சேல் உகளுஞ்
செழுநீர் நறையூர்ச் சித்தீச் சரமே.
7.93.5
948ஊனா ருடைவெண் டலையுண் பலிகொண்
டானார் அடலே றமர்வான் இடமாம்
வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த்
தேனார் நறையூர்ச் சித்தீச் சரமே.
7.93.6
949காரூர் கடலில் விடமுண் டருள்செய்
நீரூர் சடையன் நிலவும் இடமாம்
வாரூர் முலையார் மருவும் மறுகில்
தேரூர் நறையூர்ச் சித்தீச் சரமே.
7.93.7
950கரியின் உரியுங் கலைமான் மறியும்
எரியும் மழுவும் உடையான் இடமாம்
புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள்
தெரியும் நறையூர்ச் சித்தீச் சரமே.
7.93.8
951பேணா முனிவன் பெருவேள் வியெலாம்
மாணா மைசெய்தான் மருவும் இடமாம்
பாணார் குழலும் முழவும் விழவிற்
சேணார் நறையூர்ச் சித்தீச் சரமே.
7.93.9
952குறியில் வழுவாக் கொடுங்கூற் றுதைத்த
எறியும் மழுவாட் படையான் இடமாம்
நெறியில் வழுவா நியமத் தவர்கள்
செறியும் நறையூர்ச் சித்தீச் சரமே.
7.93.10
953போரார் புரமெய் புனிதன் அமருஞ்
சீரார் நறையூர்ச் சித்தீச் சரத்தை
ஆரூ ரன்சொல் லிவைவல் லவர்கள்
ஏரார் இமையோர் உலகெய் துவரே.
7.93.11


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.94 திருச்சோற்றுத்துறை 
பண் – கௌசிகம்

திருச்சிற்றம்பலம்

954அழல்நீர் ஒழுகி யனைய சடையும்
உழையீ ருரியும் உடையான் இடமாம்
கழைநீர் முத்துங் கனகக் குவையுஞ்
சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே.
7.94.1
955பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன் அமலன் இடமாம்
இண்டை கொண்டன் பிடைய றாத
தொண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே.
7.94.2
956கோல அரவுங் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியுஞ்
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே.
7.94.3
957பளிக்குத் தாரை பவள வெற்பிற்
குளிக்கும் போல்நூற் கோமாற் கிடமாம்
அளிக்கும் ஆத்தி அல்லான் மதுவந்
துளிக்குஞ் சோலைச் சோற்றுத் துறையே.
7.94.4
958உதையுங் கூற்றுக் கொல்கா விதிக்கு
வதையுஞ் செய்த மைந்தன் இடமாம்
திதையுந் தாதுந் தேனுஞ் ஞிமிறுந்
துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே.
7.94.5
959ஓதக் கடல்நஞ் சினையுண் டிட்ட
பேதைப் பெருமான் பேணும் பதியாம்
சீதப் புனலுண் டெரியைக் காலுஞ்
சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே.
7.94.6
960இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப்
புறங்காட் டாடும் புனிதன் கோயில்
சிறந்தார் சுற்றந் திருவென் றின்ன
துறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே.
7.94.7
961காமன் பொடியாக் கண்ணொன் றிமைத்த
ஓமக் கடலார் உகந்த இடமாம்
தேமென் குழலார் சேக்கை புகைத்த
தூமம் விசும்பார் சோற்றுத் துறையே.
7.94.8
962இலையால் அன்பால் ஏத்து மவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்
தலையாற் றாழுந் தவத்தோர்க் கென்றுந்
தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே.
7.94.9
963சுற்றார் தருநீர்ச் சோற்றுத் துறையுள்
முற்றா மதிசேர் முதல்வன் பாதத்
தற்றார் அடியார் அடிநாய் ஊரன்
சொற்றான் இவைகற் றார்துன் பிலரே.
7.94.10


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.95 திருவாரூர் 
பண் – செந்துருத்தி

