சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

ஏழாம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

7.01 திருவெண்ணெய்நல்லூர்

பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம்

001பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
7.1.01
002நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
7.1.02
003மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அன்னேஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
7.1.03
004முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அடிகேளுனக் காளாயினி அல்லேன்என லாமே.
7.1.04
005பாதம்பணி வார்கள்பெறும் பண்டமது பணியாய்
ஆதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆதீஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
7.1.05
006தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ
எண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
7.1.06
007ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய்
வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆனாயுனக் காளாயினி அல்லேன்என லாமே.
7.1.07
008ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர்
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்என லாமே.
7.1.08
009மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா
தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அழகாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
7.1.09
010காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையாற்
பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆரூரனெம் பெருமாற்காள் அல்லேன்என லாமே.
7.1.10


திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – தடுத்தாட்கொண்டவீசுவரர்,
தேவியார் – வேற்கண்மங்கையம்மை.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.2 திருப்பரங்குன்றம்
பண் – இந்தளம்

திருச்சிற்றம்பலம்

011கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண் டீருமைக்கொண்டுழல் கின்றதோர் கொல்லைச் சில்லைச்
சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியுஞ்சில்பூத மும்நீ ருந்திசை திசையன
சோத்திட்டு விண்ணோர் பலருந் தொழநும்அரைக்கோ வணத்தோ டொருதோல் புடைசூழ்ந்
தார்த்திட்ட தும்பாம்பு கைக்கொண்ட தும்பாம்படிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.01
012முண்டந் தரித்தீர் முதுகா டுறைவீர்முழுநீறு மெய்பூசு திர்மூக்கப் பாம்பைக்
கண்டத்தி லுந்தோளி லுங்கட்டி வைத்தீர்கடலைக் கடைந்திட்ட தோர்நஞ்சை உண்டீர்
பிண்டஞ் சுமந்தும் மொடுங்கூட மாட்டோ ம்பெரியா ரொடுநட் பினிதென் றிருத்தும்
அண்டங் கடந்தப் புறத்தும் இருந்தீர்அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.02
013மூடாய முயலகன் மூக்கப் பாம்புமுடைநா றியவெண் டலைமொய்த்த பல்பேய்
பாடா வருபூதங் கள்பாய் புலித்தோல்பரிசொன் றறியா தனபா ரிடங்கள்
தோடார் மலர்க்கொன்றை யுந்துன் னெருக்குந்துணைமா மணிநா கம்அரைக் கசைத்தொன்
றாடா தனவேசெய் தீர்எம் பெருமான்அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.03
014மஞ்சுண்ட மாலை மதிசூடு சென்னிமலையான் மடந்தை மணவாள நம்பி
பஞ்சுண்ட அல்குல் பணைமென் முலையாளொடுநீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர்
நஞ்சுண்டு தேவர்க் கமுதங் கொடுத்தநலமொன் றறியோமுங் கைநாக மதற்
கஞ்சுண் டுபடம் அதுபோக விடீர்அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.04
015பொல்லாப் புறங்காட் டகத்தாட் டொழியீர்புலால்வா யனபே யொடுபூச் சொழியீர்
எல்லாம் அறிவீர் இதுவே அறியீர்என்றிரங் குவேன்எல் லியும்நண் பகலுங்
கல்லால் நிழற்கீழ் ஒருநாட்கண் டதுங்கடம்பூர்க் கரக்கோயி லின்முன்கண் டதும்
அல்லால் விரகொன் றிலம்எம் பெருமான்அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.05
016தென்னாத் தெனாத்தெத் தெனாவென்று பாடிச்சிலபூ தமும்நீ ருந்திசை திசையன
பன்னான் மறைபா டுதிர்பா சூர்உளீர்படம்பக்கங் கொட்டுந் திருவொற்றி யூரீர்
பண்ணார் மொழியாளை யோர்பங் குடையீர்படுகாட் டகத்தென்று மோர்பற் றொழியீர்
அண்ணா மலையே னென்றீரா ரூருளீர்அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.06
017சிங்கத் துரிமூடு திர்தே வர்கணந்தொழநிற்றீர் பெற்றம் உகந்தே றிடுதிர்
பங்கம் பலபே சிடப்பாடுந் தொண்டர்தமைப்பற்றிக் கொண்டாண் டுவிடவுங் கில்லீர்
கங்கைச் சடையீர் உங்கருத் தறியோங்கண்ணுமூன் றுடையீர் கண்ணேயா யிருந்தால்
அங்கத் துறுநோய் களைந்தாள கில்லீர்அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.07
018பிணிவண் ணத்தவல் வினைதீர்த் தருளீர்பெருங்காட் டகத்திற் பெரும்பேயும் நீருந்
துணிவண்ணத் தின்மேலு மோர்தோல் உடுத்துச்சுற்றும்நா கத்தராய்ச் சுண்ணநீறு பூசி
மணிவண்ணத் தின்மேலு மோர்வண்ணத் தராய்மற்றுமற் றும்பல் பலவண்ணத் தராய்
அணிவண்ணத் தராய்நிற் றீர்எம் பெருமான்அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.08
019கோளா ளியகுஞ் சரங்கோள் இழைத்தீர்மலையின் றலையல் லதுகோயில் கொள்ளீர்
வேளா ளியகா மனைவெந் தழியவிழித்தீர் அதுவன் றியும்வேய் புரையுந்
தோளாள் உமைநங்கை யோர்பங் குடையீர்உடுகூறை யுஞ்சோறுந் தந்தாள கில்லீர்
ஆளா ளியவே கிற்றீர்எம் பெருமான்அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.09
020பாரோடு விண்ணும் பகலு மாகிப்பனிமால் வரையா கிப்பரவை யாகி
நீரோடு தீயும் நெடுங்காற் றுமாகிநெடுவெள் ளிடையாகி நிலனு மாகித்
தேரோ டவரை எடுத்த அரக்கன்சிரம்பத் திறுத்தீர் உமசெய்கை எல்லாம்
ஆரோடுங் கூடா அடிகேள் இதுவென்அடியோம் உமக்காட் செயஅஞ் சுதுமே.
7.2.10
021அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென்றமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னேமொழிந்தாறு மோர்நான்கு மோரொன் றினையும்
படியா இவைகற் றுவல்ல அடியார்பரங்குன்ற மேய பரமன் அடிக்கே
குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக்குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.
7.2.11


இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பரங்கிரிநாதர், தேவியார் – ஆவுடைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.3 திருநெல்வாயில் அரத்துறை 
பண் – இந்தளம்

திருச்சிற்றம்பலம்

022கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங்கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
நெல்வா யில்அரத் துறைநீ டுறையும்நிலவெண் மதிசூ டியநின் மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
7.3.01
023கறிமா மிளகும் மிகுவன் மரமும்மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நெறிவார் குழலா ரவர்காண நடஞ்செய்நெல்வா யில்அரத் துறைநின் மலனே
வறிதே நிலையாத இம்மண் ணுலகில்நரனா கவகுத் தனைநா னிலையேன்
பொறிவா யிலிவ்வைந் தினையும் மவியப்பொருதுன் னடியே புகுஞ்சூழல் சொல்லே.
7.3.02
024புற்றா டரவம் மரையார்த் துகந்தாய்புனிதா பொருவெள் விடையூர் தியினாய்
எற்றே ஒருகண் ணிலன்நின்னை யல்லால்நெல்வா யில்அரத் துறைநின் மலனே
மற்றேல் ஒருபற் றிலனெம் பெருமான்வண்டார் குழலாள் மங்கைபங் கினனே
அற்றார் பிறவிக் கடல்நீந்தி யேறிஅடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
7.3.03
025கோடுயர் கோங்க லர்வேங் கையலர்மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நீடுயர் சோலை நெல்வா யிலரத்துறைநின் மலனே நினைவார் மனத்தாய்
ஓடு புனற்க ரையாம் இளமைஉறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி
வாடி இருந்து வருந்தல் செய்யாதடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
7.3.04
026உலவு முலகிற் றலைகற் பொழியஉயர்வே யோடிழி நிவவின் கரைமேல்
நிலவு மயிலா ரவர்தாம் பயிலும்நெல்வா யிலரத் துறைநின் மலனே
புலனைந் தும்மயங் கியகங் குழையப்பொருவே லோர்நமன் றமர்தாம் நலிய
அலமந்து மயங்கி அயர்வ தன்முன்அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
7.3.05
027ஏலம் இலவங் கம்எழிற் கனகம்மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நீலம் மலர்ப்பொய் கையிலன் னம்மலிநெல்வா யிலரத் துறையாய் ஒருநெல்
வாலூன் றவருந் தும்முடம் பிதனைமகிழா தழகா வலந்தேன் இனியான்
ஆலந் நிழலில் அமர்ந்தாய் அமராஅடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
7.3.06
028சிகரம் முகத்திற் றிரளார் அகிலும்மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நிகரில் மயிலா ரவர்தாம் பயிலும்நெல்வா யிலரத் துறைநின் மலனே
மகரக் குழையாய் மணக்கோ லமதேபிணக்கோ லமதாம் பிறவி இதுதான்
அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய்அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
7.3.07
029திண்டேர் நெடுவீ தியிலங் கையர்கோன்றிரள்தோ ளிருபஃ தும்நெரித் தருளி
நெண்டா டுநெடு வயல்சூழ் புறவின்நெல்வா யிலரத் துறைநின் மலனே
பண்டே மிகநான் செய்தபாக் கியத்தாற்பரஞ்சோதி நின்னா மம்பயிலப் பெற்றேன்
அண்டா வமரர்க் கமரர் பெருமான்அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
7.3.08
030மாணா வுருவா கியோர்மண் ணளந்தான்மலர்மே லவன்நேடி யுங்காண் பரியாய்
நீணீள் முடிவா னவர்வந் திறைஞ்சும்நெல்வா யிலரத் துறைநின் மலனே
வாணார் நுதலார் வலைப்பட் டடியேன்பலவின் கனியீந் ததுபோல் வதன்முன்
ஆணோடு பெண்ணா முருவாகி நின்றாய்அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
7.3.09
031நீரூ ரும்நெடு வயல்சூழ் புறவின்நெல்வா யிலரத் துறைநின் மலனைத்
தேரூர் நெடுவீதி நன்மா டமலிதென்னா வலர்கோ னடித்தொண்டு பண்ணி
ஆரூ ரனுரைத் தனநற் றமிழின்மிகுமாலை யோர்பத் திவைகற்று வல்லார்
காரூர் களிவண் டறையானை மன்னரவராகி யோர்விண் முழுதாள் பவரே.
7.3.10


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அரத்துறைநாதர், தேவியார் – ஆனந்தநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.4 திருஅஞ்சைக்களம்
பண் – இந்தளம்

திருச்சிற்றம்பலம்

032தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னேசடைமேற்கங் கைவெள்ளந் தரித்த தென்னே
அலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னேஅதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே
மலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள்வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டலைக்குங் கடலங் கரைமேல் மகோதைஅணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.01
033பிடித்தாட்டி யோர்நாகத் தைப்பூண்ட தென்னேபிறங்குஞ் சடைமேற் பிறைசூடிற் றென்னே
பொடித்தான்கொண் டுமெய்ம்முற் றும்பூசிற் றென்னேபுகரே றுகந்தேறல் புரிந்த தென்னே
மடித்தோட் டந்துவன் றிரையெற் றியிடவளர்சங்கம் அங்காந்து முத்தஞ் சொரிய
அடித்தார் கடலங் கரைமேன் மகோதைஅணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.02
034சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியேசிறியார் பெரியார் மனத்தேற லுற்றால்
முந்தித் தொழுவார் இறவார் பிறவார்முனிகள் முனியே அமரர்க் கமரா
சந்தித் தடமால் வரைபோற் றிரைகள்தணியா திடறுங் கடலங் கரைமேல்
அந்தித் தலைச்செக்கர் வானே ஒத்தியால்அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.03
035இழைக்கு மெழுத்துக் குயிரே ஒத்தியால்இலையே ஒத்தியால் இணையே ஒத்தியாற்
குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால்அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால்
மழைக்குந் நிகரொப் பனவன் றிரைகள்வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டழைக்குங் கடலங் கரைமேல் மகோதைஅணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.04
036வீடின் பயனென் பிறப்பின் பயனென்விடையே றுவதென் மதயா னைநிற்க
கூடும் மலைமங் கைஒருத் தியுடன்சடைமேற் கங்கையாளை நீசூடிற் றென்னே
பாடும் புலவர்க் கருளும் பொருளென்நிதியம் பலசெய் தகலச் செலவில்
ஆடுங் கடலங் கரைமேல் மகோதைஅணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.05
037இரவத் திடுகாட் டெரியாடிற் றென்னேஇறந்தார் தலையிற் பலிகோட லென்னே
பரவித் தொழுவார் பெறுபண்ட மென்னேபரமா பரமேட் டிபணித் தருளாய்
உரவத் தொடுசங்க மோடிப்பி முத்தங்கொணர்ந்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டரவக் கடலங் கரைமேல் மகோதைஅணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.06
038ஆக்கு மழிவு மமைவும்நீ யென்பன்நான்சொல்லுவார் சொற்பொரு ளவைநீ யென்பன்நான்
நாக்குஞ் செவியுங் கண்ணும்நீ யென்பன்நான்நலனே இனிநான் உனைநன் குணர்ந்தேன்
நோக்கும் நிதியம் பலவெத் தனையுங்கலத்திற் புகப்பெய்து கொண்டேற நுந்தி
ஆர்க்குங் கடலங் கரைமேல் மகோதைஅணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.07
039வெறுத்தேன் மனைவாழ்க் கையைவிட் டொழிந்தேன்விளங்குங் குழைக்கா துடைவே தியனே
இறுத்தாய் இலங்கைக் கிறையா யவனைத்தலைபத் தொடுதோள் பலஇற் றுவிழக்
கறுத்தாய் கடல்நஞ் சமுதுண்டு கண்டங்கடுகப் பிரமன் றலையைந் திலுமொன்
றறுத்தாய் கடலங் கரைமேல் மகோதைஅணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.08
040பிடிக்குக் களிறே ஒத்தியா லெம்பிரான்பிரமற் கும்பிரான் மற்றைமாற் கும்பிரான்
நொடிக்கும் அளவிற் புரமூன் றெரியச்சிலைதொட் டவனே உனைநான் மறவேன்
வடிக்கின் றனபோற் சிலவன் றிரைகள்வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டடிக்குங் கடலங் கரைமேல் மகோதைஅணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
7.4.09
041எந்தம் அடிகள் இமையோர் பெருமான்எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன்
அந்தண் கடலங் கரைமேல் மகோதைஅணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனை
மந்தம் முழவுங் குழலு மியம்பும்வளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்ன
சந்தம் மிகுதண் டமிழ்மாலை கள்கொண்டடிவீழ வல்லார் தடுமாற் றிலரே.
7.4.10


இத்தலம் மலைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அஞ்சைக்களத்தீசுவரர், தேவியார் – உமையம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.5 திருஓணகாந்தன்றளி
பண் – இந்தளம்

திருச்சிற்றம்பலம்

042நெய்யும் பாலுந் தயிருங் கொண்டுநித்தல் பூசை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட ஆடிஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்ஓண காந்தன் றளியு ளீரே.
7.5.01
043திங்கள் தங்கு சடைக்கண் மேலோர்திரைகள் வந்து புரள வீசுங்
கங்கை யாளேல் வாய்தி றவாள்கணப தியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளைதேவி யார்கொற் றட்டி யாளால்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோ ம்ஓண காந்தன் றளியு ளீரே.
7.5.02
044பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்பேணி யுங்கழல் ஏத்து வார்கள்
மற்றோர் பற்றிலர் என்றி ரங்கிமதியு டையவர் செய்கை செய்யீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்ஆவற் காலத் தடிகேள் உம்மை
ஒற்றி வைத்திங் குண்ண லாமோஓண காந்தன் றளியு ளீரே.
7.5.03
045வல்ல தெல்லாஞ் சொல்லி யும்மைவாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்
றில்லை என்னீர் உண்டும் என்னீர்எம்மை ஆள்வான் இருப்ப தென்னீர்
பல்லை யுக்கப் படுத லையிற்பகலெ லாம்போய்ப் பலிதி ரிந்திங்
கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்ஓண காந்தன் றளியு ளீரே.
7.5.04
046கூடிக் கூடித் தொண்டர் தங்கள்கொண்ட பாணி குறைப டாமே
ஆடிப் பாடி அழுது நெக்கங்கன்பு டையவர்க் கின்பம் ஓரீர்
தேடித் தேடித் திரிந்தெய்த் தாலுஞ்சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்ஓண காந்தன் றளியு ளீரே.
7.5.05
047வாரி ருங்குழல் வாணெ டுங்கண்மலைம கள்மது விம்மு கொன்றைத்
தாரி ருந்தட மார்பு நீங்காத்தைய லாளுல குய்ய வைத்த
காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க்காமக் கோட்டம் உண்டாக நீர்போய்
ஊரி டும்பிச்சை கொள்வ தென்னேஓண காந்தன் றளியு ளீரே.
7.5.06
048பொய்ம்மை யாலே போது போக்கிப்புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்மேலை நாளொன் றிடவுங் கில்லீர்
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்
உம்மை என்றே எம்பெ ருமான்ஓண காந்தன் றளியு ளீரே.
7.5.07
049வலையம் வைத்த கூற்ற மீவான்வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
சிலைய மைத்த சிந்தை யாலேதிருவ டிதொழு துய்யி னல்லாற்
கலைய மைத்த காமச் செற்றக்குரோத லோப மதம வருடை
உலைய மைத்திங் கொன்ற மாட்டேன்ஓண காந்தன் றளியு ளீரே.
7.5.08
050வார மாகித் திருவ டிக்குப்பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே
ஆரம் பாம்பு வாழ்வ தாரூர்ஒற்றி யூரேல் உம்ம தன்று
தார மாகக் கங்கை யாளைச்சடையில் வைத்த அடிகேள் உந்தம்
ஊருங் காடு உடையுந் தோலேஓண காந்தன் றளியு ளீரே.
7.5.09
051ஓவ ணமேல் எருதொன் றேறும்ஓண காந்தன் றளியு ளார்தாம்
ஆவ ணஞ்செய் தாளுங் கொண்டவரைது கிலொடு பட்டு வீக்கிக்
கோவ ணமேற் கொண்ட வேடங்கோவை யாகவா ரூரன் சொன்ன
பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப்பறையுந் தாஞ்செய்த பாவந் தானே.
7.5.10


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஓணகாந்தீசுவரர்,
தேவியார் – காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.6 திருவெண்காடு
பண் – இந்தளம்

