சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.009 தலையே நீவணங்காய்

திருச்சிற்றம்பலம்

தலையே நீவணங்காய் - தலை
  மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
  தலையே நீவணங்காய்.   1 
        

கண்காள் காண்மின்களோ - கடல் 
  நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
  கண்காள் காண்மின்களோ.   2 
        
செவிகாள் கேண்மின்களோ - சிவன்
  எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் 
  செவிகாள் கேண்மின்களோ.   3 
        
மூக்கே நீமுரலாய் - முது
  காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
  மூக்கே நீமுரலாய்.   4 
        
வாயே வாழ்த்துகண்டாய் - மத
  யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
  வாயே வாழ்த்துகண்டாய்.   5 
        
நெஞ்சே நீநினையாய் – நிமிர் 
  புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
  நெஞ்சே நீநினையாய்.   6 
 
        
கைகாள் கூப்பித்தொழீர் - கடி 
  மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
  கைகாள் கூப்பித்தொழீர்.   7 
        
ஆக்கை யாற்பயனென் - அரன் 
  கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ் 
  வாக்கை யாற்பயனென்.   8 
		
 கால்க ளாற்பயனென் - கறைக் 
  கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் 
  கால்க ளாற்பயனென்.   9 
        
உற்றா ராருளரோ - உயிர் 
  கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
  குற்றார் ஆருளரோ.   10 
        
இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் 
  பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
  கிறுமாந் திருப்பன்கொலோ.   11 
        
தேடிக் கண்டுகொண்டேன் - திரு
  மாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே 
  தேடிக் கண்டுகொண்டேன்.   12
 

திருச்சிற்றம்பலம்

Audio


அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : நான்காம்-திருமுறை

பண் : சாதாரி

நாடு : பொது

தலம் : பொது

Author : மதுரை முத்துக்குமரன்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.