திருச்சிற்றம்பலம்

964மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளா யிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே.
7.95.1
965விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்ற மொன்றுஞ் செய்த தில்லை *கொத்தை ஆக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே. 
*விச்சை – வித்தையென்பதுபோல் கொச்சை – கொத்தை எனநின்றது.
7.95.2
966அன்றில் முட்டா தடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி யவைபோல
என்றும் முட்டாப் பாடும் அடியார் தங்கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே.
7.95.3
967துருத்தி உறைவீர் பழனம் பதியாச் சோற்றுத் துறையாள்வீர்
இருக்கை திருவா ரூரே உடையீர் மனமே எனவேண்டா
அருத்தி யுடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்து போதீரே.
7.95.4
968செந்தண் பவளந் திகழுஞ் சோலை இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே ஆமா றுமக்காட் பட்டோ ர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார் தங்கண் காணாது
வந்தெம் பெருமான் முறையோ வென்றால் வாழ்ந்து போதீரே.
7.95.5
969தினைத்தா ளன்ன செங்கால் நாரை சேருந் திருவாரூர்ப்
புனைத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப் புரிபுன் சடையீரே
தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து தங்கண் காணாது
மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்து போதீரே.
7.95.6
970ஆயம் பேடை அடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே
ஏயெம் பெருமான் இதுவே ஆமா றுமக்காட் பட்டோ ர்க்கு
மாயங் காட்டிப் பிறவி காட்டி மறவா மனங்காட்டிக்
காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால் வாழ்ந்து போதீரே.
7.95.7
971கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க் கலந்த சொல்லாகி
இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை இகழா தேத்துவோம்
பழிதா னாவ தறியீர் அடிகேள் பாடும் பத்தரோம்
வழிதான் காணா தலமந் திருந்தால் வாழ்ந்து போதீரே.
7.95.8
972பேயோ டேனும் பிரிவொன் றின்னா தென்பர் பிறரெல்லாங்
காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்காட் பட்டோ ர்க்கு
வாய்தான் திறவீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே.
7.95.9
973செருந்தி செம்பொன் மலருஞ் சோலை இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூ லத்தா னம்மே இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை இகழா தேத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால் வாழ்ந்து போதிரே.
7.95.10
974காரூர் கண்டத் தெண்டோ ள் முக்கண் கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூ லத்தா னத்தே அடிப்பே ராரூரன்
பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
வாரூர் முலையாள் பாகங் கொண்டீர் வாழ்ந்து போதீரே.
7.95.11


காஞ்சீபுரத்தில் ஆலந்தானெனும் பதிகமோதி ஒருகண்பெற்று, 
இந்தத்தலத்தில் இந்தப்பதிகமோதி மற்றொரு கண்ணும் பெற்றது.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.96 திருவாரூர்ப்பரவையுண்மண்டளி 
பண் – பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

975தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள்
காவாயே கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்
காவாவென் பரவையுண் மண்டளி யம்மானே.
7.96.1
976பொன்னானே புலவர்க்கு நின்புகழ் போற்றலாம்
தன்னானே தன்னைப் புகழ்ந்திடுந் தற்சோதி
மின்னானே செக்கர் வானத் திளஞாயி
றன்னானே பரவையுண் மண்டளி யம்மானே.
7.96.2
977நாமாறா துன்னையே நல்லன சொல்லுவார்
போமாறென் புண்ணியா புண்ணியம் ஆனானே
பேய்மாறாப் பிணமிடு காடுகந் தாடுவாய்க்
காமாறென் பரவையுண் மண்டளி யம்மானே.
7.96.3
978நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமைக்
காக்கின்றாய் கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
வாக்கென்னும் மாலைகொண் டுன்னை என்மனத்
தார்க்கின்றேன் பரவையுண் மண்டளி யம்மானே.
7.96.4
979பஞ்சேரும் மெல்லடி யாளையோர் பாகமாய்
நஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானே
நெஞ்சேர நின்னையே உள்கி நினைவாரை
அஞ்சேலென் பரவையுண் மண்டளி யம்மானே.
7.96.5
980அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும்
பெம்மானே பேரரு ளாளன் பிடவூரன்
தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்
அம்மானே பரவையுண் மண்டளி யம்மானே.
7.96.6
981விண்டானே மேலையார் மேலையார் மேலாய
எண்டானே எழுத்தொடு சொற்பொருள் எல்லாமுன்
கண்டானே கண்டனைக் கொண்டிட்டுக் காட்டாயே
அண்டானே பரவையுண் மண்டளி யம்மானே.
7.96.7
982காற்றானே கார்முகில் போல்வதோர் கண்டத்தெங்
கூற்றானே கோல்வளை யாளையோர் பாகமாய்
நீற்றானே நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்
ஆற்றானே பரவையுண் மண்டளி யம்மானே.
7.96.8
983செடியேன்நான் செய்வினை நல்லன செய்யாத
கடியேன்நான் கண்டதே கண்டதே காமுறுங்
கொடியேன்நான் கூறுமா றுன்பணி கூறாத
அடியேன்நான் பரவையுண் மண்டளி யம்மானே.
7.96.9
984கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி யம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே.
7.96.10


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.97 திருநனிபள்ளி 
பண் – பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