திருச்சிற்றம்பலம்

052படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறிஅன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னேவேலை சூழ்வெண் காட னீரே.
7.6.01
053இழித்து கந்தீர் முன்னை வேடம்இமைய வர்க்கும் உரைகள் பேணா
தொழித்து கந்தீர் நீர்முன் கொண்டஉயர்த வத்தை அமரர் வேண்ட
அழிக்க வந்த காம வேளைஅவனு டைய தாதை காண
விழித்து கந்த வெற்றி யென்னேவேலை சூழ்வெண் காட னீரே.
7.6.02
054படைகள் ஏந்திப் பாரி டமும்பாதம் போற்ற மாதும் நீரும்
உடையோர் கோவ ணத்த ராகிஉண்மை சொல்லீர் உம்மை யன்றே
சடைகள் தாழக் கரணம் இட்டுத்தன்மை பேசி இல்ப லிக்கு
விடைய தேறித் திரிவ தென்னேவேலை சூழ்வெண் காட னீரே.
7.6.03
055பண்ணு ளீராய்ப் பாட்டு மானீர்பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்
கண்ணு ளீராய்க் கருத்தி லும்மைக்கருது வார்கள் காணும் வண்ணம்
மண்ணு ளீராய் மதியம் வைத்தீர்வான நாடர் மருவி யேத்த
விண்ணு ளீராய் நிற்ப தென்னேவேலை சூழ்வெண் காட னீரே.
7.6.04
056குடமெ டுத்து நீரும் பூவுங்கொண்டு தொண்டர் ஏவல் செய்ய
நடமெ டுத்தொன் றாடிப் பாடிநல்கு வீர்நீர் புல்கும் வண்ணம்
வடமெ டுத்த கொங்கை மாதோர்பாக மாக வார்க டல்வாய்
விடம்மி டற்றில் வைத்த தென்னேவேலை சூழ்வெண் காட னீரே.
7.6.05
057மாறு பட்ட வனத்த கத்தில்மருவ வந்த வன்க ளிற்றைப்
பீறி இட்ட மாகப் போர்த்தீர்பெய்ப லிக்கென் றில்லந் தோறுங்
கூறு பட்ட கொடியும் நீருங்குலாவி ஏற்றை அடர ஏறி
வேறு பட்டுத் திரிவ தென்னேவேலை சூழ்வெண் காட னீரே.
7.6.06
058காத லாலே கருதுந் தொண்டர்கார ணத்தீ ராகி நின்றே
பூதம் பாடப் புரிந்து நட்டம்புவனி யேத்த ஆட வல்லீர்
நீதி யாக ஏழி லோசைநித்த ராகிச் சித்தர் சூழ
வேத மோதித் திரிவ தென்னேவேலை சூழ்வெண் காட னீரே.
7.6.07
059குரவு கொன்றை மதியம் மத்தங்கொங்கை மாதர் கங்கை நாகம்
விரவு கின்ற சடையு டையீர்விருத்த ரானீர் கருத்தில் உம்மைப்
பரவும் என்மேல் பழிகள் போக்கீர்பாக மாய மங்கை யஞ்சி
வெருவ வேழஞ் செற்ற தென்னேவேலை சூழ்வெண் காட னீரே.
7.6.08
060மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர்நிச்ச யத்தால் நினைப்பு ளார்பாற்
பாடுங் காட்டில் ஆடல் உள்ளீர்பரவும் வண்ணம் எங்ங னேதான்
நாடுங் காட்டில் அயனும் மாலும்நணுகா வண்ணம் அனலு மாய
வேடங் காட்டித் திரிவ தென்னேவேலை சூழ்வெண் காட னீரே.
7.6.09
061விரித்த வேதம் ஓத வல்லார்வேலை சூழ்வெண் காடு மேய
விருத்த னாய வேதன் றன்னைவிரிபொ ழிற்றிரு நாவ லூரன்
அருத்தி யாலா ரூரன் தொண்டன்அடியன் கேட்ட மாலை பத்துந்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார்செம்மை யாளர் வானு ளாரே.
7.6.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சுவேதாரணியேசுவரர்,
தேவியார் – பிரமவித்தியாநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.7 திருஎதிர்கொள்பாடி
பண் – இந்தளம்

திருச்சிற்றம்பலம்

062மத்த யானை ஏறி மன்னர்சூழவரு வீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லைசிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டாவம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள் பாடிஎன்ப தடைவோமே.
7.7.01
063தோற்றம் உண்டேல் மரணம் உண்டுதுயரம் மனைவாழ்க்கை
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டுநெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீல கண்டர்நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடிஎன்ப தடைவோமே.
7.7.02
064செடிகொ ளாக்கை சென்று சென்றுதேய்ந்தொல் லைவீழாமுன்
வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள்பட்டு மயங்காதே
கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர்கோவண ஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள் பாடிஎன்ப தடைவோமே.
7.7.03
065வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர்வஞ்ச மனத்தீரே
யாவ ராலும் இகழப் பட்டிங்கல்ல லில்வீழாதே
மூவ ராயும் இருவ ராயும்முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள் பாடிஎன்ப தடைவோமே.
7.7.04
066அரித்து நம்மேல் ஐவர் வந்திங்காறலைப் பான்பொருட்டாற்
சிரித்த பல்வாய் வெண்ட லைபோய்ஊர்ப்பு றஞ்சேராமுன்
வரிக்கொ டுத்திவ் வாள ரக்கர்வஞ்ச மதில்மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள் பாடிஎன்ப தடைவோமே.
7.7.05
067பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர்பொத்தடைப் பான்பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மோ டாடிநீரும் மனத்தீரே
நைய வேண்டா இம்மை யேத்தஅம்மை நமக்கருளும்
ஐயர் கோயில் எதிர்கொள் பாடிஎன்ப தடைவோமே.
7.7.06
068கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச்செற்ற மனம்நீக்கி
வாசம் மல்கு குழலி னார்கள்வஞ்ச மனைவாழ்க்கை
ஆசை நீக்கி அன்பு சேர்த்திஎன்பணிந் தேறேறும்
ஈசர் கோயில் எதிர்கொள் பாடிஎன்ப தடைவோமே.
7.7.07
069இன்பம் உண்டேல் துன்பம் உண்டுஏழை மனைவாழ்க்கை
முன்பு சொன்ன மோழை மையான்முட்டை மனத்தீரே
அன்ப ரல்லால் அணிகொள் கொன்றைஅடிக ளடிசேரார்
என்பர் கோயில் எதிர்கொள் பாடிஎன்ப தடைவோமே.
7.7.08
070தந்தை யாரும் தவ்வை யாரும்எட்டனைச் சார்வாகார்
வந்து நம்மோ டுள்ள ளாவிவான நெறிகாட்டுஞ்
சிந்தை யீரே நெஞ்சி னீரேதிகழ்மதி யஞ்சூடும்
எந்தை கோயில் எதிர்கொள் பாடிஎன்ப தடைவோமே.
7.7.09
071குருதி சோர ஆனையின் றோல்கொண்ட குழற்சடையன்
மருது கீறி ஊடு போனமாலய னும்மறியாச்
சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச்சோதியெம் ஆதியான்
கருது கோயில் எதிர்கொள் பாடிஎன்ப தடைவோமே.
7.7.10
072முத்து நீற்றுப் பவள மேனிச்செஞ்சடை யான்உறையும்
பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப்பரமனை யேபணியச்
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்சடைய னவன்சிறுவன்
பத்தன் ஊரன் பாடல் வல்லார்பாதம் பணிவாரே.
7.7.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அயிராவதேசுவரர்,
தேவியார் – வாசமலர்க்குழன்மாதம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.8 திருவாரூர்
பண் – இந்தளம்

திருச்சிற்றம்பலம்

073இறைகளோ டிசைந்த இன்பம்இன்பத்தோ டிசைந்த வாழ்வு
பறைகிழித் தனைய போர்வைபற்றியான் நோக்கி னேற்குத்
திறைகொணர்ந் தீண்டித் தேவர்செம்பொனும் மணியுந் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர்அப்பனே அஞ்சி னேனே.
7.8.1
074ஊன்மிசை உதிரக் குப்பைஒருபொரு ளிலாத மாயம்
மான்மறித் தனைய நோக்கமடந்தைமார் மதிக்கு மிந்த
மானுடப் பிறவி வாழ்வுவாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
ஆனல்வெள் ளேற்ற ஆரூர்அப்பனே அஞ்சி னேனே.
7.8.2
075அறுபதும் பத்தும் எட்டும்ஆறினோ டஞ்சு நான்குந்
துறுபறித் தனைய நோக்கிச்சொல்லிற்றொன் றாகச் சொல்லார்
நறுமலர்ப் பூவும் நீரும்நாடொறும் வணங்கு வார்க்கு
அறிவினைக் கொடுக்கும் ஆரூர்அப்பனே அஞ்சி னேனே.
7.8.3
076சொல்லிடில் எல்லை இல்லைசுவையிலாப் பேதை வாழ்வு
நல்லதோர் கூரை புக்குநலமிக அறிந்தே னல்லேன்
மல்லிகை மாடம் நீடுமருங்கொடு நெருங்கி யெங்கும்
அல்லிவண் டியங்கும் ஆரூர்அப்பனே அஞ்சி னேனே.
7.8.4
077நரம்பினோ டெலும்பு கட்டிநசையினோ டிசைவொன் றில்லாக்
குரம்பைவாய்க் குடியி ருந்துகுலத்தினால் வாழ மாட்டேன்
விரும்பிய கமழும் புன்னைமாதவித் தொகுதி என்றும்
அரும்புவாய் மலரும் ஆரூர்அப்பனே அஞ்சி னேனே.
7.8.5
078மணமென மகிழ்வர் முன்னேமக்கள்தாய் தந்தை சுற்றம்
பிணமெனச் சுடுவர் பேர்த்தேபிறவியை வேண்டேன் நாயேன்
பணையிடைச் சோலை தோறும்பைம்பொழில் விளாகத் தெங்கள்
அணைவினைக் கொடுக்கும் ஆரூர்அப்பனே அஞ்சி னேனே.
7.8.6
079தாழ்வெனுந் தன்மை விட்டுத்தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர்மறுமைக்கொன் றீய கில்லார்
ஆழ்குழிப் பட்ட போதுவலக்கணில் ஒருவர்க் காவர்
யாழ்முயன் றிருக்கும் ஆரூர்அப்பனே அஞ்சி னேனே.
7.8.7
080உதிரநீர் இறைச்சிக் குப்பைஎடுத்தது மலக்கு கைம்மேல்
வருவதோர் மாயக் கூரைவாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
கரியமால் அயனுந் தேடிக்கழலிணை காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர்அப்பனே அஞ்சி னேனே.
7.8.8
081பொய்த்தன்மைத் தாய மாயப்போர்வையை மெய்யென் றெண்ணும்
வித்தகத் தாய வாழ்வுவேண்டிநான் விரும்ப கில்லேன்
முத்தினைத் தொழுது நாளும்முடிகளால் வணங்கு வார்க்கு
அத்தன்மைத் தாகும் ஆரூர்அப்பனே அஞ்சி னேனே.
7.8.9
082தஞ்சொலார் அருள் பயக்குந்தமியனேன் தடமு லைக்கண்
அஞ்சொலார் பயிலும் ஆரூர்அப்பனை ஊரன் அஞ்சிச்
செஞ்சொலால் நயந்த பாடல்சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சுலாங் கண்டத் தெங்கள்நாதனை நணுகு வாரே.
7.8.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வன்மீகநாதர், தேவியார் – அல்லியங்கோதையம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.9 திருஅரிசிற்கரைப்புத்தூர்
பண் – இந்தளம்

திருச்சிற்றம்பலம்

083மலைக்கு மகள்அஞ்ச மதகரியை உரித்தீர்எரித்தீர் வருமுப் புரங்கள்
சிலைக்குங் கொலைச்சே வுகந்தேற் றொழியீர்சில்பலிக் கில்கள்தோறுஞ் செலவொழியீர்
கலைக்கொம் புங்கரி மருப்பும் இடறிக்கலவம் மயிற்பீலியுங் காரகிலும்
அலைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரைஅழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7.9.1
084அருமல ரோன்சிரம் ஒன்றறுத் தீர்செறுத்தீரழற் சூலத்தில் அந்தகனைத்
திருமகள் கோனெடு மால்பல நாள்சிறப்பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத் திற்குறை வாநிறைவாகவோர் கண்மலர் சூட்டலுமே
பொருவிறல் ஆழி புரிந்தளித் தீர்பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.
7.9.2
085தரிக்குந் தரைநீர் தழற்காற் றந்தரஞ்சந்திரன் சவிதாவிய மானனானீர்
சரிக்கும் பலிக்குத் தலையங்கை யேந்தித்தையலார் பெய்யக்கொள் வதுதக்கதன்றால்
முரிக்குந் தளிர்ச்சந் தனத்தொடு வேயும்முழங்குந் திரைக்கைக ளால்வாரிமோதி
அரிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரைஅழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7.9.3
086கொடியுடை மும்மதில் வெந்தழி யக்குன்றம்வில்லா நாணியிற் கோலொன்றினால்
இடிபட எய்தெரித்தீர் இமைக்கும் அளவில்உமக்கார் எதிரெம் பெருமான்
கடிபடு பூங்கணை யான்கருப் புச்சிலைக்காமனை வேவக் கடைக்கண்ணினாற்
பொடிபட நோக்கிய தென்னை கொல்லோபொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.
7.9.4
087வணங்கித்தொழு வாரவர் மால்பிர மன்மற்றும்வானவர் தானவர் மாமுனிவர்
உணங்கற்றலை யிற்பலி கொண்ட லென்னேஉலகங்கள் எல்லாமுடை யீர்உரையீர்
இணங்கிக் கயல்சேல் இளவாளை பாயஇனக்கெண்டை துள்ளக்கண் டிருந்தஅன்னம்
அணங்கிக் குணங்கொள் அரிசிற் றென்கரைஅழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7.9.5
088*அகத்தடி மைசெய்யும் அந்தணன் றான்அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும் நும்முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படி யும்வருமென்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந் தீர்பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே. 

*திரு அரிசிற்கரைப்புத்தூரென்னு மித்தலத்தில் ஆதிசைவப் 
பிராமணகுலத்தில் திருவவதாரஞ்செய்து புகழ்த்துணை 
நாயனாரெனப் பெயரும் பெற்று மிகுந்தஅன்புடன் 
பரமசிவத்துக்குத் திருமஞ்சனமுதலிய உபசாரங்கள் 
ஆகமமுறைவழுவாமல் செய்துகொண்டு வருநாளில் 
பஞ்சம்நேரிட்டுச் சிலநாளுணவின்றித் திருமேனியிளைத்து 
வலிவின்றியுமொருநாள் திருமஞ்சனஞ்செய்கையில் 
அந்தக்குடம் நழுவிச் சிவலிங்கப்பெருமான் திருமுடிக்கண்விழலும் 
நாயனார் அஞ்சி நடுங்குதல் திருவுளத்திற்கொண்டு 
பரமசிவங் கிருபைகூர்ந்து பஞ்சம் நீங்குகிறவரைக்கும் 
ஒருபடிக் காசு அருள்செய்த கிருபையின் பெருமை இந்த
ஆறாவது தேவாரத்தில் விளங்கக்கூறியது.
7.9.6
089பழிக்கும் பெருந்தக்கன் எச்சம் அழியப்பகலோன்முத லாப்பல தேவரையுந்
தெழித்திட் டவரங்கஞ் சிதைத்தரு ளுஞ்செய்கைஎன்னைகொலோ மைகொள் செம்மிடற்றீர்
விழிக்குந் தழைப்பீலி யொடேல முந்திவிளங்கும் மணிமுத்தொடு பொன்வரன்றி
அழிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரைஅழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7.9.7
090பறைக்கண் நெடும்பேய்க் கணம்பாடல் செய்யக்குறட்பா ரிடங்கள்பறை தாம்முழக்கப்
பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம்பெருங்கா டரங்காகநின் றாடலென்னே
கறைக்கொள் மணிகண் டமுந்திண் டோ ள்களுங்கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்
பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும்பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.
7.9.8
091மழைக்கண்மட வாளையோர் பாகம்வைத் தீர்வளர்புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்
முழைக்கொள் அரவோ டென்பணி கலனாமுழுநீறு மெய்பூசுதல் என்னைகொலோ
கழைக்கொள் கரும்புங் கதலிக் கனியுங்கமுகின் பழுக்காயுங் கவர்ந்துகொண்டிட்
டழைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரைஅழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7.9.9
092கடிக்கும் அரவால் மலையால் அமரர்கடலைக் கடையவெழு காளகூடம்
ஒடிக்கும் உலகங் களைஎன் றதனைஉமக்கேயமு தாகவுண் டீருமிழீர்
இடிக்கும் மழைவீழ்த் திழித்திட் டருவிஇருபாலுமோடி இரைக்குந் திரைக்கை
அடிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரைஅழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7.9.10
093காரூர் மழைபெய்து பொழியரு விக்கழையோடகி லுந்திட் டிருகரையும்
போரூர் புனல்சேர் அரிசிற் றென்கரைப்பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதர்தம்மை
ஆரூரன் அருந்தமி ழைந்தினோ டைந்தழகாலுரைப் பார்களுங் கேட்பவருஞ்
சீரூர் தருதேவர் கணங்க ளொடும்இணங்கிச் சிவலோகம தெய்துவரே.
7.9.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – படிக்காசுவைத்தவீசுவரர்,
தேவியார் – அழகம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.10 திருக்கச்சிஅனேகதங்காவதம்
பண் – இந்தளம்

திருச்சிற்றம்பலம்

094தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெருமானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை யெரித்தெரி யாடி இடங்குலவான திடங்குறை யாமறையாம்
மானை இடத்ததோர் கையனி டம்மதமாறு படப்பொழி யும்மலைபோல்
யானை யுரித்த பிரான திடங்கலிக்கச்சி அனேகதங் காவதமே.
7.10.1
095கூறு நடைக்குழி கட்பகு வாயனபேயுகந் தாடநின் றோரியிட
வேறு படக்குட கத்திலை யம்பலவாணன்நின் றாடல் விரும்புமிடம்
ஏறு விடைக்கொடி யெம்பெரு மான்இமையோர்பெரு மான்உமை யாள்கணவன்
ஆறு சடைக்குடை அப்ப னிடங்கலிக்கச்சி அனேகதங் காவதமே.
7.10.2
096கொடிக ளிடைக்குயில் கூவுமி டம்மயிலாலுமி டம்மழு வாளுடைய
கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக்கண்டனி டம்பிறைத் துண்டமுடிச்
செடிகொள் வினைப்பகை தீருமி டந்திருவாகுமி டந்திரு மார்பகலத்
தடிக ளிடம்அழல் வண்ண னிடங்கலிக்கச்சி அனேகதங் காவதமே.
7.10.3
097கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங்கங்கையுந் திங்களுஞ் சூடுசடை
மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப்பங்கினிற் றங்க உவந்தருள்செய்
சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள்பாய வியாத்தழல் போலுடைத்தம்
அங்கை மழுத்திகழ் கைய னிடங்கலிக்கச்சி அனேகதங் காவதமே.
7.10.4
098பைத்த படத்தலை ஆடர வம்பயில்கின்ற இடம்பயி லப்புகுவார்
சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ்கின்ற இடந்திரு வானடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொளவைத்த இடம்மழு வாளுடைய
அத்தன் இடம்அழல் வண்ண னிடங்கலிக்கச்சி அனேகதங் காவதமே.
7.10.5
099தண்ட முடைத்தரு மன்தமர் என்றமரைச்செயும் வன்துயர் தீர்க்குமிடம்
பிண்ட முடைப்பிற வித்தலை நின்றுநினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம்
கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்தபிரான திடங்கடல் ஏழுகடந்
தண்ட முடைப்பெரு மான திடங்கலிக்கச்சி அனேகதங் காவதமே.
7.10.6
100கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழுதேத்து மிடங்கதி ரோன்ஒளியால்
விட்ட இடம்விடை யூர்தி யிடங்குயிற்பேடைதன் சேவலோ டாடுமிடம்
மட்டு மயங்கி அவிழ்ந்த மலரொருமாதவி யோடு மணம்புணரும்
அட்ட புயங்கப் பிரான திடங்கலிக்கச்சி அனேகதங் காவதமே.
7.10.7
101புல்லி இடந்தொழு துய்துமெ னாதவர்தம்புர மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங்காலனைக் கால்கொடு வீந்தவியக்
கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல்குராவகு ளங்குருக் கத்திபுன்னை
அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக்கச்சி அனேகதங் காவதமே.
7.10.8
102சங்கை யவர்புணர் தற்கரி யான்றளவேனகை யாள்தவி ராமிகுசீர்
மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடைநட்டம்நின் றாடிய சங்கரனெம்
அங்கையி னல்லனல் ஏந்து மவன்கனல்சேரொளி யன்னதோர் பேரகலத்
தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக்கச்சி அனேகதங் காவதமே.
7.10.9
103வீடு பெறப்பல ஊழிகள் நின்றுநினைக்கும் இடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டுமேவினர் தங்களைக் காக்குமிடம்
பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடு மிடஞ்சிவ லோகன் இடங்கலிக்கச்சி அனேகதங் காவதமே.
7.10.10


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – காவதேசுவரர்,
தேவியார் – காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.11 திருப்பூவணம்
பண் – இந்தளம்

