சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

நான்காம் திருமுறை – பகுதி 02

திருநாவுக்கரசர் சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
நான்காம் திருமுறை முதலாம் பகுதி

4.51 திருக்கோடிகா – திருநேரிசை

திருச்சிற்றம்பலம்

488நெற்றிமேற் கண்ணி னானே நீறுமெய் பூசி னானே
கற்றைப்புன் சடையி னானே கடல்விடம் பருகி னானே
செற்றவர் புரங்கள் மூன்றுஞ் செவ்வழல் செலுத்தி னானே
குற்றமில் குணத்தி னானே கோடிகா வுடைய கோவே.
4.51.1
489கடிகமழ் கொன்றை யானே கபாலங்கை யேந்தி னானே
வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகத் தானே
அடியிணை பரவ நாளும் அடியவர்க் கருள்செய் வானே
கொடியணி விழவ தோவாக் கோடிகா வுடைய கோவே.
4.51.2
490நீறுமெய் பூசி னானே நிழல்திகழ் மழுவி னானே
ஏறுகந் தேறி னானே இருங்கடல் அமுதொப் பானே
ஆறுமோர் நான்கு வேதம் அறமுரைத் தருளி னானே
கூறுமோர் பெண்ணி னானே கோடிகா வுடைய கோவே.
4.51.3
491காலனைக் காலாற் செற்றன் றருள்புரி கருணை யானே
நீலமார் கண்டத் தானே நீண்முடி யமரர் கோவே
ஞாலமாம் பெருமை யானே நளிரிளந் திங்கள் சூடுங்
கோலமார் சடையி னானே கோடிகா வுடைய கோவே.
4.51.4
492பூணர வாரத் தானே புலியுரி அரையி னானே
காணில்வெண் கோவ ணமுங் கையிலோர் கபால மேந்தி
ஊணுமூர்ப் பிச்சை யானே உமையொரு பாகத் தானே
கோணல்வெண் பிறையி னானே கோடிகா வுடைய கோவே.
4.51.5
493கேழல்வெண் கொம்பு பூண்ட கிளரொளி மார்பி னானே
ஏழையேன் ஏழை யேன்நான் என்செய்கேன் எந்தை பெம்மான்
மாழையொண் கண்ணி னார்கள் வலைதனில் மயங்கு கின்றேன்
கூழைஏ றுடைய செல்வா கோடிகா வுடைய கோவே.
4.51.6
494அழலுமிழ் அங்கை யானே அரிவையோர் பாகத் தானே
தழலுமிழ் அரவம் ஆர்த்துத் தலைதனிற் பலிகொள் வானே
நிழலுமிழ் சோலை சூழ நீள்வரி வண்டி னங்கள்
குழலுமிழ் கீதம் பாடுங் கோடிகா வுடைய கோவே.
4.51.7
495ஏவடு சிலையி னாலே புரமவை எரிசெய் தானே
மாவடு வகிர்கொள் கண்ணாள் மலைமகள் பாகத் தானே
ஆவடு துறையு ளானே ஐவரால் ஆட்டப் பட்டேன்
கோவடு குற்றந் தீராய் கோடிகா வுடைய கோவே.
4.51.8
496ஏற்றநீர்க் கங்கை யானே இருநிலந் தாவி னானும்
நாற்றமா மலர்மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்க லுற்றார்க் கழலுரு வாயினானே
கூற்றுக்குங் கூற்ற தானாய் கோடிகா வுடைய கோவே.
4.51.9
497பழகநான் அடிமை செய்வேன் பசுபதீ பாவ நாசா
மழகளி யானை யின்றோல் மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே அரக்கன் திண்டோ ள் அருவரை நெரிய வூன்றுங்
குழகனே கோல மார்பா கோடிகா வுடைய கோவே.
4.51.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கோடீசுவரர்; தேவியார் – வடிவாம்பிகையம்மை

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.52 திருவாரூர் – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

498படுகுழிப் பவ்வத் தன்ன பண்டியைப் பெய்த வாற்றாற்
கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறுங் கேது கின்றேன்
முடுகுவர் இருந்துள் ஐவர் மூர்க்கரே இவர்க ளோடும்
அடியனேன் வாழ மாட்டேன் ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.1
499புழுப்பெய்த பண்டி தன்னைப் புறமொரு தோலால் மூடி
ஒழுக்கறா ஒன்ப துவாய் ஒற்றுமை யொன்று மில்லை
சழக்குடை இதனுள் ஐவர் சங்கடம் பலவுஞ் செய்ய
அழிப்பனாய் வாழ மாட்டேன் ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.2
500பஞ்சின்மெல் லடியி னார்கள் பாங்கரா யவர்கள் நின்று
நெஞ்சில்நோய் பலவுஞ் செய்து நினையினும் நினைய வொட்டார்
நஞ்சணி மிடற்றி னானே நாதனே நம்ப னேநான்
அஞ்சினேற் கஞ்ச லென்னீர் ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.3
501கெண்டையந் தடங்கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக்
குண்டராய்த் திரிதந் தைவர் குலைத்திடர்க் குழியில் நூக்கக்
கண்டுநான் தரிக்க கில்லேன் காத்துக்கொள் கறைசேர் கண்டா
அண்டவா னவர்கள் போற்றும் ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.4
502தாழ்குழல் இன்சொல் நல்லார் தங்களைத் தஞ்ச மென்று
ஏழையே னாகி நாளும் என்செய்கேன் எந்தை பெம்மான்
வாழ்வதேல் அரிது போலும் வைகலும் ஐவர் வந்து
ஆழ்குழிப் படுத்த வாற்றேன் ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.5
503மாற்றமொன் றருள கில்லீர் மதியிலேன் விதியி லாமை
சீற்றமுந் தீர்த்தல் செய்யீர் சிக்கன வுடைய ராகிக்
கூற்றம்போல் ஐவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்ய
ஆற்றவுங் கில்லேன் நாயேன் ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.6
504உயிர்நிலை யுடம்பே காலா உள்ளமே தாழி யாகத்
துயரமே ஏற்ற மாகத் துன்பக்கோ லதனைப் பற்றிப்
பயிர்தனைச் சுழிய விட்டுப் பாழ்க்குநீர் இறைத்து மிக்க
அயர்வினால் ஐவர்க் காற்றேன் ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.7
505கற்றதேல் ஒன்று மில்லை காரிகை யாரோ டாடிப்
பெற்றதேற் பெரிதுந் துன்பம் பேதையேன் பிழைப்பி னாலே
முற்றினால் ஐவர் வந்து முறைமுறை துயரஞ் செய்ய
அற்றுநான் அலந்து போனேன் ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.8
506பத்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவுஞ் செய்ய
மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும்
அத்தனே அமரர் கோவே ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.9
507தடக்கைநா லைந்துங் கொண்டு தடவரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூத மெல்லாம்
முடித்தலை யனைத்துந் தோளும் முறிதர இறையே யூன்றி
அடர்த்தருள் செய்த தென்னே ஆரூர்மூ லட்ட னீரே.
4.52.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.53 திருவாரூர் – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

508குழல்வலங் கொண்ட சொல்லாள் கோலவேற் கண்ணி தன்னைக்
கழல்வலங் கொண்டு நீங்காக் கணங்களக் கணங்க ளார
அழல்வலங் கொண்ட கையான் அருட்கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல்வலங் கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றி னாரே.
4.53.1
509நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை யென்று
வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்துப்
பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின்னென் றஞ்சி
ஆகத்திற் கிடந்த நாகம் அடங்கும்ஆ ரூர னார்க்கே.
4.53.2
510தொழுதகங் குழைய மேவித் தோட்டிமை யுடைய தொண்டர்
அழுதகம் புகுந்து நின்றார் அவரவர் போலும் ஆரூர்
எழிலக நடுவெண் முத்த மன்றியும் ஏர்கொள் வேலிப்
பொழிலகம் விளங்கு திங்கட் புதுமுகிழ் சூடி னாரே.
4.53.3
511நஞ்சிருள் மணிகொள் கண்டர் நகையிருள் ஈமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத் தாடி விளங்கினார் போலும் மூவா
வெஞ்சுடர் முகடு தீண்டி வெள்ளிநா ராச மன்ன
அஞ்சுடர் அணிவெண் டிங்கள் அணியும்ஆ ரூர னாரே.
4.53.4
512எந்தளிர் நீர்மை கோல மேனியென் றிமையோ ரேத்தப்
பைந்தளிர்க் கொம்ப ரன்ன படர்கொடி பயிலப் பட்டுத்
தஞ்சடைத் தொத்தி னாலுந் தம்மதோர் நீர்மை யாலும்
அந்தளிர் ஆகம் போலும் வடிவர்ஆ ரூர னாரே.
4.53.5
513வானகம் விளங்க மல்கும் வளங்கெழு மதியஞ் சூடித்
தானக மழிய வந்து தாம்பலி தேர்வர் போலும்
ஊனகங் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
ஆனகம் அஞ்சும் ஆடும் அடிகள்ஆ ரூர னாரே.
4.53.6
514அஞ்சணை கணையி னானை அழலுற அன்று நோக்கி
அஞ்சணை குழலி னாளை அமுதமா அணைந்து நக்கு
அஞ்சணை அஞ்சும் ஆடி ஆடர வாட்டு வார்தாம்
அஞ்சணை வேலி ஆரூர் ஆதரித் திடங்கொண் டாரே.
4.53.7
515வணங்கிமுன் அமரர் ஏத்த வல்வினை யான தீரப்
பிணங்குடைச் சடையில் வைத்த பிறையுடைப் பெருமை யண்ணல்
மணங்கம ழோதி பாகர் மதிநிலா வட்டத் தாடி
அணங்கொடி மாட வீதி ஆரூரெம் அடிக ளாரே.
4.53.8
516நகலிடம் பிறர்கட் காக நான்மறை யோர்கள் தங்கள்
புகலிட மாகி வாழும் புகலிலி இருவர் கூடி
இகலிட மாக நீண்டங் கீண்டெழில் அழல தாகி
அகலிடம் பரவி யேத்த அடிகள்ஆ ரூர னாரே.
4.53.9
517ஆயிரந் திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி
ஆயிரம் அசுரர் வாழும் அணிமதில் மூன்றும் வேவ
ஆயிரந் தோளும் மட்டித் தாடிய அசைவு தீர
ஆயிரம் அடியும் வைத்த அடிகள்ஆ ரூர னாரே.
4.53.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.54 திருப்புகலூர் – திருநேரிசை 

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்

518பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறிநீ றாகி வீழப்
புகைத்திட்ட தேவர் கோவே பொறியிலேன் உடலந் தன்னுள்
அகைத்திட்டங் கதனை நாளும் ஐவர்கொண் டாட்ட வாடித்
திகைத்திட்டேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே.
4.54.1
519மையரி மதர்த்த ஒண்கண் மாதரார் வலையிற் பட்டுக்
கையெரி சூல மேந்துங் கடவுளை நினைய மாட்டேன்
ஐநெரிந் தகமி டற்றே அடைக்கும்போ தாவி யார்தாஞ்
செய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே.
4.54.2
520முப்பதும் முப்பத் தாறும் முப்பதும் இடுகு ரம்பை
அப்பர்போல் ஐவர் வந்து அதுதரு கிதுவி டென்று
ஒப்பவே நலிய லுற்றால் உய்யுமா றறிய மாட்டேன்
செப்பமே திகழு மேனித் திருப்புக லூர னீரே.
4.54.3
521பொறியிலா அழுக்கை யோம்பிப் பொய்யினை மெய்யென் றெண்ணி
நெறியலா நெறிகள் சென்றேன் நீதனேன் நீதி யேதும்
அறிவிலேன் அமரர் கோவே அமுதினை மண்ணில் வைக்குஞ்
செறிவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே.
4.54.4
522அளியினார் குழலி னார்கள் அவர்களுக் கன்ப தாகிக்
களியினார் பாடல் ஓவாக் கடவூர்வீ ரட்ட மென்னுந்
தளியினார் பாத நாளும் நினைவிலாத் தகவில் நெஞ்சந்
தெளிவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே.
4.54.5
523இலவினார் மாதர் பாலே இசைந்துநான் இருந்து பின்னும்
நிலவுநாள் பலவென் றெண்ணி நீதனேன் ஆதி உன்னை
உலவிநான் உள்க மாட்டேன் உன்னடி பரவு ஞானஞ்
செலவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே.
4.54.6
524காத்திலேன் இரண்டும் மூன்றுங் கல்வியேல் இல்லை என்பால்
வாய்த்திலேன் அடிமை தன்னுள் வாய்மையால் தூயே னல்லேன்
பார்த்தனுக் கருள்கள் செய்த பரமனே பரவு வார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப்புக லூர னீரே.
4.54.7
525நீருமாய்த் தீயு மாகி நிலனுமாய் விசும்பு மாகி
ஏருடைக் கதிர்க ளாகி இமையவர் இறைஞ்ச நின்று
ஆய்வதற் கரிய ராகி அங்கங்கே யாடு கின்ற
தேவர்க்குந் தேவ ராவார் திருப்புக லூர னாரே.
4.54.8
526மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே.
4.54.9
527அருவரை தாங்கி னானும் அருமறை யாதி யானும்
இருவரும் அறிய மாட்டா ஈசனார் இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று கண்வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார் திருப்புக லூர னாரே.
4.54.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அக்கினீசுவரர்,
தேவியார் – கருந்தார்க்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.55 திருவலம்புரம் – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

528தெண்டிரை தேங்கி ஓதஞ் சென்றடி வீழுங் காலைத்
தொண்டிரைத் தண்டர் கோனைத் தொழுதடி வணங்கி யெங்கும்
வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம்புரத் தடிகள் தம்மைக்
கொண்டுநற் கீதம் பாடக் குழகர்தாம் இருந்த வாறே.
4.55.1
529மடுக்களில் வாளை பாய வண்டினம் இரிந்த பொய்கைப்
பிடிக்களி றென்னத் தம்மிற் பிணைபயின் றணைவ ரால்கள்
தொடுத்தநன் மாலை ஏந்தித் தொண்டர்கள் பரவி யேத்த
வடித்தடங் கண்ணி பாகர் வலம்புரத் திருந்த வாறே.
4.55.2
530தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை அஞ்சுங் கொண்டு அன்பினால் அமர வாட்டி
வானிடை மதியஞ் சூடும் வலம்புரத் தடிகள் தம்மை
நானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற் றேனே.
4.55.3
531முளைஎயிற் றிளநல் ஏனம் பூண்டுமொய் சடைகள் தாழ
வளைஎயிற் றிளைய நாகம் வலித்தரை யிசைய வீக்கிப்
புளைகைய போர்வை போர்த்துப் புனலொடு மதியஞ் சூடி
வளைபயில் இளைய ரேத்தும் வலம்புரத் தடிகள் தாமே.
4.55.4
532சுருளுறு வரையின் மேலாற் றுளங்கிளம் பளிங்கு சிந்த
இருளுறு கதிர்நு ழைந்த இளங்கதிர்ப் பசலைத் திங்கள்
அருளுறும் அடிய ரெல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த
மருளுறு கீதங் கேட்டார் வலம்புரத் தடிக ளாரே.
4.55.5
533நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால் நீண்டபுன் சடையி னானே
அனைத்துடன் கொண்டு வந்தங் கன்பினால் அமைய வாட்டிப்
புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை மெய்ம்மையைப் புணர மாட்டேன்
எனக்குநான் செய்வ தென்னே இனிவலம் புரவ னீரே.
4.55.6
534செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம்பழ மினிய நாடித்
தங்கயந் துறந்து போந்து தடம்பொய்கை அடைந்து நின்று
கொங்கையர் குடையுங் காலைக் கொழுங்கனி யழுங்கி னாராம்
மங்கல மனையின் மிக்கார் வலம்புரத் தடிக ளாரே.
4.55.7
535அருகெலாங் குவளை செந்நெல் அகவிலை யாம்பல் நெய்தல்
தெருவெலாந் தெங்கு மாவும் பழம்விழும் படப்பை யெல்லாங்
குருகினங் கூடி யாங்கே கும்மலித் திறகு லர்த்தி
மருவலா மிடங்கள் காட்டும் வலம்புரத் தடிக ளாரே.
4.55.8
536கருவரை யனைய மேனிக் கடல்வண்ண னவனுங் காணான்
திருவரை யனைய பூமேல் திசைமுக னவனுங் காணான்
ஒருவரை உச்சி ஏறி ஓங்கினார் ஓங்கி வந்து
அருமையில் எளிமை யானார் அவர்வலம் புரவ னாரே.
4.55.9
537வாளெயி றிலங்க நக்கு வளர்கயி லாயந் தன்னை
ஆள்வலி கருதிச் சென்ற அரக்கனை வரைக்கீ ழன்று
தோளொடு பத்து வாயுந் தொலைந்துடன் அழுந்த வூன்றி
ஆண்மையும் வலியுந் தீர்ப்பார் அவர்வலம் புரவ னாரே.
4.55.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வலம்புரநாதர், தேவியார் – வடுவகிர்க்கண்ணம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.56 திருஆவடுதுறை – திருநேரிசை 

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்

538மாயிரு ஞால மெல்லாம் மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலுங்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே.
4.56.1
539மடந்தை பாகத்தர் போலும் மான்மறிக் கையர் போலும்
குடந்தையிற் குழகர் போலுங் கொல்புலித் தோலர் போலுங்
கடைந்தநஞ் சுண்பர் போலுங் காலனைக் காய்வர் போலும்
அடைந்தவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.
4.56.2
540உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை யாவர் போலுஞ்
செற்றவர் புரங்கள் மூன்றுந் தீயெழச் செறுவர் போலுங்
கற்றவர் பரவி யேத்தக் கலந்துலந் தலந்து பாடும்
அற்றவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.
4.56.3
541மழுவமர் கையர் போலும் மாதவள் பாகர் போலும்
எழுநுனை வேலர் போலும் என்புகொண் டணிவர் போலுந்
தொழுதெழுந் தாடிப் பாடித் தோத்திரம் பலவுஞ் சொல்லி
அழுமவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.
4.56.4
542பொடியணி மெய்யர் போலும் பொங்குவெண் ணூலர் போலுங்
கடியதோர் விடையர் போலுங் காமனைக் காய்வர் போலும்
வெடிபடு தலையர் போலும் வேட்கையாற் பரவுந் தொண்டர்
அடிமையை அளப்பர் போலும் ஆவடு துறைய னாரே.
4.56.5
543வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரங் கொடுப்பர் போலுந் தானவர் தலைவர் போலுந்
துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை ஆர்ப்பர் போலும் ஆவடு துறைய னாரே.
4.56.6
544விடைதரு கொடியர் போலும் வெண்புரி நூலர் போலும்
படைதரு மழுவர் போலும் பாய்புலித் தோலர் போலும்
உடைதரு கீளர் போலும் உலகமு மாவர் போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடு துறைய னாரே.
4.56.7
545முந்திவா னோர்கள் வந்து முறைமையால் வணங்கி யேத்த
நந்திமா காள ரென்பார் நடுவுடை யார்கள் நிற்பச்
சிந்தியா தேயொ ழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும்
அந்திவான் மதியஞ் சூடும் ஆவடு துறைய னாரே.
4.56.8
546பானமர் ஏன மாகிப் பாரிடந் திட்ட மாலுந்
தேனமர்ந் தேறும் அல்லித் திசைமுக முடைய கோவுந்
தீனரைத் தியக் கறுத்த திருவுரு வுடையர் போலும்
ஆனரை ஏற்றர் போலும் ஆவடு துறைய னாரே.
4.56.9
547பார்த்தனுக் கருள்வர் போலும் படர்சடை முடியர் போலும்
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலுங்
கூத்தராய்ப் பாடி யாடிக் கொடுவலி யரக்கன் றன்னை
ஆர்த்தவாய் அலறு விப்பார் ஆவடு துறைய னாரே.
4.56.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மாசிலாமணியீசுவரர், தேவியார் – ஒப்பிலாமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.57. திருஆவடுதுறை – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

548மஞ்சனே மணியு மானாய் மரகதத் திரளு மானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வி னானே
துஞ்சும்போ தாக வந்து துணையெனக் காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டும் ஆவடு துறையு ளானே.
4.57.1
549நானுகந் துன்னை நாளும் நணுகுமா கருதி யேயும்
ஊனுகந் தோம்பும் நாயேன் உள்ளுற ஐவர் நின்றார்
தானுகந் தேயு கந்த தகவிலாத் தொண்ட னேன்நான்
ஆனுகந் தேறு வானே ஆவடு துறையு ளானே.
4.57.2
550கட்டமே வினைக ளான காத்திவை நோக்கி ஆளாய்
ஒட்டவே ஒட்டி நாளும் உன்னையுள் வைக்க மாட்டேன்
பட்டவான் தலைகை யேந்திப் பலிதிரிந் தூர்கள் தோறும்
அட்டமா வுருவி னானே ஆவடு துறையு ளானே.
4.57.3
551பெருமைநன் றுடைய தில்லை யென்றுநான் பேச மாட்டேன்
ஒருமையால் உன்னை உள்கி உகந்துவா னேற மாட்டேன்
கருமையிட் டாய வூனைக் கட்டமே கழிக்கின் றேன்நான்
அருமையா நஞ்ச முண்ட ஆவடு துறையு ளானே.
4.57.4
552துட்டனாய் வினைய தென்னுஞ் சுழித்தலை அகப்பட் டேனைக்
கட்டனாய் ஐவர் வந்து கலக்காமைக் காத்துக் கொள்வாய்
மட்டவிழ் கோதை தன்னை மகிழ்ந்தொரு பாகம் வைத்து
அட்டமா நாக மாட்டும் ஆவடு துறையு ளானே.
4.57.5
553காரழற் கண்ட மேயாய் கடிமதிற் புரங்கள் மூன்றும்
ஓரழல் அம்பி னாலே யுகைத்துத்தீ எரிய மூட்டி
நீரழற் சடையு ளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆரழல் ஏந்தி யாடும் ஆவடு துறையு ளானே.
4.57.6
554செறிவிலேன் சிந்தை யுள்ளே சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன் றில்லேன் கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன் றில்லேன் நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்துப் போனேன் ஆவடு துறையு ளானே.
4.57.7
555கோலமா மங்கை தன்னைக் கொண்டொரு கோல மாய
சீலமே அறிய மாட்டேன் செய்வினை மூடி நின்று
ஞாலமாம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய்
ஆலமா நஞ்ச முண்ட ஆவடு துறையு ளானே.
4.57.8
556நெடியவன் மலரி னானும் நேர்ந்திரு பாலும் நேடக்
கடியதோர் உருவ மாகிக் கனலெரி யாகி நின்ற
வடிவின வண்ண மென்றே என்றுதாம் பேச லாகார்
அடியனேன் நெஞ்சி னுள்ளார் ஆவடு துறையு ளானே.
4.57.9
557மலைக்குநே ராய ரக்கன் சென்றுற மங்கை அஞ்சத்
தலைக்குமேற் கைக ளாலே தாங்கினான் வலியை மாள
உலப்பிலா விரலால் ஊன்றி ஒறுத்தவற் கருள்கள் செய்து
அலைத்தவான் கங்கை சூடும் ஆவடு துறையு ளானே.
4.57.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.58 திருப்பருப்பதம் – திருநேரிசை 