985ஆதியன் ஆதிரை யன்அயன் மால்அறி தற்கரிய
சோதியன் சொற்பொரு ளாய்ச்சுருங் காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர்தங் கோனுல கத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
7.97.1
986உறவிலி ஊன மிலிஉண ரார்புரம் மூன்றெரியச்
செறுவிலி தன்னினை வார்வினை யாயின தேய்ந்தழிய
அறவில கும்மரு ளான்மரு ளார்பொழில் வண்டறையும்
நறவிரி கொன்றையி னான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
7.97.2
987வானுடை யான்பெரி யான்மனத் தாலும்நினைப் பரியான்
ஆனிடை ஐந்தமர்ந் தான்அணு வாகியோர் தீயுருக்கொண்
டூனுடை இவ்வுட லம்ஒடுங் கிப்புகுந் தான்பரந்தான்
நானுடை மாடெம் பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
7.97.3
988ஓடுடை யன்கல னாவுடை கோவண வன்உமையோர்
பாடுடை யன்பலி தேர்ந்துண்ணும் பண்புடை யன்பயிலக்
காடுடை யன்னிட மாமலை ஏழுங் கருங்கடல்சூழ்
நாடுடை நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
7.97.4
989பண்ணற் கரிய தொருபடை ஆழி தனைப்படைத்துக்
கண்ணற் கருள்புரிந் தான்கரு தாதவர் வேள்விஅவி
உண்ணற் கிமையவ ரையுருண் டோ ட உதைத்துகந்து
நண்ணற் கரிய பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
7.97.5
990மல்கிய செஞ்சடை மேல்மதி யும்மர வும்முடனே
புல்கிய ஆரணன் எம்புனி தன்புரி நூல்விகிர்தன்
மெல்கிய விற்றொழி லான்விருப் பன்பெரும் பார்த்தனுக்கு
நல்கிய நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
7.97.6
991அங்கமோ ராறவை யும்அரு மாமறை வேள்விகளும்
எங்கும் இருந்தந் தணர்எரி மூன்றவை ஓம்புமிடம்
பங்கய மாமுகத் தாளுமை பங்கன் உறைகோயில்
செங்கயல் பாயும் வயற்றிரு ஊர்நனி பள்ளியதே.
7.97.7
992திங்கட் குறுந்தெரி யற்றிகழ் கண்ணியன் நுண்ணியனாய்
நங்கட் பிணிகளை வான்அரு மாமருந் தேழ்பிறப்பும்
மங்கத் திருவிர லால்அடர்த் தான்வல் லரக்கனையும்
நங்கட் கருளும் பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
7.97.8
993ஏன மருப்பினொ டும்மெழில் ஆமையும் பூண்டுகந்து
வான மதிளர ணம்மலை யேசிலை யாவளைத்தான்
ஊனமில் காழிதன் னுள்ளுயர் ஞானசம் பந்தற்கன்று
ஞானம் அருள்புரிந் தான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
7.97.9
994காலமும் நாழிகை யுந்நனி பள்ளி மனத்தினுள்கி
கோலம தாயவ னைக்குளிர் நாவல ஊரன்சொன்ன
மாலை மதித்துரைப் பார்மண் மறந்துவா னோருலகிற்
சாலநல் லின்பமெய் தித்தவ லோகத் திருப்பவரே.
7.97.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நற்றுணையப்பர், தேவியார் – பர்வதராசபுத்திரி.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.98 திருநன்னிலத்துப்பெருங்கோயில் 
பண் – பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