திருச்சிற்றம்பலம்

104திருவுடை யார்திரு மாலய னாலும்
உருவுடை யார்உமை யாளையோர் பாகம்
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ.
7.11.1
105எண்ணி இருந்து கிடந்து நடந்தும்
அண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார்
பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப்
புண்ணிய னார்உறை பூவணம் ஈதோ.
7.11.2
106தெள்ளிய பேய்பல பூதம வற்றொடு
நள்ளிருள் நட்டம தாடல் நவின்றோர்
புள்ளுவ ராகும வர்க்கவர் தாமும்
புள்ளுவ னார்உறை பூவணம் ஈதோ.
7.11.3
107நிலனுடை மான்மறி கையது தெய்வக்
கனலுடை மாமழு ஏந்தியோர் கையில்
அனலுடை யார்அழ கார்தரு சென்னிப்
புனலுடை யார்உறை பூவணம் ஈதோ.
7.11.4
108நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார்
கடைகடை தோறிடு மின்பலி என்பார்
துடியிடை நன்மட வாளொடு மார்பில்
பொடியணி வார்உறை பூவணம் ஈதோ.
7.11.5
109மின்னனை யாள்திரு மேனிவி ளங்கவோர்
தன்னமர் பாகம தாகிய சங்கரன்
முன்னினை யார்புரம் மூன்றெரி யூட்டிய
பொன்னனை யான்உறை பூவணம் ஈதோ.
7.11.6
110மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட
நக்கிறை யேவிர லாலிற வூன்றி
நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்
புக்குறை வான்உறை பூவணம் ஈதோ.
7.11.7
 இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.7.11.8-9
111சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம்
ஆர விருப்பிட மாஉறை வான்றனை
ஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே.
7.11.10


இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பூவணநாதர், தேவியார் – மின்னாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.12 திருநாட்டுத்தொகை
பண் – இந்தளம்

திருச்சிற்றம்பலம்

112வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர்
தாழை யூர்தக டூர்தக்க ளூர்தரு மபுரம்
வாழை காய்க்கும் வளர்மரு கல்நாட்டு மருகலே.
7.12.1
113அண்டத் தண்டத்தின் அப்புறத் தாடும் அமுதனூர்
தண்டந் தோட்டந்தண் டங்குறை தண்டலை யாலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ்கழிப் பாலை கடற்கரை
கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக் கைநாட்டுக் குறுக்கையே.
7.12.2
114மூல னூர்முத லாயமுக் கண்ணன் முதல்வனூர்
நால னூர்நரை ஏறுகந் தேறிய நம்பனூர்
கோல நீற்றன்குற் றாலங் குரங்கணின் முட்டமும்
வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே.
7.12.3
115தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ் சிராப்பள்ளி
பாங்கூர் எங்கள் பிரானுறை யுங்கடம் பந்துறை
பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி பயிலுமூர்
நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை யூர்நாட்டு நறையூரே.
7.12.4
116குழலை வென்ற மொழிமட வாளையோர் கூறனாம்
மழலை யேற்று மணாளன் இடந்தட மால்வரைக்
கிழவன் கீழை வழிப்பழை யாறு கிழையமும்
மிழலை நாட்டு மிழலைவெண் ணிநாட்டு மிழலையே.
7.12.5
117தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர்
பன்னூர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம்
என்னூர் எங்கள் பிரானுறை யுந்திருத் தேவனூர்
பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி சைநாட்டுப் புரிசையே.
7.12.6
118ஈழ நாட்டுமா தோட்டந்தென் னாட்டிரா மேச்சுரம்
சோழ நாட்டுத் துருத்திநெய்த் தானந் திருமலை
ஆழி யூரன நாட்டுக்கெல் லாம்அணி யாகிய
கீழை யில்லர னார்க்கிடங் கிள்ளி குடியதே.
7.12.7
119நாளும் நன்னிலந் தென்பனை யூர்வட கஞ்சனூர்
நீள நீள்சடை யான்நெல்லிக் காவு நெடுங்களங்
காள கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர்
வேளார் நாட்டுவே ளூர்விளத் தூர்நாட்டு விளத்தூரே.
7.12.8
120தழலும் மேனியன் தையலோர் பாகம மர்ந்தவன்
தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற சோதிசோற் றுத்துறை
கழலுங் கோவை யுடையவன் காதலிக் கும்மிடம்
பழனம் பாம்பணி பாம்புரந் தஞ்சைதஞ் சாக்கையே.
7.12.9
121மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணன் வலஞ்சுழி
பைகொள் வாளர வாட்டித் திரியும் பரமனூர்
செய்யில் வாளைகள் பாய்ந்துக ளுந்திருப் புன்கூர்நன்
றையன் மேய பொழிலணி ஆவடு துறையதே.
7.12.10
122பேணி நாடத னிற்றிரி யும்பெரு மான்றனை
ஆணை யாவடி யார்கள் தொழப்படும் ஆதியை
நாணி ஊரன் வனப்பகை யப்பன்வன் றொண்டன்சொல்
பாணி யாலிவை யேத்துவார் சேர்பர லோகமே.
7.12.11


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.13 திருத்துறையூர்
பண் – தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

123மலையார் அருவித் திரள்மா மணியுந்திக்
குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற்
கலையார் அல்குற்கன் னியராடுந் துறையூர்த்
தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
7.13.1
124மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி
முத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற்
பத்தர் பயின்றேத்திப் பரவுந் துறையூர்
அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
7.13.2
125கந்தங் கமழ்கா ரகில்சந் தனமுந்திச்
செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால்
மந்தி பலமா நடமாடுந் துறையூர்
எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
7.13.3
126அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச்
சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கரும்பார் மொழிக்கன் னியராடுந் துறையூர்
விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
7.13.4
127பாடார்ந் தனமாவும் பலாக்க ளுஞ்சாடி
நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
மாடார்ந் தனமாளி கைசூழுந் துறையூர்
வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
7.13.5
128மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி
மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கொட்டாட் டொடுபாட் டொலியோவாத் துறையூர்ச்
சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
7.13.6
129மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரையுந்தித்
தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
போதார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்
நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
7.13.7
130கொய்யா மலர்க்கோங் கொடுவேங்கை யுஞ்சாடிச்
செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
மையார் தடங்கண் ணியராடுந் துறையூர்
ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
7.13.8
131விண்ணார்ந் தனமேகங் கள்நின்று பொழிய
மண்ணாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
பண்ணார் மொழிப்பா வையராடுந் துறையூர்
அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
7.13.9
132மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும்
ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார்
பூவார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்த்
தேவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
7.13.10
133செய்யார் கமல மலர்நாவ லூர்மன்னன்
கையாற் றொழுதேத்தப் படுந்துறை யூர்மேற்
பொய்யாத் தமிழூரன் உரைத்தன வல்லார்
மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே.
7.13.11


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – துறையூரப்பர், தேவியார் – பூங்கோதையம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.14 திருப்பாச்சிலாச்சிராமம்
பண் – தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

134வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும்நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமைஉரைத்தக்கால் உவமனே ஒக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடுபாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில்இவரலா தில்லையோ பிரானார்.
7.14.1
135அன்னையே என்னேன் அத்தனே என்னேன்அடிகளே அமையுமென் றிருந்தேன்
என்னையும் ஒருவன் உளனென்று கருதிஇறையிறை திருவருள் காட்டாய்
அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிரா மத்துறை அடிகள்
பின்னையே அடியார்க் கருள்செய்வ தாகில்இவரலா தில்லையோ பிரானார்.
7.14.2
136உற்றபோ தல்லால் உறுதியை உணரேன்உள்ளமே அமையுமென் றிருந்தேன்
செற்றவர் புரமூன் றெரியெழச் செற்றசெஞ்சடை நஞ்சடை கண்டர்
அற்றவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்தடிகள்தா மியாதுசொன் னாலும்
பெற்றபோ துகந்து பெறாவிடில் இகழில்இவரலா தில்லையோ பிரானார்.
7.14.3
137நாச்சில பேசி நமர்பிறர் என்றுநன்றுதீ தென்கிலர் மற்றோர்
பூச்சிலை நெஞ்சே பொன்விளை கழனிப்புள்ளினஞ் சிலம்புமாம் பொய்கைப்
பாச்சிலாச் சிராமத் தடிகளென் றிவர்தாம்பலரையும் ஆட்கொள்வர் பரிந்தோர்
பேச்சிலர் ஒன்றைத் தரவில ராகில்இவரலா தில்லையோ பிரானார்.
7.14.4
138வரிந்தவெஞ் சிலையால் அந்தரத் தெயிலைவாட்டிய வகையின ரேனும்
புரிந்தஅந் நாளே புகழ்தக்க அடிமைபோகுநாள் வீழுநா ளாகிப்
பரிந்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்தடிகள்தா மியாதுசொன் னாலும்
பிரிந்திறைப் போதிற் பேர்வதே யாகில்இவரலா தில்லையோ பிரானார்.
7.14.5
139செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன்தீவினை செற்றிடு மென்று
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்ஆவதும் அறிவரெம் மடிகள்
படைத்தலைச் சூலம் பற்றிய கையர்பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிடித்தவெண் ணீறே பூசுவ தானால்இவரலா தில்லையோ பிரானார்.
7.14.6
140கையது கபாலங் காடுறை வாழ்க்கைகட்டங்கம் ஏந்திய கையர்
மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடைமேல்வெண்டிங்கள் சூடிய விகிர்தர்
பையர வல்குற் பாவைய ராடும்பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
மெய்யரே ஒத்தோர் பொய்செய்வ தாகில்இவரலா தில்லையோ பிரானார்.
7.14.7
141நிணம்படும் உடலை நிலைமையென் றோரேன்நெஞ்சமே தஞ்சமென் றிருந்தேன்
கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலுங்கருத்தினாற் கைதொழு தெழுவேன்
பணம்படும் அரவம் பற்றிய கையர்பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணம்படு காட்டில் ஆடுவ தாகில்இவரலா தில்லையோ பிரானார்.
7.14.8
142குழைத்துவந் தோடிக் கூடுதி நெஞ்சேகுற்றேவல் நாடொறுஞ் செய்வான்
இழைத்தநாள் கடவார் அன்பில ரேனும்எம்பெரு மானென்றெப் போதும்
அழைத்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்தடிகள்தாம் யாதுசொன் னாலும்
பிழைத்தது பொறுத்தொன் றீகில ராகில்இவரலா தில்லையோ பிரானார்.
7.14.9
143துணிப்படும் உடையுஞ் சுண்ணவெண் ணீறுந்தோற்றமுஞ் சிந்தித்துக் காணில்
மணிப்படு கண்டனை வாயினாற் கூறிமனத்தினாற் றொண்டனேன் நினைவேன்
பணிப்படும் அரவம் பற்றிய கையர்பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணிப்பட ஆண்டு பணிப்பில ராகில்இவரலா தில்லையோ பிரானார்.
7.14.10
144ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன்அடியவர்க் கடியனும் ஆனேன்
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும்ஒண்மலர்ச் சேவடி காட்டாய்
அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சிலாச்சிரா மத்தெம் மடிகள்
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில்இவரலா தில்லையோ பிரானார்.
7.14.11
145ஏசின அல்ல இகழ்ந்தன அல்லஎம்பெரு மானென்றெப் போதும்
பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்தடிகளை அடிதொழப் பன்னாள்
வாயினாற் கூறி மனத்தினால் நினைவான்வளவயல் நாவலா ரூரன்
பேசின பேச்சைப் பொறுக்கில ராகில்இவரலா தில்லையோ பிரானார்.
7.14.12


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மாற்றறிவரதர், தேவியார் – பாலசுந்தரியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.15 திருநாட்டியத்தான்குடி
பண் – தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

146பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன்புறங்காட் டாடல்கண் டிகழேன்
பேணீ ராகிலும் பெருமையை உணர்வேன்பிறவே னாகிலும் மறவேன்
காணீ ராகிலுங் காண்பனென் மனத்தாற்கருதீ ராகிலுங் கருதி
நானே லும்மடி பாடுதல் ஒழியேன்நாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.1
147கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட்டெல்லியில் ஆடலைக் கவர்வன்
துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமைசொல்லாய் திப்பிய மூர்த்தி
வைச்சே யிடர்களைக் களைந்திட வல்லமணியே மாணிக்க வண்ணா
நச்சேன் ஒருவரை நானுமை யல்லால்நாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.2
148அஞ்சா தேயுமக் காட்செய வல்லேன்யாதினுக் காசைப் படுகேன்
பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கைபங்கா எம்பர மேட்டீ
மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்தமணியே மாணிக்க வண்ணா
நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீநாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.3
149கல்லே னல்லேன் நின்புகழ் அடிமைகல்லா தேபல கற்றேன்
நில்லே னல்லேன் நின்வழி நின்றார்தம்முடை நீதியை நினைய
வல்லே னல்லேன் பொன்னடி பரவமாட்டேன் மறுமையை நினைய
நல்லே னல்லேன் நானுமக் கல்லால்நாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.4
150மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக்கருதா தார்தமைக் கருதேன்
ஒட்டீ ராகிலும் ஒட்டுவன் அடியேன்உம்மடி யடைந்தவர்க் கடிமைப்
பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன்பாடியும் நாடியும் அறிய
நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன்நாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.5
151படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம்படுத்தா யென்றல்லல் பறையேன்
குடப்பாச் சிலுறை கோக்குளிர் வானேகோனே கூற்றுதைத் தானே
மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடும்மறையோ தீமங்கை பங்கா
நடப்பீ ராகிலும் நடப்பனும் மடிக்கேநாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.6
152ஐவாய் அரவினை மதியுடன் வைத்தஅழகா அமரர்கள் தலைவா
எய்வான் வைத்ததோர் இலக்கினை அணைதரநினைந்தேன் உள்ளமுள் ளளவும்
உய்வான் எண்ணிவந் தும்மடி அடைந்தேன்உகவீ ராகிலும் உகப்பன்
நைவா னன்றுமக் காட்பட்ட தடியேன்நாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.7
153கலியேன் மானுட வாழ்க்கையொன் றாகக்கருதிடிற் கண்கணீர் பில்கும்
பலிதேர்ந் துண்பதோர் பண்புகண் டிகழேன்பசுவே ஏறிலும் பழியேன்
வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன்மாட்டேன் மறுமையை நினையேன்
நலியேன் ஒருவரை நானுமை யல்லால்நாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.8
154குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள்கொண்டா ராகிலுங் கொள்ளக்
கண்டா லுங்கரு தேன்எரு தேறுங்கண்ணா நின்னல தறியேன்
தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டுதொழுதேன் என்வினை போக
நண்டா டும்வயற் றண்டலை வேலிநாட்டியத் தான்குடி நம்பீ.
7.15.9
155கூடா மன்னரைக் கூட்டத்து வென்றகொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடிநம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் றொண்டீர்பாடநும் பாவம்பற் றறுமே.
7.15.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கரிநாதேசுவரர், தேவியார் – மலர்மங்கையம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.16 திருக்கலையநல்லூர்
பண் – தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

156குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டுகுறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து
விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்தவிண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியவூர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாடஅணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே.
7.16.1
157செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழிசெங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி
இருள்மேவும் அந்தகன்மேற் றிரிசூலம் பாய்ச்சிஇந்திரனைத் தோள்முரித்த இறையவனூர் வினவிற்
பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருக
கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங்களிவண்டின் கணமிரியுங் கலயநல்லூர் காணே.
7.16.2
158இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது வியற்றிஇனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்
துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத்தொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங்கனதூர் வினவில்
மண்டபமுங் கோபுரமும் மாளிகைசூ ளிகையும்மறையொலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்
கண்டவர்கண் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே.
7.16.3
159மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான்மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா
உலகுடன்றான் மூடவிருள் ஓடும்வகை நெற்றிஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர் வினவில்
அலையடைந்த புனல்பெருகி யானைமருப் பிடறிஅகிலொடுசந் துந்திவரும் அரிசிலின்றென் கரைமேற்
கலையடைந்து கலிகடியந் தணர்ஓமப் புகையாற்கணமுகில்போன் றணிகிளருங் கலயநல்லூர் காணே.
7.16.4
160நிற்பானுங் கமலத்தில் இருப்பானும் முதலாநிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய்
வெற்பார்வில் அரவுநாண் எரியம்பால் விரவார்புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவிற்
சொற்பால பொருட்பால சுருதியொரு நான்குந்தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் றிறத்தே
கற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார்கலைபயிலந் தணர்வாழுங் கலயநல்லூர் காணே.
7.16.5
161பெற்றிமையொன் றறியாத தக்கனது வேள்விப்பெருந்தேவர் *சிரந்தோள்பல் கரங்கண்பீ டழியச்
செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலாற் றேய்வித்தருள்பெருகு சிவபெருமான் சேர்தருமூர் வினவில்
தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமுந்திரைபொருது வருபுனல்சேர் #அரிசிலின்றென் கரைமேற்
கற்றினநன் கரும்பின்முளை கறிகற்கக் கறவைகமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே. 

*எச்சன்சிரம், இந்திரன்றோள், சூரியன்பல், அக்கினிதேவன்
கரம், பகன் என்னும் பெயருள்ள மற்றொரு சூரியன்கண்
இவை பீடழிந்தவை.

#விஷ்ணுவினால் சொல்லப்பட்டுவந்தமையால் அரிசொல்
நதியென்று பெயர். அது அரிசில் என மருவியிருக்கின்றது.
இதனைக் கும்பகோணப்புராணத்திற் கண்டுகொள்க.
7.16.6
162இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் டோ ளும்இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மே லூன்றி
நிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாச மாகிநிற்பனவும் நடப்பனவாம் நின்மலனூர் வினவிற்
பலங்கள்பல திரையுந்திப் பருமணிபொன் கொழித்துப்பாதிரிசந் தகிலினொடு கேதகையும் பருகிக்
கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்றென் கரைமேற்கயலுகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே.
7.16.7
163மாலயனுங் காண்பரிய மாலெரியாய் நிமிர்ந்தோன்வன்னிமதி சென்னிமிசை வைத்தவன்மொய்த் தெழுந்த
வேலைவிட முண்டமணி கண்டன்விடை யூரும்விமலனுமை யவளோடு மேவியஊர் வினவிற்
சோலைமலி குயில்கூவக் கோலமயி லாலச்சுரும்பொடுவண் டிசைமுரலப் பசுங்கிளிசொற் றுதிக்கக்
காலையிலும் மாலையிலுங் கடவுளடி பணிந்துகசிந்தமனத் தவர்பயிலுங் கலயநல்லூர் காணே.
7.16.8
164பொரும்பலம துடையசுரன் தாரகனைப் பொருதுபொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன்
கரும்புவிலின் மலர்வாளிக் காமனுடல் வேவக்கனல்விழித்த கண்ணுதலோன் கருதுமூர் வினவில்
இரும்புனல்வெண் டிரைபெருகி ஏலம்இல வங்கம்இருகரையும் பொருதலைக்கும் அரிசிலின்றென் கரைமேற்
கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக்கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே.
7.16.9
165தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்திற்றடங்கொள்பெருங் கோயில்தனிற் றக்கவகை யாலே
வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்யமகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில்
வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின்விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்றென் கரைமேற்
கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்தகமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் காணே.
7.16.10
166தண்புனலும் வெண்மதியுந் தாங்கியசெஞ் சடையன்தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி
உண்பலிகொண் டுழல்பரமன் உறையுமூர் நிறைநீர்ஒழுகுபுனல் அரிசிலின்றென் கலயநல்லூர் அதனை
நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்
பண்பயிலும் பத்துமிவை பத்திசெய்து நித்தம்பாடவல்லா ரல்லலொடு பாவமிலர் தாமே.
7.16.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அமிர்தகலைநாதர், தேவியார் – அமிர்தவல்லியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.17 திருநாவலூர்
பண் – நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

167கோவலன் நான்முகன் வானவர்கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரந் தீயெழுவித்தவன் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை யாளுங்கொண்ட
நாவல னார்க்கிட மாவதுநந்திரு நாவலூரே.
7.17.1
168தன்மையி னாலடி யேனைத்தாம்ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன்என்பதோர் வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந்தென்னைப்போ கம்புணர்த்த
நன்மையி னார்க்கிட மாவதுநந்திரு நாவலூரே.
7.17.2
169வேகங்கொண் டோ டிய வெள்விடைஏறியோர் மெல்லியலை
ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டார்
போகங்கொண் டார்*கடற் கோடியின்மோடியைப் பூண்பதாக
நாகங்கொண் டார்க்கிட மாவதுநந்திரு நாவலூரே. 