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்

558கன்றினார் புரங்கள் மூன்றுங் கனலெரி யாகச் சீறி
நின்றதோ ருருவந் தன்னால் நீர்மையும் நிறையுங் கொண்டு
ஒன்றியாங் குமையுந் தாமும் ஊர்பலி தேர்ந்து பின்னும்
பன்றிப்பின் வேட ராகிப் பருப்பத நோக்கி னாரே.
4.58.1
559கற்றமா மறைகள் பாடிக் கடைதொறும் பலியுந் தேர்வார்
வற்றலோர் தலைகை யேந்தி வானவர் வணங்கி வாழ்த்த
முற்றவோர் சடையில் நீரை ஏற்றமுக் கண்ணர் தம்மைப்
பற்றினார்க் கருள்கள் செய்து பருப்பத நோக்கி னாரே.
4.58.2
560கரவிலா மனத்த ராகிக் கைதொழு வார்கட் கென்றும்
இரவினின் றெரிய தாடி இன்னருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்று மாட்டிய நகைய ராகிப்
பரவுவார்க் கருள்கள் செய்து பருப்பத நோக்கி னாரே.
4.58.3
561கட்டிட்ட தலைகை யேந்திக் கனலெரி யாடிச் சீறிச்
சுட்டிட்ட நீறு பூசிச் சுடுபிணக் காட ராகி
விட்டிட்ட வேட்கை யார்க்கு வேறிருந் தருள்கள் செய்து
பட்டிட்ட வுடைய ராகிப் பருப்பத நோக்கி னாரே.
4.58.4
562கையராய்க் கபால மேந்திக் காமனைக் கண்ணாற் காய்ந்து
மெய்யராய் மேனி தன்மேல் விளங்குவெண் ணீறு பூசி
உய்யரா யுள்கு வார்கட் குவகைகள் பலவுஞ் செய்து
பையரா அரையி லார்த்துப் பருப்பத நோக்கி னாரே.
4.58.5
563வேடராய் வெய்ய ராகி வேழத்தி னுரிவை போர்த்து
ஓடரா யுலக மெல்லா முழிதர்வர் உமையுந் தாமுங்
காடராய்க் கனல்கை யேந்திக் கடியதோர் விடைமேற் கொண்டு
பாடராய்ப் பூதஞ் சூழப் பருப்பத நோக்கி னாரே.
4.58.6
564மேகம்போல் மிடற்ற ராகி வேழத்தி னுரிவை போர்த்து
ஏகம்பம் மேவி னார்தாம் இமையவர் பரவி யேத்தக்
காகம்பர் கழற ராகிக் கடியதோர் விடையொன் றேறிப்
பாகம்பெண் ணுருவ மானார் பருப்பத நோக்கி னாரே.
4.58.7
565பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
காருடைக் கண்ட ராகிக் கபாலமோர் கையி லேந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளே றேறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பத நோக்கி னாரே.
4.58.8
566அங்கண்மா லுடைய ராய ஐவரா லாட்டு ணாதே
உங்கள்மால் தீர வேண்டில் உள்ளத்தா லுள்கி யேத்துஞ்
செங்கண்மால் பரவி யேத்திச் சிவனென நின்ற செல்வர்
பைங்கண்வெள் ளேற தேறிப் பருப்பத நோக்கி னாரே.
4.58.9
567அடல்விடை யூர்தி யாகி அரக்கன்றோள் அடர வூன்றிக்
கடலிடை நஞ்ச முண்ட கறையணி கண்ட னார்தாஞ்
சுடர்விடு மேனி தன்மேற் சுண்ணவெண் ணீறு பூசிப்
படர்சடை மதியஞ் சேர்த்திப் பருப்பத நோக்கி னாரே.
4.58.10


இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பருப்பதேசுவரர், தேவியார் – மனோன்மணியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.59 திருஅவளிவணல்லூர் – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

568தோற்றினான் எயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் றன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிரு மென்று
வீற்றினை யுடைய னாகி வெடுவெடுத் தெழுந்த வன்றன்
ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவ ணல்லூ ராரே.
4.59.1
569வெம்பினா ரரக்க ரெல்லாம் மிகச்சழக் காயிற் றென்று
செம்பினா லெடுத்த கோயில் சிக்கெனச் சிதையு மென்ன
நம்பினா ரென்று சொல்லி நன்மையான் மிக்கு நோக்கி
அம்பினால் அழிய வெய்தார் அவளிவ ணல்லூ ராரே.
4.59.2
570கீழ்ப்படக் கருத லாமோ கீர்த்திமை யுள்ள தாகிற்
தோட்பெரு வலியி னாலே தொலைப்பன்யான் மலையை யென்று
வேட்பட வைத்த வாறே விதிர்விதிர்த் தரக்கன் வீழ்ந்து
ஆட்படக் கருதிப் புக்கார் அவளிவ ணல்லூ ராரே.
4.59.3
571நிலைவலம் வல்ல னல்லன் நேர்மையை நினைய மாட்டான்
சிலைவலங் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத்
தலைவலங் கருதிப் புக்குத் தாக்கினான் தன்னை யன்று
அலைகுலை யாக்கு வித்தார் அவளிவ ணல்லூ ராரே.
4.59.4
572தவ்வலி யொன்ற னாகித் தனதொரு பெருமை யாலே
மெய்வ்வலி யுடைய னென்று மிகப்பெருந் தேரை யூர்ந்து
செவ்வலி கூர்வி ழியாற் சிரமத்தான் எடுக்குற் றானை
அவ்வலி தீர்க்க வல்லார் அவளிவ ணல்லூ ராரே.
4.59.5
573நன்மைதான் அறிய மாட்டான் நடுவிலா அரக்கர் கோமான்
வன்மையே கருதிச் சென்று வலிதனைச் செலுத்த லுற்றுக்
கன்மையான் மலையை யோடிக் கருதித்தான் எடுத்து வாயால்
அம்மையோ வென்ன வைத்தார் அவளிவ ணல்லூ ராரே.
4.59.6
574கதம்படப் போது வார்கள் போதுமக் கருத்தி னாலே
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கெனத் தவிரு மென்று
மதம்படு மனத்த னாகி வன்மையான் மிக்கு நோக்க
அதம்பழத் துருவு செய்தார் அவளிவ ணல்லூ ராரே.
4.59.7
575நாடுமிக் குழிதர் கின்ற நடுவிலா அரக்கர் கோனை
ஓடுமிக் கென்று சொல்லி ஊன்றினான் உகிரி னாலே
பாடுமிக் குய்வ னென்று பணியநற் றிறங்கள் காட்டி
ஆடுமிக் கரவம் பூண்டார் அவளிவ ணல்லூ ராரே.
4.59.8
576ஏனமா யிடந்த மாலும் எழில்தரு முளரி யானும்
ஞானந்தா னுடைய ராகி நன்மையை அறிய மாட்டார்
சேனந்தான் இலாவ ரக்கன் செழுவரை எடுக்க வூன்றி
ஆனந்த அருள்கள் செய்தார் அவளிவ ணல்லூ ராரே.
4.59.9
577ஊக்கினான் மலையை யோடி உணர்விலா அரக்கன் றன்னைத்
தாக்கினான் விரலி னாலே தலைபத்துந் தகர வூன்றி
நோக்கினான் அஞ்சத் தன்னை நோன்பிற வூன்று சொல்லி
ஆக்கினார் அமுத மாக அவளிவ ணல்லூ ராரே.
4.59.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சாட்சிநாயகேசுவரர், தேவியார் – சவுந்தரநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.60 திருப்பெருவேளூர் – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

578மறையணி நாவி னானை மறப்பிலார் மனத்து ளானைக்
கறையணி கண்டன் றன்னைக் கனலெரி யாடி னானைப்
பிறையணி சடையி னானைப் பெருவேளூர் பேணி னானை
நறையணி மலர்கள் தூவி நாடொறும் வணங்கு வேனே.
4.60.1
579நாதனாய் உலக மெல்லாம் நம்பிரான் எனவும் நின்ற
பாதனாம் பரம யோகி பலபல திறத்தி னாலும்
பேதனாய்த் தோன்றி னானைப் பெருவேளூர் பேணி னானை
ஓதநா வுடைய னாகி உரைக்குமா றுரைக்கின் றேனே.
4.60.2
580குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை யென்று
நறவிள நறுமென் கூந்தல் நங்கையோர் பாகத் தானைப்
பிறவியை மாற்று வானைப் பெருவேளூர் பேணி னானை
உறவினால் வல்ல னாகி உணருமா றுணர்த்து வேனே.
4.60.3
581மைஞ்ஞவில் கண்டன் றன்னை வலங்கையின் மழுவொன் றேந்திக்
கைஞ்ஞவில் மானி னோடுங் கனலெரி யாடி னானைப்
பிஞ்ஞகன் றன்னை அந்தண் பெருவேளூர் பேணி னானைப்
பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப் பொறியிலா அறிவி லேனே.
4.60.4
582ஓடைசேர் நெற்றி யானை உரிவையை மூடி னானை
வீடதே காட்டு வானை வேதநான் காயி னானைப்
பேடைசேர் புறவ நீங்காப் பெருவேளூர் பேணி னானைக்
கூடநான் வல்ல மாற்றங் குறுகுமா றறிகி லேனே.
4.60.5
583கச்சைசேர் நாகத் தானைக் கடல்விடங் கண்டத் தானைக்
கச்சியே கம்பன் றன்னைக் கனலெரி யாடு வானைப்
பிச்சைசேர்ந் துழல்வி னானைப் பெருவேளூர் பேணி னானை
இச்சைசேர்ந் தமர நானும் இறைஞ்சுமா றிறைஞ்சு வேனே.
4.60.6
584சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்கு வார்கள்
முத்தனை மூர்த்தி யாய முதல்வனை முழுது மாய
பித்தனைப் பிறரு மேத்தப் பெருவேளூர் பேணி னானை
மெத்தனே யவனை நாளும் விரும்புமா றறிகி லேனே.
4.60.7
585முண்டமே தாங்கி னானை முற்றிய ஞானத் தானை
வண்டுலாங் கொன்றை மாலை வளர்மதிக் கண்ணி யானைப்
பிண்டமே ஆயி னானைப் பெருவேளூர் பேணி னானை
அண்டமாம் ஆதி யானை அறியுமா றறிகி லேனே.
4.60.8
586விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோ ரேத்தும் பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி உய்யும் வகையது நினைக்கின் றேனே.
4.60.9
587பொருகடல் இலங்கை மன்னன் உடல்கெடப் பொருத்தி நல்ல
கருகிய கண்டத் தானைக் கதிரிளங் கொழுந்து சூடும்
பெருகிய சடையி னானைப் பெருவேளூர் பேணி னானை
உருகிய அடிய ரேத்தும் உள்ளத்தால் உள்கு வேனே.
4.60.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பிரியாதநாதர், தேவியார் – மின்னனையாளம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.61 திருஇராமேச்சுரம் – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

588பாசமுங் கழிக்க கில்லா அரக்கரைப் படுத்துத் தக்க
வாசமிக் கலர்கள் கொண்டு மதியினால் மால்செய் கோயில்
நேசமிக் கன்பி னாலே நினைமின்நீர் நின்று நாளுந்
தேசமிக் கான் இருந்த திருஇரா மேச்சு ரமே.
4.61.1
589முற்றின நாள்கள் என்று முடிப்பதே கார ணமாய்
உற்றவன் போர்க ளாலே உணர்விலா அரக்கர் தம்மைச்
செற்றமால் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைப்
பற்றிநீ பரவு நெஞ்சே படர்சடை ஈசன் பாலே.
4.61.2
590கடலிடை மலைகள் தம்மால் அடைத்துமால் கருமம் முற்றித்
திடலிடைச் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் தூய்மை யின்றி
உடலிடை நின்றும் பேரா ஐவர்ஆட் டுண்டு நானே.
4.61.3
591குன்றுபோல் தோளு டைய குணமிலா அரக்கர் தம்மைக்
கொன்றுபோ ராழி யம்மால் வேட்கையாற் செய்த கோயில்
நன்றுபோல் நெஞ்ச மேநீ நன்மையை அறிதி யாயிற்
சென்றுநீ தொழுதுய் கண்டாய் திருஇரா மேச்சு ரமே.
4.61.4
592வீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்ட ரக்கன்
கூரமிக் கவனைச் சென்று கொன்றுடன் கடற் படுத்துத்
தீரமிக் கானி ருந்த திருஇரா மேச்சு ரத்தைக்
கோரமிக் கார்த வத்தாற் கூடுவார் குறிப்பு ளாரே.
4.61.5
593ஆர்வலம் நம்மின் மிக்கார் என்றஅவ் வரக்கர் கூடிப்
போர்வலஞ் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்
தேர்வலஞ் செற்ற மால்செய் திருஇரா மேச்சு ரத்தைச்
சேர்மட நெஞ்ச மேநீ செஞ்சடை எந்தை பாலே.
4.61.6
594வாக்கினால் இன்பு ரைத்து வாழ்கிலார் தம்மை யெல்லாம்
போக்கினாற் புடைத்த வர்கள் உயிர்தனை யுண்டு மால்தான்
தேக்குநீர் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தை
நோக்கினால் வணங்கு வார்க்கு நோய்வினை நுணுகு மன்றே.
4.61.7
595பலவுநாள் தீமை செய்து பார்தன்மேற் குழுமி வந்து
கொலைவிலார் கொடிய ராய அரக்கரைக் கொன்று வீழ்த்தச்
சிலையினான் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைத்
தலையினால் வணங்கு வார்கள் தாழ்வராந் தவம தாமே.
4.618
596கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை யெல்லாம்
வீடவே சக்க ரத்தால் எறிந்துபின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தை
நாடிவாழ் நெஞ்ச மேநீ நன்னெறி யாகு மன்றே.
4.61.9
597வன்கண்ணர் வாள ரக்கர் வாழ்வினை யொன்ற றியார்
புன்கண்ண ராகி நின்று போர்கள்செய் தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைத்
தங்கணால் எய்த வல்லார் தாழ்வராந் தலைவன் பாலே.
4.61.10
598வரைகளொத் தேயு யர்ந்த மணிமுடி அரக்கர் கோனை
விரையமுற் றறவொ டுக்கி மீண்டுமால் செய்த கோயில்
திரைகள்முத் தால்வ ணங்குந் திருஇரா மேச்சு ரத்தை
உரைகள்பத் தாலு ரைப்பார் உள்குவார் அன்பி னாலே.
4.61.11


இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – இராமலிங்கேசுவரர்; தேவியார் – பருவதவர்த்தனியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.62 திருவாலவாய் – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

599வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றென்
றோதியே மலர்கள் தூவி ஒடுங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.
4.62.1
600நம்பனே நான்மு கத்தாய் நாதனே ஞான மூர்த்தி
என்பொனே ஈசா என்றென் றேத்திநான் ஏசற் றென்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.
4.62.2
601ஒருமருந் தாகி யுள்ளாய் உம்பரோ டுலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய் பேரமு தின்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளாய் ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
அருமருந் தால வாயில் அப்பனே அருள்செ யாயே.
4.62.3
602செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்துஞ்
சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன்
ஐயனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.
4.62.4
603வெண்டலை கையி லேந்தி மிகவுமூர் பலிகொண் டென்றும்
உண்டது மில்லை சொல்லில் உண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப் பளகனேன் உளம தார
அண்டனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.
4.62.5
604எஞ்சலில் புகலி தென்றென் றேத்திநான் ஏசற் றென்றும்
வஞ்சக மொன்று மின்றி மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே நாயேற்
கஞ்சலென் றால வாயில் அப்பனே அருள்செ யாயே.
4.62.6
605வழுவிலா துன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்ட னேன்உன்
செழுமலர்ப் பாதங் காணத் தெண்டிரை நஞ்ச முண்ட
குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.
4.62.7
606நறுமலர் நீருங் கொண்டு நாடொறு மேத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா மாமறை யங்க மாறும்
அறிவனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.
4.62.8
607நலந்திகழ் வாயின் நூலாற் சருகிலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரச தாள அருளினாய் என்று திண்ணங்
கலந்துடன் வந்து நின்றாள் கருதிநான் காண்ப தாக
அலந்தனன் ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.
4.62.9
608பொடிக்கொடு பூசிப் பொல்லாக் குரம்பையிற் புந்தி யொன்றிப்
பிடித்துநின் றாள்க ளென்றும் பிதற்றிநா னிருக்க மாட்டேன்
எடுப்பனென் றிலங்கைக் கோன்வந் தெடுத்தலும் இருப துதோள்
அடர்த்தனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே.
4.62.10


இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சொக்கநாதேசுவரர், தேவியார் – மீனாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.63 திருவண்ணாமலை – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

609ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்டோ ள் சுடர்மழுப் படையி னானே
ஆதியே அமரர் கோவே அணியணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால் நினையுமா நினைவி லேனே.
4.63.1
610பண்டனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே அணியணா மலையு ளானே
தொண்டனேன் உன்னை அல்லாற் சொல்லுமா சொல்லி லேனே.
4.63.2
611உருவமும் உயிரு மாகி ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே.
4.63.3
612பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும் அணியணா மலையு ளானே
என்பொனே உன்னை யல்லால் யாதும்நான் நினைவி லேனே.
4.63.4
613பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமர ரேத்தும் அணியணா மலையு ளானே
இறைவனே உன்னை யல்லா லியாதுநான் நினைவி லேனே.
4.63.5
614புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலா
அரிகுலம் மலிந்த அண்ணா மலையுளாய் அலரின் மிக்க
வரிமிகு வண்டு பண்செய் பாதநான் மறப்பி லேனே.
4.63.6
615இரவியும் மதியும் விண்ணும் இருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவனம் எட்டுந் திசையொளி உருவ மானாய்
அரவுமிழ் மணிகொள் சோதி அணியணா மலையு ளானே
பரவுநின் பாத மல்லாற் பரமநான் பற்றி லேனே.
4.63.7
616பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை ஈந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்துவந் தீண்டு கொண்டல் அணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத் திறமலாற் றிறமி லேனே.
4.63.8
617பாலுநெய் முதலா மிக்க பசுவில்ஐந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூகம் அணியணா மலையு ளானே
வாலுடை விடையாய் உன்றன் மலரடி மறப்பி லேனே.
4.63.9
618இரக்கமொன் றியாது மில்லாக் காலனைக் கடிந்த எம்மான்
உரத்தினால் வரையை ஊக்க ஒருவிரல் நுதியி னாலே
அரக்கனை நெரித்த அண்ணா மலையுளாய் அமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித் திருவடி மறப்பி லேனே.
4.63.10


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அருணாசலேசுவரர், தேவியார் – உண்ணாமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.64 திருவீழிமிழலை – திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

619பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர்
சீதத்திற் பொலிந்த திங்கட் கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர்
கீதத்திற் பொலிந்த ஓசைக் கேள்வியர் வேள்வி யாளர்
வேதத்தின் பொருளர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
4.64.1
620காலையிற் கதிர்செய் மேனி கங்குலிற் கறுத்த கண்டர்
மாலையின் மதியஞ் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையிற் பாகும் போல அண்ணித்திட் டடியார்க் கென்றும்
வேலையின் அமுதர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
4.64.2
621வருந்தின நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆற்கீழ்
இருந்துநன் பொருள்கள் நால்வர்க் கியம்பினர் இருவ ரோடும்
பொருந்தினர் பிரிந்து தம்பால் பொய்யரா மவர்கட் கென்றும்
விருந்தினர் திருந்து வீழி மிழலையுள் விகிர்த னாரே.
4.64.3
622நிலையிலா வூர்மூன் றொன்ற நெருப்பரி காற்றம் பாகச்
சிலையுநா ணதுவு நாகங் கொண்டவர் தேவர் தங்கள்
தலையினாற் றரித்த என்பும் தலைமயிர் வடமும் பூண்ட
விலையிலா வேடர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
4.64.4
623மறையிடைப் பொருளர் மொட்டின் மலர்வழி வாசத் தேனர்
கறவிடைப் பாலின் நெய்யர் கரும்பினிற் கட்டி யாளர்
பிறையிடைப் பாம்பு கொன்றைப் பிணையல்சேர் சடையுள் நீரர்
விறகிடைத் தீயர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
4.64.5
624எண்ணகத் தில்லை அல்லர் உளரல்லர் இமவான் பெற்ற
பெண்ணகத் தரையர் காற்றிற் பெருவலி யிருவ ராகி
மண்ணகத் தைவர் நீரில் நால்வர்தீ யதனில் மூவர்
விண்ணகத் தொருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
4.64.6
625சந்தணி கொங்கை யாளோர் பங்கினர் சாம வேதர்
எந்தையும் எந்தை தந்தை தந்தையு மாய ஈசர்
அந்தியோ டுதயம் அந்த ணாளர்ஆன் நெய்யால் வேட்கும்
வெந்தழ லுருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
4.64.7
626நீற்றினை நிறையப் பூசி நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி ஒருநா ளொன்று குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
4.64.8
627சித்திசெய் பவர்கட் கெல்லாஞ் சேர்விடஞ் சென்று கூடப்
பத்திசெய் பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்பி லாளர்
முத்திசை பவள மேனி முதிரொளி நீல கண்டர்
வித்தினில் முளையர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
4.64.9
628தருக்கின அரக்கன் தேரூர் சாரதி தடைநி லாது
பொருப்பினை யெடுத்த தோளும் பொன்முடி பத்தும் புண்ணாய்
நெரிப்புண்டங் கலறி மீண்டு நினைந்தடி பரவத் தம்வாள்
விருப்பொடுங் கொடுப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
4.64.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வீழியழகீசுவரர், தேவியார் – சுந்தராம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.65 திருச்சாய்க்காடு – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

629தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண் டேயன்
வீடுநாள் அணுகிற் றென்று மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செல்லு மஞ்சிப் பாதமே சரண மென்னச்
சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவி னாரே.
4.65.1
630வடங்கெழு மலைமத் தாக வானவர் அசுர ரோடு
கடைந்திட எழுந்த நஞ்சங் கண்டுபல் தேவ ரஞ்சி
அடைந்துநும் சரண மென்ன அருள்பெரி துடைய ராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவி னாரே.
4.65.2
631அரணிலா வெளிய நாவல் அருள்நிழ லாக ஈசன்
வரணிய லாகித் தன்வாய் நூலினாற் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்ன னாக்கித்
தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவி னாரே.
4.65.3
632அரும்பெருஞ் சிலைக்கை வேட னாய்விறற் பார்த்தற் கன்று
உரம்பெரி துடைமை காட்டி ஒள்ளமர் செய்து மீண்டே
வரம்பெரி துடைய னாக்கி வாளமர் முகத்தின் மன்னுஞ்
சரம்பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவி னாரே.
4.65.4
633இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திர மறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ் சாய்க்காடு மேவி னாரே.
4.65.5
634ஆமலி பாலும் நெய்யும் ஆட்டிஅர்ச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப் பொறாததன் தாதை தாளைக்
கூர்மழு வொன்றால் ஓச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமநற் சண்டிக் கீந்தார் சாய்க்காடு மேவி னாரே.
4.65.6
635மையறு மனத்த னாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் லமர ரேத்த ஆயிர முகம தாகி
வையகம் நெளியப் பாய்வான் வந்திழி கங்கை யென்னுந்
தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவி னாரே.
4.65.7
636குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந்
துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித் தூயவாய்க் கலசம் ஆட்ட
உவப்பெருங் குருதி சோர ஒருகணை யிடந்தங் கப்பத்
தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னாரே.
4.65.8
637நக்குலா மலர்பன் னூறு கொண்டுநன் ஞானத் தோடு
மிக்கபூ சனைகள் செய்வான் மென்மல ரொன்று காணா
தொக்குமென் மலர்க்கண் ணென்றங் கொருகணை யிடந்து மப்பச்
சக்கரங் கொடுப்பர் போலுஞ் சாய்க்காடு மேவி னாரே.
4.65.9
638புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து மாயகொண் டரக்க னோடிச்
சிவன்திரு மலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி யஞ்ச
வியன்பெற எய்தி வீழ விரல்சிறி தூன்றி மீண்டே
சயம்பெற நாம மீந்தார் சாய்க்காடு மேவி னாரே.
4.65.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சாயவனேசுவரர்,
தேவியார் – குயிலின்நன்மொழியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.66 திருநாகேச்சரம் – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

639கச்சைசேர் அரவர் போலுங் கறையணி மிடற்றர் போலும்
பிச்சைகொண் டுண்பர் போலும் பேரரு ளாலர் போலும்
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலுந் தம்மை
நச்சுவார்க் கினியர் போலும் நாகஈச் சரவ னாரே.
4.66.1
640வேடுறு வேட ராகி விசயனோ டெய்தார் போலுங்
காடுறு பதியர் போலுங் கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலுந் தீவினை தீர்க்க வல்ல
நாடறி புகழர் போலும் நாகஈச் சரவ னாரே.
4.66.2
641கற்றுணை வில்ல தாகக் கடியரண் செற்றார் போலும்
பொற்றுணைப் பாதர் போலும் புலியத ளுடையார் போலுஞ்
சொற்றுணை மாலை கொண்டு தொழுதெழு வார்கட் கெல்லாம்
நற்றுணை யாவர் போலும் நாகஈச் சரவ னாரே.
4.66.3
642கொம்பனாள் பாகர் போலுங் கொடியுடை விடையர் போலுஞ்
செம்பொனா ருருவர் போலுந் திகழ்திரு நீற்றர் போலும்
எம்பிரான் எம்மை யாளும் இறைவனே என்று தம்மை
நம்புவார்க் கன்பர் போலும் நாகஈச் சரவ னாரே.
4.66.4
643கடகரி யுரியர் போலுங் கனல்மழு வாளர் போலும்
படவர வரையர் போலும் பாரிடம் பலவுங் கூடிக்
குடமுடை முழவம் ஆர்ப்பக் கூளிகள் பாட நாளும்
நடநவில் அடிகள் போலும் நாகஈச் சரவ னாரே.
4.66.5
644பிறையுறு சடையர் போலும் பெண்ணொரு பாகர் போலும்
மறையுறு மொழியர் போலும் மால்மறை யவன்ற னோடு
முறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற
நறவமர் கழலர் போலும் நாகஈச் சரவ னாரே.
4.66.6
645வஞ்சகர்க் கரியர் போலும் மருவினோர்க் கெளியர் போலுங்
குஞ்சரத் துரியர் போலுங் கூற்றினைக் குமைப்பர் போலும்
விஞ்சையர் இரிய அன்று வேலைவாய் வந்தெ ழுந்த
நஞ்சணி மிடற்றர் போலும் நாகஈச் சரவ னாரே.
4.66.7
646போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும் வெண்பொடி யாடு மேனிப்
பாகமா லுடையர் போலும் பருப்பத வில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும் நாகஈச் சரவ னாரே.
4.66.8
647கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும் நாகஈச் சரவ னாரே.
4.66.9
648வின்மையாற் புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும்
தன்மையால் அமரர் தங்கள் தலைவர்க்குந் தலைவர் போலும்
வன்மையான் மலையெ டுத்தான் வலியினைத் தொலைவித் தாங்கே
நன்மையால் அளிப்பர் போலும் நாகஈச் சரவ னாரே.
4.66.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சண்பகாரண்ணியேசுவரர்,
தேவியார் – குன்றமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.67 திருக்கொண்டீச்சரம் – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

649வரைகிலேன் புலன்க ளைந்தும் வரைகிலாப் பிறவி மாயப்
புரையிலே அடங்கி நின்று புறப்படும் வழியுங் காணேன்
அரையிலே மிளிரு நாகத் தண்ணலே அஞ்ச லென்னாய்
திரையுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.1
650தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து பேர்வதோர் வழியுங் காணேன்
அண்டனே அண்ட வாணா அறிவனே அஞ்ச லென்னாய்
தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.2
651கால்கொடுத் தெலும்பு மூட்டிக் கதிர்நரம் பாக்கை யார்த்துத்
தோலுடுத் துதிர மட்டித் தொகுமயிர் மேய்ந்த கூரை
ஓலெடுத் துழைஞர் கூடி ஒளிப்பதற் கஞ்சு கின்றேன்
சேலுடைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.3
652கூட்டமாய் ஐவர் வந்து கொடுந்தொழிற் குணத்த ராகி
ஆட்டுவார்க் காற்ற கில்லேன் ஆடர வசைத்த கோவே
காட்டிடை யரங்க மாக ஆடிய கடவு ளேயோ
சேட்டிரும் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.4
653பொக்கமாய் நின்ற பொல்லாப் புழுமிடை முடைகொள் ஆக்கை
தொக்குநின் றைவர் தொண்ணூற் றறுவருந் துயக்க மெய்த
மிக்குநின் றிவர்கள் செய்யும் வேதனைக் கலந்து போனேன்
செக்கரே திகழும் மேனித் திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.5
654ஊனுலா முடைகொள் ஆக்கை உடைகல மாவ தென்றும்
மானுலா மழைக்க ணார்தம் வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
நானெலா மினைய கால நண்ணிலேன் எண்ண மில்லேன்
தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.6
655சாணிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற் றறுவரும் மயக்கஞ் செய்து
பேணிய பதியின் நின்று பெயரும்போ தறிய மாட்டேன்
சேணுயர் மாட நீடு திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.7
656பொய்மறித் தியற்றி வைத்துப் புலால்கமழ் பண்டம் பெய்து
பைமறித் தியற்றி யன்ன பாங்கிலாக் குரம்பை நின்று
கைமறித் தனைய வாவி கழியும்போ தறிய மாட்டேன்
சென்னெறிச் செலவு காணேன் திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.8
657பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளுங் குறிக்கோளி லாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.9
658விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேலொண் கண்ணாள்
வெருவர இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று
பருவரை யனைய தோளும் முடிகளும் பாரி வீழத்
திருவிர லூன்றி னானே திருக்கொண்டீச் சரத்து ளானே.
4.67.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பசுபதீசுவரர், தேவியார் – சாந்தநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.68 திருவாலங்காடு – திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

659வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும்
உள்ளுளே யுருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலுங்
கள்ளமே வினைக ளெல்லாங் கரிசறுத் திடுவர் போலும்
அள்ளலம் பழனை மேய ஆலங்காட் டடிக ளாரே.
4.68.1
660செந்தழ லுருவர் போலுஞ் சினவிடை யுடையர் போலும்
வெந்தவெண் ணீறு கொண்டு மெய்க்கணிந் திடுவர் போலும்
மந்தமாம் பொழிற் பழனை மல்கிய வள்ளல் போலும்
அந்தமில் அடிகள் போலும் ஆலங்காட் டடிக ளாரே.
4.68.2
661கண்ணினாற் காம வேளைக் கனலெழ விழிப்பர் போலும்
எண்ணிலார் புரங்கள் மூன்று மெரியுணச் சிரிப்பர் போலும்
பண்ணினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேய
அண்ணலார் எம்மை யாளும் ஆலங்காட் டடிக ளாரே.
4.68.3
662காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் தோளர் போலுந்
தூறிடு சுடலை தன்னிற் சுண்ணவெண் ணீற்றர் போலுங்
கூறிடு முருவர் போலுங் குளிர்பொழிற் பழனை மேய
ஆறிடு சடையர் போலும் ஆலங்காட் டடிக ளாரே.
4.68.4
663பார்த்தனோ டமர் பொருது பத்திமை காண்பர் போலுங்
கூர்த்தவா யம்பு கோத்துக் குணங்களை அறிவர் போலும்
பேர்த்துமோ ராவ நாழி அம்போடுங் கொடுப்பர் போலுந்
தீர்த்தமாம் பழனை மேய திருவாலங் காட னாரே.
4.68.5
664வீட்டினார் சுடுவெண் ணீறு மெய்க்கணிந் திடுவர் போலுங்
காட்டில்நின் றாடல் பேணுங் கருத்தினை யுடையர் போலும்
பாட்டினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேயார்
ஆட்டினார் அரவந் தன்னை ஆலங்காட் டடிக ளாரே.
4.68.6
665தாளுடைச் செங்க மலத் தடங்கொள்சே வடியர் போலும்
நாளுடைக் காலன் வீழ உதைசெய்த நம்பர் போலுங்
கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர்பொழிற் பழனை மேய
ஆளுடை யண்ணல் போலும் ஆலங்காட் டடிக ளாரே.
4.68.7
666கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டு
சூடினார் கங்கை யாளைச் சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண ஆலங்காட் டடிக ளாரே.
4.68.8
667வெற்றரைச் சமண ரோடு விலையுடைக் கூறை போர்க்கும்
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும்
பெற்றமே உகந்தங் கேறும் பெருமையை யுடையர் போலும்
அற்றங்கள் அறிவர் போலும் ஆலங்காட் டடிக ளாரே.
4.68.9
668மத்தனாய் மலையெ டுத்த அரக்கனைக் கரத்தோ டொல்க
ஒத்தினார் திருவி ரலால் ஊன்றியிட் டருள்வர் போலும்
பத்தர்தம் பாவந் தீர்க்கும் பைம்பொழிற் பழனை மேய
அத்தனார் நம்மை யாள்வார் ஆலங்காட் டடிக ளாரே.
4.68.10


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஊர்த்ததாண்டவேசுவரர்,
தேவியார் – வண்டார்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.69 திருக்கோவலூர்வீரட்டம் – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

669செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கேன் இருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வ தென்னே கோவல்வீ ரட்ட னீரே.
4.69.1
670தலைசுமந் திருகை நாற்றித் தரணிக்கே பொறைய தாகி
நிலையிலா நெஞ்சந் தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும்
விலைகொடுத் தறுக்க மாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
குலைகொள்மாங் கனிகள் சிந்தும் கோவல்வீ ரட்ட னீரே.
4.69.2
671வழித்தலைப் படவு மாட்டேன் வைகலுந் தூய்மை செய்து
பழித்திலேன் பாச மற்றுப் பரமநான் பரவ மாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை என்னினைந் திருக்க மாட்டேன்
கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க் கோவல்வீ ரட்ட னீரே.
4.69.3
672சாற்றுவர் ஐவர் வந்து சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர் கனலப் பேசிக் கண்செவி மூக்கு வாயுள்
ஆற்றுவர் அலந்து போனேன் ஆதியை அறிவொன் றின்றிக்
கூற்றுவர் வாயிற் பட்டேன் கோவல்வீ ரட்ட னீரே.
4.69.4
673தடுத்திலேன் ஐவர் தம்மைத் தத்துவத் துயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கிப் பன்மலர்ப் பாத முற்ற
அடுத்திலேன் சிந்தை யார ஆர்வலித் தன்பு திண்ணங்
கொடுத்திலேன் கொடிய வாநான் கோவல்வீ ரட்ட னீரே.
4.69.5
674மாச்செய்த குரம்பை தன்னை மண்ணிடை மயக்க மெய்து
நாச்செய்து நாலு மைந்தும் நல்லன வாய்தல் வைத்துக்
காச்செய்த காயந் தன்னுள் நித்தலும் ஐவர் வந்து
கோச்செய்து குமைக்க வாற்றேன் கோவல்வீ ரட்ட னீரே.
4.69.6
675படைகள்போல் வினைகள் வந்து பற்றியென் பக்கல் நின்றும்
விடகிலா வாத லாலே விகிர்தனை விரும்பி யேத்தும்
இடையிலேன் என்செய் கேன்நான் இரப்பவர் தங்கட் கென்றுங்
கொடையிலேன் கொள்வ தேநான் கோவல்வீ ரட்ட னீரே.
4.69.7
676பிச்சிலேன் பிறவி தன்னைப் பேதையேன் பிணக்க மென்னுந்
துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை தன்னுள்
அச்சனாய் ஆதி மூர்த்திக் கன்பனாய் வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வ தென்னே கோவல்வீ ரட்ட னீரே.
4.69.8
677நிணத்திடை யாக்கை பேணி நியமஞ்செய் திருக்க மாட்டேன்
மணத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்ற மென்னுங்
கணத்திடை ஆட்டப் பட்டுக் காதலால் உன்னைப் பேணுங்
குணத்திடை வாழ மாட்டேன் கோவல்வீ ரட்ட னீரே.
4.69.9
678விரிகடல் இலங்கைக் கோனை வியன்கயி லாயத் தின்கீழ்
இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெறிய வூன்றிப்
பரவிய பாடல் கேட்டுப் படைகொடுத் தருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல்வீ ரட்ட னாரே.
4.69.10


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வீரட்டேசநாதர், தேவியார் – சிவாநந்தவல்லி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.70 திருநனிபள்ளி – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

679முற்றுணை யாயி னானை மூவர்க்கு முதல்வன் றன்னைச்
சொற்றுணை ஆயி னானைச் சோதியை ஆத ரித்து
உற்றுணர்ந் துருகி யூறி உள்கசி வுடைய வர்க்கு
நற்றுணை யாவர் போலும் நனிபள்ளி அடிக ளாரே.
4.70.1
680புலர்ந்தகால் பூவும் நீருங் கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயின் நூலால் வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை அரைய னாக்கிச் சீர்மைகள் அருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிக ளாரே.
4.70.2
681எண்பதும் பத்தும் ஆறு மென்னுளே இருந்து மன்னிக்
கண்பழக் கொன்று மின்றிக் கலக்கநான் அலக்க ழிந்தேன்
செண்பகந் திகழும் புன்னை செழுந்திரட் குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிக ளாரே.
4.70.3
682பண்ணினார் பாட லாகிப் பழத்தினில் இரத மாகிக்
கண்ணினார் பார்வை யாகிக் கருத்தொடு கற்ப மாகி
எண்ணினார் எண்ண மாகி ஏழுல கனைத்து மாகி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிக ளாரே.
4.70.4
683துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந் திராதே
அஞ்செழுத் தோதின் நாளும் அரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பால்சோ றாக்கி வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி அடிக ளாரே.
4.70.5
684செம்மலர்க் கமலத் தோனுந் திருமுடி காண மாட்டான்
அம்மலர்ப் பாதங் காண்பான் ஆழியான் அகழ்ந்துங் காணான்
நின்மலன் என்றங் கேத்தும் நினைப்பினை அருளி நாளும்
நம்மலம் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிக ளாரே.
4.70.6
685அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோ டசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்றும் ஆலநஞ் சமுதா வுண்டார்
விரவித்தம் அடிய ராகி வீடிலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ வொட்டார் நனிபள்ளி அடிக ளாரே.
4.70.7
686மண்ணுளே திரியும் போது வருவன பலவுங் குற்றம்
புண்ணுளே புரைபு ரையன் புழுப்பொதி பொள்ள லாக்கை
—– —– —– —–
இப்பதிகத்தில் 8-ம் செய்யுளின் 
பின்னிரண்டடிகளும் 9-ம்செய்யுளும் 
மறைந்து போயின.
4.70.8-9
687பத்துமோர் இரட்டி தோளான் பாரித்து மலையெ டுக்கப்
பத்துமோர் இரட்டி தோள்கள் படருடம் படர வூன்றிப்
பத்துவாய் கீதம் பாடப் பரிந்தவற் கருள்கொ டுத்தார்
பத்தர்தாம் பரவி யேத்தும் நனிபள்ளிப் பரம னாரே.
4.70.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நற்றுணையப்பர், தேவியார் – பர்வதராசபுத்திரி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.71 திருநாகைக்காரோணம் – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

688மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகில் உய்யலாம் நெஞ்சி னீரே.
4.71..1
689வையனை வைய முண்ட மாலங்கந் தோண்மேற் கொண்ட
செய்யனைச் செய்ய போதிற் திசைமுகன் சிரமொன் றேந்துங்
கையனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்த வாறே.
4.71..2
690நிருத்தனை நிமலன் றன்னை நீணிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேத வித்தை விளைபொருள் மூல மான
கருத்தனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
ஒருத்தனை உணர்த லால்நாம் உய்ந்தவா நெஞ்சி னீரே.
4.71.3
691மண்டனை இரந்து கொண்ட மாயனோ டசுரர் வானோர்
தெண்டிரை கடைய வந்த தீவிடந் தன்னை யுண்ட
கண்டனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
அண்டனை நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்த வாறே.
4.71.4
692நிறைபுனல் அணிந்த சென்னி நீணிலா அரவஞ் சூடி
மறையொலி பாடி யாடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
இறைவனை நாளு மேத்த இடும்பைபோய் இன்ப மாமே.
4.71.5
693வெம்பனைக் கருங்கை யானை வெருவவன் றுரிவை போர்த்த
கம்பனைக் காலற் காய்ந்த காலனை ஞால மேத்தும்
உம்பனை உம்பர் கோனை நாகைக்கா ரோண மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம்நாம் உய்ந்த வாறே.
4.71.6
694வெங்கடுங் கானத் தேழை தன்னொடும் வேட னாய்ச்சென்
றங்கமர் மலைந்து பார்த்தற் கடுசரம் அருளி னானை
மங்கைமார் ஆட லோவா மன்னுகா ரோணத் தானைக்
கங்குலும் பகலுங் காணப் பெற்றுநாங் களித்த வாறே.
4.71.7
695தெற்றினர் புரங்கள் மூன்றுந் தீயினில் விழவோ ரம்பால்
செற்றவெஞ் சிலையர் வஞ்சர் சிந்தையுட் சேர்வி லாதார்
கற்றவர் பயிலும் நாகைக் காரோணங் கருதி யேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்தி லாரே.
4.71.8
 இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.4.71.9
696கருமலி கடல்சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்
தொருவிரல் நுதிக்கு நில்லா தொண்டிறல் அரக்க னுக்கான்
இருதிற மங்கை மாரோ டெம்பிரான் செம்பொ னாகந்
திருவடி தரித்து நிற்கத் திண்ணம்நாம் உய்ந்த வாறே.
4.71.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – காயாரோகணேசுவரர்,
தேவியார் – நீலாயதாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.72 திருவின்னம்பர் – திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

697விண்ணவர் மகுட கோடி மிடைந்தசே வடியர் போலும்
பெண்ணொரு பாகர் போலும் பேடலி யாணர் போலும்
வண்ணமால் அயனுங் காணா மால்வரை எரியர் போலும்
எண்ணுரு வநேகர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
4.72.1
698பன்னிய மறையர் போலும் பாம்பரை யுடையர் போலுந்
துன்னிய சடையர் போலுந் தூமதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும் மாதிடம் மகிழ்வர் போலும்
என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
4.72.2
699மறியொரு கையர் போலும் மாதுமை யுடையர் போலும்
பறிதலைப் பிறவி நீக்கிப் பணிகொள வல்லர் போலுஞ்
செறிவுடை அங்க மாலை சேர்திரு வுருவர் போலும்
எறிபுனற் சடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
4.72.3
700விடமலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலுங்
கடவுநல் விடையர் போலுங் காலனைக் காய்வர் போலும்
படமலி அரவர் போலும் பாய்புலித் தோலர் போலும்
இடர்களைந் தருள்வர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
4.72.4
701அளிமலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை யுடையர் போலுங்
களிமயிற் சாய லோடுங் காமனை விழிப்பர் போலும்
வெளிவளர் உருவர் போலும் வெண்பொடி யணிவர் போலும்
எளியவர் அடியர்க் கென்றும் இன்னம்பர் ஈச னாரே.
4.72.5
702கணையமர் சிலையர் போலுங் கரியுரி உடையர் போலுந்
துணையமர் பெண்ணர் போலுந் தூமணிக் குன்றர் போலும்
அணையுடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும்
இணையடி உடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
4.72.6
703பொருப்பமர் புயத்தர் போலும் புனலணி சடையர் போலும்
மருப்பிள வாமை தாங்கு மார்பில்வெண் ணூலர் போலும்
உருத்திர மூர்த்தி போலும் உணர்விலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
4.72.7
704காடிடம் உடையர் போலுங் கடிகுரல் விளியர் போலும்
வேடுரு வுடையர் போலும் வெண்மதிக் கொழுந்தர் போலுங்
கோடலர் வன்னி தும்பை கொக்கிற கலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
4.72.8
705காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் டோ ளர் போலும்
நீறுடை யுருவர் போலும் நினைப்பினை அரியர் போலும்
பாறுடைத் தலைகை ஏந்திப் பலிதிரிந் துண்பர் போலும்
ஏறுடைக் கொடியர் போலும் இன்னம்பர் ஈச னாரே.
4.72.9
706ஆர்த்தெழு மிலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்
பார்த்தனோ டமர் பொருது படைகொடுத் தருள்வர் போலுந்
தீர்த்தமாங் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்
ஏத்தஏ ழுலகும் வைத்தார் இன்னம்பர் ஈச னாரே.
4.72.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – எழுத்தறிந்தவீசுவரர்,
தேவியார் – கொந்தார்பூங்குழலம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.73 திருச்சேறை – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