995தண்ணியல் வெம்மையி னான்றலை யிற்கடை தோறும்பலி
பண்ணியல் மென்மொழி யார்இடக் கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறை யோர்முறை யாலடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7.98.1
996வலங்கிளர் மாதவஞ் செய்மலை மங்கையோர் பங்கினனாய்ச்
சலங்கிளர் கங்கைதங் கச்சடை யொன்றிடை யேதரித்தான்
பலங்கிளர் பைம்பொழில் தண்பனி வெண்மதி யைத்தடவ
நலங்கிளர் நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7.98.2
997கச்சிய னின்கருப் பூர்விருப் பன்கரு திக்கசிவார்
உச்சியன் பிச்சையுண் ணியுல கங்களெல் லாமுடையான்
நொச்சியம் பச்சிலை யான்நுரை தீர்புன லாற்றொழுவார்
நச்சிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7.98.3
998பாடிய நான்மறை யான்படு பல்பிணக் காடரங்கா
ஆடிய மாநடத் தானடி போற்றியென் றன்பினராய்ச்
சூடிய செங்கையி னார்பல தோத்திரம் வாய்த்தசொல்லி
நாடிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7.98.4
999பிலந்தரு வாயினொ டுபெரி தும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம் இருபிள வாக்கிய சக்கரமுன்
நிலந்தரு மாமகள் கோன்நெடு மாற்கருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7.98.5
1000வெண்பொடி மேனியி னான்கரு நீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடை யான்பிர மன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறை யோர்பயின் றேத்திப்பல் கால்வணங்கும்
நண்புடை நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7.98.6
1001தொடைமலி கொன்றைதுன் றுஞ்சடை யன்சுடர் வெண்மழுவாட்
படைமலி கையன்மெய் யிற்பகட் டீருரிப் போர்வையினான்
மடைமலி வண்கம லம்மலர் மேல்மட வன்னம்மன்னி
நடைமலி நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7.98.7
1002குளிர்தரு திங்கள்கங் கைகுர வோடரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடை மேலுடை யான்விடை யான்விரைசேர்
தளிர்தரு கோங்குவேங் கைதட மாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7.98.8
1003கமர்பயில் வெஞ்சுரத் துக்கடுங் கேழற்பின் கானவனாய்
அமர்பயில் வெய்திய ருச்சுன னுக்கருள் செய்தபிரான்
தமர்பயில் தண்விழ வில்தகு சைவர் தவத்தின்மிக்க
நமர்பயில் நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7.98.9
1004கருவரை போலரக் கன்கயி லைம்மலைக் கீழ்க்கதற
ஒருவிர லாலடர்த் தின்னருள் செய்த உமாபதிதான்
திரைபொரு பொன்னிநன் னீர்த்துறை வன்றிகழ் செம்பியர்கோன்
நரபதி நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
7.98.10
1005கோடுயர் வெங்களிற் றுத்திகழ் கோச்செங்க ணான்செய்கோயில்
நாடிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனைச்
சேடியல் சிங்கிதந் தைசடை யன்றிரு வாரூரன்
பாடிய பத்தும்வல் லார்புகு வார்பர லோகத்துள்ளே.
7.98.11


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.99 திருநாகேச்சரம் 
பண் – பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

1006பிறையணி வாணு தலாள்உமை யாளவள் பேழ்கணிக்க
நிறையணி நெஞ்சனுங் கநீல மால்விடம் உண்டதென்னே
குறையணி குல்லைமுல் லைஅளைந் துகுளிர் மாதவிமேற்
சிறையணி வண்டுகள் சேர்திரு நாகேச் சரத்தானே.
7.99.1
1007அருந்தவ மாமுனி வர்க்கரு ளாகியோர் ஆலதன்கீழ்
இருந்தற மேபுரி தற்கியல் பாகிய தென்னைகொலாங்
குருந்தய லேகுர வம்மர வின்னெயி றேற்றரும்பச்
செருந்திசெம் பொன்மல ருந்திரு நாகேச் சரத்தானே.
7.99.2
1008பாலன தாருயிர் மேற்பரி யாது பகைத்தெழுந்த
காலனை வீடுவித் துக்கருத் தாக்கிய தென்னைகொலாங்
கோல மலர்க்குவ ளைக்கழு நீர்வயல் சூழ்கிடங்கிற்
சேலொடு வாளைகள் பாய்திரு நாகேச் சரத்தானே.
7.99.3
1009குன்ற மலைக்கும ரிகொடி யேரிடை யாள்வெருவ
வென்றி மதகரி யின்னுரி போர்த்தது மென்னைகொலாம்
முன்றில் இளங்கமு கின்முது பாளை மதுவளைந்து
தென்றல் புகுந்துல வுந்திரு நாகேச் சரத்தானே.
7.99.4
1010அரைவிரி கோவணத் தோடர வார்த்தொரு நான்மறைநூல்
உரைபெரு கவ்வுரைத் தன்று உகந்தருள் செய்ததென்னே
வரைதரு மாமணி யும்வரைச் சந்தகி லோடுமுந்தித்
திரைபொரு தண்பழ னத்திரு நாகேச் சரத்தானே.
7.99.5
1011தங்கிய மாதவத் தின்றழல் வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலி யுஞ்செழு மால்கரி யோடலறப்
பொங்கிய போர்புரிந் துபிளந் தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழ னித்திரு நாகேச் சரத்தானே.
7.99.6
1012நின்றவிம் மாதவத் தையொழிப் பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணை வேள்பொடி யாக விழித்தலென்னே
பங்கய மாமலர் மேன்மது வுண்டுவண் தேன்முரலச்
செங்கயல் பாய்வயல் சூழ்திரு நாகேச் சரத்தானே.
7.99.7
1013வரியர நாண தாகமா மேரு வில்லதாக
அரியன முப்புரங் கள்ளவை யாரழ லூட்டலென்னே
விரிதரு மல்லிகை யும்மலர்ச் சண்பக மும்மளைந்து
திரிதரு வண்டுபண் செய்திரு நாகேச் சரத்தானே.
7.99.8
1014அங்கியல் யோகுதன் னையழிப் பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணை வேள்பொடி யாக விழித்தலென்னே
பங்கய மாமலர் மேல்மது வுண்டுபண் வண்டறையச்
செங்கயல் நின்றுக ளுந்திரு நாகேச் சரத்தானே.
7.99.9
1015குண்டரைக் கூறையின் றித்திரி யுஞ்சமண் சாக்கியப்பேய்
மிண்டரைக் கண்டதன் மைவிர வாகிய தென்னைகொலோ
தொண்டிரைத் துவணங் கித்தொழில் பூண்டடி யார்பரவுந்
தெண்டிரைத் தண்வயல் சூழ்திரு நாகேச் சரத்தானே.
7.99.10
1016கொங்கணை வண்டரற் றக்குயி லும்மயி லும்பயிலுந்
தெங்கணை பூம்பொழில் சூழ்திரு நாகேச் சரத்தானை
வங்கம் மலிகடல் சூழ்வயல் நாவலா ரூரன்சொன்ன
பங்கமில் பாடல்வல் லாரவர் தம்வினை பற்றறுமே.
7.99.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – செண்பகாரணியேசுவரர்,
தேவியார் – குன்றமுலையம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.100 திருநொடித்தான்மலை 
பண் – பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