*கடற்கோடி என்பது கோடிக்குழகரென்னுந்தலம்.மோடி என்பது 
அங்குக் கோயில் கொண்டிருக்கும் துர்க்கை.
7.17.3
170அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற்சேவினை ஆட்சிகொண்டார்
தஞ்சங்கொண் டாரடிச் சண்டியைத்தாமென வைத்துகந்தார்
நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டு
நஞ்சங்கொண் டார்க்கிட மாவதுநந்திரு நாவலூரே.
7.17.4
171உம்பரார் கோனைத்திண் டோ ள்முரித்தாருரித் தார்களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ணநீற்றரோர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிட மாவதுநந்திரு நாவலூரே.
7.17.5
172கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங்கோவலுங் கோத்திட்டையும்
வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்டார்
ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம்பலத்தே அருக்கனைமுன்
நாட்டங்கொண் டார்க்கிட மாவதுநந்திரு நாவலூரே.
7.17.6
173தாயவ ளாய்த்தந்தை யாகிச்சாதல் பிறத்தலின்றிப்
போயக லாமைத்தன் பொன்னடிக்கென்னைப் பொருந்தவைத்த
வேயவ னார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயக னார்க்கிட மாவதுநந்திரு நாவலூரே.
7.17.7
174வாயாடி மாமறை ஓதியோர்வேதிய னாகிவந்து
தீயாடி யார்சினக் கேழலின்பின்சென்றோர் வேடுவனாய்
வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயாடி யார்க்கிட மாவதுநந்திரு நாவலூரே.
7.17.8
175படமாடு பாம்பணை யானுக்கும்பாவைநல் லாள்தனக்கும்
வடமாடு மால்விடை ஏற்றுக்கும்பாகனாய் வந்தொருநாள்
இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில்வைத்தெனை ஆளுங்கொண்ட
நடமாடி யார்க்கிட மாவதுநந்திரு நாவலூரே.
7.17.9
176மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்கவொண் ணாததோர் வேழத்தினையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிட மாவதுநந்திரு நாவலூரே.
7.17.10
177நாதனுக் கூர்நமக் கூர்நரசிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும்ஊரணி நாவலூரென்
றோதநற் றக்கவன் றொண்டனாரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர்தம்வினை கட்டறுமே.
7.17.11


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நாவலீசுவரர், தேவியார் – சுந்தராம்பிகை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.18 திருவேள்விக்குடி
பண் – நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

178மூப்பதும் இல்லை பிறப்பதும்இல்லை இறப்பதில்லை
சேர்ப்பது காட்டகத் தூரினுமாகச்சிந் திக்கினல்லாற்
காப்பது வேள்விக் குடிதண்டுருத்தியெங் கோன்அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்நாமிவர்க் காட்படோ மே.
7.18.1
179கட்டக்காட் டில்நட மாடுவரியாவர்க்குங் காட்சியொண்ணார்
சுட்டவெண் ணீறணிந் தாடுவர்பாடுவர் தூயநெய்யால்
வட்டக்குண் டத்தில் எரிவளர்த்தோம்பி மறைபயில்வார்
அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல்நாமிவர்க் காட்படோ மே.
7.18.2
180பேருமோர் ஆயிரம் பேருடையார்பெண்ணோ டாணுமல்லர்
ஊரும தொற்றியூர் மற்றையூர்பெற்றவா நாமறியோம்
காருங் கருங்கடல் நஞ்சமுதுண்டுகண் டங்கறுத்தார்க்
காரம்பாம் பாவ தறிந்தோமேல்நாமிவர்க் காட்படோ மே.
7.18.3
181ஏனக்கொம் பும்மிள ஆமையும்பூண்டங்கோர் ஏறுமேறிக்
கானக்காட் டிற்றொண்டர் கண்டனசொல்லியுங் காமுறவே
மானைத்தோல் ஒன்றை உடுத்துப்புலித்தோல் பியற்குமிட்டு
யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல்நாமிவர்க் காட்படோ மே.
7.18.4
182ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர்ஊரிடு பிச்சையல்லாற்
பூட்டிக்கொண் டேற்றினை ஏறுவர்ஏறியோர் பூதந்தம்பாற்
பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொறும்பல பாம்புபற்றி
ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல்நாமிவர்க் காட்படோ மே.
7.18.5
183குறவனார் தம்மகள் தம்மகனார்மண வாட்டிகொல்லை
மறவனா ராயங்கோர் பன்றிப்பின்போவது மாயங்கண்டீர்
இறைவனார் ஆதியார் சோதியராயங்கோர் சோர்வுபடா
அறவனார் ஆவத றிந்தோமேல்நாமிவர்க் காட்படோ மே.
7.18.6
184பித்தரை ஒத்தொரு பெற்றியர்நற்றவை என்னைப்பெற்ற
முத்தவை தம்மனை தந்தைக்குந்தவ்வைக்குந் தம்பிரானார்
செத்தவர் தந்தலை யிற்பலிகொள்வதே செல்வமாகில்
அத்தவம் ஆவத றிந்தோமேல்நாமிவர்க் காட்படோ மே.
7.18.7
185உம்பரான் ஊழியான் ஆழியான்ஓங்கி மலருறைவான்
தம்பரம் அல்லவர் சிந்திப்பவர்தடு மாற்றறுப்பார்
எம்பரம் அல்லவர் என்னெஞ்சத்துள்ளும் இருப்பதாகில்
அம்பரம் ஆவத றிந்தோமேல்நாமிவர்க் காட்படோ மே.
7.18.8
186இந்திர னுக்கும் இராவணனுக்கும் அருள்புரிந்தார்
மந்திரம் ஓதுவர் மாமறைபாடுவர் மான்மறியர்
சிந்துரக் கண்ணனும் நான்முகனும்முட னாய்த்தனியே
அந்தரஞ் செல்வத றிந்தோமேல்நாமிவர்க் காட்படோ மே.
7.18.9
187கூடலர் மன்னன் குலநாவலூர்க்கோன் நலத்தமிழைப்
பாடவல் லபர மன்னடியார்க்கடி மைவழுவார்
நாடவல் லதொண்டன் ஆரூரன்ஆட்படு மாறுசொல்லிப்
பாடவல் லார்பர லோகத்திருப்பது பண்டமன்றே.
7.18.10


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.19 திருநின்றியூர்
பண் – நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

188அற்றவ னாரடி யார்தமக்காயிழை பங்கினராம்
பற்றவ னாரெம் பராபரரென்று பலர்விரும்பும்
கொற்றவ னார்குறு காதவர்ஊர்நெடு வெஞ்சரத்தால்
செற்றவ னார்க்கிட மாவதுநந்திரு நின்றியூரே.
7.19.1
189வாசத்தி னார்மலர்க் கொன்றையுள்ளார்வடி வார்ந்தநீறு
பூசத்தி னார்புக லிந்நகர்போற்றுமெம் புண்ணியத்தார்
நேசத்தி னாலென்னை யாளுங்கொண்டார்நெடு மாகடல்சூழ்
தேசத்தி னார்க்கிட மாவதுநந்திரு நின்றியூரே.
7.19.2
190அங்கையின் மூவிலை வேலர்அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித்தடங்கடல் நஞ்சமுண்டார்
மங்கையோர் பாகர் மகிழ்ந்தஇடம்வள மல்குபுனற்
செங்கயல் பாயும் வயல்பொலியுந்திரு நின்றியூரே.
7.19.3
191ஆறுகந் தாரங்கம் நான்மறையாரெங்கு மாகியடல்
ஏறுகந் தாரிசை ஏழுகந்தார்முடிக் கங்கைதன்னை
வேறுகந் தார்விரி நூலுகந்தார்பரி சாந்தமதா
நீறுகந் தாருறை யும்மிடமாந்திரு நின்றியூரே.
7.19.4
192வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில்லார்நறு நெய்தயிர்பால்
அஞ்சுங்கொண் டாடிய வேட்கையினாரதி கைப்பதியே
தஞ்சங்கொண் டார்தமக் கென்றும்இருக்கை சரணடைந்தார்
நெஞ்சங்கொண் டார்க்கிட மாவதுநந்திரு நின்றியூரே.
7.19.5
193ஆர்த்தவர் ஆடர வம்மரைமேற்புலி ஈருரிவை
போர்த்தவர் ஆனையின் தோலுடல்வெம்புலால் கையகலப்
பார்த்தவ ரின்னுயிர் பார்படைத்தான்சிர மஞ்சிலொன்றைச்
சேர்த்தவ ருக்குறை யும்மிடமாந்திரு நின்றியூரே.
7.19.6
194தலையிடை யார்பலி சென்றகந்தோறுந் திரிந்தசெல்வர்
மலையுடை யாளொரு பாகம்வைத்தார்கல் துதைந்தநன்னீர்
அலையுடை யார்சடை எட்டுஞ்சுழல அருநடஞ்செய்
நிலையுடை யாருறை யும்மிடமாந்திரு நின்றியூரே.
7.19.7
195எட்டுகந் தார்திசை ஏழுகந்தார்எழுத் தாறுமன்பர்
இட்டுகந் தார்மலர்ப் பூசையிச்சிக்கும் இறைவர்முன்னாள்
பட்டுகும் பாரிடைக் காலனைக்காய்ந்து பலியிரந்தூண்
சிட்டுகந் தார்க்கிட மாவதுநந்திரு நின்றியூரே.
7.19.8
196காலமும் ஞாயிறு மாகிநின்றார்கழல் பேணவல்லார்
சீலமுஞ் செய்கையுங் கண்டுகப்பாரடி போற்றிசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன்மந்திரத் தால்வணங்க
நீலநஞ் சுண்டவ ருக்கிடமாந்திரு நின்றியூரே.
7.19.9
197வாயார் மனத்தால் நினைக்குமவருக் கருந்தவத்தில்
தூயார் சுடுபொடி யாடியமேனியர் வானிலென்றும்
மேயார் விடையுகந் தேறியவித்தகர் பேர்ந்தவர்க்குச்
சேயார் அடியார்க் கணியவர்ஊர்திரு நின்றியூரே.
7.19.10
198சேரும் புகழ்த்தொண்டர் செய்கைஅறாத்திரு நின்றியூரிற்
சீருஞ் சிவகதி யாயிருந்தானைத் திருநாவலா
ரூரன் உரைத்த உறுதமிழ்பத்தும்வல் லார்வினைபோய்ப்
பாரும் விசும்புந் தொழப்பரமன்னடி கூடுவரே.
7.19.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மகாலட்சுமியீசுவரர், தேவியார் – உலகநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.20 திருக்கோளிலி
பண் – நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

199நீள நினைந்தடி யேனுமைநித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மட வாளவள்வாடி வருந்தாமே
கோளிலி எம்பெரு மான்குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெரு மானவைஅட்டித் தரப்பணியே.
7.20.1
200வண்டம ருங்குழ லாளுமைநங்கையோர் பங்குடையாய்
விண்டவர் தம்புர மூன்றெரிசெய்தவெம் வேதியனே
தெண்டிரை நீர்வயல் சூழ்திருக்கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவ னேயவைஅட்டித் தரப்பணியே.
7.20.1
201பாதியோர் பெண்ணைவைத் தாய்படருஞ்சடைக் கங்கைவைத்தாய்
மாதர்நல் லார்வருத் தம்மதுநீயும் அறிதியன்றே
கோதில் பொழில்புடை சூழ்குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆதியே அற்புத னேயவைஅட்டித் தரப்பணியே.
7.20.3
202சொல்லுவ தென்னுனை நான்தொண்டைவாயுமை நங்கையைநீ
புல்கி இடத்தில்வைத் தாய்க்கொருபூசல்செய் தாருளரோ
கொல்லை வளம்புற விற்குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
அல்லல் களைந்தடி யேற்கவைஅட்டித் தரப்பணியே.
7.20.4
203முல்லை முறுவல் உமையொருபங்குடை முக்கணனே
பல்லயர் வெண்டலை யிற்பலிகொண்டுழல் பாசுபதா
கொல்லை வளம்புற விற்றிருக்கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்தடி யேற்கவைஅட்டித் தரப்பணியே.
7.20.5
204குரவம ருங்குழ லாளுமைநங்கையோர் பங்குடையாய்
பரவை பசிவருத் தம்மதுநீயும் அறிதியன்றே
குரவம ரும்பொழில் சூழ்குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
அரவ மசைத்தவ னேயவைஅட்டித் தரப்பணியே.
7.20.6
205எம்பெரு மானுனை யேநினைந்தேத்துவன் எப்பொழுதும்
வம்பம ருங்குழ லாளொருபாகம மர்ந்தவனே
செம்பொனின் மாளிகை சூழ்திருக்கோளிலி எம்பெருமான்
அன்பது வாயடி யேற்கவைஅட்டித் தரப்பணியே.
7.20.7
206அரக்கன் முடிகரங் கள்அடர்த்திட்டவெம் மாதிபிரான்
பரக்கும் அரவல்கு லாள்பரவையவள் வாடுகின்றாள்
குரக்கினங் கள்குதி கொள்குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
இரக்கம தாயடி யேற்கவைஅட்டித் தரப்பணியே.
7.20.8
207பண்டைய மால்பிர மன்பறந்தும்மிடந் தும்மயர்ந்துங்
கண்டில ராயவர் கள்கழல்காண்பரி தாயபிரான்
தெண்டிரை நீர்வயல் சூழ்திருக்கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவ னேயவைஅட்டித் தரப்பணியே.
7.20.9
208கொல்லை வளம்புற விற்றிருக்கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பர வுந்திருநாவல வூரனவன்
நெல்லிட ஆட்கள்வேண் டிநினைந்தேத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்துல கின்அண்டர்வானுல காள்பவரே.
7.20.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கோளிலிநாதர்,
தேவியார் – வண்டமர்பூங்குழலம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.21 திருக்கச்சிமேற்றளி
பண் – நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

209நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய் மனமே புகுந்துநின்ற
சிந்தாய் எந்தைபிரான் திருமேற் றளியுறையும்
எந்தாய் உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே.
7.21.1
210ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக்
கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்
சேட்டார் மாளிகைசூழ் திருமேற் றளியுறையும்
மாட்டே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.
7.21.2
211மோறாந் தோரொருகால் நினையா திருந்தாலும்
வேறா வந்தென்னுள்ளம் புகவல்ல மெய்ப்பொருளே
சேறார் தண்கழனித் திருமேற் றளியுறையும்
ஏறே உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே.
7.21.3
212உற்றார் சுற்றமெனும் அதுவிட்டு நுன்னடைந்தேன்
எற்றால் என்குறைவென் இடரைத் துறந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலுந் திருமேற் றளியுறையும்
பற்றே நுன்னையல்லால் பணிந்தேத்த மாட்டேனே.
7.21.4
213எம்மான் எம்மனையென் றவரிட் டிறந்தொழிந்தார்
மெய்ம்மா லாயினதீர்த் தருள்செய்யும் மெய்ப்பொருளே
கைம்மா வீருரியாய் கனமேற் றளியுறையும்
பெம்மான் உன்னையல்லால் பெரிதேத்த மாட்டேனே.
7.21.5
214நானேல் உன்னடியே நினைந்தேன் நினைதலுமே
ஊனேர் இவ்வுடலம் புகுந்தாயென் ஒண்சுடரே
தேனே இன்னமுதே திருமேற் றளியுறையுங்
கோனே உன்னையல்லாற் குளிர்ந்தேத்த மாட்டேனே.
7.21.6
215கையார் வெஞ்சிலைநா ணதன்மேற் சரங்கோத்தே
எய்தாய் மும்மதிலும் எரியுண்ண எம்பெருமான்
செய்யார் பைங்கமலத் திருமேற் றளியுறையும்
ஐயா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
7.21.7
216விரையார் கொன்றையினாய் விமலாஇனி உன்னையல்லால்
உரையேன் நாவதனால் உடலில்லுயிர் உள்ளளவும்
திரையார் தண்கழனித் திருமேற் றளியுறையும்
அரையா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
7.21.8
217நிலையாய் நின்னடியே நினைந்தேன் நினைதலுமே
தலைவா நின்னினையப் பணித்தாய் சலமொழிந்தேன்
சிலையார் மாமதில்சூழ் திருமேற் றளியுறையும்
மலையே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.
7.21.9
218பாரூர் பல்லவனூர் மதிற்காஞ்சி மாநகர்வாய்ச்
சீரூ ரும்புறவிற் றிருமேற் றளிச்சிவனை
ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் ஆரூரன்சொன்ன
சீரூர் பாடல்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே.
7.21.10


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – திருமேற்றளியீசுவரர், தேவியார் – காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.22 திருப்பழமண்ணிப்படிக்கரை
பண் – நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

219முன்னவன் எங்கள்பிரான் முதற்காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான் திருநீலமி டற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான் மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான் பழமண்ணிப் படிக்கரையே.
7.22.1
220அண்ட கபாலஞ்சென்னி அடிமேலல ரிட்டுநல்ல
தொண்டங் கடிபரவித் தொழுதேத்திநின் றாடுமிடம்
வெண்டிங்கள் வெண்மழுவன் விரையார்கதிர் மூவிலைய
பண்டங்கன் மேயவிடம் பழமண்ணிப் படிக்கரையே.
7.22.2
221ஆடுமின் அன்புடையீர் அடிக்காட்பட்ட தூளிகொண்டு
சூடுமின் தொண்டருள்ளீர் உமரோடெமர் சூழவந்து
வாடுமிவ் வாழ்க்கைதன்னை வருந்தாமல் திருந்தச்சென்று
பாடுமின் பத்தருள்ளீர் பழமண்ணிப் படிக்கரையே.
7.22.3
222அடுதலை யேபுரிந்தான் அவைஅந்தர மூவெயிலுங்
கெடுதலை யேபுரிந்தான் கிளருஞ்சிலை நாணியிற்கோல்
நடுதலை யேபுரிந்தான் நரிகான்றிட்ட எச்சில்வெள்ளைப்
படுதலை யேபுரிந்தான் பழமண்ணிப் படிக்கரையே.
7.22.4
223உங்கைக ளாற்கூப்பி உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர்
மங்கையோர் கூறுடையான் வானோர்முத லாயபிரான்
அங்கையில் வெண்மழுவன் அலையார்கதிர் மூவிலைய
பங்கய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே.
7.22.5
224செடிபடத் தீவிளைத்தான் சிலையார்மதில் செம்புனஞ்சேர்
கொடிபடு மூரிவெள்ளை எருதேற்றையும் ஏறக்கொண்டான்
கடியவன் காலன்றன்னைக் கறுத்தான்கழற் செம்பவளப்
படியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக்கரையே.
7.22.6
225கடுத்தவன் தேர்கொண்டோ டிக் கயிலாயநன் மாமலையை
எடுத்தவன் ஈரைந்துவாய் அரக்கன்முடி பத்தலற
விடுத்தவன் கைநரம்பால் வேதகீதங்கள் பாடலுறப்
படுத்தவன் பால்வெண்ணீணற்றன் பழமண்ணிப் படிக்கரையே.
7.22.7
226திரிவன மும்மதிலும் எரித்தான்இமை யோர்பெருமான்
அரியவன் *அட்டபுட்பம் அவைகொண்டடி போற்றிநல்ல
கரியவன் நான்முகனும் அடியும்முடி காண்பரிய
பரியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக் கரையே. 