707பெருந்திரு இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் தவங்கள் செய்ய மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனி தன்பால் அங்கொரு பாக மாகத்
திருந்திட வைத்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
4.73.1
708ஓர்த்துள வாறு நோக்கி உண்மையை உணராக் குண்டர்
வார்த்தையை மெய்யென் றெண்ணி மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப்
பேர்த்தெனை ஆளாக் கொண்டு பிறவிவான் பிணிக ளெல்லாந்
தீர்த்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
4.73.2
709ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பில் காலம்
நின்றுதங் கழல்க ளேத்தும் நீள்சிலை விசய னுக்கு
வென்றிகொள் வேட னாகி விரும்பிவெங் கான கத்துச்
சென்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
4.73.3
710அஞ்சையும் அடக்கி ஆற்ற லுடையனாய் அநேக காலம்
வஞ்சமில் தவத்துள் நின்று மன்னிய பகீர தற்கு
வெஞ்சின முகங்க ளாகி விசையொடு பாயுங் கங்கைச்
செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
4.73.4
711நிறைந்தமா மணலைக் கூப்பி நேசமோ டாவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு கறுத்ததன் தாதை தாளை
எறிந்தமா ணிக்கப் போதே எழில்கொள்சண் டீசன் என்னச்
சிறந்தபே றளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
4.73.5
712விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல காலப் பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு ஒண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
4.73.6
713சுற்றுமுன் இமையோர் நின்று தொழுதுதூ மலர்கள் தூவி
மற்றெமை உயக்கொள் என்ன 
மன்னுவான் புரங்கள் மூன்றும்
உற்றொரு நொடியின் முன்னம் ஒள்ளழல் வாயின் வீழச்
செற்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
4.73.7
714முந்தியிவ் வுலக மெல்லாம் படைத்தவன் மாலி னோடும்
எந்தனி நாத னேயென் றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை அடிமுடி யறியா வண்ணஞ்
செந்தழ லானார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
4.73.8
 இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.4.73.9
715ஒருவரும் நிக ரிலாத ஒண்டிறல் அரக்கன் ஓடிப்
பெருவரை யெடுத்த திண்டோ ள் பிறங்கிய முடிகள் இற்று
மருவியெம் பெருமா னென்ன மலரடி மெள்ள வாங்கித்
திருவருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
4.73.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சென்னெறியப்பர், தேவியார் – ஞானவல்லியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.74 நெஞ்சம்ஈசனைநினைந்த – திருநேரிசை


திருச்சிற்றம்பலம்

716முத்தினை மணியைப் பொன்னை முழுமுதற் பவள மேய்க்குங்
கொத்தினை வயிர மாலைக் கொழுந்தினை அமரர் சூடும்
வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே.
4.74.1
717முன்பனை யுலகுக் கெல்லாம் மூர்த்தியை முனிக ளேத்தும்
இன்பனை இலங்கு சோதி இறைவனை அரிவை யஞ்ச
வன்பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை யுரித்த எங்கள்
அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே.
4.74.2
718கரும்பினு மினியான் றன்னைக் காய்கதிர்ச் சோதி யானை
இருங்கட லமுதந் தன்னை இறப்பொடு பிறப் பிலானைப்
பெரும்பொருட் கிளவி யானைப் பெருந்தவ முனிவ ரேத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே.
4.74.3
719செருத்தனை யருத்தி செய்து செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல்
கருத்தனைக் கனக மேனிக் கடவுளைக் கருதும் வானோர்க்
கொருத்தனை யொருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா
நிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த வாறே.
4.74.4
720கூற்றினை யுதைத்த பாதக் குழகனை மழலை வெள்ளே
றேற்றனை இமையோ ரேத்த இருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை அடிய ரேத்தும் அமுதனை அமுத யோக
நீற்றனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த வாறே.
4.74.5
721கருப்பனைத் தடக்கை வேழக் களிற்றினை யுரித்த கண்டன்
விருப்பனை விளங்கு சோதி வியன்கயி லாய மென்னும்
பொருப்பனைப் பொருப்பன் மங்கை பங்கனை அங்கை யேற்ற
நெருப்பனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த வாறே.
4.74.6
722நீதியால் நினைப்பு ளானை நினைப்பவர் மனத்து ளானைச்
சாதியைச் சங்க வெண்ணீற் றண்ணலை விண்ணில் வானோர்
சோதியைத் துளக்க மில்லா விளக்கினை அளக்க லாகா
ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே.
4.74.7
723பழகனை யுலகுக் கெல்லாம் பருப்பனைப் பொருப்போ டொக்கும்
மழகளி யானை யின்றோல் மலைமகள் நடுங்கப் போர்த்த
குழகனைக் குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த
அழகனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே.
4.74.8
724விண்ணிடை மின்னொப் பானை மெய்ப்பெரும் பொருளொப் பானைக்
கண்ணிடை மணியொப் பானைக் கடுவிருட் சுடரொப் பானை
எண்ணிடை யெண்ண லாகா இருவரை வெருவ நீண்ட
அண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே.
4.74.9
725உரவனைத் திரண்ட திண்டோ ள் அரக்கனை யூன்றி மூன்றூர்
நிரவனை நிமிர்ந்த சோதி நீண்முடி யமரர் தங்கள்
குரவனைக் குளிர்வெண் டிங்கள் சடையிடைப் பொதியும் ஐவாய்
அரவனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே.
4.74.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.75 தனித் – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

726தொண்டனேன் பட்ட தென்னே தூயகா விரியின் நன்னீர்
கொண்டிருக் கோதி யாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி
இண்டைகொண் டேற நோக்கி ஈசனை எம்பி ரானைக்
கண்டனைக் கண்டி ராதே காலத்தைக் கழித்த வாறே.
4.75.1
727பின்னிலேன் முன்னி லேன்நான் பிறப்பறுத் தருள்செய் வானே
என்னிலேன் நாயி னேன்நான் இளங்கதிர்ப் பயலைத் திங்கட்
சின்னிலா எறிக்குஞ் சென்னிச் சிவபுரத் தமர ரேறே
நின்னலால் களைகண் ஆரே நீறுசே ரகலத் தானே.
4.75.2
728கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியே னாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட் டேனே.
4.75.3
729உடம்பெனு மனைய கத்துள் உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.
4.75.4
730வஞ்சப்பெண் ணரங்கு கோயில் வாளெயிற் றரவந் துஞ்சா
வஞ்சப்பெண் இருந்த சூழல் வான்றவழ் மதியந் தோயும்
வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன் வாழ்வினை வாழ லுற்று
வஞ்சப்பெண் ணுறக்க மானேன் வஞ்சனேன் என்செய் கேனே.
4.75.5
731உள்குவார் உள்ளத் தானை உணர்வெனும் பெருமை யானை
உள்கினேன் நானுங் காண்பான் உருகினேன் ஊறி யூறி
எள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னு கின்ற
கொள்ளிமேல் எறும்பென் னுள்ளம் எங்ஙனங் கூடு மாறே.
4.75.6
732மோத்தையைக் கண்ட காக்கை போலவல் வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேச வொட்டா மயக்கநான் மயங்கு கின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடிகொள்நோய் வடிவொன் றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ணம் உணர்வுதா உலக மூர்த்தீ.
4.75.7
733அங்கத்தை மண்ணுக் காக்கி ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைs
சங்கொத்த மேனிச் செல்வா சாதல்நாள் நாயேன் உன்னை
எங்குற்றாய் என்ற போதா இங்குற்றேன் என்கண் டாயே.
4.75.8
734வெள்ளநீர்ச் சடைய னார்தாம் வினவுவார் போல வந்தென்
உள்ளமே புகுந்து நின்றார்க் குறங்குநான் புடைகள் போந்து
கள்ளரோ புகுந்தீ ரென்னக் கலந்துதான் நோக்கி நக்கு
வெள்ளரோ மென்று நின்றார் விளங்கிளம் பிறைய னாரே.
4.75.9
735பெருவிரல் இறைதா னூன்ற பிறையெயி றிலங்க அங்காந்
தருவரை அனைய தோளான் அரக்கனன் றலறி வீழ்ந்தான்
இருவரும் ஒருவ னாய உருவமங் குடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு காண்கநான் திரியு மாறே.
4.75.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.76 தனித் – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

736மருளவா மனத்த னாகி மயங்கினேன் மதியி லாதேன்
இருளவா அறுக்கும் எந்தை இணையடி நீழ லென்னும்
அருளவாப் பெறுத லின்றி அஞ்சிநான் அலமந் தேற்குப்
பொருளவாத் தந்த வாறே போதுபோய்ப் புலர்ந்த தன்றே.
4.76.1
737மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே.
4.76.2
738எம்பிரான் என்ற தேகொண் டென்னுளே புகுந்து நின்றிங்
கெம்பிரான் ஆட்ட ஆடி என்னுளே உழிதர் வேனை
எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால்
எம்பிரான் என்னி னல்லால் என்செய்கேன் ஏழை யேனே.
4.76.3
739காயமே கோயி லாகக் கடிமனம் அடிமை யாக
வாய்மையே தூய்மை யாக மனமணி இலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா நிறையநீர் அமைய வாட்டிப்
பூசனை ஈச னார்க்குப் போற்றவிக் காட்டி னோமே.
4.76.4
740வஞ்சகப் புலைய னேனை வழியறத் தொண்டிற் பூட்டி
அஞ்சலென் றாண்டு கொண்டாய் அதுவுநின் பெருமை யன்றே
நெஞ்சகங் கனிய மாட்டேன் நின்னையுள் வைக்க மாட்டேன்
நஞ்சிடங் கொண்ட கண்டா என்னென நன்மை தானே.
4.76.5
741நாயினுங் கடைப்பட் டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவ மார்த்த அமுதனே அமுத மொத்து
நீயுமென் னெஞ்சி னுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகில் நோக்கிநீ அருள்செய் வாயே.
4.76.6
742விள்ளத்தா னொன்று மாட்டேன் விருப்பெனும் வேட்கை யாலே
வள்ளத்தேன் போல நுன்னை வாய்மடுத் துண்டி டாமே
உள்ளத்தே நிற்றி யேனும் உயிர்ப்புளே வருதி யேனுங்
கள்ளத்தே நிற்றி அம்மா எங்ஙனங் காணு மாறே.
4.76.7
743ஆசைவன் பாச மெய்தி அங்குற்றே னிங்குற் றேனாய்
ஊசலாட் டுண்டு வாளா உழந்துநான் உழித ராமே
தேசனே தேச மூர்த்தி திருமறைக் காடு மேய
ஈசனே உன்றன் பாதம் ஏத்துமா றருளெம் மானே.
4.76.8
744நிறைவிலேன் நேச மில்லேன் நினைவிலேன் வினையின் பாச
மறைவிலே புறப்பட் டேறும் வகையெனக் கருளெ னெம்மான்
சிறையிலேன் செய்வ தென்னே திருவடி பரவி யேத்தக்
குறைவிலேன் குற்றந் தீராய் கொன்றைசேர் சடையி னானே.
4.76.9
745நடுவிலாக் காலன் வந்து நணுகும்போ தறிய வொண்ணா
அடுவன அஞ்சு பூதம் அவைதமக் காற்ற லாகேன்
படுவன பலவுங் குற்றம் பாங்கிலா மனிதர் வாழ்க்கை
கெடுவதிப் பிறவி சீசீ கிளரொளிச் சடையி னீரே.
4.76.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.77 தனித் – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

746கடும்பகல் நட்ட மாடிக் கையிலோர் கபால மேந்தி
இடும்பலிக் கில்லந் தோறு முழிதரும் இறைவ னீரே
நெடும்பொறை மலையர் பாவை நேரிழை நெறிமென் கூந்தற்
கொடுங்குழை புகுந்த வன்றுங் கோவண மரைய தேயோ.
4.77.1
747கோவண முடுத்த வாறுங் கோளர வசைத்த வாறுந்
தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்த வாறும்
பூவணக் கிழவ னாரைப் புலியுரி அரைய னாரை
ஏவணச் சிலையி னாரை யாவரே எழுது வாரே.
4.77.2
748விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகுந்
துளக்கில்நன் மலர்தொ டுத்தால் தூயவிண் ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளு மாறே.
4.77.3
749சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாம வேதி
அந்தரத் தமரர் பெம்மான் ஆன்நல்வெள் ளூர்தி யான்றன்
மந்திரம் நமச்சி வாய ஆகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட் டன்றே.
4.77.4
750புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடைப் புகுந்து நின்று
துள்ளுவர் சூறை கொள்வர் தூநெறி விளைய வொட்டார்
முள்ளுடை யவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்து நின்றங் குணர்வினா லெய்ய லாமே.
4.77.5
751தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நாளும் பெரியதோர் அவாவிற் பட்டேன்
அண்டனே அமரர் கோவே அறிவனே அஞ்ச லென்னாய்
தெண்டிரைக் கங்கை சூடுந் திகழ்தரு சடையி னானே.
4.77.6
752பாறினாய் பாவி நெஞ்சே பன்றிபோல் அளற்றிற் பட்டுத்
தேறிநீ நினைதி யாயின் சிவகதி திண்ண மாகும்
ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே யொழுகும் வாசல்
கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதி னாயே.
4.77.7
 இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் 
சிதைந்து போயின.
4.77.8-9
753உய்த்தகால் உதயத் தும்பர் உமையவள் நடுக்கந் தீர
வைத்தகா லரக்க னோதன் வான்முடி தனக்கு நேர்ந்தான்
மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கள் மூர்த்தியெ னுச்சி தன்மேல்
வைத்தகால் வருந்து மென்று வாடிநான் ஒடுங்கி னேனே.
4.77.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.78 குறைந்த – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

754வென்றிலேன் புலன்க ளைந்தும் வென்றவர் வளாகந் தன்னுள்
சென்றிலே னாத லாலே செந்நெறி யதற்குஞ் சேயேன்
நின்றுளே துளும்பு கின்றேன் நீசனேன் ஈச னேயோ
இன்றுளேன் நாளை யில்லேன் என்செய்வான் தோன்றி னேனே.
4.78.1
755கற்றிலேன் கலைகள் ஞானங் கற்றவர் தங்க ளோடும்
உற்றிலே னாத லாலே உணர்வுக்குஞ் சேய னானேன்
பெற்றிலேன் பெருந்த டங்கண் பேதைமார் தமக்கும் பொல்லேன்
எற்றுளேன் இறைவ னேநான் என்செய்வான் தோன்றி னேனே.
4.78.2
756மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை உணர மாட்டேன்
மூட்டிநான் முன்னை நாளே முதல்வனை வணங்க மாட்டேன்
பாட்டினாய் போல நின்று பற்றதாம் பாவந் தன்னை
ஈட்டினேன் களைய மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே.
4.78.3
757கரைக்கடந் தோத மேறுங் கடல்விட முண்ட கண்டன்
உரைக்கடந் தோது நீர்மை யுணர்ந்திலே னாத லாலே
அரைக்கிடந் தசையு நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக்
கிரைக்கிடைந் துருகு கின்றேன் என்செய்வான் தோன்றி னேனே.
4.78.4
758செம்மைவெண் ணீறு பூசுஞ் 
ச்஢வனவன் தேவ தேவன்
வெம்மைநோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக் கார்வ மெய்தி
அம்மைநின் றடிமை செய்யா வடிவிலா முடிவில் வாழ்க்கைக்
கிம்மைநின் றுருகு கின்றேன் என்செய்வான் தோன்றி னேனே.
4.78.5
759பேச்சொடு பேச்சுக் கெல்லாம் பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலே னாத லாலே கொடுமையை விடுமா றோரேன்
நாச்சொலி நாளும் மூர்த்தி நன்மையை யுணர மாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே என்செய்வான் தோன்றி னேனே.
4.78.6
760தேசனைத் தேச மாகுந் திருமாலோர் பங்கன் றன்னைப்
பூசனைப் புனிதன் றன்னைப் புணரும்புண் டரிகத் தானை
நேசனை நெருப்பன் றன்னை நிவஞ்சகத் தகன்ற செம்மை
ஈசனை அறிய மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே.
4.78.7
761விளைக்கின்ற வினையை நோக்கி வெண்மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன் இயல வெள்ளந்
திளைக்கின்ற முடியி னான்றன் திருவடி பரவ மாட்டா
திளைக்கின்றே னிருமி யூன்றி என்செய்வான் தோன்றி னேனே.
4.78.8
762விளைவறி விலாமை யாலே வேதனைக் குழியி லாழ்ந்து
களைகணு மில்லேன் எந்தாய் காமரங் கற்று மில்லேன்
தளையவிழ் கோதை நல்லார் தங்களோ டின்ப மெய்த
இளையனு மல்லேன் எந்தாய் என்செய்வான் தோன்றி னேனே.
4.78.9
763வெட்டன வுடைய னாகி வீரத்தால் மலை யெடுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைப்படக் கீதங் கேட்ட
அட்டமா மூர்த்தி யாய ஆதியை ஓதி நாளும்
எட்டனை எட்ட மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே.
4.78.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.79 குறைந்த – திருநேரிசை 


திருச்சிற்றம்பலம்

764தம்மானங் காப்ப தாகித் தையலார் வலையு ளாழ்ந்து
அம்மானை அமுதன் றன்னை ஆதியை அந்த மாய
செம்மான ஒளிகொள் மேனிச் சிந்தையு ளொன்றி நின்ற
எம்மானை நினைய மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே.
4.79.1
765மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்புஞ்
சிக்குளே யழுந்தி ஈசன் திறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போலத் தோன்றி யதனுளே மறையக் கண்டும்
இக்களே பரத்தை யோம்ப என்செய்வான் தோன்றி னேனே.
4.79.2
766கூழையே னாக மாட்டேன் கொடுவினைக் குழியில் வீழ்ந்து
ஏழினின் னிசையி னாலும் இறைவனை யேத்த மாட்டேன்
மாழையொண் கண்ணின் நல்ல மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
ஏழையே னாகி நாளு மென்செய்வான் தோன்றி னேனே.
4.79.3
767முன்னையென் வினையி னாலே மூர்த்தியை நினைய மாட்டேன்
பின்னைநான் பித்த னாகிப் பிதற்றுவன் பேதை யேன்நான்
என்னுளே மன்னி நின்ற சீர்மைய தாயி னானை
என்னுளே நினைய மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே.
4.79.4
768கறையணி கண்டன் றன்னைக் காமரங் கற்று மில்லேன்
பிறைநுதற் பேதை மாதர் பெய்வளை யார்க்கு மல்லேன்
மறைநவில் நாவி னானை மன்னிநின் றிறைஞ்சி நாளும்
இறையேயு மேத்த மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே.
4.79.5
 இப்பதிகத்தில் 6,7,8,9-ம்செய்யுட்கள் 
மறைந்து போயின.
4.79.6-91
769வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற ஆமைபோல் தெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றேன் என்செய்வான் தோன்றி னேனே.
4.79.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.80 கோயில் – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

770பாளையு டைக்கமு கோங்கிப்பன் மாடம்நெ ருங்கியெங்கும்
வாளையு டைப்புனல் வந்தெறி வாழ்வயல் தில்லைதன்னுள்
ஆளவு டைக்கழற் சிற்றம்ப லத்தரன் ஆடல்கண்டாற்
பீளையு டைக்கண்க ளாற்பின்னைப் பேய்த்தொண்டர் காண்பதென்னே.
4.80.1
771பொருவிடை யொன்றுடைப் புண்ணிய மூர்த்தி புலியதளன்
உருவுடை யம்மலை மங்கைம ணாளன் உலகுக்கெல்லாந்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
திருவடி யைக்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.
4.80.2
772தொடுத்த மலரொடு தூபமுஞ் சாந்துங்கொண் டெப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்குங் காண்பரியான்
பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய தில்லைச்சிற் றம்பலவன்
உடுத்த துகில்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.
4.80.3
773வைச்ச பொருள்நமக் காகுமென் றெண்ணி நமச்சிவாய
அச்ச மொழிந்தேன் அணிதில்லை யம்பலத் தாடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி உந்தியின் மேலசைத்த
கச்சின் அழகுகண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.
4.80.4
774செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.
4.80.5
775ஊனத்தை நீக்கி உலகறிய என்னை யாட்கொண்டவன்
தேனொத் தெனக்கினி யான்தில்லைச் சிற்றம் பலவனெங்கோன்
வானத் தவருய்ய வன்னஞ்சை யுண்டகண் டத்திலங்கும்
ஏனத் தெயிறு கண்டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.
4.80.6
776தெரித்த கணையாற் திரிபுர மூன்றுஞ்செந் தீயின்மூழ்க
எரித்த இறைவன் இமையவர் கோமான் இணையடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
சிரித்த முகங்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.
4.80.7
777சுற்று மமரர் சுரபதி நின்திருப் பாதமல்லால்
பற்றொன் றிலோமென் றழைப்பப் பரவையுள் நஞ்சையுண்டான்
செற்றங் கனங்கனைத் தீவிழித் தான்றில்லை யம்பலவன்
நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.
4.80.8
778சித்தத் தெழுந்த செழுங்கம லத்தன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
முத்தும் வயிரமும் மாணிக்கந் தன்னுள் விளங்கியதூ
மத்த மலர்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.
4.80.9
779தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி யுன்னித் தடவரையை
வரைக்கை களாலெடுத் தார்ப்ப மலைமகள் கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்தும் அணிதில்லை யம்பலவன்
நெருக்கி மிதித்த விரல்கண்ட கண்கொண்டு காண்பதென்னே.
4.80.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – திருமூலத்தானநாயகர், சபாநாதர்,
தேவியார் – சிவகாமியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.81 கோயில் – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

780கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதி லெய்யவல் லானைச்செந் தீமுழங்கத்
திருநட்ட மாடியைத் தில்லைக் கிறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்ட மாடியை வானவர் கோனென்று வாழ்த்துவனே.
4.81.1
781ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயெனும் எம்பெரு மான்றன் திருக்குறிப்பே.
4.81.2
782கன்மன வீர்கழி யுங்கருத் தேசொல்லிக் காண்பதென்னே
நன்மன வர்நவில் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
பொன்மலை யில்வெள்ளிக் குன்றதுபோலப் பொலிந்திலங்கி
என்மன மேயொன்றிப் புக்கனன் போந்த சுவடில்லையே.
4.81.3
783குனித்த புருவமுங் கொவ்வைச்செவ்வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
4.81.4
784வாய்த்தது நந்தமக் கீதோர் பிறவி மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசு பதமருள் செய்தவன் பத்தருள்ளீர்
கோத்தன்று முப்புரந் தீவளைத் தான்றில்லை யம்பலத்துக்
கூத்தனுக் காட்பட் டிருப்பதன் றோநந்தங் கூழைமையே.
4.81.5
785பூத்தன பொற்சடை பொன்போல் மிளிரப் புரிகணங்கள்
ஆர்த்தன கொட்டி யரித்தன பல்குறட் பூதகணந்
தேத்தென வென்றிசை வண்டுகள் பாடுசிற் றம்பலத்துக்
கூத்தனிற் கூத்துவல் லாருள ரோவென்றன் கோல்வளைக்கே.
4.81.6
786முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்தவெண் ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித் தோலுமென் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை யம்பலக் கூத்தன் குரைகழலே.
4.81.7
787படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லேன் எழுபிறப் பும்முனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித்தூ நீறணிந்துன்
அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச் சிற்றம் பலத்தரனே.
4.81.8
788பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ றணிந்து புரிசடைகள்
மின்னொத் திலங்கப் பலிதேர்ந் துழலும் விடங்கவேடச்
சின்னத்தி னான்மலி தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்னத்தன் ஆடல்கண் டின்புற்ற தாலிவ் விருநிலமே.
4.81.9
789சாட எடுத்தது தக்கன்றன் வேள்வியிற் சந்திரனை
வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனுந்
தேட எடுத்தது தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
ஆட எடுத்திட்ட பாதமன் றோநம்மை யாட்கொண்டதே.
4.81.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.82 திருக்கழுமலம் – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

790பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம்
நாலஞ்சு புள்ளினம் ஏந்தின என்பர் நளிர்மதியங்
கால்கொண்ட வண்கைச் சடைவிரித் தாடுங் கழுமலவர்க்
காளன்றி மற்றுமுண் டோ அந்த ணாழி அகலிடமே.
4.82.1
791கடையார் கொடிநெடு மாடங்க ளெங்குங் கலந்திலங்க
உடையா னுடைதலை மாலையுஞ் சூடி உகந்தருளி
விடைதா னுடையவவ் வேதியன் வாழுங் கழுமலத்துள்
அடைவார் வினைக ளவையெள்க நாடொறும் ஆடுவரே.
4.82.2
792திரைவாய்ப் பெருங்கடல் முத்தங் குவிப்ப முகந்துகொண்டு
நுரைவாய் நுளைச்சிய ரோடிக் கழுமலத் துள்ளழுந்தும்
விரைவாய் நறுமலர் சூடிய விண்ணவன் றன்னடிக்கே
வரையாப் பரிசிவை நாடொறும் நந்தமை யாள்வனவே.
4.82.3
793விரிக்கும் அரும்பதம் வேதங்க ளோதும் விழுமியநூல்
உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர் கேட்கில் உலகமுற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள் பாடக் கழுமலவன்
நிருத்தம் பழம்படி யாடுங் கழல்நம்மை ஆள்வனவே.
4.82.4
794சிந்தித் தெழுமன மேநினை யாமுன் கழுமலத்தைப்
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானைப் பசுபதியைச்
சந்தித்த கால மறுத்துமென் றெண்ணி யிருந்தவர்க்கு
முந்தித் தொழுகழல் நாடொறும் நந்தம்மை ஆள்வனவே.
4.82.5
795நிலையும் பெருமையும் நீதியுஞ் சால அழகுடைத்தாய்
அலையும் பெருவெள்ளத் தன்று மிதந்தவித் தோணிபுரஞ்
சிலையில் திரிபுரம் மூன்றெரித் தார்தங் கழுமலவர்
அலருங் கழலடி நாடொறும் நந்தமை ஆள்வனவே.
4.82.6
796முற்றிக் கிடந்துமுந் நீரின் மிதந்துடன் மொய்த்தமரர்
சுற்றிக் கிடந்து தொழப்படு கின்றது சூழரவந்
தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந் துன்றிவெண் திங்கள்சூடுங்
கற்றைச் சடைமுடி யார்க்கிட மாய கழுமலமே.
4.82.7
797உடலும் உயிரும் ஒருவழிச் செல்லும் உலகத்துள்ளே
அடையும் உனைவந் தடைந்தார் அமரர் அடியிணைக்கீழ்
நடையும் விழவொடு நாடொறும் மல்கும் கழுமலத்துள்
விடையன் தனிப்பதம் நாடொறும் நந்தமை ஆள்வனவே.
4.82.8
798பரவைக் கடல்நஞ்ச முண்டது மில்லையிப் பார்முழுதும்
நிரவிக் கிடந்து தொழப்படு கின்றது நீண்டிருவர்
சிரமப் படவந்து சார்ந்தார் கழலடி காண்பதற்கே
அரவக் கழலடி நாடொறும் நந்தமை ஆள்வனவே.
4.82.9
799கரையார் கடல்சூழ் இலங்கையர் கோன்றன் முடிசிதறத்
தொலையா மலரடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்துத்
தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன் கழுமலங் காண்பதற்கே
அலையாப் பரிசிவை நாடொறும் நந்தமை ஆள்வனவே.
4.82.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பிரமபுரீசர், தேவியார் – திருநிலைநாயகி.
திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.83 திருக்கழுமலம் – திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

800படையார் மழுவொன்று பற்றிய கையன் பதிவினவிற்
கடையார் கொடிநெடு மாடங்க ளோங்குங் கழுமலமாம்
மடைவாய்க் குருகினம் பாளை விரிதொறும் வண்டினங்கள்
பெடைவாய் மதுவுண்டு பேரா திருக்கும் பெரும்பதியே.
4.83.1


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.84 ஆருயிர்த் – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

801எட்டாந் திசைக்கும் இருதிசைக் கும்மிறை வாமுறையென்
றிட்டார் அமரர்வெம் பூசல் எனக்கேட் டெரிவிழியா
ஒட்டாக் கயவர் திரிபுரம் மூன்றையும் ஓரம்பினால்
அட்டான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே.
4.84.1
802பேழ்வாய் அரவின் அரைக்கமர்ந் தேறிப் பிறங்கிலங்கு
தேய்வாய் இளம்பிறை செஞ்சடை மேல்வைத்த தேவர்பிரான்
மூவான் இளகான் முழுவுல கோடுமண் விண்ணுமற்றும்
ஆவான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே.
4.84.2
803தரியா வெகுளிய னாய்த்தக்கன் வேள்வி தகர்த்துகந்த
எரியார் இலங்கிய சூலத்தி னான்இமை யாதமுக்கட்
பெரியான் பெரியார் பிறப்பறுப் பானென்றுந் தன்பிறப்பை
அரியான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே.
4.84.3
804வடிவுடை வாணெடுங் கண்ணுமை யாளையோர் பால்மகிழ்ந்து
வெடிகொள் அரவொடு வேங்கை அதள்கொண்டு மேல்மருவிப்
பொடிகொ ளகலத்துப் பொன்பிதிர்ந் தன்னபைங் கொன்றையந்தார்
அடிகள் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே.
4.84.4
805பொறுத்தான் அமரர்க் கமுதரு ளிநஞ்ச முண்டுகண்டங்
கறுத்தான் கறுப்பழ காவுடை யான்கங்கை செஞ்சடைமேற்
செறுத்தான் தனஞ்சயன் சேணா ரகலங் கணையொன்றினால்
அறுத்தான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே.
4.84.5
806காய்ந்தான் செறற்கரி யானென்று காலனைக் காலொன்றினாற்
பாய்ந்தான் பணைமதில் மூன்றுங் கணையென்னும் ஒள்ளழலால்
மேய்ந்தான் வியனுல கேழும் விளங்க விழுமியநூல்
ஆய்ந்தான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே.
4.84.6
807உளைந்தான் செறுத்தற் கரியான் றலையை உகிரொன்றினாற்
களைந்தான் அதனை நிறைய நெடுமால் கணார் குருதி
வளைந்தான் ஒருவிர லின்னொடு வீழ்வித்துச் சாம்பர்வெண்ணீ
றளைந்தான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே.
4.84.7
808முந்திவட் டத்திடைப் பட்டதெல் லாம்முடி வேந்தர்தங்கள்
பந்திவட் டத்திடைப் பட்டலைப் புண்பதற் கஞ்சிக்கொல்லோ
நந்திவட் டந்நறு மாமலர்க் கொன்றையு நக்கசென்னி
அந்திவட் டத்தொளி யானடிச் சேர்ந்ததென் ஆருயிரே.
4.84.8
809மிகத்தான் பெரியதோர் வேங்கை யதள்கொண்டு மெய்ம்மருவி
அகத்தான் வெருவநல் லாளை நடுக்குறுப் பான்வரும்பொன்
முகத்தாற் குளிர்ந்திருந் துள்ளத்தி னாலுகப் பானிசைந்த
அகத்தான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே.
4.84.9
810பைம்மா ணரவல்குற் பங்கயச் சீறடி யாள்வெருவக்
கைம்மா வரிசிலைக் காமனை யட்ட கடவுள்முக்கண்
எம்மான் இவனென் றிருவரு மேத்த எரிநிமிர்ந்த
அம்மான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே.
4.84.10
811பழகவோ ரூர்தி யரன்பைங்கட் பாரிடம் பாணிசெய்யக்
குழலும் முழவொடு மாநட மாடி உயரிலங்கைக்
கிழவன் இருபது தோளும் ஒருவிர லாலிறுத்த
அழகன் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே.
4.84.11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.85 திருச்சோற்றுத்துறை – திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

812காலை யெழுந்து கடிமலர் தூயன தாங்கொணர்ந்து
மேலை யமரர் விரும்பு மிடம்விரை யான்மலிந்த
சோலை மணங்கமழ் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
மாலை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.
4.85.1
813வண்டணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுங்
கொண்டணைந் தேறு முடியுடை யான்குரை சேர்கழற்கே
தொண்டணைந் தாடிய சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
வெண்டலை மாலையன் றோவெம் பிரானுக் கழகியதே.
4.85.2
814அளக்கு நெறியினன் அன்பர்கள் தம்மனத் தாய்ந்துகொள்வான்
விளக்கு மடியவர் மேல்வினை தீர்த்திடும் விண்ணவர்கோன்
துளக்குங் குழையணி சோற்றுத் துறையுறை வார்சடைமேற்
றிளைக்கும் மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.
4.85.3
815ஆய்ந்தகை வாளர வத்தொடு மால்விடை யேறியெங்கும்
பேர்ந்தகை மானட மாடுவர் பின்னு சடையிடையே
சேர்ந்தகைம் மாமலர் துன்னிய சோற்றுத் துறையுறைவார்
ஏந்துகைச் சூல மழுவெம் பிரானுக் கழகியதே.
4.85.4
816கூற்றைக் கடந்ததுங் கோளர வார்த்ததுங் கோளுழுவை
நீற்றில் துதைந்து திரியும் பரிசது நாமறியோம்
ஆற்றிற் கிடந்தங் கலைப்ப அலைப்புண் டசைந்ததொக்குஞ்
சோற்றுத் துறையுறை வார்சடை மேலதோர் தூமதியே.
4.85.5
817வல்லாடி நின்று வலிபேசு வார்கோளர் வல்லசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர் வந்திறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத் துறையுறைவார்
வில்லாடி நின்ற நிலையெம் பிரானுக் கழகியதே.
4.85.6
818ஆய முடையது நாமறி யோம்அர ணத்தவரைக்
காயக் கணைசிலை வாங்கியு மெய்துந் துயக்கறுத்தான்
தூயவெண் ணீற்றினன் சோற்றுத் துறையுறை வார்சடைமேற்
பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கையெம் மானுக் கழகியதே.
4.85.7
819அண்டர் அமரர் கடைந் தெழுந் தோடிய நஞ்சதனை
உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்கோன்
தொண்டு பயில்கின்ற சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
இண்டை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.
4.85.8
820கடல்மணி வண்ணன் கருதிய நான்முகன் றானறியான்
விடமணி கண்ட முடையவன் றானெனை ஆளுடையான்
சுடரணிந் தாடிய சோற்றுத் துறையுறை வார்சடைமேற்
படமணி நாகமன் றோவெம் பிரானுக் கழகியதே.
4.85.9
821இலங்கைக் கிறைவன் இருபது தோளு முடிநெரியக்
கலங்க விரலினா லூன்றி அவனைக் கருத்தழித்த
துலங்கல் மழுவினன் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
இலங்கு மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.
4.85.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.86 திருவொற்றியூர் – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

822செற்றுக் களிற்றுரி கொள்கின்ற ஞான்று செருவெண்கொம்பொன்
றிற்றுக் கிடந்தது போலும் இளம்பிறை பாம்பதனைச்
சுற்றிக் கிடந்தது கிம்புரி போலச் சுடரிமைக்கும்
நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்குமா லொற்றி யூரனுக்கே.
4.86.1
823சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கிற் றொண்டாயடைந்தார்
அல்லற் படக்கண்டு பின்னென் கொடுத்தி அலைகொள்முந்நீர்
மல்லற் றிரைச்சங்க நித்திலங் கொண்டுவம் பக்கரைக்கே
ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே.
4.86.2
824பரவை வருதிரை நீர்க்கங்கை பாய்ந்துக்க பல்சடைமேல்
அரவ மணிதரு கொன்றை இளந்திங்கட் சூடியதோர்
குரவ நறுமலர் கோங்க மணிந்து குலாய சென்னி
உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே.
4.86.3
825தானகங் காடரங் காக வுடையது தன்னடைந்தார்
ஊனக நாறு முடைதலை யிற்பலி கொள்வதுந்தான்
தேனக நாறுந் திருவொற்றி யூருறை வாரவர்தாந்
தானக மேவந்து போனகம் வேண்டி உழிதர்வரே.
4.86.4
826வேலைக் கடல்நஞ்ச முண்டுவெள் ளேற்றொடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க் குறைவிட மாவது வாரிகுன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெற் கழனி அருகணைந்த
சோலைத் திருவொற்றி யூரையெப் போதுந் தொழுமின்களே.
4.86.5
827புற்றினில் வாழும் அரவுக்குந் திங்கட்குங் கங்கையென்னுஞ்
சிற்றிடை யாட்குஞ் செறிதரு கண்ணிக்குஞ் சேர்விடமாம்
பெற்றுடை யான்பெரும் பேச்சுடை யான்பிரி யாதெனையாள்
விற்றுடை யானொற்றி யூருடை யான்றன் விரிசடையே.
4.86.6
828இன்றரைக் கண்ணுடை யாரெங்கு மில்லை இமய மென்னுங்
குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக் கூறிட்டநாள்
அன்றரைக் கண்ணுங் கொடுத்துமை யாளையும் பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி யூருறை உத்தமனே.
4.86.7
829சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங் காவுந் துதைந்திலங்கு
பெற்றிகண் டால்மற்று யாவருங் கொள்வர் பிறரிடைநீ
ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங் கைவிட் டுறுமென்றெண்ணி
விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப தில்லிடம் வேதியனே.
4.86.8
830சுற்றிக் கிடந்தொற்றி யூரனென் சிந்தை பிரிவறியான்
ஒற்றித் திரிதந்து நீயென்ன செய்தி உலகமெல்லாம்
பற்றித் திரிதந்து பல்லொடு நாமென்று கண்குழித்துத்
தெற்றித் திருப்பதல் லாலென்ன செய்யுமித் தீவினையே.
4.86.9
831அங்கட் கடுக்கைக்கு முல்லைப் புறவம் முறுவல்செய்யும்
பைங்கட் டலைக்குச் சுடலைக் களரி பருமணிசேர்
கங்கைக்கு வேலை அரவுக்குப் புற்று கலைநிரம்பாத்
திங்கட்கு வானந் திருவொற்றி யூரர் திருமுடியே.
4.86.10
832தருக்கின வாளரக் கன்முடி பத்திறப் பாதந்தன்னால்
ஒருக்கின வாறடி யேனைப் பிறப்பறுத் தாளவல்லான்
நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்தநஞ்சைப்
பருக்கின வாறென்செய் கேனொற்றி யூருறை பண்டங்கனே.
4.86.11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.87 திருப்பழனம் – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

833மேவித்து நின்று விளைந்தன வெந்துயர் துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவையறுப்பான்
பாவித்த பாவனை நீயறி வாய்பழ னத்தரசே
கூவித்துக் கொள்ளுந் தனையடி யேனைக் குறிக்கொள்வதே.
4.87.1
834சுற்றிநின் றார்புறங் காவ லமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர சேயுன் பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.
4.87.2
835ஆடிநின் றாயண்டம் ஏழுங் கடந்துபோய் மேலவையுங்
கூடிநின் றாய்குவி மென்முலை யாளையுங் கொண்டுடனே
பாடிநின் றாய்பழ னத்தர சேயங்கோர் பால்மதியஞ்
சூடிநின் றாயடி யேனையஞ் சாமைக் குறிக்கொள்வதே.
4.87.3
836எரித்துவிட் டாய்அம்பி னாற்புர மூன்றுமுன் னேபடவும்
உரித்துவிட் டாய்உமை யாள்நடுக் கெய்தவோர் குஞ்சரத்தைப்
பரித்துவிட் டாய்பழ னத்தர சேகங்கை வார்சடைமேற்
தரித்துவிட் டாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.
4.87.4
837முன்னியும் முன்னி முளைத்தன மூவெயி லும்முடனே
மன்னியு மங்கும் இருந்தனை மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசறி வாய்பழ னத்தரசே
உன்னியும் உன்னடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.
4.87.5
838ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந் தேபடைத் தான்றலையைக்
காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று காமனைக் காலனையும்
பாய்ந்தறுத் தாய்பழ னத்தர சேயென் பழவினைநோய்
ஆய்ந்தறுத் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.
4.87.6
839மற்றுவைத் தாயங்கோர் மாலொரு பாகம் மகிழ்ந்துடனே
உற்றுவைத் தாய்உமை யாளொடுங் கூடும் பரிசெனவே
பற்றிவைத் தாய்பழ னத்தர சேயங்கோர் பாம்பொருகை
சுற்றிவைத் தாய்அடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.
4.87.7
840ஊரினின் றாய்ஒன்றி நின்றுவிண் டாரையும் ஒள்ளழலாற்
போரினின் றாய்பொறை யாயுயி ராவி சுமந்துகொண்டு
பாரிநின் றாய்பழ னத்தர சேபணி செய்பவர்கட்
காரநின் றாய்அடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.
4.87.8
841போகம்வைத் தாய்புரி புன்சடை மேலோர் புனலதனை
ஆகம்வைத் தாய்மலை யான்மட மங்கை மகிழ்ந்துடனே
பாகம்வைத் தாய்பழ னத்தர சேயுன் பணியருளால்
ஆகம்வைத் தாய்அடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.
4.87.9
842அடுத்திருந் தாய்அரக் கன்முடி வாயொடு தோள்நெரியக்
கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி யைக்கிளை யோடுடனே
படுத்திருந் தாய்பழ னத்தர சேபுலி யின்னுரிதோல்
உடுத்திருந் தாய்அடி யேனைக் குறிக்கொண் டருளுவதே.
4.87.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.88 திருப்பூந்துருத்தி – திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

843மாலினை மாலுற நின்றான் மலைமகள் தன்னுடைய
பாலனைப் பான்மதி சூடியைப் பண்புண ரார்மதின்மேற்
போலனைப் போர்விடை யேறியைப் பூந்துருத் திமகிழும்
ஆலனை ஆதிபு ராணனை நானடி போற்றுவதே.
4.88.1
844மறியுடை யான்மழு வாளினன் மாமலை மங்கையோர்பால்
குறியுடை யான்குண மொன்றறிந் தாரில்லை கூறிலவன்
பொறியுடை வாளர வத்தவன் பூந்துருத் தியுறையும்
அறிவுடை ஆதி புராணனை நானடி போற்றுவதே.
4.88.2
845மறுத்தவர் மும்மதில் மாயவோர் வெஞ்சிலை கோத்தோரம்பால்
அறுத்தனை ஆலதன் கீழனை ஆல்விட முண்டதனைப்
பொறுத்தனைப் பூதப் படையனைப் பூந்துருத் தியுறையும்
நிறத்தனை நீல மிடற்றனை யானடி போற்றுவதே.
4.88.3
846உருவினை ஊழி முதல்வனை ஓதி நிறைந்துநின்ற
திருவினைத் தேசம் படைத்தனைச் சென்றடைந் தேனுடைய
பொருவினை யெல்லாந் துரந்தனைப் பூந்துருத் தியுறையுங்
கருவினைக் கண்மூன் றுடையனை யானடி போற்றுவதே.
4.88.4
847தக்கன்றன் வேள்வி தகர்த்தவன் சார மதுவன்றுகோள்
மிக்கன மும்மதில் வீயவோர் வெஞ்சிலை கோத்தோரம்பால்
புக்கனன் பொன்றிகழ்ந் தன்னதோர் பூந்துருத் தியுறையும்
நக்கனை நங்கள் பிரான்றனை நானடி போற்றுவதே.
4.88.5
848அருகடை மாலையுந் தானுடை யான்அழ காலமைந்த
உருவுடை மங்கையுந் தன்னொரு பாலுல காயுநின்றான்
பொருபடை வேலினன் வில்லினன் பூந்துருத் தியுறையுந்
திருவுடைத் தேச மதியனை யானடி போற்றுவதே.
4.88.6
849மன்றியுந் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக்
கன்றியுந் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனலம்பினாற்
பொன்றியும் போகப் புரட்டினன் பூந்துருத் தியுறையும்
அன்றியுஞ் செய்த பிரான்றனை யானடி போற்றுவதே.
4.88.7
850மின்னிறம் மிக்க இடையுமை நங்கையோர் பான்மகிழ்ந்தான்
என்னிற மென்றம ரர்பெரி யாரின்னந் தாமறியார்
பொன்னிற மிக்க சடையவன் பூந்துருத் தியுறையும்
என்னிற வெந்தை பிரான்றனை யானடி போற்றுவதே.
4.88.8
851அந்தியை நல்ல மதியினை யார்க்கும் அறிவரிய
செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினை சென்றடைந் தேனுடைய
புந்தியைப் புக்க அறிவினை பூந்துருத் தியுறையும்
நந்தியை நங்கள் பிரான்றனை நானடி போற்றுவதே.
4.88.9
852பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே
வைக்கையும் வானிழி கங்கையும் மங்கை நடுக்குறவே
மொய்க்கை அரக்கனை யூன்றினன் பூந்துருத் தியுறையும்
மிக்கநல் வேத விகிர்தனை நானடி போற்றுவதே.
4.88.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.89 திருநெய்த்தானம் – திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

