சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.087 மேவித்து நின்று

திருச்சிற்றம்பலம்


மேவித்து நின்று விளைந்தன 
  வெந்துயர் துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன 
  அல்லல் அவையறுப்பான்
பாவித்த பாவனை நீயறி 
  வாய்பழ னத்தரசே
கூவித்துக் கொள்ளுந் தனையடி 
  யேனைக் குறிக்கொள்வதே.   1 
 
 
சுற்றிநின் றார்புறங் காவ 
  லமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு 
  நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர 
  சேயுன் பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனைக் 
  குறிக்கொண் டருளுவதே.   2
 
 
ஆடிநின் றாயண்டம் ஏழுங் 
  கடந்துபோய் மேலவையுங்
கூடிநின் றாய்குவி மென்முலை 
  யாளையுங் கொண்டுடனே
பாடிநின் றாய்பழ னத்தர 
  சேயங்கொர் பால்மதியஞ்
சூடிநின் றாயடி யேனையஞ் 
  சாமைக் குறிக்கொள்வதே.   3 
 
		
எரித்துவிட் டாய்அம்பி னாற்புர 
  மூன்றுமுன் னேபடவும்
உரித்துவிட் டாய்உமை யாள்நடுக் 
  கெய்தவொர் குஞ்சரத்தைப்
பரித்துவிட் டாய்பழ னத்தர 
  சேகங்கை வார்சடைமேற்
தரித்துவிட் டாயடி யேனைக் 
  குறிக்கொண் டருளுவதே.   4 
 
 
முன்னியும் முன்னி முளைத்தன 
  மூவெயி லும்முடனே
மன்னியு மங்கும் இருந்தனை 
  மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசறி 
  வாய்பழ னத்தரசே
உன்னியும் உன்னடி யேனைக் 
  குறிக்கொண் டருளுவதே.   5 
 
 
ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந் 
  தேபடைத் தான்றலையைக்
காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று 
  காமனைக் காலனையும்
பாய்ந்தறுத் தாய்பழ னத்தர 
  சேயென் பழவினைநோய்
ஆய்ந்தறுத் தாயடி யேனைக் 
  குறிக்கொண் டருளுவதே.   6 
  
 
மற்றுவைத் தாயங்கோர் மாலொரு 
  பாகம் மகிழ்ந்துடனே
உற்றுவைத் தாய்உமை யாளொடுங் 
  கூடும் பரிசெனவே
பற்றிவைத் தாய்பழ னத்தர 
  சேயங்கொர் பாம்பொருகை
சுற்றிவைத் தாய்அடி யேனைக் 
  குறிக்கொண் டருளுவதே.   7
  
 
ஊரினின் றாய்ஒன்றி நின்றுவிண் 
  டாரையும் ஒள்ளழலாற்
போரினின் றாய்பொறை யாயுயி 
  ராவி சுமந்துகொண்டு
பாரிநின் றாய்பழ னத்தர 
  சேபணி செய்பவர்கட்
காரநின் றாய்அடி யேனைக் 
  குறிக்கொண் டருளுவதே.   8 
  
		
போகம்வைத் தாய்புரி புன்சடை 
  மேலொர் புனலதனை
ஆகம்வைத் தாய்மலை யான்மட 
  மங்கை மகிழ்ந்துடனே
பாகம்வைத் தாய்பழ னத்தர 
  சேயுன் பணியருளால்
ஆகம்வைத் தாய்அடி யேனைக் 
  குறிக்கொண் டருளுவதே.   9 
   
		
அடுத்திருந் தாய்அரக் கன்முடி 
  வாயொடு தோள்நெரியக்
கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி 
  யைக்கிளை யோடுடனே
படுத்திருந் தாய்பழ னத்தர 
  சேபுலி யின்னுரிதோல்
உடுத்திருந் தாய்அடி யேனைக் 
  குறிக்கொண் டருளுவதே.
  


சுவாமி : ஆபத்சகாயர்; அம்பாள் : பெரியநாயகி. 10

திருச்சிற்றம்பலம்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.