*அட்டபுட்பமாவன து புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம்,
நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை
என்னுமிவற்றின் புட்பங்களாம். இவை புலரி முதலிய
காலங்களிற் சாத்தும் அட்டபுட்பம். மற்றுமுள்ளவைகளைப்
புட்பவிதியிற் காண்க.
7.22.8
227வெற்றரைக் கற்றமணும் விரையாதுவிண் டாலமுண்ணுந்
துற்றரைத் துற்றறுப்பான் றுன்னஆடைத் தொழிலுடையீர்
பெற்றரைப் பித்தரென்று கருதேன்மின் படிக்கரையுள்
பற்றரைப் பற்றிநின்று பழிபாவங்கள் தீர்மின்களே.
7.22.9
228பல்லுயிர் வாழுந்தெண்ணீணர்ப் பழமண்ணிப் படிக்கரையை
அல்லியந் தாமரைத்தார் ஆரூரன் உரைத்ததமிழ்
சொல்லுதல் கேட்டல்வல்லா ரவர்க்குந்தமர்க் குங்கிளைக்கும்
எல்லியும் நன்பகலும் இடர்கூருதல் இல்லையன்றே.
7.22.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நீலகண்டேசுவரர்,
தேவியார் – வடிக்கண்ணமுதகரநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.23 திருக்கழிப்பாலை
பண் – நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

229செடியேன் தீவினையிற் றடுமாறக் கண்டாலும்
அடியான் ஆவவெனா தொழிதல் தகவாமே
முடிமேல் மாமதியும் அரவும் உடன்றுயிலும்
வடிவே தாமுடையார் மகிழுங்கழிப் பாலையதே.
7.23.1
230எங்கே னும்மிருந்துன் அடியே னுனைநினைந்தால்
அங்கே வந்தென்னோடும் உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை அறுத்திட் டெனையாளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.
7.23.2
231ஒறுத்தாய் நின்னருளில் அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச்
செறுத்தாய் வேலைவிட மறியாமல் உண்டுகண்டங்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே.
7.23.3
232சுரும்பார் விண்டமலர் அவைதூவித் தூங்குகண்ணீர்
அரும்பா நிற்குமனத் தடியாரொடும் அன்புசெய்வன்
விரும்பேன் உன்னையல்லால் ஒருதெய்வம் என்மனத்தாற்
கரும்பா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே.
7.23.4
233ஒழிப்பாய் என்வினையை உகப்பாய் முனிந்தருளித்
தெழிப்பாய் மோதுவிப்பாய் விலையா வணமுடையாய்
கழிப்பால் கண்டடங்கச் சுழியேந்து மாமறுகிற்
கழிப்பா லைமருவுங் கனலேந்து கையானே.
7.23.5
234ஆர்த்தாய் ஆடரவை அரையார் புலியதள்மேற்
போர்த்தாய் ஆனையின்றோல் உரிவை புலால்நாறக்
காத்தாய் தொண்டுசெய்வார் வினைகள் அவைபோகப்
பார்த்தா னுக்கிடமாம் பழியில்கழிப் பாலையதே.
7.23.6
235பருத்தாள் வன்பகட்டைப் படமாகமுன் பற்றியதள்
உரித்தாய் ஆனையின்றோல் உலகந்தொழும் உத்தமனே
எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர்கடியுங்
கருத்தா தண்கழனிக் கழிப்பாலை மேயானே.
7.23.7
236படைத்தாய் ஞாலமெலாம் படர்புன்சடை எம்பரமா
உடைத்தாய் வேள்விதனை உமையாளையோர் கூறுடையாய்
அடர்த்தாய் வல்லரக்கன் றலைபத்தொடு தோள்நெரியக்
கடற்சா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே.
7.23.8
237பொய்யா நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்றெரியும் விளக்கேயொத்த தேவர்பிரான்
செய்யா னுங்கரிய நிறத்தானுந் தெரிவரியான்
மையார் கண்ணியொடு மகிழ்வான்கழிப் பாலையதே.
7.23.9
238பழிசே ரில்புகழான் பரமன் பரமேட்டி
கழியார் செல்வமல்குங் கழிப்பாலை மேயானைத்
தொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்
வழுவா மாலைவல்லார் வானோருல காள்பவரே.
7.23.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பால்வண்ணநாதர்,
தேவியார் – பொற்பதவேதநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.24 திருமழபாடி
பண் – நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

239பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.1
240கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலைவாயெனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.2
241எம்மான் எம்மனையென் றெனக்கெட்டனைச் சார்வாகார்
இம்மா யப்பிறவி பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.3
242பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாந்
தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன்
வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.4
243கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.5
244நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே
ஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.6
245சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.7
246வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாஞ்
செய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.8
247நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றிசெய்யுங்
குறியே நீர்மையனே கொடியேரிடை யாள்தலைவா
மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
7.24.9
248ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.
7.24.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வச்சிரத்தம்பநாதர், தேவியார் – அழகம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.25 திருமுதுகுன்றம்
பண் – நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

249பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் எரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள் அடியே*னிட் டளங்கெடவே. 

*இட்டளம் து துன்பம்.
7.25.1
250உம்பரும் வானவரும் உடனேநிற்க வேயெனக்குச்
செம்பொனைத் தந்தருளித் திகழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள் பரவையிவள் வாடுகின்றாள்
எம்பெரு மானருளீர் அடியேனிட் டளங்கெடவே.
7.25.2
251பத்தா பத்தர்களுக் கருள்செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே
மைத்தா ருந்தடங்கண் பரவையிவள் வாடாமே
அத்தா தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.
7.25.3
252மங்கையோர் கூறமர்ந்தீர் மறைநான்கும் விரித்துகந்தீர்
திங்கள் சடைக்கணிந்தீர் திகழும்முது குன்றமர்ந்தீர்
கொங்கைநல் லாள்பரவை குணங்கொண்டிருந் தாள்முகப்பே
அங்கண னேயருளாய் அடியேனிட் டளங்கெடவே.
7.25.4
253மையா ரும்மிடற்றாய் மருவார்புரம் மூன்றெரித்த
செய்யார் மேனியனே திகழும்முது குன்றமர்ந்தாய்
பையா ரும்மரவே ரல்குலாளிவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.
7.25.5
254நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும்
முடியால் வந்திறைஞ்ச முதுகுன்ற மமர்ந்தவனே
படியா ரும்மியலாள் பரவையிவள் தன்முகப்பே
அடிகேள் தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.
7.25.6
255கொந்தண வும்பொழில்சூழ் குளிர்மாமதில் மாளிகைமேல்
வந்தண வும்மதிசேர் சடைமாமுது குன்றுடையாய்
பந்தண வும்விரலாள் பரவையிவள் தன்முகப்பே
அந்தண னேயருளாய் அடியேனிட் டளங்கெடவே.
7.25.7
256பரசா ருங்கரவா பதினெண்கண முஞ்சூழ
முரசார் வந்ததிர முதுகுன்ற மமர்ந்தவனே
விரைசே ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.
7.25.8
257ஏத்தா திருந்தறியேன் இமையோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லாம் முதுகுன்ற மமர்ந்தவனே
பூத்தா ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய் கொடியேனிட் டளங்கெடவே.
7.25.9
258பிறையா ருஞ்சடையெம் பெருமான் அருளாயென்று
முறையால் வந்தமரர் வணங்கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில் வயல்நாவலா ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க் கெளிதாஞ்சிவ லோகமதே.

திருமுதுகுன்றமென்னும் விருத்தாசலத்தில் பரமசிவம்
அருளிச்செய்த பொன்னை மணிமுத்தா நதியில்
விட்டுப்போய்த் திருவாரூர்க்கமலாலயமென்னுந்
திருக்குளத்திலிறங்கிக் கையால்தடவும்போதோதிய
பதிகம். அவ்வாறு தடவும்போது, “எத்தாதிருந்தறியே
னென்னுந்” தேவாரமோதுகையில் பொருளகப்பட்டது.
7.25.10


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பழமலைநாதர், தேவியார் – பெரியநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.26 திருக்காளத்தி
பண் – நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

259செண்டா டும்விடையாய் சிவனேயென் செழுஞ்சுடரே
வண்டாருங் குழலா ளுமைபாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கணநாதனெங் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
7.26.1
260இமையோர் நாயகனே இறைவாவென் னிடர்த்துணையே
கமையார் கருணையினாய் கருமாமுகில் போல்மிடற்றாய்
உமையோர் கூறுடையாய் உருவேதிருக் காளத்தியுள்
அமைவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
7.26.2
261படையார் வெண்மழுவா பகலோன்பல் லுகுத்தவனே
விடையார் வேதியனே விளங்குங்குழைக் காதுடையாய்
கடையார் மாளிகைசூழ் கணநாதனெங் காளத்தியாய்
உடையாய் உன்னையல்லால் உகந்தேத்த மாட்டேனே.
7.26.3
262மறிசேர் கையினனே மதமாவுரி போர்த்தவனே
குறியே என்னுடைய குருவேயுன்குற் றேவல்செய்வேன்
நெறியே நின்றடியார் நினைக்குந்திருக் காளத்தியுள்
அறிவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
7.26.4
263செஞ்சே லன்னகண்ணார் திறத்தேகிடந் துற்றலறி
நஞ்சேன் நானடியேன் நலமொன்றறி யாமையினாற்
துஞ்சேன் நானொருகாற் றொழுதேன்றிருக் காளத்தியாய்
அஞ்சா துன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
7.26.5
264பொய்யவன் நாயடியேன் புகவேநெறி ஒன்றறியேன்
செய்யவ னாகிவந்திங் கிடரானவை தீர்த்தவனே
மெய்யவ னேதிருவே விளங்குந்திருக் காளத்தியென்
ஐயநுன் றன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
7.26.6
265கடியேன் காதன்மையாற் கழற்போதறி யாதவென்னுள்
குடியாக் கோயில்கொண்ட குளிர்வார்சடை யெங்குழகா
முடியால் வானவர்கள் முயங்குந்திருக் காளத்தியாய்
அடியேன் உன்னையல்லால் அறியேன்மற் றொருவரையே.
7.26.7
266நீறார் மேனியனே நிமலாநினை யன்றிமற்றுக்
கூறேன் நாவதனாற் கொழுந்தேயென் குணக்கடலே
பாறார் வெண்டலையிற் பலிகொண்டுழல் காளத்தியாய்
ஏறே உன்னையல்லால் இனிஏத்த மாட்டேனே.
7.26.8
267தளிர்போல் மெல்லடியாள் தனைஆகத் தமர்ந்தருளி
எளிவாய் வந்தென்னுள்ளம் புகுதவல்ல எம்பெருமான்
களியார் வண்டறையுந் திருக்காளத்தி யுள்ளிருந்த
ஒளியே உன்னையல்லால் இனியொன்றும் உணரேனே.
7.26.9
268காரா ரும்பொழில்சூழ் கணநாதனெங் காளத்தியுள்
ஆரா வின்னமுதை அணிநாவலா ரூரன்சொன்ன
சீரூர் செந்தமிழ்கள் செப்புவார்வினை யாயினபோய்ப்
பேரா விண்ணுலகம் பெறுவார்பிழைப் பொன்றிலரே.
7.26.10


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – காளத்திநாதர், தேவியார் – ஞானப்பூங்கோதையம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.27 திருக்கற்குடி
பண் – நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

269விடையா ருங்கொடியாய் வெறியார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.
7.27.1
270மறையோர் வானவருந் தொழுதேத்தி வணங்கநின்ற
இறைவா எம்பெருமான் எனக்கின்னமு தாயவனே
கறையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சலென்னே.
7.27.2
271சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே மடமாதிடங் கொண்டவனே
கலைசேர் கையினனே திருக்கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சலென்னே.
7.27.3
272செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா மதயானை உரித்தவனே
கையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
ஐயா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.
7.27.4
273சந்தார் வெண்குழையாய் சரிகோவண ஆடையனே
பந்தா ரும்விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனே
கந்தார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
எந்தாய் எம்பெருமான் அடியேனையும் ஏன்றுகொள்ளே.
7.27.5
274அரையார் கீளொடுகோ வணமும் அரைக்கசைத்து
விரையார் கொன்றையுடன் விளங்கும்பிறை மேலுடையாய்
கரையா ரும்வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அரையா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.
7.27.6
275பாரார் விண்ணவரும் பரவிப்பணிந் தேத்தநின்ற
சீரார் மேனியனே திகழ்நீல மிடற்றினனே
காரார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
ஆரா இன்னமுதே அடியேனையும் அஞ்சலென்னே.
7.27.7
276நிலனே நீர்வளிதீ நெடுவானக மாகிநின்ற
புலனே புண்டரிகத் தயன்மாலவன் போற்றிசெய்யுங்
கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே அடியேனையும் அஞ்சலென்னே.
7.27.8
277வருங்கா லன்னுயிரை மடியத்திரு மெல்விரலாற்
பெரும்பா லன்றனக்காய்ப் பிரிவித்த பெருந்தகையே
கரும்பா ரும்வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே.
7.27.9
278அலையார் தண்புனல்சூழ்ந் தழகாகி விழவமருங்
கலையார் மாதவர்சேர் திருக்கற்குடிக் கற்பகத்தைச்
சிலையார் வாணுதலாள் நல்லசிங்கடி யப்பன்உரை
விலையார் மாலைவல்லார் வியன்மூவுல காள்பவரே.
7.27.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – உச்சிவரதநாயகர், தேவியார் – அஞ்சனாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.28 திருக்கடவூர்வீரட்டம்
பண் – நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

279பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடுங்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
7.28.1
280பிறையா ருஞ்சடையாய் பிரமன்றலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறையின்பொரு ளானவனே
கறையா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
7.28.2
281அன்றா லின்னிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய்மறை யோனுக்குமான்
கன்றாருங் கரவா கடவூர்த்திரு வீரட்டத்துள்
என்றா தைபெருமான் எனக்கார்துணை நீயலதே.
7.28.3
282போரா ருங்கரியின் னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்
தாரா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
7.28.4
283மையார் கண்டத்தினாய் மதமாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருள் புகுந்தாயின்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கடவூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
7.28.5
284மண்ணீர் தீவெளிகால் வருபூதங்க ளாகிமற்றும்
பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனே
கண்ணா ரும்மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
7.28.6
285எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே
நரியா ருஞ்சுடலை நகுவெண்டலை கொண்டவனே
கரியார் ஈருரியாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
7.28.7
286வேறா உன்னடியேன் விளங்குங்குழைக் காதுடையாய்
தேறேன் உன்னையல்லாற் சிவனேயென் செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கடவூர்த்திரு வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக்கார்துணை நீயலதே.
7.28.8
287அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரிய
பயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கடவூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
7.28.9
288காரா ரும்பொழில்சூழ் கடவூர்த்திரு வீரட்டத்துள்
ஏரா ரும்மிறையைத் துணையாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் உரைத்ததமிழ்
பாரோ ரேத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.
7.28.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அமிர்தகடேசுவரர்,
தேவியார் – அபிராமியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.29 திருக்குருகாவூர்
பண் – நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

289இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்
பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
7.29.1
290ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங்
காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
7.29.2
291பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்
ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே
காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும்
வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
7.29.3
292வெப்பொடு பிணியெல்லாந் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை
அப்படி அழகாய அணிநடை மடவன்னம்
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
7.29.4
293வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
7.29.5
294பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
7.29.6
295போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை
நோந்தன செய்தாலும் நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை ஆட்கொண்ட
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
7.29.7
296மலக்கில்நின் னடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய்
சலச்சல மிடுக்குடைய தருமனார் தமரென்னைக்
கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
7.29.8
297படுவிப்பாய் உனக்கேயாட் பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்னடிக்கே
விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
7.29.9
298வளங்கனி பொழில்மல்கு வயலணிந் தழகாய
விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானை
இளங்கிளை ஆரூரன் வனப்பகை யவளப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே.
7.29.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வெள்ளிடையப்பர்,
தேவியார் – காவியங்கண்ணியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.30 திருக்கருப்பறியலூர்
பண் – நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

299சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில்வைத்துகந்து திறம்பா வண்ணங்
கைம்மாவின் உரிவைபோர்த் துமைவெருவக்கண்டானைக் கருப்ப றியலூர்க்
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாடமயிலாடுங் கொகுடிக் கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோதவர்நமக் கினிய வாறே.
7.30.1
300நீற்றாரும் மேனியராய் நினைவார்தம்உள்ளத்தே நிறைந்து தோன்றுங்
காற்றானைத் தீயானைக் கதிரானைமதியானைக் கருப்ப றியலூர்க்
கூற்றானைக் கூற்றுதைத்துக் கோல்வளையாள்அவளோடுங் கொகுடிக் கோயில்
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோதவர்நமக் கினிய வாறே.
7.30.2
301முட்டாமே நாடோ றும் நீர்மூழ்கிப்பூப்பறித்து மூன்று போதுங்
கட்டார்ந்த இண்டைகொண் டடிச்சேர்த்தும்அந்தணர்தங் கருப்ப றியலூர்
கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக்குழகனைக் கொகுடிக் கோயில்
எட்டான மூர்த்தியை நினைந்தபோதவர்நமக் கினிய வாறே.
7.30.3
302விருந்தாய சொன்மாலை கொண்டேத்திவினைபோக வேலி தோறுங்
கருந்தாள வாழைமேற் செங்கனிகள்தேன்சொரியுங் கருப்ப றியலூர்க்
குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையாள்அவளோடுங் கொகுடிக் கோயில்
இருந்தானை மனத்தினால் நினைந்தபோதவர்நமக் கினிய வாறே.
7.30.4
303பொடியேறு திருமேனிப் பெருமானைப்பொங்கரவக் கச்சை யானைக்
கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளைகுதிகொள்ளுங் கருப்ப றியலூர்க்
கொடியேறி வண்டினமுந் தண்டேனும்பண்செய்யுங் கோகுடிக் கோயில்
அடியேறு கழலானை நினைந்தபோதவர்நமக் கினிய வாறே.
7.30.5
304பொய்யாத வாய்மையாற் பொடிப்பூசிப்போற்றிசைத்துப் பூசை செய்து
கையினா லெரியோம்பி மறைவளர்க்கும்அந்தணர்தங் கருப்ப றியலூர்க்
கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவமயிலாலுங் கொகுடிக் கோயில்
ஐயனையென் மனத்தினால் நினைந்தபோதவர்நமக் கினிய வாறே.
7.30.6
305செடிகொள்நோய் உள்ளளவுந் தீவினையுந்தீர்ந்தொழியச் சிந்தை செய்ம்மின்
கடிகொள்பூந் தடமண்டிக் கருமேதிகண்படுக்குங் கருப்ப றியலூர்க்
கொடிகொள்பூ நுண்ணிடையாள் கோல்வளையாள்அவளோடுங் கொகுடிக் கோயில்
அடிகளையென் மனத்தினால் நினைந்தபோதவர்நமக் கினிய வாறே.
7.30.7
306பறையாத வல்வினைகள் பறைந்தொழியப்பன்னாளும் பாடி யாடிக்
கறையார்ந்த கண்டத்தன் எண்டோ ளன்முக்கண்ணன் கருப்ப றியலூர்க்
குறையாத மறைநாவர் குற்றேவல்ஒழியாத கொகுடிக் கோயில்
உறைவானை மனத்தினால் நினைந்தபோதவர்நமக் கினிய வாறே.
7.30.8
307சங்கேந்து கையானுந் தாமரையின்மேலானுந் தன்மை காணாக்
கங்கார்ந்த வார்சடைகள் உடையானைவிடையானைக் கருப்ப றியலூர்க்
கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள்பலவுதிர்க்குங் கொகுடிக் கோயில்
எங்கோனை மனத்தினால் நினைந்தபோதவர்நமக் கினிய வாறே.
7.30.9
308பண்டாழின் இசைமுரலப் பன்னாளும்பாவித்துப் பாடி யாடிக்
கண்டார்தங் கண்குளிருங் களிக்கமுகம்பூஞ்சோலைக் கருப்ப றியலூர்க்
குண்டாடுஞ் சமணருஞ் சாக்கியரும்புறங்கூறுங் கொகுடிக் கோயில்
எண்டோ ளெம் பெருமானை நினைந்தபோதவர்நமக் கினிய வாறே.
7.30.10
309கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம்மிடர்தீர்க்குங் கருப்ப றியலூர்க்
குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும்பூஞ்சோலைக் கொகுடிக் கோயில்
இலைமலிந்த மழுவானை மனத்தினாலன்புசெய் தின்ப மெய்தி
மலைமலிந்த தோள்ஊரன் வனப்பகையப்பன்னுரைத்த வண்ட மிழ்களே.
7.30.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – குற்றம்பொறுத்தவீசுவரர்,
தேவியார் – கோல்வளைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.31 திருஇடையாற்றுத்தொகை
பண் – கொல்லி

திருச்சிற்றம்பலம்

310முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம்
சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர்
பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி
எந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே.
7.31.1
311சுற்றுமூர் சுழியல் திருச்சோ புரந்தொண்டர்
ஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறல் ஒழியாப்
பெற்றமேறிப் பெண்பாதி யிடம்பெண்ணைத் தெண்ணீர்
எற்றுமூர் எய்தமான் இடையா றிடைமருதே.
7.31.2
312கடங்களூர் திருக்காரிக் கரைகயி லாயம்
விடங்களூர் திருவெண்ணி அண்ணா மலைவெய்ய
படங்களூர் கின்றபாம் பரையான் பரஞ்சோதி
இடங்கொளூர் எய்தமான் இடையா றிடைமருதே.
7.31.3
313கச்சையூர் காவங் கழுக்குன்றங் காரோணம்
பிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறூர்
கச்சியூர் கச்சிசிக்கல் நெய்த்தானம் மிழலை
இச்சையூர் எய்தமான் இடையா றிடைமருதே.
7.31.4
314நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த
பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப் புலியூர்
மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த
இறைவனூர் எய்தமான் இடையா றிடைமருதே.
7.31.5
315திங்களூர் திருவா திரையான் பட்டினமூர்
நங்களூர் நறையூர் நனிநா லிசைநாலூர்
தங்களூர் தமிழான் என்றுபா விக்கவல்ல
எங்களூர் எய்தமான் இடையா றிடைமருதே.
7.31.6
316கருக்கநஞ் சமுதுண்ட கல்லாலன் கொல்லேற்றன்
தருக்கருக் கனைச்செற் றுகந்தான்றன் முடிமேல்
எருக்கநாண் மலரிண்டை யும்மத்த முஞ்சூடி
இருக்குமூர் எய்தமான் இடையா றிடைமருதே.
7.31.7
317தேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர்
பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ
நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த
ஈசனூர் எய்தமான் இடையா றிடைமருதே.
7.31.8
318பேறனூர் பிறைச்சென் னியினான் பெருவேளூர்
தேறனூர் திருமா மகள்கோன் றிருமாலோர்
கூறனூர் குரங்காடு துறைதிருக் கோவல்
ஏறனூர் எய்தமான் இடையா றிடைமருதே.
7.31.9
319ஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன்
தேறுவார் சிந்தைதேறு மிடஞ்செங்கண் வெள்ளே
றேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக்
கூறுவார் வினையெவ் விடமெய் குளிர்வாரே.
7.31.10