853பாரிடஞ் சாடிய பல்லுயிர் வானம ரர்க்கருளிக்
காரடைந் தகடல் வாயுமிழ் நஞ்சமு தாகவுண்டான்
ஊரடைந் திவ்வுல கிற்பலி கொள்வது நாமறியோம்
நீரடைந் தகரை நின்றநெய்த் தானத் திருந்தவனே.
4.89.1
854தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி யாய்நின் திருச்சடைமேற்
பாய்ந்தகங் கைப்புனற் பன்முக மாகிப் பரந்தொலிப்ப
ஆய்ந்திலங் கும்மழு வேலுடை யாயடி யேற்குரைநீ
ஏந்திள மங்கையும் நீயும்நெய்த் தானத் திருந்ததுவே.
4.89.2
855கொன்றடைந் தாடிக் குமைத்திடுங் கூற்றமொன் னார்மதின்மேற்
சென்றடைந் தாடிப் பொருததுந் தேசமெல் லாமறியுங்
குன்றடைந் தாடுங் குளிர்பொழிற் காவிரி யின்கரைமேற்
சென்றடைந் தார்வினை தீர்க்குநெய்த் தானத் திருந்தவனே.
4.89.3
856கொட்டு முழவர வத்தொடு கோலம் பலஅணிந்து
நட்டம் பலபயின் றாடுவர் நாகம் அரைக் கசைத்துச்
சிட்டர் திரிபுரந் தீயெழச் செற்ற சிலையுடையான்
இட்ட முமையொடு நின்றநெய்த் தானத் திருந்தவனே.
4.89.4
857கொய்மலர்க் கொன்றை துழாய்வன்னி மத்தமுங் கூவிளமும்
மெய்மலர் வேய்ந்த விரிசடைக் கற்றைவிண் ணோர்பெருமான்
மைமலர் நீல நிறங்கருங் கண்ணியோர் பால்மகிழ்ந்தான்
நின்மல னாடல் நிலயநெய்த் தானத் திருந்தவனே.
4.89.5
858பூந்தார் நறுங்கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கணிந்து
கூர்ந்தார் விடையினை யேறிப்பல் பூதப் படைநடுவே
போந்தார் புறவிசை பாடவும் ஆடவுங் கேட்டருளிச்
சேர்ந்தார் உமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.
4.89.6
859பற்றின பாம்பன் படுத்த புலியுரித் தோலுடையன்
முற்றின மூன்று மதில்களை மூட்டி யெரித்தறுத்தான்
சுற்றிய பூதப் படையினன் சூல மழுவொருமான்
செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த் தானத் திருந்தவனே.
4.89.7
860விரித்த சடையினன் விண்ணவர் கோன்விட முண்டகண்டன்
உரித்த கரியுரி மூடியொன் னார்மதில் மூன்றுடனே
எரித்த சிலையினன் ஈடழியா தென்னை ஆண்டுகொண்ட
தரித்த உமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.
4.89.8
861தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை துன்னிய செஞ்சடைமேல்
வாங்கா மதியமும் வாளர வுங்கங்கை தான்புனைந்தான்
தேங்கார் திரிபுரந் தீயெழ வெய்து தியக்கறுத்து
நீங்கான் உமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.
4.89.9
862ஊட்டிநின் றான்பொரு வானில மும்மதில் தீயம்பினால்
மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து வீழவும் வானவர்க்குக்
காட்டிநின் றான்கத மாக்கங்கை பாயவோர் வார்சடையை
நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த் தானத் திருந்தவனே.
4.89.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.90 திருவேதிகுடி – திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

863கையது காலெரி நாகங் கனல்விடு சூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன்
செய்யினில் நீல மணங்கம ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே.
4.90.1
864கைத்தலை மான்மறி யேந்திய கையன் கனல்மழுவன்
பொய்த்தலை யேந்திநற் பூதி யணிந்து பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக ளுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே.
4.90.2
865முன்பின் முதல்வன் முனிவனெம் மேலை வினைகழித்தான்
அன்பின் நிலையில் அவுணர் புரம்பொடி யானசெய்யுஞ்
செம்பொனை நன்மலர் மேலவன் சேர்திரு வேதிகுடி
அன்பனை நம்மை யுடையனை நாமடைந் தாடுதுமே.
4.90.3
866பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை யொன்றறுப்பான்
முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன்னுயர்த்தான்
கொத்தன கொன்றை மணங்கம ழுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே.
4.90.4
867ஆனணைந் தேறுங் குறிகுண மாரறி வாரவர்கை
மானணைந் தாடு மதியும் புனலுஞ் சடைமுடியன்
தேனணைந் தாடிய வண்டு பயில்திரு வேதிகுடி
ஆனணைந் தாடு மழுவனை நாமடைந் தாடுதுமே.
4.90.5
868எண்ணும் எழுத்துங் குறியும் அறிபவர் தாமொழியப்
பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்றிரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை நாமடைந் தாடுதுமே.
4.90.6
869ஊர்ந்த விடையுகந் தேறிய செல்வனை நாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையோர் பாகம் மகிழ்ந்துடையான்
சேர்ந்த புனற்சடைச் செல்வப் பிரான்றிரு வேதிகுடிச்
சார்ந்த வயலணி தண்ணமு தையடைந் தாடுதுமே.
4.90.7
870எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொரு வன்றலையுள்
திரியும் பலியினன் தேயமும் நாடுமெல் லாமுடையான்
விரியும் பொழிலணி சேறு திகழ்திரு வேதிகுடி
அரிய அமுதினை அன்பர்க ளோடடைந் தாடுதுமே.
4.90.8
871மையணி கண்டன் மறைவிரி நாவன் மதித்துகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணங்கம ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே.
4.90.9
872வருத்தனை வாளரக் கன்முடி தோளொடு பத்திறுத்த
பொருத்தனைப் பொய்யா அருளனைப் பூதப் படையுடைய
திருத்தனைத் தேவர் பிரான்றிரு வேதி குடியுடைய
அருத்தனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே.
4.90.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வேதபுரீசுவரர்,
தேவியார் – மங்கையர்க்கரசியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.91 திருவையாறு – திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

873குறுவித்த வாகுற்ற நோய்வினை காட்டிக் குறுவித்தநோய்
உறுவித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி
அறிவித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே
செறிவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
4.91.1
874கூர்வித்த வாகுற்ற நோய்வினை காட்டியுங் கூர்வித்தநோய்
ஊர்வித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி
ஆர்வித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே
சேர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
4.91.2
875தாக்கின வாசல மேவினை காட்டியுந் தண்டித்தநோய்
நீக்கின வாநெடு நீரினின் றேற நினைந்தருளி
ஆக்கின வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே
நோக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
4.91.3
876தருக்கின நான்றக வின்றியு மோடச் சலமதனால்
நெருக்கின வாநெடு நீரினின் றேற நினைந்தருளி
உருக்கின வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே
பெருக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
4.91.4
877இழிவித்த வாறிட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்துக்
கழிவித்த வாகட்ட நோய்வினை தீர்ப்பான் கலந்தருளி
அழிவித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே
தொழுவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
4.91.5
878இடைவித்த வாறிட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்து
உடைவித்த வாறுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி
அடைவித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே
தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
4.91.6
879படக்கின வாபட நின்றுபன் னாளும் படக்கினநோய்
அடக்கின வாறது வன்றியுந் தீவினை பாவமெல்லாம்
அடக்கின வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே
தொடக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
4.91.7
880மறப்பித்த வாவல்லை நோய்வினை காட்டி மறப்பித்தநோய்
துறப்பித்த வாதுக்க நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி
இறப்பித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே
சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
4.91.8
881துயக்கின வாதுக்க நோய்வினை காட்டித் துயக்கினநோய்
இயக்கின வாறிட்ட நோய்வினை தீர்ப்பான் இசைந்தருளி
அயக்கின வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே
மயக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
4.91.9
882கறுத்துமிட் டார்கண்டங் கங்கை சடைமேற் கரந்தருளி
இறுத்துமிட் டார்இலங் கைக்கிறை தன்னை இருபதுதோள்
அறுத்துமிட் டாரடி யேனைஐ யாறன் அடிமைக்களே
பொறுத்துமிட் டார்தொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
4.91.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.92 திருவையாறு – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

883சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன்
முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந் தாடும்ஐ யாறன் அடித்தலமே.
4.92.1
884இழித்தன ஏழேழ் பிறப்பும் அறுத்தன என்மனத்தே
பொழித்தன போரெழிற் கூற்றை யுதைத்தன போற்றவர்க்காய்க்
கிழித்தன தக்கன் கிளரொளி வேள்வியைக் கீழமுன்சென்
றழித்தன ஆறங்க மானஐ யாறன் அடித்தலமே.
4.92.2
885மணிநிற மொப்பன பொன்னிற மன்னின மின்னியல்வாய்
கணிநிற மன்ன கயிலைப் பொருப்பன காதல்செய்யத்
துணிவன சீலத்த ராகித் தொடர்ந்து விடாததொண்டர்க்
கணியன சேயன தேவர்க்கை யாறன் அடித்தலமே.
4.92.3
886இருள்தரு துன்பப் படல மறைப்பமெய்ஞ் ஞானமென்னும்
பொருள்தரு கண்ணிழந் துண்பொருள் நாடிப் புகலிழந்த
குருடருந் தம்மைப் பரவக் கொடுநர கக்குழிநின்
றருள்தரு கைகொடுத் தேற்றும்ஐ யாறன் அடித்தலமே.
4.92.4
887எழுவாய் இறுவாய் இலாதன வெங்கட் பிணிதவிர்த்து
வழுவா மருத்துவ மாவன மாநர கக்குழிவாய்
விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்கவன்போ
டழுவார்க் கமுதங்கள் காண்கஐ யாறன் அடித்தலமே.
4.92.5
888துன்பக் கடலிடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்பக் கரைமுகந் தேற்றுந் திறத்தன மாற்றயலே
பொன்பட் டொழுகப் பொருந்தொளி செய்யுமப் பொய்பொருந்தா
அன்பர்க் கணியன காண்கஐ யாறன் அடித்தலமே.
4.92.6
889களித்துக் கலந்ததோர் காதற் கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுதுமுன் நின்றவிப் பத்தரைக் கோதில்செந்தேன்
தெளித்துச் சுவையமு தூட்டி யமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும்ஐ யாறன் அடித்தலமே.
4.92.7
890திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்துடலை
வருத்திக் கடிமலர் வாளெடுத் தோச்சி மருங்குசென்று
விருத்திக் குழக்கவல் லோர்கட்கு விண்பட் டிகையிடுமால்
அருத்தித் தருந்தவ ரேத்தும்ஐ யாறன் அடித்தலமே.
4.92.8
891பாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப் பரந்துபல்பேய்க்
கூடி முழவக் குவிகவிழ் கொட்டக் குறுநரிகள்
நீடுங் குழல்செய்ய வையம் நெளிய நிணப்பிணக்காட்
டாடுந் திருவடி காண்கஐ யாறன் அடித்தலமே.
4.92.9
892நின்போல் அமரர்கள் நீண்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த
பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன பாங்கறியா
என்போ லிகள்பறித் திட்ட இலையும் முகையுமெல்லாம்
அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே.
4.92.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.92a திருவையாறு – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

893மலையார் மடந்தை மனத்தன வானோர் மகுடமன்னி
நிலையா யிருப்பன நின்றோர் மதிப்பன நீணிலத்துப்
புலையாடு புன்மை தவிர்ப்பன பொன்னுல கம்மளிக்கும்
அலையார் புனற்பொன்னி சூழ்ந்தஐ யாறன் அடித்தலமே.
4.93.1
894பொலம்புண் டரீகப் புதுமலர் போல்வன போற்றியென்பார்
புலம்பும் பொழுதும் புணர்துணை யாவன பொன்னனைய
சிலம்புஞ் செறிபா டகமுஞ் செழுங்கிண் கிணித்திரளும்
அலம்பும் திருவடி காண்கஐ யாறன் அடித்தலமே.
4.93.2
895உற்றா ரிலாதார்க் குறுதுணை யாவன ஓதிநன்னூல்
கற்றார் பரவப் பெருமை யுடையன காதல்செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி வானகந் தான்கொடுக்கும்
அற்றார்க் கரும்பொருள் காண்கஐ யாறன் அடித்தலமே.
4.93.3
896வானைக் கடந்தண்டத் தப்பால் மதிப்பன மந்திரிப்பார்
ஊனைக் கழித்துய்யக் கொண்டருள் செய்வன உத்தமர்க்கு
ஞானச் சுடராய் நடுவே யுதிப்பன நங்கையஞ்ச
ஆனை யுரித்தன காண்கஐ யாறன் அடித்தலமே.
4.93.4
897மாதர மானில மாவன வானவர் மாமுகட்டின்
மீதன மென்கழல் வெங்கச்சு வீக்கின வெந்நமனார்
தூதரை யோடத் துரப்பன துன்பறத் தொண்டுபட்டார்க்
காதர மாவன காண்கஐ யாறன் அடித்தலமே.
4.93.5
898பேணித் தொழுமவர் பொன்னுல காளப் பிறங்கருளால்
ஏணிப் படிநெறி யிட்டுக் கொடுத்திமை யோர்முடிமேல்
மாணிக்க மொத்து மரகதம் போன்று வயிரமன்னி
ஆணிக் கனகமு மொக்கும்ஐ யாறன் அடித்தலமே.
4.93.6
899ஓதிய ஞானமும் ஞானப் பொருளும் ஒலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியு மாவன விண்ணுமண்ணுஞ்
சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு மொப்பன தூமதியோ
டாதியும் அந்தமு மானஐ யாறன் அடித்தலமே.
4.93.7
900சுணங்கு முகத்துத் துணைமுலைப் பாவை சுரும்பொடுவண்
டணங்குங் குழலி யணியார் வளைக்கரங் கூப்பிநின்று
வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும்வண் காந்தளொண்போ
தணங்கும் அரவிந்த மொக்கும்ஐ யாறன் அடித்தலமே.
4.93.8
901சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர்துன்னும்
நிழலா வனவென்று நீங்காப் பிறவி நிலைகெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ கால வனங்கடந்த
அழலார் ஒளியன காண்கஐ யாறன் அடித்தலமே.
4.93.9
902வலியான் றலைபத்தும் வாய்விட் டலற வரையடர்த்து
மெலியா வலியுடைக் கூற்றை யுதைத்துவிண் ணோர்கள்முன்னே
பலிசேர் படுகடைப் பார்த்துப்பன் னாளும் பலர்இகழ
அலியா நிலைநிற்கும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே.
4.93.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.93 திருக்கண்டியூர் – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

903வானவர் தானவர் வைகல் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்
தானவர் மால்பிர மன்னறி யாத தகைமையினான்
ஆனவ னாதிபு ராணனன் றோடிய பன்றியெய்த
கானவ னைக்கண்டி யூரண்ட வாணர் தொழுகின்றதே.
4.94.1
904வான மதியமும் வாளர வும்புன லோடுசடைத்
தான மதுவென வைத்துழல் வான்றழல் போலுருவன்
கான மறியொன்று கையுடை யான்கண்டி யூரிருந்த
ஊனமில் வேத முடையானை நாமடி யுள்குவதே.
4.94.2
905பண்டங் கறுத்ததோர் கையுடை யான்படைத் தான்றலையை
உண்டங் கறுத்ததும் ஊரொடு நாடவை தானறியுங்
கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி யூரிருந்த
தொண்டர் பிரானைக்கண் டீரண்ட வாணர் தொழுகின்றதே.
4.94.3
906முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன் தானுடையான்
கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு பாலுடையான்
கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி யூரிருந்தான்
அடியுமுற் றார்தொண்டர் இல்லைகண் டீரண்ட வானவரே.
4.94.4
907பற்றியோ ரானை யுரித்த பிரான்பவ ளத்திரள்போல்
முற்றும் அணிந்ததோர் நீறுடை யான்முன்ன மேகொடுத்த
கற்றங் குடையவன் றானறி யான்கண்டி யூரிருந்த
குற்றமில் வேத முடையானை யாமண்டர் கூறுவதே.
4.94.5
908போர்ப்பனை யானை யுரித்த பிரான்பொறி வாயரவஞ்
சேர்ப்பது வானத் திரைகடல் சூழுல கம்மிதனைக்
காப்பது காரண மாகக்கொண் டான்கண்டி யூரிருந்த
கூர்ப்புடை ஒள்வாள் மழுவனை யாமண்டர் கூறுவதே.
4.94.6
909அட்டது காலனை ஆய்ந்தது வேதமா றங்கமன்று
சுட்டது காமனைக் கண்ணத னாலே தொடர்ந்தெரியக்
கட்டவை மூன்று மெரித்த பிரான்கண்டி யூரிருந்த
குட்டமுன் வேதப் படையனை யாமண்டர் கூறுவதே.
4.94.7
910அட்டும் ஒலிநீர் அணிமதி யும்மல ரானவெல்லாம்
இட்டுப் பொதியுஞ் சடைமுடி யான்இண்டை மாலையங்கைக்
கட்டும் அரவது தானுடை யான்கண்டி யூரிருந்த
கொட்டும் பறையுடைக் கூத்தனை யாமண்டர் கூறுவதே.
4.94.8
911மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச் செற்றநங்கைக்
காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரான்அங்க மாறினையும்
ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட் கொண்டவனே.
4.94.9
912மண்டி மலையை யெடுத்துமத் தாக்கியவ் வாசுகியைத்
தண்டி அமரர் கடைந்த கடல்விடங் கண்டருளி
உண்ட பிரான்நஞ் சொளித்தபி ரான்அஞ்சி யோடிநண்ணக்
கண்ட பிரானல்ல னோகண்டி யூரண்ட வானவனே.
4.94.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வீரட்டேசுவரர், தேவியார் – மங்கைநாயகியம்மை

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.94 திருப்பாதிரிப்புலியூர் – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

913ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.
4.95.1
914பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றுஞ்
சுற்றாய் அலைகடல் மூடினுங் கண்டேன் புகல்நமக்கு
உற்றான் உமையவட் கன்பன் திருப்பா திரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியி னான்றன மொய்கழலே.
4.95.2
915விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தான் இனிநமக்கிங்
கடையா அவலம் அருவினை சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர்
உடையான் அடியார் அடியடி யோங்கட் கரியதுண்டே.
4.95.3
916மாயமெல் லாமுற்ற விட்டிருள் நீங்க மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தா னவன்றன் திருவடிக்கே
தேயமெல் லாநின் றிறைஞ்சுந் திருப்பா திரிப்புலியூர்
மேயநல் லான்மலர்ப் பாதமென் சிந்தையுள் நின்றனவே.
4.95.4
917வைத்த பொருள்நமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச்
சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர்
அத்தன் அருள்பெற லாமோ அறிவிலாப் பேதைநெஞ்சே.
4.95.5
918கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளாற்
திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.
4.95.6
919எண்ணா தமரர் இரக்கப் பரவையுள் நஞ்சமுண்டாய்
திண்ணார் அசுரர் திரிபுரந் தீயெழச் செற்றவனே
பண்ணார்ந் தமைந்த பொருள்கள் பயில்பா திரிப்புலியூர்க்
கண்ணார் நுதலாய் கழல்நங் கருத்தில் உடையனவே.
4.957
920புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே.
4.95.8
921மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும்
விண்பால் திசைகெட் டிருசுடர் வீழினும் அஞ்சல்நெஞ்சே
திண்பால் நமக்கொன்று கண்டோ ந் திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே.
4.95.9
922திருந்தா அமணர்தந் தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்தி
தருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்த
பொருந்தா அரக்கன் உடல்நெரித் தாய்பா திரிப்புலியூர்
இருந்தாய் அடியேன் இனிப்பிற வாமல்வந் தேன்றுகொள்ளே.
4.95.10


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – தோன்றாத்துணையீசுவரர்,
தேவியார் – தோகையம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.95 திருவீழிமிழலை – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