1017தானெனை முன்படைத் தானத றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்து
வானெனை வந்தெதிர் கொள்ளமத் தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே.
7.100.1
1018ஆனை உரித்த பகைஅடி யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட் டிஒள்ளி யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தம ரர்வலஞ் செய்தெனை ஏறவைக்க
ஆனை அருள்புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே.
7.100.2
1019மந்திரம் ஒன்றறி யேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந் தொண்டனெனை
அந்தர மால்விசும் பில்அழ கானை அருள்புரிந்த
துந்தர மோநெஞ்ச மேநொடித் தான்மலை உத்தமனே.
7.100.3
1020வாழ்வை உகந்தநெஞ் சேமட வார்தங்கள் வல்வினைப்பட்
டாழ முகந்தவென் னைஅது மாற்றி அமரரெல்லாஞ்
சூழ அருள்புரிந் துதொண்ட னேன்பரம் அல்லதொரு
வேழம் அருள்புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே.
7.100.4
1021மண்ணுல கிற்பிறந் துநும்மை வாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறு தல்தொண்ட னேனின்று கண்டொழிந்தேன்
விண்ணுல கத்தவர் கள்விரும் பவெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித் தான்நொடித் தான்மலை உத்தமனே.
7.100.5
1022அஞ்சினை ஒன்றிநின் றுஅலர் கொண்டடி சேர்வறியா
வஞ்சனை யென்மன மேவைகி வானநன் னாடர்முன்னே
துஞ்சுதல் மாற்றுவித் துத்தொண்ட னேன்பர மல்லதொரு
வெஞ்சின ஆனைதந் தான்நொடித் தான்மலை உத்தமனே.
7.100.6
1023நிலைகெட விண்ணதி ரநில மெங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானையே றிவழி யேவரு வேன்எதிரே
அலைகட லால்அரை யன்அலர் கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண் ணம்நொடித் தான்மலை உத்தமனே.
7.100.7
1024அரவொலி ஆகமங் கள்அறி வாரறி தோத்திரங்கள்
விரவிய வேதஒ லிவிண்ணெ லாம்வந் தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந் துவழி தந்தெனக் கேறுவதோர்
சிரமலி யானைதந் தான்நொடித் தான்மலை உத்தமேனே.
7.100.8
1025இந்திரன் மால்பிர மன்னெழி லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த யானை அருள்புரிந்து
மந்திர மாமுனி வர்இவ னாரென எம்பெருமன்
நந்தமர் ஊரனென் றான்நொடித் தான்மலை உத்தமனே.
7.100.9
1026ஊழிதோ றூழிமுற் றுமுயர் பொன்னொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும் பின்சுவை நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமி ழால்இசைந் தேத்திய பத்தினையும்
ஆழி கடலரை யாஅஞ்சை யப்பர்க் கறிவிப்பதே. 
* நொடித்தான்மலையென்பது – கயிலைமலை.
7.100.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

சுந்தரமூர்த்திசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
ஏழாம் திருமுறை முற்றும்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.