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.32 திருக்கோடிக்குழகர்
பண் – கொல்லி

திருச்சிற்றம்பலம்

320கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற்
குடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே.
7.32.1
321முன்றான் கடல்நஞ்ச முண்ட அதனாலோ
பின்றான் பரவைக் குபகாரஞ் செய்தாயோ
குன்றாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா
என்றான் தனியே இருந்தாய் எம்பிரானே.
7.32.2
322மத்தம் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால்
பத்தர் பலர்பாட இருந்த பரமா
கொத்தார் பொழில்சூழ் தருகோடிக் குழகா
எத்தாற் றனியே இருந்தாய் எம்பிரானே.
7.32.3
323காடேல் மிகவா லிதுகா ரிகையஞ்சக்
கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகைகுழற
வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்
கோடிக் குழகா இடங்கோயில் கொண்டாயே.
7.32.4
324மையார் தடங்கண்ணி பங்காகங் கையாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிடம் இல்லை
கையார் வளைக்காடு காளோடும் உடனாய்க்
கொய்யார் பொழிற்கோடி யேகோயில் கொண்டாயே.
7.32.5
325அரவேர் அல்குலாளை ஓர்பாக மமர்ந்து
மரவங் கமழ்மா மறைக்கா டதன்றென்பாற்
குரவப் பொழில்சூழ் தருகோடிக் குழகா
இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே.
7.32.6
326பறையுங் குழலும் ஒலிபாட லியம்ப
அறையுங் கழலார்க்க நின்றாடும் அமுதே
குறையாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா
இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே.
7.32.7
327ஒற்றியூ ரென்றஊ னத்தினா லதுதானோ
அற்றப் படஆ ரூரதென் றகன்றாயோ
முற்றா மதிசூடிய கோடிக் குழகா
எற்றாற் றனியே இருந்தாய் எம்பிரானே.
7.32.8
328நெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப்
படியான் பலிகொள்ளும் இடங்குடி இல்லை
கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல்
அடிகேள் அன்பதா யிடங்கோயில் கொண்டாயே.
7.32.9
329பாரூர் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால்
ஏரார் பொழில்சூழ் தருகோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார்
சீரார் சிவலோகத் திருப்பவர் தாமே.
7.32.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அமுதகடநாதர், தேவியார் – மையார்தடங்கணம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.33. நமக்கடிகளாகிய – அடிகள்
பண் – கொல்லி

திருச்சிற்றம்பலம்

330
பாறுதாங்கிய காடரோபடுதலையரோமலைப் பாவையோர்
கூறுதாங்கிய குழகரோகுழைக்காதரோகுறுங் கோட்டிள
ஏறுதாங்கிய கொடியரோசுடுபொடியரோஇலங் கும்பிறை
ஆறுதாங்கிய சடையரோநமக்கடிகளாகிய அடிகளே.
7.33.1
331இட்டிதாகவந் துரைமினோநுமக்கிசையுமாநினைந் தேத்துவீர்
கட்டிவாழ்வது நாகமோசடைமேலும்நாறு கரந்தையோ
பட்டியேறுகந் தேறரோபடுவெண்டலைப்பலி கொண்டுவந்
தட்டியாளவுங் கிற்பரோநமக்கடிகளாகிய அடிகளே.
7.33.2
332ஒன்றினீர்கள்வந் துரைமினோநுமக்கிசையுமாநினைந் தேத்துவீர்
குன்றிபோல்வதோ ருருவரோகுறிப்பாகிநீறுகொண் டணிவரோ
இன்றியேயிலர் ஆவரோஅன்றிஉடையராயிலர் ஆவரோ
அன்றியேமிக அறவரோநமக்கடிகளாகிய அடிகளே.
7.33.3
333தேனையாடுமுக் கண்ணரோமிகச்செய்யரோவெள்ளை நீற்றரோ
பானெய்ஆடலும் பயில்வரோதமைப்பற்றினார்கட்கு நல்லரோ
மானைமேவிய கண்ணினாள்மலைமங்கைநங்கையை அஞ்சவோர்
ஆனையீருரி போர்ப்பரோநமக்கடிகளாகிய அடிகளே.
7.33.4
334கோணல்மாமதி சூடரோகொடுகொட்டிகாலர் கழலரோ
வீணைதானவர் கருவியோவிடையேறுவேத முதல்வரோ
நாணதாகவோர் நாகங்கொண்டரைக்கார்ப்பரோநல மார்தர
ஆணையாகநம் மடிகளோநமக்கடிகளாகிய அடிகளே.
7.33.5
335வந்துசொல்லுமின் மூடனேனுக்குவல்லவாநினைந் தேத்துவீர்
வந்தசாயினை அறிவரோதம்மைவாழ்த்தினார்கட்கு நல்லரோ
புந்தியாலுரை கொள்வரோஅன்றிப்பொய்யில்மெய்யுரைத் தாள்வரோ
அன்றியேமிக அறவரோநமக்கடிகளாகிய அடிகளே.
7.33.6
336மெய்யென்சொல்லுமின் நமரங்காளுமக்கிசையுமாநினைந் தேத்துவீர்
கையிற்சூலம துடையரோகரிகாடரோகறைக் கண்டரோ
வெய்யபாம்பரை ஆர்ப்பரோவிடைஏறரோகடை தோறுஞ்சென்
றையங்கொள்ளுமவ் வடிகளோநமக்கடிகளாகிய அடிகளே.
7.33.7
337நீடுவாழ்பதி உடையரோஅயன்நெடியமாலுக்கு நெடியரோ
பாடுவாரையும் உடையரோதமைப்பற்றினார்கட்கு நல்லரோ
காடுதானரங் காகவேகைகள்எட்டினோடில யம்பட
ஆடுவாரெனப் படுவரோநமக்கடிகளாகிய அடிகளே.
7.33.8
338நமணநந்தியுங் கருமவீரனுந்தருமசேனனு மென்றிவர்
குமணமாமலைக் குன்றுபோனின்றுதங்கள்கூறையொன் றின்றியே
ஞமணஞாஞண ஞாணஞோணமென்றோதியாரையு நாணிலா
அமணராற்பழிப் புடையரோநமக்கடிகளாகிய அடிகளே.
7.33.9
339படிசெய்நீர்மையிற் பத்தர்காள்பணிந்தேத்தினேன்பணி யீரருள்
வடிவிலான்றிரு நாவலூரன்வனப்பகையப்பன் வன்றொண்டன்
செடியனாகிலுந் தீயனாகிலுந்தம்மையேமனஞ் சிந்திக்கும்
அடியனூரனை ஆள்வரோநமக்கடிகளாகிய அடிகளே.
7.33.10


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.34 திருப்புகலூர்
பண் – கொல்லி

திருச்சிற்றம்பலம்

340தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ்சார்வினுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தைபுகலூர்பாடுமின் புலவீர்காள்
இம்மையேதருஞ் சோறுங்கூறையும்ஏத்தலாமிடர் கெடலுமாம்
அம்மையேசிவ லோகமாள்வதற்கியாதுமையுற வில்லையே.
7.34.1
341மிடுக்கிலாதானை வீமனேவிறல்விசயனேவில்லுக் கிவனென்று
கொடுக்கிலாதானைப் பாரியேயென்றுகூறினுங்கொடுப் பாரிலை
பொடிக்கொள்மேனியெம் புண்ணியன்புகலூரைப்பாடுமின் புலவீர்காள்
அடுக்குமேலம ருலகமாள்வதற்கியாதுமையுற வில்லையே.
7.34.2
342காணியேற்பெரி துடையனேகற்றுநல்லனேசுற்றம் நற்கிளை
பேணியேவிருந் தோம்புமேயென்றுபேசினுங்கொடுப் பாரிலை
பூணிபூண்டுழப் புட்சிலம்புந்தண்புகலூர்பாடுமின் புலவீர்காள்
ஆணியாயம ருலகமாள்வதற்கியாதுமையுற வில்லையே.
7.34.3
343நரைகள்போந்துமெய் தளர்ந்துமூத்துடல்நடுங்கிநிற்குமிக் கிழவனை
வரைகள்போல்திரள் தோளனேயென்றுவாழ்த்தினுங்கொடுப் பாரிலை
புரைவெள்ளேறுடைப் புண்ணியன்புகலூரைப்பாடுமின் புலவீர்காள்
அரையனாயம ருலகமாள்வதற்கியாதுமையுற வில்லையே.
7.34.4
344வஞ்சநெஞ்சனை மாசழக்கனைப்பாவியைவழக் கில்லியைப்
பஞ்சதுட்டனைச் சாதுவேயென்றுபாடினுங்கொடுப் பாரிலை
பொன்செய்செஞ்சடைப் புண்ணியன்புகலூரைப்பாடுமின் புலவீர்காள்
நெஞ்சில்நோயறுத் துஞ்சுபோவதற்கியாதுமையுற வில்லையே.
7.34.5
345நலமிலாதானை நல்லனேயென்றுநரைத்தமாந்தரை இளையனே
குலமிலாதானைக் குலவனேயென்றுகூறினுங்கொடுப் பாரிலை
புலமெலாம்வெறி கமழும்பூம்புகலூரைப்பாடுமின் புலவீர்காள்
அலமராதமர் உலகமாள்வதற்கியாதுமையுற வில்லையே.
7.34.6
346நோயனைத்தடந் தோளனேயென்றுநொய்யமாந்தரை விழுமிய
தாயன்றோபுல வோர்க்கெலாமென்றுசாற்றினுங்கொடுப் பாரிலை
போயுழன்றுகண் குழியாதேயெந்தைபுகலூர்பாடுமின் புலவீர்காள்
ஆயமின்றிப்போய் அண்டமாள்வதற்கியாதுமையுற வில்லையே.
7.34.7
347எள்விழுந்திடம் பார்க்குமாகிலும்ஈக்கும்ஈகிலன் ஆகிலும்
வள்ளலேயெங்கள் மைந்தனேயென்றுவாழ்த்தினுங்கொடுப் பாரிலை
புள்ளெலாஞ்சென்று சேரும்பூம்புகலூரைப்பாடுமின் புலவீர்காள்
அள்ளற்பட்டழுந் தாதுபோவதற்கியாதுமையுற வில்லையே.
7.34.8
348கற்றிலாதானைக் கற்றுநல்லனேகாமதேவனை யொக்குமே
முற்றிலாதானை முற்றனேயென்றுமொழியினுங்கொடுப் பாரிலை
பொத்திலாந்தைகள் பாட்டறாப்புகலூரைப்பாடுமின் புலவீர்காள்
அத்தனாயம ருலகமாள்வதற்கியாதுமையுற வில்லையே.
7.34.9
349தையலாருக்கோர் காமனேயென்றுஞ்சாலநல்வழக் குடையனே
கையுலாவிய வேலனேயென்றுகழறினுங்கொடுப் பாரிலை
பொய்கையாவியின் மேதிபாய்புகலூரைப்பாடுமின் புலவீர்காள்
ஐயனாயம ருலகமாள்வதற்கியாதுமையுற வில்லையே.
7.34.10
350செறுவினிற்செழுங் கமலமோங்குதென்புகலூர்மேவிய செல்வனை
நறவம்பூம்பொழில் நாவலூரன்வனப்பகையப்பன் சடையன்றன்
சிறுவன்வன்றொண்டன் ஊரன்பாடியபாடல்பத்திவை வல்லவர்
அறவனாரடி சென்றுசேர்வதற்கியாதுமையுற வில்லையே. 

இது பொன்வேண்டுங் குறிப்புடன் பதிகமோதித் துதி
செய்யவுஞ் சுவாமி கிருபைசெய்யாமையால் மனவெறுப்
புடன் திருமடத்துக்கெழுந்தருளாமல் ஆலயத்தில்
திருப்பணிக்காக வந்திருந்த செங்கற்களைப் பரப்பி
அதன்மேற் பள்ளிகொண்டு துயில்கூர்ந்து அது நீங்கி
யெழுந்தபோது செங்கற்கள் பொன்னாயிருக்கக்கண்டு
மகிழ்ந்து ஓதித் துதிசெய்தருளியது.
7.34.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அக்கினியீசுவரர்,
தேவியார் – கருந்தார்க்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.35 திருப்புறம்பயம்
பண் – கொல்லி

திருச்சிற்றம்பலம்

351அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளிநின்றும்போந்துவந் தின்னம்பர்த்
தங்கினோமையும் இன்னதென்றிலர்ஈசனாரெழு நெஞ்சமே
கங்குல்ஏமங்கள் கொண்டுதேவர்கள்ஏத்திவானவர் தாந்தொழும்
பொங்குமால்விடை யேறிசெல்வப்புறம்பயந்தொழப் போதுமே.
7.35.1
352பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும்பண்டையாரலர் பெண்டிரும்
நெதியிலிம்மனை வாழும்வாழ்க்கையும்நினைப்பொழிமட நெஞ்சமே
மதியஞ்சேர்சடைக் கங்கையானிடம்மகிழும்மல்லிகை செண்பகம்
புதியபூமலர்ந் தெல்லிநாறும்புறம்பயந்தொழப் போதுமே.
7.35.2
353புறந்திரைந்து நரம்பெழுந்துநரைத்துநீயுரை யாற்றளர்ந்
தறம்புரிந்து நினைப்பதாண்மைஅரிதுகாண்இஃ தறிதியேல்
திறம்பியாதெழு நெஞ்சமேசிறுகாலைநாமுறு வாணியம்
புறம்பயத்துறை பூதநாதன்புறம்பயந்தொழப் போதுமே.
7.35.3
354குற்றொருவரைக் கூறைகொண்டுகொலைகள்சூழ்ந்த களவெலாஞ்
செற்றொருவரைச் செய்ததீமைகள்இம்மையேவருந் திண்ணமே
மற்றொருவரைப் பற்றிலேன்மறவாதெழுமட நெஞ்சமே
புற்றரவுடைப் பெற்றமேறிபுறம்பயந்தொழப் போதுமே.
7.35.4
355கள்ளிநீசெய்த தீமையுள்ளனபாவமும்பறை யும்படி
தெள்ளிதாவெழு நெஞ்சமேசெங்கண்சேவுடைச்சிவ லோகனூர்
துள்ளிவெள்ளிள வாளைபாய்வயல்தோன்றுதாமரைப் பூக்கள்மேல்
புள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும்புறம்பயந்தொழப் போதுமே.
7.35.5
356படையெலாம்பக டாரஆளிலும்பௌவஞ்சூழ்ந்தர சாளிலுங்
கடையெலாம்பிணைத் தேரைவால்கவலாதெழுமட நெஞ்சமே
மடையெலாங்கழு நீர்மலர்ந்துமருங்கெலாங்கரும் பாடத்தேன்
புடையெலாம்மணம் நாறுசோலைப்புறம்பயந்தொழப் போதுமே.
7.35.6
357முன்னைச்செய்வினை இம்மையில்வந்துமூடுமாதலின் முன்னமே
என்னைநீதியக் காதெழுமடநெஞ்சமேயெந்தை தந்தையூர்
அன்னச்சேவலோ டூடிப்பேடைகள்கூடிச்சேரு மணிபொழிற்
புன்னைக்கன்னி கழிக்கணாறும்புறம்பயந்தொழப் போதுமே.
7.35.7
358மலமெலாமறும் இம்மையேமறுமைக்கும்வல்வினை சார்கிலா
சலமெலாமொழி நெஞ்சமேயெங்கள்சங்கரன்வந்து தங்குமூர்
கலமெலாங்கடல் மண்டுகாவிரிநங்கையாடிய கங்கைநீர்
புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும்புறம்பயந்தொழப் போதுமே.
7.35.8
359பண்டரியன செய்ததீமையும்பாவமும்பறை யும்படி
கண்டரியன கேட்டியேற்கவலாதெழுமட நெஞ்சமே
தொண்டரியன பாடித்துள்ளிநின்றாடிவானவர்தாந் தொழும்
புண்டரீக மலரும்பொய்கைபுறம்பயந்தொழப் போதுமே.
7.35.9
360துஞ்சியும்பிறந் துஞ்சிறந்துந்துயக்கறாத மயக்கிவை
அஞ்சிஊரன் திருப்புறம்பயத்தப்பனைத்தமிழ்ச் சீரினால்
நெஞ்சினாலே புறம்பயந்தொழுதுய்துமென்று நினைத்தன
வஞ்சியாதுரை செய்யவல்லவர்வல்லவானுல காள்வரே.
7.35.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சாட்சிவரதேசுவரர்,
தேவியார் – கரும்படுசொல்லம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.36 திருப்பைஞ்ஞீலி
பண் – கொல்லி

திருச்சிற்றம்பலம்

361காருலாவிய நஞ்சையுண்டிருள்கண்டவெண்டலை யோடுகொண்
டூரெலாந்திரிந் தென்செய்வீர்பலிஓரிடத்திலே கொள்ளும்நீர்
பாரெலாம்பணிந் தும்மையேபரவிப்பணியும்பைஞ் ஞீலியீர்
ஆரமாவது நாகமோசொல்லும்ஆரணீய விடங்கரே.
7.36.1
362சிலைத்துநோக்கும்வெள் ளேறுசெந்தழல்வாயபாம்பது மூசெனும்
பலிக்குநீர்வரும் போதுநுங்கையிற்பாம்புவேண்டா பிரானிரே
மலைத்தசந்தொடு வேங்கைகோங்கமும்மன்னுகாரகில் சண்பகம்
அலைக்கும்பைம்புனல் சூழ்பைஞ்ஞீலியில்ஆரணீய விடங்கரே.
7.36.2
363தூயவர்கண்ணும் வாயும்மேனியுந்துன்னஆடை சுடலையிற்
பேயொடாடலைத் தவிரும்நீரொருபித்தரோவெம் பிரானிரே
பாயும்நீர்க்கிடங் கார்கமலமும்பைந்தண்மாதவி புன்னையும்
ஆயபைம்பொழில் சூழ்பைஞ்ஞீலியில்ஆரணீய விடங்கரே.
7.36.3
364செந்தமிழ்த்திறம் வல்லிரோசெங்கண்அரவமுன்கையில் ஆடவே
வந்துநிற்குமி தென்கொலோபலிமாற்றமாட்டோ ம் இடகிலோம்
பைந்தண்மாமலர் உந்துசோலைகள்கந்தம்நாறும்பைஞ் ஞீலியீர்
அந்திவானமும் மேனியோசொல்லும்ஆரணீய விடங்கரே.
7.36.4
365நீறுநுந்திரு மேனிநித்திலம்நீணெடுங்கண்ணி னாளொடுங்
கூறராய்வந்து நிற்றிராற்கொணர்ந்திடுகிலோம்பலி நடமினோ
பாறுவெண்டலை கையிலேந்திபைஞ்ஞீலியேனென்றீர் அடிகள்நீர்
ஆறுதாங்கிய சடையரோசொல்லும்ஆரணீய விடங்கரே.
7.36.5
366குரவம்நாறிய குழலினார்வளைகொள்வதேதொழி லாகிநீர்
இரவும்இம்மனை அறிதிரேயிங்கேநடந்துபோகவும் வல்லிரே
பரவிநாடொறும் பாடுவார்வினைபற்றறுக்கும்பைஞ் ஞீலியீர்
அரவம்ஆட்டவும் வல்லிரோசொல்லும்ஆரணீய விடங்கரே.
7.36.6
367ஏடுலாமலர்க் கொன்றைசூடுதிர்என்பெலாமணிந் தென்செய்வீர்
காடுநும்பதி ஓடுகையதுகாதல்செய்பவர் பெறுவதென்
பாடல்வண்டிசை யாலுஞ்சோலைப்பைஞ்ஞீலியேனென்று நிற்றிரால்
ஆடல்பாடலும் வல்லிரோசொல்லும்ஆரணீய விடங்கரே.
7.36.7
368மத்தமாமலர் கொன்றைவன்னியுங்கங்கையாளொடு திங்களும்
மொய்த்தவெண்டலை கொக்கிறகொடுவெள்ளெருக்கமுஞ் சடையதாம்
பத்தர்சித்தர்கள் பாடியாடும்பைஞ்ஞீலியேன்என்று நிற்றிரால்
அத்தியீருரி போர்த்திரோசொல்லும்ஆரணீய விடங்கரே.
7.36.8
369தக்கைதண்ணுமை தாளம்வீணைதகுணிச்சங்கிணை சல்லரி
கொக்கரைகுட முழவினோடிசைகூடிப்பாடிநின் றாடுவீர்
பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ்ஞீலியேனென நிற்றிரால்
அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும்ஆரணீய விடங்கரே.
7.36.9
370கையோர்பாம்பரை யார்த்தோர்பாம்புகழுத்தோர்பாம்பவை பின்புதாழ்
மெய்யெலாம்பொடிக் கொண்டுபூசுதிர்வேதமோதுதிர் கீதமும்
பையவேவிடங் காகநின்றுபைஞ்ஞீலியேனென்றீர் அடிகள்நீர்
ஐயம்ஏற்குமி தென்கொலோசொல்லும்ஆரணீய விடங்கரே.
7.36.10
371அன்னஞ்சேர்வயல் சூழ்பைஞ்ஞீலியில்ஆரணீய விடங்கரை
மின்னும்நுண்ணிடை மங்கைமார்பலர்வேண்டிக்காதல் மொழிந்தசொல்
மன்னுதொல்புகழ் நாவலூரன்வன்றொண்டன்வாய்மொழி பாடல்பத்
துன்னிஇன்னிசை பாடுவார்உமைகேள்வன்சேவடி சேர்வரே.
7.36.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர்,
தேவியார் – விசாலாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.37 திருவாரூர்
பண் – கொல்லி