923வான்சொட்டச் சொட்டநின் றட்டும் வளர்மதி யோடயலே
தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந் திருக்கொன்றை சென்னிவைத்தீர்
மான்பெட்டை நோக்கி மணாளீர் மணிநீர் மிழலையுள்ளீர்
நான்சட்ட வும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
4.96.1
924அந்தமும் ஆதியு மாகிநின் றீரண்டம் எண்டிசையும்
பந்தமும் வீடும் பரப்புகின் றீர்பசு வேற்றுகந்தீர்
வெந்தழல் ஓம்பு மிழலையுள் ளீரென்னைத் தென்றிசைக்கே
உந்திடும் போது மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
4.96.2
925அலைக்கின்ற நீர்நிலங் காற்றனல் அம்பர மாகிநின்றீர்
கலைக்கன்று சேருங் கரத்தீர் கலைப்பொரு ளாகிநின்றீர்
விலக்கின்றி நல்கும் மிழலையுள் ளீர்மெய்யிற் கையொடுகால்
குலைக்கின்று நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
4.96.3
926தீத்தொழி லான்றலை தீயிலிட் டுச்செய்த வேள்விசெற்றீர்
பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை யீர்பிடித் துத்திரியும்
வேய்த்தொழி லாளர் மிழலையுள் ளீர்விக்கி அஞ்செழுத்தும்
ஓத்தொழிந் தும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
4.96.4
927தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ் சுத்தியும் பத்திமையான்
மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறுடையீர்
நாட்பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன்தமர்தம்
கோட்பட்டு நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
4.96.5
928கண்டியிற் பட்ட கழுத்துடை யீர்கரி காட்டிலிட்ட
பண்டியிற் பட்ட பரிகலத் தீர்பதி வீழிகொண்டீர்
உண்டியிற் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மையைவர்
கொண்டியிற் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
4.96.6
929தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண் டீர்தூய வெள்ளெருதொன்
றேற்றங்கொண் டீரெழில் வீழி மிழலை இருக்கைகொண்டீர்
சீற்றங்கொண் டென்மேல் சிவந்ததோர் பாசத்தால் வீசியவெங்
கூற்றங்கண் டும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
4.96.7
930சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ் சூடிச்சொக் கம்பயின்றீர்
பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை யீர்படர் தீப்பருக
விழிப்பட்ட காமனை வீட்டீர் மிழலையுள் ளீர்பிறவிச்
சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
4.96.8
931பிள்ளையிற் பட்ட பிறைமுடி யீர்மறை யோதவல்லீர்
வெள்ளையிற் பட்டதோர் நீற்றீர் விரிநீர் மிழலையுள்ளீர்
நள்ளையிற் பட்டைவர் நக்கரைப் பிக்க நமன்தமர்தங்
கொள்ளையிற் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
4.96.9
932கறுக்கொண் டரக்கன் கயிலையைப் பற்றிய கையுமெய்யும்
நெறுக்கென் றிறச்செற்ற சேவடி யாற்கூற்றை நீறுசெய்தீர்
வெறிக்கொன்றை மாலை முடியீர் விரிநீர் மிழலையுள்ளீர்
இறக்கின்று நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
4.96.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுஜாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.96 திருச்சத்திமுற்றம் – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

933கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடின்
மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.1
934காய்ந்தாய் அனங்கன் உடலம் பொடிபடக் காலனைமுன்
பாய்ந்தாய் உயிர்செகப் பாதம் பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்தாய்ந் தறுப்பாய் அடியேற் கருளாயுன் அன்பர்சிந்தை
சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.2
935பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போல் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி
அத்தா அடியேன் அடைக்கலங் கண்டாய் அமரர்கள்தஞ்
சித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.3
936நில்லாக் குரம்பை நிலையாக் கருதியிந் நீணிலத்தொன்
றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு வேனைவந் தாண்டுகொண்டாய்
வில்லேர் புருவத் துமையாள் கணவா விடிற்கெடுவேன்
செல்வா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.4
937கருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன் கருப்புவியிற்
தெருவிற் புகுந்தேன் திகைத்தடி யேனைத் திகைப்பொழிவி
உருவிற் றிகழும் உமையாள் கணவா விடிற்கெடுவேன்
திருவிற் பொலிசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.5
938வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன்முன்
இம்மையுன் தாளென்றன் நெஞ்சத் தெழுதிவை ஈங்கிகழில்
அம்மை அடியேற் கருளுதி யென்பதிங் காரறிவார்
செம்மை தருசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.6
939விட்டார் புரங்கள் ஒருநொடி வேவவோர் வெங்கணையாற்
சுட்டாயென் பாசத் தொடர்பறுத் தாண்டுகொள் தும்பிபம்பும்
மட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்தருளுஞ்
சிட்டா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.7
940இகழ்ந்தவன் வேள்வி அழித்திட் டிமையோர் பொறையிரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமுங் கொண்டது நீலகண்டா
புகழ்ந்த அடியேன்றன் புன்மைகள் தீரப் புரிந்துநல்காய்
திகழ்ந்த திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.8
941தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந் துன்றன் சரண்புகுந்தேன்
எக்காதல் எப்பயன் உன்றிற மல்லால் எனக்குளதே
மிக்கார் திலையுள் விருப்பா மிகவட மேருவென்னுந்
திக்கா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.9
942பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப் புற்றவன் பொன்முடிதோள்
இறத்தாள் ஒருவிரல் ஊன்றிட் டலற இரங்கிஒள்வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய் குற்றக் கொடுவினைநோய்
செறுத்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
4.97.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சிவக்கொழுந்தீசுவரர், தேவியார் – பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.97 திருநல்லூர் – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

943அட்டுமின் இல்பலி யென்றென் றகங்கடை தோறும்வந்து
மட்டவி ழுங்குழ லார்வளை கொள்ளும் வகையென்கொலோ
கொட்டிய பாணி யெடுத்திட்ட பாதமுங் கோளரவும்
நட்டநின் றாடிய நாதர்நல் லூரிடங் கொண்டவரே.
4.98.1
944பெண்ணிட்டம் பண்டைய தன்றிவை பெய்பலிக் கென்றுழல்வார்
நண்ணிட்டு வந்து மனைபுகுந் தாரும்நல் லூரகத்தே
பண்ணிட்ட பாடலர் ஆடல ராய்ப்பற்றி நோக்கிநின்று
கண்ணிட்டுப் போயிற்றுக் காரண முண்டு கறைக்கண்டரே.
4.98.2
945படவேர் அரவல்ன்ற் பாவைநல் லீர்பக லேயொருவர்
இடுவார் இடைப்பலி கொள்பவர் போலவந் தில்புகுந்து
நடவார் அடிகள் நடம்பயின் றாடிய கூத்தர்கொலோ
வடபாற் கயிலையுந் தென்பால்நல் லூருந்தம் வாழ்பதியே.
4.98.3
946செஞ்சுடர்ச் சோதிப் பவளத் திரள்திகழ் முத்தனைய
நஞ்சணி கண்டன்நல் லூருறை நம்பனை நானொருகாற்
துஞ்சிடைக் கண்டு கனவின் றலைத்தொழு தேற்கவன்றான்
நெஞ்சிடை நின்றக லான்பல காலமும் நின்றனனே.
4.98.4
947வெண்மதி சூடி விளங்கநின் றானைவிண் ணோர்கள்தொழ
நண்ணில யத்தொடு பாட லறாதநல் லூரகத்தே
திண்ணிலை யங்கொடு நின்றான் திரிபுர மூன்றெரித்தான்
கண்ணுளும் நெஞ்சத் தகத்தும் உளகழற் சேவடியே.
4.98.5
948தேற்றப் படத்திரு நல்லூ ரகத்தே சிவனிருந்தாற்
தோற்றப் படச்சென்று கண்டுகொள் ளார்தொண்டர் துன்மதியால்
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய ஆதரைப்போற்
காற்றிற் கெடுத்துல கெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே.
4.98.6
949நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்த நல்லூரகத்தே
கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடத்தான்
வாட்கொண்ட நோக்கி மனைவியொ டுமங்கோர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோவிவ் வகலிடமே.
4.98.7
950அறைமல்கு பைங்கழ லார்ப்பநின் றானணி யார்சடைமேல்
நறைமல்கு கொன்றையந் தாருடை யானும்நல் லூரகத்தே
பறைமல்கு பாடலன் ஆடல னாகிப் பரிசழித்தான்
பிறைமல்கு செஞ்சடை தாழநின் றாடிய பிஞ்ஞகனே.
4.98.8
951மன்னிய மாமறை யோர்மகிழ்ந் தேத்த மருவியெங்குந்
துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடித் தொழுதுநல்லூர்க்
கன்னியர் தாமுங் கனவிடை யுன்னிய காதலரை
அன்னியர் அற்றவர் அங்கண னேயருள் நல்கென்பரே.
4.98.9
952திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொள்நெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட மலிமறை யோர்கள்நல்லூர்
உருவமர் பாகத் துமையவள் பாகனை உள்குதுமே.
4.98.10
953செல்லேர் கொடியன் சிவன்பெருங் கோயில் சிவபுரமும்
வல்லேன் புகவும் மதில்சூழ் இலங்கையர் காவலனைக்
கல்லார் முடியொடு தோளிறச் செற்ற கழலடியான்
நல்லூ ரிருந்த பிரான்அல்ல னோநம்மை ஆள்பவனே.
4.98.11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.98 திருவையாறு – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

954அந்திவட் டத்திங்கட் கண்ணியன் ஐயா றமர்ந்துவந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.
4.99.1
955பாடகக் கால்கழற் கால்பரி திக்கதி ருக்கவந்தி
நாடகக் கால்நங்கை முன்செங்கண் ஏனத்தின் பின்னடந்த
காடகக் கால்கணங் கைதொழுங் காலெங்க ணாய்நின்றகால்
ஆடகக் காலரி மான்றேர் வலவன்ஐ யாற்றனவே.
4.99.2


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.099 திருவேகம்பம் – திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

956ஓதுவித் தாய்முன் அறவுரை காட்டி அமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக் கிற்புளி யம்வளாரால்
மோதுவிப் பாய்உகப் பாய்முனி வாய்கச்சி யேகம்பனே.
4.100.1
957எத்தைக்கொண் டெத்தகை ஏழை அமணொ டிசைவித்தெனைக்
கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்னைக் கோகுசெய்தாய்
முத்தின் திரளும் பளிங்கினிற் சோதியும் மொய்பவளத்
தொத்தினை யேய்க்கும் படியாய் பொழிற்கச்சி யேகம்பனே.
4.100.2
958மெய்யம்பு கோத்த விசயனோ டன்றொரு வேடுவனாய்ப்
பொய்யம்பெய் தாவ மருளிச்செய் தாய்புர மூன்றெரியக்
கையம்பெய் தாய்நுன் கழலடி போற்றாக் கயவர்நெஞ்சிற்
குய்யம்பெய் தாய்கொடி மாமதில் சூழ்கச்சி யேகம்பனே.
4.100.3
959குறிக்கொண் டிருந்துசெந் தாமரை ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை வித்துக்கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங் காஞ்சியெம் பிஞ்ஞகனே.
4.100.4
960உரைக்குங் கழிந்திங் குணர்வரி யான்உள்கு வார்வினையைக்
கரைக்கு மெனக்கை தொழுவதல் லாற்கதி ரோர்களெல்லாம்
விரைக்கொண் மலரவன் மால்எண் வசுக்கள்ஏ காதசர்கள்
இரைக்கும் அமிர்தர்க் கறியவொண் ணானெங்கள் ஏகம்பனே.
4.100.5
961கருவுற்ற நாள்முத லாகவுன் பாதமே காண்பதற்கு
உருகிற்றென் னுள்ளமும் நானுங் கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி யூரா திருவால வாயா திருவாரூரா
ஒருபற் றிலாமையுங் கண்டிரங் காய்கச்சி யேகம்பனே.
4.100.6
962அரிஅயன் இந்திரன் சந்திரா தித்தர் அமரரெல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலை யார்உணங் காக்கிடந்தார்
புரிதரு புன்சடைப் போக முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செஞ்சடை ஏகம்ப என்னோ திருக்குறிப்பே.
4.100.7
963பாம்பரைச் சேர்த்திப் படருஞ் சடைமுடிப் பால்வண்ணனே
கூம்பலைச் செய்த கரதலத் தன்பர்கள் கூடிப்பன்னாள்
சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்சரணென்
றேம்பலிப் பார்கட் கிரங்குகண் டாய்கச்சி யேகம்பனே.
4.100.8
964ஏன்றுகொண் டாயென்னை எம்பெரு மானினி யல்லமென்னிற்
சான்றுகண் டாய்இவ் வுலகமெல் லாந்தனி யேனென்றென்னை
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத் தாய்பின்னை ஒற்றியெல்லாஞ்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப மேய சுடர்வண்ணனே.
4.100.9
965உந்திநின் றாருன்றன் ஓலக்கச் சூளைகள் வாய்தல்பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவ ரீட்டம் பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு மாலும் மதிற்கச்சியாய்
இந்தநின் றோமினி எங்ஙன மோவந் திறைஞ்சுவதே.
4.100.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.100 திருவின்னம்பர் – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

966மன்னு மலைமகள் கையால் வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறுந் தூப்பொரு ளாயின தூக்கமலத்
தன்ன வடிவின அன்புடைத் தொண்டர்க் கமுதருத்தி
இன்னல் களைவன இன்னம்ப ரான்றன் இணையடியே.
4.101.1
967பைதற் பிணக்குழைக் காளிவெங் கோபம்பங் கப்படுப்பான்
செய்தற் கரிய திருநடஞ் செய்தன சீர்மறையோன்
உய்தற் பொருட்டுவெங் கூற்றை யுதைத்தன உம்பர்க்கெல்லாம்
எய்தற் கரியன இன்னம்ப ரான்றன் இணையடியே.
4.101.2
968சுணங்குநின் றார்கொங்கை யாள்உமை சூடின தூமலரால்
வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின மன்னு மறைகள்தம்மிற்
பிணங்கிநின் றின்னன வென்றறி யாதன பேய்க்கணத்தோ
டிணங்கிநின் றாடின இன்னம்ப ரான்றன் இணையடியே.
4.101.3
969ஆறொன் றியசம யங்களின் அவ்வவர்க் கப்பொருள்கள்
வேறொன் றிலாதன விண்ணோர் மதிப்பன மிக்குவமன்
மாறொன் றிலாதன மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறொன் றிலாதன இன்னம்ப ரான்றன் இணையடியே.
4.101.4
970அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றி னாலட லங்கியின்வாய்க்
கரக்கமுன் வைதிகத் தேர்மிசை நின்றன கட்டுருவம்
பரக்கவெங் கானிடை வேடுரு வாயின பல்பதிதோ
றிரக்க நடந்தன இன்னம்ப ரான்றன் இணையடியே.
4.101.5
971கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழல்முன் தேடின கேடுபடா
ஆண்டும் பலபல வூழியு மாயின ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்கநின் றாடின மேவுசிலம்
பீண்டும் கழலின இன்னம்ப ரான்றன் இணையடியே.
4.101.6
972போற்றுந் தகையன பொல்லா முயலகன் கோபப்புன்மை
ஆற்றுந் தகையன ஆறு சமயத் தவரவரைத்
தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றுந் தகையன இன்னம்ப ரான்றன் இணையடியே.
4.101.7
973பயம்புன்மை சேர்தரு பாவந் தவிர்ப்பன பார்ப்பதிதன்
குயம்பொன்மை மாமல ராகக் குலாவின கூடவொண்ணாச்
சயம்புவென் றேதகு தாணுவென் றேசதுர் வேதங்கள்நின்
றியம்புங் கழலின இன்னம்ப ரான்றன் இணையடியே.
4.101.8
974அயன்நெடு மால்இந் திரன்சந்தி ராதித்தர் அமரரெல்லாஞ்
சயசய என்றுமுப் போதும் பணிவன தண்கடல்சூழ்
வியனில முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியன்நகர்க்கும்
இயபர மாவன இன்னம்ப ரான்றன் இணையடியே.
4.101.9
975தருக்கிய தக்கன்றன் வேள்வி தகர்த்தன தாமரைப்போ
துருக்கிய செம்பொன் உவமன் இலாதன வொண்கயிலை
நெருக்கிய வாளரக் கன்றலை பத்தும் நெரித்தவன்றன்
இருக்கியல் பாயின இன்னம்ப ரான்றன் இணையடியே.
4.101.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.101 திருவாரூர் – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

976குலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோ
அலம்பலம் பாவரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்
சிலம்பலம் பாவரு சேவடி யான்றிரு மூலத்தானம்
புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
4.102.1
977மற்றிட மின்றி மனைதுறந் தல்லுணா வல்லமணர்
சொற்றிட மென்று துரிசுபட் டேனுக்கு முண்டுகொலோ
விற்றிடம் வாங்கி விசயனோ டன்றொரு வேடுவனாய்ப்
புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
4.102.2
978ஒருவடி வின்றிநின் றுண்குண்டர் முன்னமக் குண்டுகொலோ
செருவடி வெஞ்சிலை யாற்புரம் அட்டவன் சென்றடையாத்
திருவுடை யான்றிரு வாரூர்த் திருமூலத் தானன்செங்கட்
பொருவிடை யானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
4.102.3
979மாசினை யேறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரைவிட்
டீசனை யேநினைந் தேசறு வேனுக்கும் உண்டுகொலோ
தேசனை ஆரூர்த் திருமூலத் தானனைச் சிந்தைசெய்து
பூசனைப் பூசரர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
4.102.4
980அருந்தும் பொழுதுரை யாடா அமணர் திறமகன்று
வருந்தி நினைந்தர னேயென்று வாழ்த்துவேற் குண்டுகொலோ
திருந்திய மாமதில் ஆரூர்த் திருமூலத் தானனுக்குப்
பொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
4.102.5
981வீங்கிய தோள்களுந் தாள்களு மாய்நின்று வெற்றரையே
மூங்கைகள் போலுண்ணு மூடர்முன் னேநமக் குண்டுகொலோ
தேங்கமழ் சோலைத்தென் னாரூர்த் திருமூலத் தானன்செய்ய
பூங்கழ லானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
4.102.6
982பண்ணிய சாத்திரப் பேய்கள் பறிதலைக் குண்டரைவிட்
டெண்ணிற் புகழீசன் றன்னருள் பெற்றேற்கு முண்டுகொலோ
திண்ணிய மாமதில் ஆரூர்த் திருமூலத் தானனெங்கள்
புண்ணியன் றன்னடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
4.102.7
983கரப்பர்கள் மெய்யைத் தலைபறிக் கச்சுகம் என்னுங்குண்டர்
உரைப்பன கேளாதிங் குய்யப்போந் தேனுக்கும் உண்டுகொலோ
திருப்பொலி ஆரூர்த் திருமூலத் தானன் திருக்கயிலைப்
பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
4.102.8
984கையி லிடுசோறு நின்றுண்ணுங் காதல் அமணரைவிட்
டுய்யும் நெறிகண் டிங்குய்யப் போந்தேனுக்கு முண்டுகொலோ
ஐயன் அணிவயல் ஆரூர்த் திருமூலத் தானனுக்குப்
பொய்யன் பிலாவடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
4.102.9
985குற்ற முடைய அமணர் திறமது கையகன்றிட்
டுற்ற கருமஞ்செய் துய்யப்போந் தேனுக்கும் உண்டுகொலோ
மற்பொலி தோளான் இராவணன் றன்வலி வாட்டுவித்த
பொற்கழ லானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.
4.102.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.102 திருவாரூர் – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

986வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி வினைபெருக்கித்
தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் துணையென் றிருத்திர்தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே.
4.103.1
987ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தா
னாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால் திருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே.
4.103.2
988பூம்படி மக்கலம் பொற்படி மக்கலம் என்றிவற்றால்
ஆம்படி மக்கல மாகிலும் ஆரூர் இனிதமர்ந்தார்
தாம்படி மக்கலம் வேண்டுவ ரேல்தமிழ் மாலைகளால்
நாம்படி மக்கலஞ் செய்து தொழுதுய் மடநெஞ்சமே.
4.103.3
989துடிக்கின்ற பாம்பரை ஆர்த்துத் துளங்கா மதியணிந்து
முடித்தொண்ட ராகி முனிவர்பணிசெய்வ தேயுமன்றிப்
பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர் பாதம் பொறுத்தபொற்பால்
அடித்தொண்டன் நந்தியென் பானுளன் ஆரூர் அமுதினுக்கே.
4.103.4
990கரும்பு பிடித்தவர் காயப்பட் டாரங்கோர் கோடலியால்
இரும்பு பிடித்தவர் இன்புறப் பட்டார் இவர்கள்நிற்க
அரும்பவிழ் தண்பொழில் சூழணி ஆரூர் அமர்ந்தபெம்மான்
விரும்பு மனத்தினை யாதொன்று நானுன்னை வேண்டுவனே.
4.103.5
991கொடிகொள் விதானங் கவரி பறைசங்கங் கைவிளக்கோ
டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர் எய்தியும் ஊனமில்லா
அடிகளும் ஆரூர் அகத்தின ராயினும் அந்தவளப்
பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு நந்தி புறப்படிலே.
4.103.6
 இப்பதிகத்தில் 7,8,9-ம்செய்யுட்கள் சிதைந்து போயின.4.103.7-8
992சங்கொலிப் பித்திடு மின்சிறு காலைத் தடவழலில்
குங்கிலி யப்புகைக் கூட்டென்றுங் காட்டி இருபதுதோள்
அங்குலம் வைத்தவன் செங்குரு திப்புன லோடஅஞ்ஞான்
றங்குலி வைத்தான் அடித்தா மரையென்னை ஆண்டனவே.
4.103.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.103 திருநாகைக்காரோணம் – திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

993வடிவுடை மாமலை மங்கைபங் காகங்கை வார்சடையாய்
கடிகமழ் சோலை சுலவு கடல்நாகைக் காரோணனே
பிடிமத வாரணம் பேணுந் துரகநிற் கப்பெரிய
இடிகுரல் வெள்ளெரு தேறுமி தென்னைகொல் எம்மிறையே.
4.104.1
994கற்றார் பயில்கடல் நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலே
விற்றாங் கியகரம் வேல்நெடுங் கண்ணி வியன்கரமே
நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித் தகர நின்கரமே
செற்றார் புரஞ்செற்ற சேவக மென்னைகொல் செப்புமினே.
4.104.2
995தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடல்நாகைக் காரோணநின்
நாமம் பரவி நமச்சிவா யவென்னும் அஞ்செழுத்துஞ்
சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே.
4.104.3
996பழிவழி யோடிய பாவிப் பறிதலைக் குண்டர்தங்கள்
மொழிவழி யோடி முடிவேன் முடியாமைக் காத்துக்கொண்டாய்
கழிவழி யோதம் உலவு கடல்நாகைக் காரோணவென்
வழிவழி யாளாகும் வண்ணம் அருளெங்கள் வானவனே.
4.104.4
997செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை வெண்ணகைத் தேமொழியார்
வந்து வலஞ்செய்து மாநட மாட மலிந்தசெல்வக்
கந்த மலிபொழில் சூழ்கடல் நாகைக்கா ரோணமென்றுஞ்
சிந்தைசெய் வாரைப் பிரியா திருக்குந் திருமங்கையே.
4.104.5
998பனைபுரை கைம்மத யானை யுரித்த பரஞ்சுடரே
கனைகடல் சூழ்தரு நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலே
மனைதுறந் தல்லுணா வல்லமண் குண்டர் மயக்கைநீக்கி
எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி யான்செயும் இச்சைகளே.
4.104.6
999சீர்மலி செல்வம் பெரிதுடை யசெம்பொன் மாமலையே
கார்மலி சோலை சுலவு கடல்நாகைக் காரோணனே
வார்மலி மென்முலை யார்பலி வந்திடச் சென்றிரந்து
ஊர்மலி பிச்சைகொண் டுண்பது மாதிமை யோவுரையே.
4.104.7
1000வங்கம் மலிகடல் நாகைக்கா ரோணத்தெம் வானவனே
எங்கள் பெருமானோர் விண்ணப்பம் உண்டது கேட்டருளீர்
கங்கை சடையுட் கரந்தாயக் கள்ளத்தை மெள்ளவுமை
நங்கை அறியிற்பொல் லாதுகண்டா யெங்கள் நாயகனே.
4.104.8
 இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று.4.104.9
1001கருந்தடங் கண்ணியுந் தானுங் கடல்நாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை யென்றிறைஞ் சாதன் றெடுக்கலுற்றான்
பெருந்தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்தலற
இருந்தரு ளிச்செய்த தேமற்றுச் செய்திலன் எம்மிறையே.
4.104.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.104 திருவதிகைவீரட்டானம் – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