திருச்சிற்றம்பலம்

372குருகுபா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசா
றருகுபா யும்வயல் அந்தணா ரூரரைப்
பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந்
துருகுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
7.37.1
373பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கண்என் னத்தகும் அடிகளா ரூரரை
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.
7.37.2
374சூழுமோ டிச்சுழன் றுழலும்வெண் ணாரைகாள்
ஆளும்அம் பொற்கழல் அடிகளா ரூரர்க்கு
வாழுமா றும்வளை கழலுமா றும்மெனக்
கூழுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
7.37.3
375சக்கிரவா ளத்திளம் பேடைகாள் சேவல்காள்
அக்கிரமங் கள்செயும் அடிகளா ரூரர்க்கு
வக்கிரமில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உக்கிரமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.
7.37.4
376இலைகொள்சோ லைத்தலை இருக்கும்வெண் ணாரைகாள்
அலைகொள்சூ லப்படை அடிகளா ரூரர்க்குக்
கலைகள்சோர் கின்றதுங் கனவளை கழன்றதும்
முலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே.
7.37.5
377வண்டுகாள் கொண்டல்காள் வார்மணற் குருகுகாள்
அண்டவா ணர்தொழும் அடிகளா ரூரரைக்
கண்டவா றுங்காமத் தீக்கனன் றெரிந்துமெய்
உண்டவா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
7.37.6
378தேனலங் கொண்டதேன் வண்டுகாள் கொண்டல்காள்
ஆனலங் கொண்டவெம் மடிகளா ரூரர்க்குப்
பானலங் கொண்டவெம் பணைமுலை பயந்துபொன்
ஊனலங் கொண்டதும் உணர்த்தவல் லீர்களே.
7.37.7
379சுற்றுமுற் றுஞ்சுழன் றுழலும்வெண் நாரைகாள்
அற்றமுற் றப்பகர்ந் தடிகளா ரூரர்க்குப்
பற்றுமற் றின்மையும் பாடுமற் றின்மையும்
உற்றுமற் றின்மையும் உணர்த்த வல்லீர்களே.
7.37.8
380குரவநா றக்குயில் வண்டினம் பாடநின்
றரவமா டும்பொழில் அந்தணா ரூரரைப்
பரவிநா டும்மதும் பாடிநா டும்மதும்
உருகிநா டும்மதும் உணர்த்தவல் லீர்களே.
7.37.9
381கூடுமன் னப்பெடை காள்குயில் வண்டுகாள்
ஆடும்அம் பொற்கழல் அடிகளா ரூரரைப்
பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி
ஊடுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
7.37.10
382நித்தமா கந்நினைந் துள்ளமேத் தித்தொழும்
அத்தன்அம் பொற்கழல் அடிகளா ரூரரைச்
சித்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி யப்பன்மெய்ப்
பத்தனூ ரன்சொன்ன பாடுமின் பத்தரே.
7.37.11


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.38 திருவதிகைத்திருவீரட்டானம்
பண் – கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம்

383தம்மானை அறியாத சாதியார் உளரேசடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டி லாடல்உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.1
384முன்னேயெம் பெருமானை மறந்தென்கொல் மறவாதொழிந்தென்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன்
பொன்னேநன் மணியேவெண் முத்தேசெம் பவளக்குன்றமே ஈச஦னென் றுன்னையே புகழ்வேன்
அன்னேயென் அத்தாவென் றமரரால் அமரப்படுவானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னேயென் எறிகெடில வடவீரட் டானத்துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.2
385விரும்பினேற் கெனதுள்ளம் விடகிலா விதியேவிண்ணவர்தம் பெருமானே மண்ணவர்நின் றேத்துங்
கரும்பேயென் கட்டியென் றுள்ளத்தால் உள்கிக்காதல்சேர் மாதராள் கங்கையாள் நங்கை
வரும்புனலுஞ் சடைக்கணிந்து வளராத பிறையும்வரியரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை
இரும்புனல்வந் தெறிகெடில வடவீரட் டானத்துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.3
386நாற்றானத் தொருவனை நானாய பரனைநள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியைக்
காற்றானைத் தீயானைக் கடலானை மலையின்றலையானைக் கடுங்கலுழிக் கங்கைநீர் வெள்ள
ஆற்றானைப் பிறையானை அம்மானை எம்மான்தம்மானை யாவர்க்கும் அறிவரிய செங்கண்
ஏற்றானை எறிகெடில வடவீரட் டானத்துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.4
387சேந்தாய மலைமங்கை திருநிறமும் பரிவும்உடையானை அதிகைமா நகருள்வாழ் பவனைக்
கூந்தல்தாழ் புனல்மங்கை குயிலன்ன மொழியாள்சடையிடையிற் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி
வாய்ந்தநீர் வரவுந்தி மராமரங்கள் வணக்கிமறிகடலை இடங்கொள்வான் மலையாரம் வாரி
ஏந்துநீர் எறிகெடில வடவீரட் டானத்துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.5
388மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான்வல்லேனக் கொம்பணிந்த மாதவனை வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்மதியும் பாம்பும்தடுமாறுஞ் சடையானைத் தாழ்வரைக்கை வென்ற
வெம்மான மதகரியின் உரியானை வேதவிதியானை வெண்ணீறு சண்ணித்த மேனி
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.6
389வெய்தாய வினைக்கடலிற் றடுமாறும் உயிர்க்குமிகஇரங்கி அருள்புரிந்து வீடுபே றாக்கம்
பெய்தானைப் பிஞ்ஞகனை மைஞ்ஞவிலுங் கண்டத்தெண்டோ ளெம் பெருமானைப் பெண்பாகம் ஒருபாற்
செய்தானைச் செக்கர்வான் ஒளியானைத் தீவாய்அரவாடு சடையானைத் திரிபுரங்கள் வேவ
எய்தானை எறிகெடில வடவீரட் டானத்துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.7
390பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதைபொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல்
தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற்சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி
அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமானின்உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னானை எறிகெடில வடவீரட் டானத்துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.8
391திருந்தாத வாளவுணர் புரமூன்றும் வேவச்சிலைவளைவித் தொருகணையாற் றொழில்பூண்ட சிவனைக்
கருந்தாள மதகளிற்றின் உரியானைப் பெரியகண்மூன்றும் உடையானைக் கருதாத அரக்கன்
பெருந்தோள்கள் நாலைந்தும் ஈரைந்து முடியும்உடையானைப் பேயுருவ மூன்றுமுற மலைமேல்
இருந்தானை எறிகெடில வடவீரட் டானத்துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
7.38.9
392என்பினையே கலனாக அணிந்தானை எங்கள்எருதேறும் பெருமானை இசைஞானி சிறுவன்
வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன்வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன
அன்பனை யாவர்க்கும் அறிவரிய அத்தர்பெருமானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்பொன்னை எறிகெடில வடவீரட் டானத்துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.
7.38.10


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வீரட்டானேசுவரர், தேவியார் – திருவதிகைநாயகி.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.39 திருத்தொண்டத்தொகை
பண் – கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம்

393தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
7.39.1
394இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
7.39.2
395*மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்கவெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே. 

*விபூதி, ருத்திராட்சம், சடைமுடி இவைகளுடன் அரசு
செய்தமையால் மும்மையால் உலகாண்ட மூர்த்தியென்றது.
7.39.3
396திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்டதிருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
7.39.4
397வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்*நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
#அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

*பிறவி அந்தகராயிருந்து திருவாரூர்க் கமலாலயத்
தீர்த்தத்தில் மூழ்கியெழுந்திருக்கும்போது சுவாமி
யினுடைய திருவருளால் நாட்டம் விளங்கப்பெற்றவ
ரென்பது தோன்ற நாட்டமிகு தண்டிக்கும்
என்றருளிச்செய்தது. 

#அம்பரான் சோமாசி – திருஅம்பர் என்னுந் தலத்தில் வாழ்பவர்.
7.39.1
398வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலேமறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்*கழறிற் றறிவார்க்கும் அடியேன்கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

*கழறிற்றறிவார் – சேரமானாயனார்.
7.39.6
399பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்கழற்*சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

*சத்திவரிஞ்சையர்கோன் என்பதை வரிஞ்சையூர்ச்
சத்தியாரென மாற்றுக.
7.39.7
400கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்தகணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்றநின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
7.39.8
401கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சைமன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடிபொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
7.39.9
402பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
*முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

*இவர்கள் ஆதிசைவப்பிராமணர்கள்
7.39.10
403மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.
7.39.11

இது சுந்தரமூர்த்திசுவாமிகள் திருவாரூர்ப் பரவை நாச்சியார் 
திருமாளிகையிலிருந்து வீதிவிடங்கப் பெருமானைத் 
தரிசுக்கும்பொருட்டு ஆலயத்துக்குள் எழுந்தருழும்போது 
தேவாசரியமண்டபத்தில் வீற்றிருக்குஞ் சிவனடியார்களை 
உள்ளத்தால் வணங்கி “இவர்களுக்குநானடியே”னாகும்படி 
பரமசிவம் எதிரில் தரிசனங்கொடுத்தருளித் “தில்லைவாழ் 
பரமசிவம் எந்நாள் கிருபைசெய்யுமென்று செல்லுகையில்
அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று முதலடி 
எடுத்துக்கொடுக்கப் பாடித் துதிசெய்த பதிகம். 

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.40 திருக்கானாட்டுமுள்ளூர்
பண் – கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம்

404வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானைமறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப்பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்றுமொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.1
405ஒருமேக முகிலாகி ஒத்துலகந் தானாய்ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளுந் தானாய்ப்
பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப்புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத்
திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்ததிருத்தக்க அந்தணர்கள் ஓதுநக ரெங்குங்
கருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக்கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.2
406இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானைஇறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறிஅன்னங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.3
407பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய்
நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகிஞாயிறாய் மதியமாய் நின்றவெம் பரனைப்
பாளைபடு பைங்கமுகின் சூழலிளந் தெங்கின்படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.4
408செருக்குவாய்ப் பைங்கண்வெள் ளரவரையி னானைத்தேவர்கள்சூ ளாமணியைச் செங்கண்விடை யானை
முருக்குவாய் மலரொக்குந் திருமேனி யானைமுன்னிலையாய் முழுதுலக மாயபெரு மானை
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்பு ளெங்கும்வேள்வியிருந் திருநிதியம் வழங்குநக ரெங்கும்
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.5
409விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனைவெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்
அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாயசங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்
உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக்குங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேற்
கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக்கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.6
410அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும்அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத்தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக்
குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க்கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேற்
கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக்கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.7
411இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின்ஈசன்றன் எண்டோ ள்கள் வீசியெரி யாடக்
குழைதழுவு திருக்காதிற் கோளரவ மசைத்துக்கோவணங்கொள் குழகனைக் குளிர்சடையி னானைத்
தழைதழுவு தண்ணிறத்த செந்நெலதன் அயலேதடந்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கி னருகே
கழைதழுவித் தேன்றொடுக்குங் கழனிசூழ் பழனக்கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.8
412குனிவினிய கதிர்மதியஞ் சூடுசடை யானைக்குண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப்
பனியுதிருஞ் சடையானைப் பால்வெண்ணீற் றானைப்பலவுருவுந் தன்னுருவே ஆயபெரு மானைத்
துனிவினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார்தூநீலங் கண்வளருஞ் சூழ்கிடங்கி னருகே
கனிவினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக்கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.9
413தேவியம்பொன் மலைக்கோமன் றன்பாவை யாகத்தனதுருவம் ஒருபாகஞ் சேர்த்துவித்த பெருமான்
மேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்குமெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானைத்
தூவிவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத்துறைக்கெண்டை மிளிர்ந்துகயல் துள்ளிவிளை யாடக்
காவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக்கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
7.40.10
414திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக்
கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற்கானாட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது
உரையினார் மதயானை நாவலா ரூரன்உரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார்
வரையினார் வகைஞாலம் ஆண்டவர்க்குந் தாம்போய்வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே.
7.40.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பதஞ்சலியீசுவரர், தேவியார் – கானார்குழலம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.41 திருக்கச்சூர் ஆலக்கோயில்
பண் – கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம்

415முதுவாய் ஓரி கதற முதுகாட்டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமா றிதுவோ கச்சூர்ஆலக் கோயில் அம்மானே.
7.41.1
416கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்கழலுஞ்சிலம்புங் கலிக்கப் பலிக்கென்
றுச்சம் போதா ஊரூர் திரியக்கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான்ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்ஆலக் கோயில் அம்மானே.
7.41.2
417சாலக் கோயில் உளநின் கோயில்அவையென் றலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன்வானோர் அறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்அறங்கட் டுரைத்த அம்மானே.
7.41.3
418விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய்மின்னேர் உருவத் தொளியானே
கடையும் புடைசூழ் மணிமண் டபமுங்கன்னி மாடங் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலுந் தழுவிப்பூமேல் திருமா மகள்புல்கி
அடையுங் கழனிப் பழனக் கச்சூர்ஆலக் கோயில் அம்மானே.
7.41.4
419மேலை விதியே வினையின் பயனேவிரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள்கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தேமறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்ஆலக் கோயில் அம்மானே.
7.415
420பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்பெற்ற மேறிப் பேய்சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகா டென்றும்இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்கண்டால் அடியார் உருகாரே
அறவே ஒழியாய் கச்சூர் வடபால்ஆலக் கோயில் அம்மானே.
7.41.6
421பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னைநினைவார் அவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மங்கை பங்காகங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்ஆலக் கோயில் அம்மானே.
7.41.7
422ஊனைப் பெருக்கி உன்னை நினையாதொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங்கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையும் மடமென் னோக்கிமடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்ஆலக் கோயில் அம்மானே.
7.41.8
423காதல் செய்து களித்துப் பிதற்றிக்கடிமா மலரிட் டுனையேத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்கஐயங் கொள்வ தழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்உமையாள் கணவா எனையாள்வாய்
ஆதற் பழனக் கழனிக் கச்சூர்ஆலக் கோயில் அம்மானே.
7.41.9
424அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்தா ரூரன்ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லார்அவரெந் தலைமேற் பயில்வாரே.
7.41.10


இந்தத் தலத்தில் பரமசிவம் அக்கிராகாரத்தில் அன்னம் பிட்சை 
வாங்கி வந்தளிக்க அருந்திப் பசிதீர்ந்து துதிசெய்த பதிகம்.
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – தினம்விருந்திட்டநாதர், தேவியார் – கன்னியுமையம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.42 திருவெஞ்சமாக்கூடல்
பண் – கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம்

425எறிக்குங் கதிர்வே யுதிர்முத் தமொடுமிலவங்கந் தக்கோலம் இஞ்சி
செறிக்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக்குந் தழைமா முடப்புன்னை ஞாழல்குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா
வெறிக்குங் கலைமா வெஞ்சமாக் கூடல்விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.1
426குளங்கள் பலவுங் குழியுந் நிறையக்குடமாமணி சந்தனமும் அகிலுந்
துளங்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
வளங்கொள் மதில்மா ளிகைகோ புரமும்மணிமண்டபமும் இவைமஞ்சு தன்னுள்
விளங்கும் மதிதோய் வெஞ்சமாக் கூடல்விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.2
427வரைமான் அனையார் மயிற்சாயல் நல்லார்வடிவேற்கண் நல்லார்பலர் வந்திறைஞ்சத்
திரையார் புனலுட் பெய்துகொண்டு மண்டித்திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
நிரையார் கமுகும் நெடுந்தாட் டெங்குங்குறுந்தாட்பலவும் விரவிக் குளிரும்
விரையார் பொழில்சூழ் வெஞ்சமாக் கூடல்விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.3
428பண்ணேர் மொழியா ளையோர்பங் குடையாய்படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணா ரகிலுந் நலசா மரையும்அலைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார் முழவுங் குழலும் இயம்பமடவார் நடமாடு மணியரங்கில்
விண்ணார் மதிதோய் வெஞ்சமாக் கூடல்விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.4
429துளைவெண் குழையுஞ் சுருள்வெண் டோ டுந்தூங்குங்காதிற் றுளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க்கொன் றையினாய்கலந்தார்க்கருள் செய்திடுங் கற்பகமே
பிளைவெண் பிறையாய் பிறங்குஞ் சடையாய்பிறவாதவனே பெறுதற் கரியாய்
வெளைமால் விடையாய் வெஞ்சமாக் கூடல்விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.5
430தொழுவார்க் கெளியாய் துயர்தீர நின்றாய்சுரும்பார் மலர்க்கொன்றை துன்றுஞ்சடையாய்
உழுவார்க் கரிய விடையேறி ஒன்னார்புரந்தீயெழ ஓடுவித்தாய் அழகார்
முழவா ரொலிபா டலோடா டலறாமுதுகாடரங்கா நடமாட வல்லாய்
விழவார் மறுகின் வெஞ்சமாக் கூடல்விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.6
431கடமா களியா னையுரித் தவனேகரிகாடிடமா அனல்வீசி நின்று
நடமா டவல்லாய் நரையே றுகந்தாய்நல்லாய் நறுங்கொன்றை நயந்தவனே
படமா யிரமாம் பருத்துத்திப் பைங்கண்பகுவாய் எயிற்றோடழ லேஉமிழும்
விடவார் அரவா வெஞ்சமாக் கூடல்விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.7
432காடும் மலையுந் நாடு மிடறிக்கதிர்மாமணி சந்தனமும் அகிலுஞ்
சேட னுறையும் மிடந்தான் விரும்பிதிளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேற்
பாடல் முழவுங் குழலு மியம்பப்பணைத்தோளியர் பாடலோ டாடலறா
வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல்விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.8
433கொங்கார் மலர்க்கொன் றையந்தா ரவனேகொடுகொட்டி யோர்வீணை யுடையவனே
பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற்பொதியும்புனிதா புனஞ்சூழ்ந் தழகார்
துங்கார் புனலுட் பெய்துகொண்டு மண்டித்திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
வெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக் கூடல்விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.
7.42.9
434வஞ்சிநுண் ணிடையார் மயிற்சாய லன்னார்வடிவேற்க ணல்லார்பலர் வந்திறைஞ்சும்
வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும்வேண்டுதி யேயென்று தான்விரும்பி
வஞ்சியா தளிக்கும் வயல்நா வலர்கோன்வனப்பகையப்பன் வன்றொண்டன் சொன்ன
செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும் வல்லார்சிவலோகத் திருப்பது திண்ணமன்றே.
7.42.10


இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – விகிர்தேசுவரர், தேவியார் – விகிர்தேசுவரி.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.43 திருமுதுகுன்றம்
பண் – கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம்

435நஞ்சி யிடையின்று நாளை யென்றும்மை நச்சுவார்
துஞ்சி யிட்டாற்பின்னைச் செய்வ தென்னடி கேள்சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறு மோபணி யீரருள்
முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ் சீர்முது குன்றரே.
7.43.1
436ஏரிக் கனகக் கமல மலரன்ன சேவடி
ஊரித் தனையுந் திரிந்தக் காலவை நோங்கொலோ
வாரிக் கட்சென்று வளைக்கப் பட்டு வருந்திப்போய்
மூரிக் களிறு முழக்க றாமுது குன்றரே.
7.43.2
437தொண்டர்கள் பாட விண்ணோர்க ளேத்த உழிதர்வீர்
பண்டகந் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே
கண்டகர் வாளிகள் வில்லி கள்புறங் காக்குஞ்சீர்
மொண்டகை வேள்வி முழக்க றாமுது குன்றரே.
7.43.3
438இளைப்பறி யீரிம்மை யேத்து வார்க்கம்மை செய்வதென்
விளைப்பறி யாதவெங் கால னையுயிர் வீட்டினீர்
அளைப்பிரி யாவர வல்கு லாளொடு கங்கைசேர்
முளைப்பி றைச்சென் னிச்சடை முடிமுது குன்றரே.
7.43.4
439ஆடி அசைந்தடி யாரும் நீரும் அகந்தொறும்
பாடிப் படைத்த பொருளெ லாமுமை யாளுக்கோ
மாட மதிலணி கோபு ரம்மணி மண்டபம்
மூடி முகில்தவழ் சோலை சூழ்முது குன்றரே.
7.43.5
440இழைவளர் நுண்ணிடை மங்கை யோடிடு காட்டிடைக்
குழைவளர் காதுகள் மோத நின்று குனிப்பதே
மழைவள ருந்நெடுங் கோட்டி டைமத யானைகள்
முழைவளர் ஆளி முழக்க றாமுது குன்றரே.
7.43.6
441சென்றி லிடைச்செடி நாய்கு ரைக்கச்சே டிச்சிகள்
மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே
குன்றி லிடைக்களி றாளி கொள்ளக் குறத்திகள்
முன்றி லிடைப்பிடி கன்றி டும்முது குன்றரே.
7.43.7
442அந்தி திரிந்தடி யாரும் நீரும் அகந்தொறுஞ்
சந்தி கள்தோறும் பலிக்குச் செல்வது தக்கதே 
மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம்
முந்தி யடிதொழ நின்ற சீர்முது குன்றரே.
7.43.8
443செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய
அட்டு மின்சில் பலிக்கென் றகங்கடை நிற்பதே
பட்டிவெள் ளேறுகந் தேறு வீர்பரி சென்கொலோ
முட்டி யடிதொழ நின்ற சீர்முது குன்றரே.
7.43.9
444எத்திசை யுந்திரிந் தேற்றக் காற்பிற ரென்சொலார்
பத்தியி னாலிடு வாரி டைப்பலி கொண்மினோ
எத்திசை யுந்திரை யேற மோதிக் கரைகள்மேல்
முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரே.
7.43.10
445முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரைப்
பித்தனொப் பானடித் தொண்ட னூரன் பிதற்றிவை
தத்துவ ஞானிக ளாயி னார்தடு மாற்றிலார்
எத்தவத் தோர்களு மேத்து வார்க்கிடர் இல்லையே.
7.43.11


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பழமலைநாதர், தேவியார் – பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.44 முடிப்பதுகங்கை
பண் – கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம்

446முடிப்பது கங்கையுந் திங்களுஞ் செற்றது மூவெயில்
நொடிப்பது மாத்திரை நீறெ ழக்கணை நூறினார்
கடிப்பது மேறுமென் றஞ்சு வன்றிருக் கைகளாற்
பிடிப்பது பாம்பன்றி இல்லை யோவெம் பிரானுக்கே.
7.44.1
447தூறன்றி ஆடரங் கில்லை யோசுட லைப்பொடி
நீறன்றிச் சாந்தமற் றில்லை யோஇம வான்மகள்
கூறன்றிக் கூறுவ தில்லை யோகொல்லைச் சில்லைவெள்
ளேறன்றி ஏறுவ தில்லை யோவெம் பிரானுக்கே.
7.44.2
448தட்டெனுந் தட்டெனுந் தொண்டர் காள்தடு மாற்றத்தை
ஒட்டெனும் ஒட்டெனும் மாநி லத்துயிர் கோறலைச்
சிட்டன் திரிபுரஞ் சுட்ட தேவர்கள் தேவனை
வெட்டெனப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே.
7.44.3
449நரிதலை கவ்வநின் றோரி கூப்பிட நள்ளிருள்
எரிதலைப் பேய்புடை சூழ ஆரிருள் காட்டிடைச்
சிரிதலை மாலை சடைக்க ணிந்தவெஞ் செல்வனைப்
பிரிதலைப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே.
7.44.4
450வேயன தோளி மலைம களைவி ரும்பிய
மாயமில் மாமலை நாட னாகிய மாண்பனை
ஆயன சொல்லிநின் றார்கள் அல்லல் அறுக்கிலும்
பேயனே பித்தனே என்ப ராலெம் பிரானையே.
7.44.5
451இறைவனென் றெம்பெரு மானை வானவ ரேத்தப்போய்த்
துறையொன்றித் தூமல ரிட்ட டியிணை போற்றுவார்
மறையன்றிப் பாடுவ தில்லை யோமல்கு வானிளம்
பிறையன்றிச் சூடுவ தில்லை யோவெம் பிரானுக்கே.
7.44.6
452தாருந்தண் கொன்றையுங் கூவி ளந்தனி மத்தமும்
ஆரும் அளவறி யாத ஆதியும் அந்தமும்
ஊருமொன் றில்லை உலகெ லாமுகப் பார்தொழப்
பேருமோ ராயிரம் என்ப ராலெம் பிரானுக்கே.
7.44.7
453அரியொடு பூமிசை யானும் ஆதியும் அறிகிலார்
வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
புரிதரு புன்சடை வைத்த எம்புனி தற்கினி
எரியன்றி அங்கைக்கொன் றில்லை யோவெம் பிரானுக்கே.
7.44.8
454கரிய மனச்சமண் காடி யாடு கழுக்களால்
எரிய வசவுணுந் தன்மை யோஇம வான்மகள்
பெரிய மனந்தடு மாற வேண்டிப்பெம் மான்மதக்
கரியின் உரியல்ல தில்லை யோவெம் பிரானுக்கே.
7.44.9
455காய்சின மால்விடை மாணிக் கத்தெங் கறைக்கண்டத்
தீசனை ஊரனெட் டோ டி ரண்டுவி ரும்பிய
ஆயின சீர்ப்பகை ஞானியப் பன்னடித் தொண்டன்றான்
ஏசின பேசுமின் தொண்டர் காளெம் பிரானையே.
7.44.10


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.45 திருஆமாத்தூர்
பண் – கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம்

456காண்டனன் காண்டனன் காரிகை யாள்தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத் தூரெம் அடிகட்காட்
பூண்டனன் பூண்டனன் பொய்யன்று சொல்லுவன் கேண்மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித் தல்லா தவர்கட்கே.
7.45.1
457பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றிநான்
தேடுவன் தேடுவன் திண்ணெனப் பற்றிச் செறிதர
ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளைக்
கூடுவன் கூடுவன் குற்றம தற்றென் குறிப்பொடே.
7.45.2
458காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ லாலன்று காமனைப்
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி னாலன்று கூற்றத்தை
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத் தூரெம் மடிகளார்
ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி ராட்டியைப் பாகமே.
7.45.3
459ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள்
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச்
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்றோள் தடமுலை
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத் தூரையன் அருளதே.
7.45.4
460வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களைச்
சென்றவன் சென்றவன் சில்பலிக் கென்று தெருவிடை
நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர் தங்கள்பால்
அன்றவன் அன்றவன் செய்யருள் ஆமாத்தூர் ஐயனே.
7.45.5
461காண்டவன் காண்டவன் காண்டற் கரிய கடவுளாய்
நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத் தூரையும் எனையுமாட்
பூண்டவன் பூண்டவன் மார்பிற் புரிநூல் புரளவே.
7.45.6
462எண்ணவன் எண்ணவன் ஏழுல கத்துயிர் தங்கட்குக்
கண்ணவன் கண்ணவன் காண்டுமென் பாரவர் தங்கட்குப்
பெண்ணவன் பெண்ணவன் மேனியோர் பாகமாம் பிஞ்ஞகன்
அண்ணவன் அண்ணவன் ஆமாத் தூரெம் அடிகளே.
7.45.7
463பொன்னவன் பொன்னவன் பொன்னைத்தந் தென்னைப்போ கவிடா
மின்னவன் மின்னவன் வேதத்தி னுட்பொரு ளாகிய
அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன் என்மனத் தின்புற் றிருப்பனே.
7.45.8
464தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடொறும்
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல்
மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளே.
7.45.9
465உற்றனன் உற்றவர் தம்மை ஒழிந்துள்ளத் துளபொருள்
பற்றினன் பற்றினன் பங்கயச் சேவடிக் கேசெல்ல
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயானடி யார்கட்காட்
பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும்பிற வாமைக்கே.
7.45.10
466ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொரு ளான விமலனை
மையனை மையணி கண்டனை வன்றொண்டன் ஊரன்சொல்
பொய்யொன்று மின்றிப் புலம்புவார் பொற்கழல் சேர்வரே.
7.45.11


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அழகியநாதர், தேவியார் – அழகியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.46 திருநாகைக்காரோணம்
பண் – கொல்லிக்கௌவாணம்

திருச்சிற்றம்பலம்

467பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவைஅவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.1
468வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றிவிருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர்
பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப்பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்
சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந்திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே
காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங்கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.2
469பூண்பதோர் இளவாமை பொருவிடையொன் றேறிப்பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப்
பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்
வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்
காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடுவீதிக்கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.3
470விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காகவீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்
துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே
வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்
கட்டியெமக் கீவதுதான் எப்போது சொல்லீர்கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.4
471மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்துவினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்
தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ்சுந்தரனே கந்தமுதல் ஆடையா பரணம்
பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும்பண்டுதான் பிரமாணம் ஒன்றுண்டே நும்மைக்
கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.5
472இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம்இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது
பலவகம்புக் குழிதர்வீர் பட்டோ டு சாந்தம்பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ
உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்டஉண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே
கலவமயில் இயலவர்கள் நடமாடுஞ் செல்வக்கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.6
473தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து
தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்
நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்தநிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசருளிச் செய்தீரின் றெனக்கருள வேண்டும்கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.7
474மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர்வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு
ஆற்றவேற் றிருவுடையீர் நல்கூர்ந்தீ ரல்லீர்அணியாரூர் புகப்பெய்த அருநிதிய மதனில்
தோற்றமிகு முக்கூற்றி லொருகூறு வேண்டுந்தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்
காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும்கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.8
475மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சிமலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்
எண்ணிலியுண் பெருவயிறன் கணபதியொன் றறியான்எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்வீர்
திண்ணெனவென் உடல்விருத்தி தாரீரே யாகில்திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டாகடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.9
476மறியேறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர்மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர்
கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல்
பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்
கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
7.46.10
477பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்பற்றாய பெருமானே மற்றாரை உடையேன்
உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவுங்
கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரென்
றண்மயத்தால் அணிநாவ லாரூரன் சொன்ன
அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே.
7.46.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – காயாரோகணேசுவரர், தேவியார் – நீலாயதாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.47 ஊர்த்தொகை
பண் – பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

478காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே கொழுநற் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட் டூரானே
மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே.
7.47.1
479கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா
மங்குற் றிரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்
கங்குற் புறங்காட் டாடீ அடியார் கவலை களையாயே.
7.47.2
480நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே
மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே
இறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே.
7.47.3
481ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே
பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே.
7.47.4
482மருகல் உறைவாய் மாகா ளத்தாய் மதியஞ் சடையானே
அருகற் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே
கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே கானூர்க் கட்டியே
பருகப் பணியாய் அடியார்க் குன்னைப் பவளப் படியானே.
7.47.5
483தாங்கூர் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே
வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே
நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே
பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே.
7.47.6
484தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய்
வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே
ஆனைக் காவில் அரனே பரனே அண்ணா மலையானே
ஊனைக் காவல் கைவிட் டுன்னை உகப்பார் உணர்வாரே.
7.47.7
485துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய் சொல்லாய் கல்லாலா
பருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப் பலவாய்க் காற்றானாய்
திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா
அருத்தித் துன்னை அடைந்தார் வினைக ளகல அருளாயே.
7.47.8
486புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப் போதா மூதூரா
பொலிசேர் புரமூன் றெரியச் செற்ற புரிபுன் சடையானே
வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான் கடர்த்த மதிசூடீ
கலிசேர் புறவிற் கடவூ ராளீ காண அருளாயே.
7.47.9
487கைம்மா உரிவை யம்மான் காக்கும் பலவூர் கருத்துன்னி
மைம்மாந் தடங்கண் மதுர மன்ன மொழியாள் மடச்சிங்கடி
தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் றமிழ்மாலை
செம்மாந் திருந்து திருவாய் திறப்பார் சிவலோ கத்தாரே.
7.47.10


திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.48 திருப்பாண்டிக்கொடுமுடி
பண் – பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

488மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிறவாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.1
489இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந்திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாளிவை என்ற லாற்கருதேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழுதேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ்சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.2
490ஓவு நாளுணர் வழியும் நாளுயிர்போகும் நாளுயர் பாடைமேல்
காவு நாளிவை என்ற லாற்கருதேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.3
491எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தைதம்பி ரானென்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழிகாவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ்சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.4
492அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடியேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.5
493ஏடு வானிளந் திங்கள் சூடினைஎன்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்பத ரைக்க சைத்தஅழக னேயந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
சேட னேயுனை நான்ம றக்கினுஞ்சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.6
494விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்தேன்வி னைகளும் விண்டனன்
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெறநின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ்சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.7
495செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாகமமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயிலாடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ்சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.8
496சார ணன்தந்தை எம்பி ரானெந்தைதம்பிரா னென்பொன்மா மணியென்று
பேரெ ணாயிர கோடி தேவர்பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்றொ ழுங்கறையூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாவுனை நான்ம றக்கினுஞ்சொல்லும் நாநமச்சி வாயவே.
7.48.9
497கோணி யபிறை சூடியைக் கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத்தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவைசொல்லு வார்க்கில்லை துன்பமே.
7.48.10


இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கொடுமுடிநாதர், தேவியார் – பண்மொழியாளம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.49 திருமுருகன்பூண்டி
பண் – பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

498கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டாற லைக்கு மிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
7.49.1
499வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்விரவ லாமை சொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்கூறை கொள்ளு மிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன்பூண்டி மாநகர் வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
7.49.2
500பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்பாவ மொன் றறியார்
*உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங்கூறை கொள்ளு மிடம்
முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன்பூண்டி மாநகர் வாய்
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர்எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 

*உயிர் – உசிர் என மருவியது.
7.49.3
501பீறற் கூறை உடுத்தோர் பத்திரங்கட்டி வெட்டன ராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாடொறுங்கூறை கொள்ளு மிடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன்பூண்டி மாநகர் வாய்
ஏறு காலிற்ற தில்லை யாய்விடில்எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
7.49.4
502தயங்கு தோலை உடுத்த சங்கராசாம வேத மோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்மார்க்க மொன்றறி யீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன்பூண்டி மாநகர் வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
7.49.5
503விட்டி சைப்பன கொக்க ரைகொடுகொட்டி தத்த ளகங்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடுகுடமுழா நீர் மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன்பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
7.49.6
504வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண்கோவணந் தற்ற யலே
ஓதம் மேவிய ஒற்றி யூரையும்முத்தி நீர் மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன்பூண்டி மாநகர் வாய்
ஏது காரணம் எது காவல்கொண்டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
7.49.7
505படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்தோள்வ ரிநெடுங் கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையோர்பாகம் வைத்து கந்தீர்
முடவ ரல்லீர் இடரிலீர் முருகன்பூண்டி மாநகர் வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர்எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
7.49.8
506சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்பற்ற லைக லனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர்பாகம் வைத்து கந்தீர்
மோந்தை யோடு முழக்கறா முருகன்பூண்டி மாநகர் வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
7.49.9
507முந்தி வானவர் தாந்தொழு முருகன்பூண்டி மாநகர் வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையோர்பாகம் வைத்த வனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்உரைத்தன பத்துங் கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர்ஒன்றுந் தாமி லரே.
7.49.10


கழறிற்றறிவாரென்னுஞ் சேரமான்பெருமானாயனார் கொடுத்த 
திரவியங்களை பரிசனங்கள் தலையில் எடுப்பித்துக்கொண்டு 
திருமுருகன்பூண்டிக்குச் சமீபத்தில் எழுந்தருளும்போது பரமசிவத்தின்
கட்டளையினால் பூதங்கள் வேடுவர்களாகிவந்து அந்தப்பரிசனங்களை 
அடித்துப் பொருள்களைப் பறித்துப் போயின. அப்போது சுந்தரமூர்த்தி
சுவாமிகள் இந்தப் பதிகமோதிப் பொருள்களைப் பெற்றுக்கொண்டது.


இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஆவுடைநாயகர்,
தேவியார் – ஆவுடைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம் 
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


7.50 திருப்புனவாயில்
பண் – பழம்பஞ்சுரம்

திருச்சிற்றம்பலம்

508சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும்
மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர்
பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.
7.50.1
509கருது நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிட மாவது
மருத வானவர் வைகும் இடம்மற வேடுவர்
பொருது சாத்தொடு பூசல றாப்புன வாயிலே.
7.50.2
510தொக்கா யமனம் என்னொடு சூளறும் வைகலும்
நக்கான் நமை யாளுடை யான்நவி லும்மிடம்
அக்கோ டரவார்த் தபிரா னடிக் கன்பராய்ப்
புக்கா ரவர் போற்றொழி யாப்புன வாயிலே.
7.50.3
511வற்கென் றிருத்திகண்டாய் மனமென்னொடு சூளறும் வைகலும்
பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கைபொன் னாமது வேபுகல்
கற்குன்றுந் தூறுங் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப்
புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே.
7.50.4
512நில்லாய் மனம் என்னொடு சூளறும் வைகலும்
நல்லான் நமை யாளுடை யான்நவி லும்மிடம்
வில்லாய்க் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டுபோய்ப்
புல்வாய்க் கணம் புக்கொளிக் கும்புன வாயிலே.
7.50.5
513மறவல் நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
உறவும் ஊழியு மாயபெம் மாற்கிட மாவது
பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப்
புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே.
7.50.6
514ஏசற்று நீநினை யென்னொடு சூளறும் வைகலும்
பாசற் றவர் பாடிநின் றாடும் பழம்பதி
தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப்
பூசற் றுடிபூச லறாப் புன வாயிலே.
7.50.7
515கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே
தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை
கள்ளி வற்றிப்புல் தீந்துவெங் கானங் கழிக்கவே
புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே.
7.50.8
516எற்றே நினை என்னொடுஞ் சூளறும் வைகலும்
மற்றேதும் வேண்டா வல்வினை யாயின மாய்ந்தறக்
கற்றூறு கார்க் காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப்
புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே.
7.50.9
517பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை
அடியார் அடியன் நாவல வூரன் உரைத்தன
மடியாது கற்றிவை யேத்தவல் லார்வினை மாய்ந்துபோய்க்
குடியாகப் பாடிநின் றாடவல் லார்க்கில்லை குற்றமே.
7.50.10


இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பழம்பதிநாயகர்,
தேவியார் – பரங்கருணைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்திசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
ஏழாம் திருமுறை முதற் பகுதி முற்றும்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.