1002மாசிலொள் வாள்போல் மறியும் மணிநீர்த் திரைத்தொகுதி
ஊசலை யாடியங் கொண்சிறை அன்னம் உறங்கலுற்றால்
பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல்கண்டு
வீசுங் கெடில வடகரைத் தேயெந்தை வீரட்டமே.
4.105.1
1003பைங்காற் றவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுகர்
அங்காற் குவளைமேல் ஆவி உயிர்ப்ப அருகுலவுஞ்
செங்காற் குருகிவை சேருஞ் செறிகெடி லக்கரைத்தே
வெங்காற் குருசிலை வீரன் அருள்வைத்த வீரட்டமே.
4.105.2
1004அம்மலர்க் கண்ணியர் அஞ்சனஞ் செந்துவர் வாயிளையார்
வெம்முலைச் சாந்தம் விலைபெறு மாலை யெடுத்தவர்கள்
தம்மருங் கிற்கிரங் கார்தடந் தோள்மெலி யக்குடைவார்
விம்மு புனற்கெடி லக்கரைத் தேயெந்தை வீரட்டமே.
4.105.3
1005மீனுடைத் தண்புனல் வீரட்ட ரேநும்மை வேண்டுகின்ற
தியானுடைச் சில்குறை ஒன்றுள தால்நறுந் தண்ணெருக்கின்
தேனுடைக் கொன்றைச் சடையுடைக் கங்கைத் திரைதவழுங்
கூனுடைத் திங்கட் குழவியெப் போதுங் குறிக்கொண்மினே.
4.105.4
1006ஆரட்ட தேனும் இரந்துண் டகமக வன்றிரிந்து
வேரட்ட நிற்பித் திடுகின்ற தால்விரி நீர்ப்பரவைச்
சூரட்ட வேலவன் தாதையைச் சூழ்வய லாரதிகை
வீரட்டத் தானை விரும்பா வரும்பாவ வேதனையே.
4.105.5
1007படர்பொற் சடையும் பகுவாய் அரவும் பனிமதியுஞ்
சுடலைப் பொடியு மெல்லா முளவேயவர் தூயதெண்ணீர்க்
கெடிலக் கரைத்திரு வீரட்ட ராவர்கெட் டேனடைந்தார்
நடலைக்கு நற்றுணை யாகுங்கண் டீரவர் நாமங்களே.
4.105.6
1008காளங் கடந்ததோர் கண்டத்த ராகிக் கண்ணார்கெடில
நாளங் கடிக்கோர் நகரமு மாதிற்கு நன்கிசைந்த
தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு மியாழ்கொண்டுந் தாமங்ஙனே
வேடங்கள் கொண்டும் விசும்புசெல் வாரவர் வீரட்டரே.
4.105.7
 இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் மறைந்து போயின.4.105.8-10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.105 திருப்புகலூர் – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

1009தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன் அடியடையப்
புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத் தேழ்நரகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே.
4.106.1
1010பொன்னை வகுத்தன்ன மேனிய னேபுணர் மென்முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்தனே தமியேற் கிரங்காய்
புன்னை மலர்த்தலை வண்டுறங் கும்புக லூரரசே
என்னை வகுத்திலை யேலிடும் பைக்கிடம் யாதுசொல்லே.
4.106.2
 இப்பதிகத்தில் 3-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.4.106.3
1011பொன்னள வார்சடைக் கொன்றையி னாய்புக லூர்க்கரசே
மன்னுள தேவர்கள் தேடு மருந்தே வலஞ்சுழியாய்
என்னள வேயுனக் காட்பட் டிடைக்கலத் தேகிடப்பார்
உன்னள வேயெனக் கொன்றுமி ரங்காத உத்தமனே.
4.106.4
 இப்பதிகத்தில் 5,6,7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.4.106.5-9
1012ஓணப் பிரானும் ஒளிர்மா மலர்மிசை உத்தமனுங்
காணப் பராவியுங் காண்கின் றிலர்கர நாலைந்துடைத்
தோணற் பிரானை வலிதொலைத் தோன்தொல்லை நீர்ப்புகலூர்க்
கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே.
4.106.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.106 திருக்கழிப்பாலை – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

1013நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச்சென்று
கைதை மடற்புல்கு தென்கழிப் பாலை யதனுறைவாய்
பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறியோம்
எய்தப் பெறின்இரங் காதுகண் டாய்நம் மிறையவனே.
4.107.1
1014பருமா மணியும் பவளமுத் தும்பரந் துந்திவரை
பொருமால் கரைமேற் றிரைகொணர்ந் தெற்றப் பொலிந்திலங்குங்
கருமா மிடறுடைக் கண்டனெம் மான்கழிப் பாலையெந்தை
பெருமா னவனென்னை யாளுடை யானிப் பெருநிலத்தே.
4.107.2
1015நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற் றிங்கு நமன்தமராற்
கோட்பட் டொழிவதன் முந்துற வேகுளி ரார்தடத்துத்
தாட்பட்ட தாமரைப் பொய்கையந் தண்கழிப் பாலையண்ணற்
காட்பட் டொழிந்தவன் றேவல்ல மாயிவ் வகலிடத்தே.
4.107.3
 இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.4.107.4-10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.107 திருக்கடவூர் – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

1016மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவாள் எயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.
4.108.1
1017பதத்தெழு மந்திரம் அஞ்செழுத் தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணிதன் இன்னுயிர் உண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட வூருறை உத்தமனே.
4.108.2
1018கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற் கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் காலனைப் பண்டொருகால்
உரப்பிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.
4.108.3
1019மறித்திகழ் கையினன் வானவர் கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணிதன் ஆருயிர் கொள்வான் கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உறுக்கிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.
4.108.4
1020குழைத்திகழ் காதினன் வானவர் கோனைக் குளிர்ந்தெழுந்து
பழக்கமோ டர்ச்சித்த மாணிதன் ஆருயிர் கொள்ளவந்த
தழற்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உழக்கிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.
4.108.5
1021பாலனுக் காயன்று பாற்கடல் ஈந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரண மோதி அருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்த
காலனைக் காய்ந்த பிரான்கட வூருறை உத்தமனே.
4.108.6
1022படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை பணிகயிறா
உடைதலைக் கோத்துழல் மேனியன் உண்பலிக் கென்றுழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் துண்டமதா
உடறிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.
4.108.7
1023வெண்டலை மாலையுங் கங்கைக் கரோடி விரிசடைமேற்
பெண்டனி நாயகன் பேயுகந் தாடும் பெருந்தகையான்
கண்டனி நெற்றியன் காலனைக் காய்ந்து கடலின்விடம்
உண்டருள் செய்தபி ரான்கட வூருறை உத்தமனே.
4.108.8
1024கேழல தாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந் திட்டவம் மாலவற்கன்
றாழியும் ஈந்து அடுதிறற் காலனை அன்றடர்த்து
ஊழியு மாய பிரான்கட வூருறை உத்தமனே.
4.108.9
1025தேன்றிகழ் கொன்றையுங் கூவிளமாலை திருமுடிமேல்
ஆன்றிகழ் ஐந்துகந் தாடும் பிரான்மலை ஆர்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.
4.108.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.108 திருமாற்பேறு – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

 முதலிரு செய்யுட்கள் சிதைந்து போயின4.109.1-2
1026மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன மாவலிபால்
காணிக் கிரந்தவன் காண்டற் கரியன கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப் படுவன பேர்த்துமஃதே
மாணிக்க மாவன மாற்பே றுடையான் மலரடியே.
4.109.3
1027கருடத் தனிப்பாகன் காண்டற் கரியன காதல்செய்யிற்
குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம லக்கரத்தால்
வருடச் சிவப்பன மாற்பே றுடையான் மலரடியே.
4.109.4
 இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.4.109.5-10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.109 திருத்தூங்கானைமாடம் – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

1028பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே.
4.110.1
1029ஆவா சிறுதொண்ட னென்நினைந் தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப் பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுள் தூங்கானை மாடத்தெம் புண்ணியனே.
4.110.2
 இப்பதிகத்தில் 3,4,5,6,7,8,9-ம் செய்யுட்கள் 
சிதைந்து போயின.
4.110.3-9
1030கடவுந் திகிரி கடவா தொழியக் கயிலையுற்றான்
படவுந் திருவிர லொன்றுவைத் தாய்பனி மால்வரைபோல்
இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள் ளாயிருஞ் சோலைதிங்கள்
தடவுங் கடந்தையுள் தூங்கானை மாடத்தெந் தத்துவனே.
4.110.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.110 பசுபதி – திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

1031சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்பரவி
ஏம்பலிப் பார்கட் கிரங்குகண் டாயிருங் கங்கையென்னுங்
காம்பலைக் கும்பணைத் தோளி கதிர்ப்பூண் வனமுலைமேற்
பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை யாளும் பசுபதியே.
4.111.1
1032உடம்பைத் தொலைவித்துன் பாதந் தலைவைத்த உத்தமர்கள்
இடும்பைப் படாமல் இரங்குகண் டாயிரு ளோடச்செந்தீ
அடும்பொத் தனைய அழன்மழு வாவழ லேயுமிழும்
படம்பொத் தரவரை யாயெம்மை யாளும் பசுபதியே.
4.111.2
1033தாரித் திரந்தவி ராவடி யார்தடு மாற்றமென்னும்
மூரித் திரைப்பௌவ நீக்குகண் டாய்முன்னை நாளொருகால்
வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை வேள்வெந்து வீழச்செந்தீப்
பாரித்த கண்ணுடை யாயெம்மை யாளும் பசுபதியே.
4.111.3
1034ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன் பாத மிறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்விகண் டாயண்ட மேயணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்துவேய்த் தோளியஞ்சப்
பருவரைத் தோலுரித் தாயெம்மை யாளும் பசுபதியே.
4.111.4
1035இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன் பாத மிறைஞ்சுகின்றார்க்
கடர்க்கின்ற நோயை விலக்குகண் டாயண்டம் எண்டிசையுஞ்
சுடர்த்திங்கள் சூடிச் சுழற்கங்கை யோடுஞ் சுரும்புதுன்றிப்
படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை யாளும் பசுபதியே.
4.1115
1036அடலைக் கடல்கழி வான்நின் னடியிணை யேயடைந்தார்
நடலைப் படாமை விலக்குகண் டாய்நறுங் கொன்றை திங்கள்
சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ் சூளா மணிகிடந்து
படரச் சுடர்மகு டாயெம்மை யாளும் பசுபதியே.
4.111.6
1037துறவித் தொழிலே புரிந்துன் சுரும்படி யேதொழுவார்
மறவித் தொழிலது மாற்றுகண் டாய்மதின் மூன்றுடைய
அறவைத் தொழில்புரிந் தந்தரத் தேசெல்லு மந்திரத்தேர்ப்
பறவைப் புரமெரித் தாயெம்மை யாளும் பசுபதியே.
4.111.7
 இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.4.111.8-9
1038சித்தத் துருகிச் சிவனெம் பிரானென்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின் றார்பிணி தீர்த்தருளாய்
மத்தத் தரக்கன் இருபது தோளு முடியுமெல்லாம்
பத்துற் றுறநெரித் தாயெம்மை யாளும் பசுபதியே.
4.111.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.111 சரக்கறை – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

1039விடையும் விடைப்பெரும் பாகாவென் விண்ணப்பம் வெம்மழுவாட்
படையும் படையாய் நிரைத்தபல் பூதமும் பாய்புலித்தோல்
உடையு முடைதலை மாலையும் மாலைப் பிறையொதுங்குஞ்
சடையு மிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
4.112.1
1040விஞ்சத் தடவரை வெற்பாவென் விண்ணப்பம் மேலிலங்கு
சங்கக் கலனுஞ் சரிகோ வணமுந் தமருகமும்
அந்திப் பிறையும் அனல்வா யரவும் விரவியெல்லாஞ்
சந்தித் திருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
4.112.2
1041வீந்தார் தலைகல னேந்தீயென் விண்ணப்பம் மேலிலங்கு
சாந்தாய வெந்த தவளவெண் ணீறுந் தகுணிச்சமும்
பூந்தா மரைமேனிப் புள்ளி யுழைமா னதள்புலித்தோல்
தாந்தா மிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
4.112.3
1042வெஞ்சமர் வேழத் துரியாயென் விண்ணப்பம் மேலிலங்கு
வஞ்சமா வந்த வருபுனற் கங்கையும் வான்மதியும்
நஞ்சமா நாகம் நகுசிர மாலை நகுவெண்டலை
தஞ்சமா வாழுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
4.112.4
1043வேலைக் கடல்நஞ்ச முண்டாயென் விண்ணப்பம் மேலிலங்கு
காலற் கடந்தா னிடங்கயி லாயமுங் காமர்கொன்றை
மாலைப் பிறையும் மணிவா யரவும் விரவியெல்லாஞ்
சாலக் கிடக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
4.112.5
1044வீழிட்ட கொன்றையந் தாராயென் விண்ணப்பம் மேலிலங்கு
சூழிட் டிருக்குநற் சூளா மணியுஞ் சுடலைநீறும்
ஏழிட் டிருக்குநல் லக்கு மரவுமென் பாமையோடுந்
தாழிட் டிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
4.112.6
1045விண்டார் புரமூன்று மெய்தாயென் விண்ணப்பம் மேலிலங்கு
தொண்டா டியதொண் டடிப்பொடி நீறுந் தொழுதுபாதங்
கண்டார்கள் கண்டிருக் குங்கயி லாயமுங் காமர்கொன்றைத்
தண்டார் இருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
4.112.7
1046விடுபட்டி ஏறுகந் தேறீயென் விண்ணப்பம் மேலிலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல்தாளம் வீணைமொந்தை
வடுவிட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுந்
தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
4.112.8
1047வெண்டிரைக் கங்கை விகிர்தாவென் விண்ணப்பம் மேலிலங்கு
கண்டிகை பூண்டு கடிசூத் திரமேற் கபாலவடங்
குண்டிகை கொக்கரை கோணற் பிறைகுறட் பூதப்படை
தண்டிவைத் திட்ட சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
4.112.9
1048வேதித்த வெம்மழு வாளீயென் விண்ணப்பம் மேலிலங்கு
சோதித் திருக்குநற் சூளா மணியுஞ் சுடலைநீறும்
பாதிப் பிறையும் படுதலைத் துண்டமும் பாய்புலித்தோல்
சாதித் திருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
4.112.10
1049விவந்தா டியகழல் எந்தாயென் விண்ணப்பம் மேலிலங்கு
தவந்தா னெடுக்கத் தலைபத் திறுத்தனை தாழ்புலித்தோல்
சிவந்தா டியபொடி நீறுஞ் சிரமாலை சூடிநின்று
தவந்தா னிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
4.112.11


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.112 தனி – திருவிருத்தம்


திருச்சிற்றம்பலம்

1050வெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரி நூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடிவெள் ளென்பணிந்து
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய வேதியனே.
4.113.1
1051உடலைத் துறந்துல கேழுங் கடந்துல வாததுன்பக்
கடலைக் கடந்துய்யப் போயிட லாகுங் கனகவண்ணப்
படலைச் சடைப்பர வைத்திரைக் கங்கை பனிப்பிறைவெண்
சுடலைப் பொடிக்கட வுட்கடி மைக்கண் துணிநெஞ்சமே.
4.113.2
1052முன்னே யுரைத்தால் முகமனே யொக்குமிம் மூவுலகுக்
கன்னையும் அத்தனு மாவா யழல்வணா நீயலையோ
உன்னை நினைந்தே கழியுமென் னாவி கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாயெம் பிரானுன்னை வேண்டியதே.
4.113.3
1053நின்னையெப் போது நினையலொட் டாய்நீ நினையப்புகிற்
பின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி
உன்னையெப் போதும் மறந்திட் டுனக்கினி தாயிருக்கும்
என்னையொப் பாருள ரோசொல்லு வாழி இறையவனே.
4.113.4
1054முழுத்தழல் மேனித் தவளப் பொடியன் கனகக்குன்றத்
தெழிற்பெருஞ் சோதியை எங்கள் பிரானை யிகழ்ந்திர்கண்டீர்
தொழப்படுந் தேவர் தொழப்படு வானைத் தொழுதபின்னை
தொழப்படுந் தேவர்தம் மால்தொழு விக்குந்தன் தொண்டரையே.
4.113.5
1055விண்ணகத் தான்மிக்க வேதத் துளான்விரி நீருடுத்த
மண்ணகத் தான்திரு மாலகத் தான்மரு வற்கினிய
பண்ணகத் தான்பத்தர் சித்தத் துளான்பழ நாயடியேன்
கண்ணகத் தான்மனத் தான்சென்னி யானெங் கறைக்கண்டனே.
4.113.6
1056பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்
இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமுங்
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.
4.113.7
1057வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையுந்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே.
4.113.8
1058சிவனெனும் நாமந் தனக்கே யுடையசெம் மேனியெம்மான்
அவனெனை ஆட்கொண் டளித்திடு மாகில் அவன்றனையான்
பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால்
இவனெனைப் பன்னாள் அழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே.
4.113.9
1059என்னையொப் பாருன்னை எங்ஙனம் காண்பர் இகலியுன்னை
நின்னையொப் பார்நின்னைக் காணும் படித்தன்று நின்பெருமை
பொன்னையொப் பாரித் தழலை வளாவிச்செம் மானஞ்செற்று
மின்னையொப் பார மிளிருஞ் சடைக்கற்றை வேதியனே.
4.113.10


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


4.113 தனி – திருவிருத்தம் 


திருச்சிற்றம்பலம்

1060பவளத் தடவரை போலுந்திண் டோ ள்களத் தோள்மிசையே
பவளக் குழைதழைத் தாலொக்கும் பல்சடை அச்சடைமேற்
பவளக் கொழுந்தன்ன பைம்முக நாகமந் நாகத்தொடும்
பவளக்கண் வால மதியெந்தை சூடும் பனிமலரே.
4.114.1
1061முருகார் நறுமலர் இண்டை தழுவிவண் டேமுரலும்
பெருகா றடைசடைக் கற்றையி னாய்பிணி மேய்ந்திருந்த
இருகாற் குரம்பை யிதுநா னுடைய திதுபிரிந்தாற்
தருவாய் எனக்குன் திருவடிக் கீழோர் தலைமறைவே.
4.114.2
1062மூவா உருவத்து முக்கண் முதல்வமீக் கூரிடும்பை
காவா யெனக்கடை தூங்கு மணியைக்கை யாலமரர்
நாவா யசைத்த வொலியொலி மாறிய தில்லையப்பாற்
தீயாய் எரிந்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே.
4.114.3
1063பந்தித்த பாவங்கள் அம்மையிற் செய்தன இம்மைவந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பதென் னேவந் தமரர்முன்னாள்
முந்திச் செழுமல ரிட்டு முடிதாழ்த் தடிவணங்கும்
நந்திக்கு முந்துற ஆட்செய்கி லாவிட்ட நன்னெஞ்சமே.
4.114.4
1064அந்திவட் டத்திளங் கண்ணிய னாறமர் செஞ்சடையான்
புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ
சந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.
4.114.5
1065உன்மத் தகமலர் சூடி உலகந் தொழச்சுடலைப்
பன்மத் தகங்கொண்டு பல்கடை தோறும் பலிதிரிவான்
என்மத் தகத்தே இரவும் பகலும் பிரிவரியான்
தன்மத் தகத்தோர் இளம்பிறை சூடிய சங்கரனே.
4.114.6
1066அரைப்பா லுடுப்பன கோவணச் சின்னங்கள் ஐயமுணல்
வரைப்பாவை யைக்கொண்ட தெக்குடி வாழ்க்கைக்கு வானிரைக்கும்
இரைப்பா படுதலை யேந்துகை யாமறை தேடுமெந்தாய்
உரைப்பார் உரைப்பன வேசெய்தி யாலெங்கள் உத்தமனே.
4.114.7
1067துறக்கப் படாத உடலைத் துறந்துவெந் தூதுவரோ
டிறப்பன் இறந்தால் இருவிசும் பேறுவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே.
4.114.8
1068வேரி வளாய விரைமலர்க் கொன்றை புனைந்தனகன்
சேரி வளாயவென் சிந்தை புகுந்தான் திருமுடிமேல்
வாரி வளாய வருபுனற் கங்கை சடைமறிவாய்
ஏரி வளாவிக் கிடந்தது போலும் இளம்பிறையே.
4.114.9
1069கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப்
பன்னெடுங் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சமுண்டென்
றென்னொடுஞ் சூளறும் அஞ்சல்நெஞ் சேயிமை யாதமுக்கண்
பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண் டீரிப் புகலிடத்தே.
4.114.10
1070மேலு மறிந்திலன் நான்முகன் மேற்சென்று கீழிடந்து
மாலு மறிந்திலன் மாலுற்ற தேவழி பாடுசெய்யும்
பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி மறிந்தசிந்தைக்
கால னறிந்தான் அறிதற் கரியான் கழலடியே.
4.114.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
நான்காம் திருமுறை முற்றும்.

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.