சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.040 தானலா துலக

திருச்சிற்றம்பலம்

  தானலா துலக மில்லை 
  சகமலா தடிமை யில்லை
கானலா தாட லில்லை 
  கருதுவார் தங்க ளுக்கு
வானலா தருளு மில்லை 
  வார்குழல் மங்கை யோடும்
ஆனலா தூர்வ தில்லை 
  ஐயனை யாற னார்க்கே.   1   
 

ஆலலால் இருக்கை இல்லை 
  அருந்தவ முனிவர்க் கன்று
நூலலால் நொடிவ தில்லை 
  நுண்பொரு ளாய்ந்து கொண்டு
மாலுநான் முகனுங் கூடி 
  மலரடி வணங்க வேலை
ஆலலால் அமுத மில்லை 
  ஐயனை யாற னார்க்கே.   2 
 

நரிபுரி சுடலை தன்னில் 
  நடமலால் நவிற்ற லில்லை
சுரிபுரி குழலி யோடுந் 
  துணையலால் இருக்கை யில்லை
தெரிபுரி சிந்தை யார்க்குத் 
  தெளிவலால் அருளு மில்லை
அரிபுரி மலர்கொண் டேத்தும் 
  ஐயனை யாற னார்க்கே.   3  
 

தொண்டலாற் றுணையு மில்லை 
  தோலலா துடையு மில்லை
கண்டலா தருளு மில்லை 
  கலந்தபின் பிரிவ தில்லை
பண்டைநான் மறைகள் காணாப் 
  பரிசின னென்றென் றெண்ணி
அண்டவா னவர்கள் ஏத்தும் 
  ஐயனை யாற னார்க்கே.   4 
 

எரியலா லுருவ மில்லை 
  ஏறலால் ஏற லில்லை
கரியலாற் போர்வை யில்லை 
  காண்டகு சோதி யார்க்குப்
பிரிவிலா அமரர் கூடிப் 
  பெருந்தகைப் பிரானென் றேத்தும்
அரியலாற் றேவி யில்லை 
  ஐயனை யாற னார்க்கே.   5 
 

என்பலாற் கலனு மில்லை 
  எருதலா லூர்வ தில்லை
புன்புலால் நாறு காட்டிற் 
  பொடியலாற் சாந்து மில்லை
துன்பிலாத் தொண்டர் கூடித் 
  தொழுதழு தாடிப் பாடும்
அன்பலாற் பொருளு மில்லை 
  ஐயனை யாற னார்க்கே.   6  
 

கீளலால் உடையு மில்லை 
  கிளர்பொறி யரவம் பைம்பூண்
தோளலாற் றுணையு மில்லை 
  தொத்தலர் கின்ற வேனில்
வேளலாற் காயப் பட்ட 
  வீரரு மில்லை மீளா
ஆளலாற் கைம்மா றில்லை 
  ஐயனை யாற னார்க்கே.   7 
 

சகமலா தடிமை யில்லை 
  தானலாற் றுணையு மில்லை
நகமெலாந் தேயக் கையான் 
  நாண்மலர் தொழுது தூவி
முகமெலாங் கண்ணீர் மல்க 
  முன்பணிந் தேத்துந் தொண்டர்
அகமலாற் கோயி லில்லை 
  ஐயனை யாற னார்க்கே.   8  
  

உமையலா துருவ மில்லை 
  உலகலா துடைய தில்லை
நமையெலா முடைய ராவர் 
  நன்மையே தீமை யில்லை
கமையெலா முடைய ராகிக் 
  கழலடி பரவுந் தொண்டர்க்
கமைவிலா அருள் கொடுப்பார் 
  ஐயனை யாற னார்க்கே.   9 
 

மலையலா லிருக்கை யில்லை 
  மதித்திடா அரக்கன் றன்னைத்
தலையலால் நெரித்த தில்லை 
  தடவரைக் கீழ டர்த்து
நிலையிலார் புரங்கள் வேவ 
  நெருப்பலால் விரித்த தில்லை
அலையினார் பொன்னி மன்னும் 
  ஐயனை யாற னார்க்கே.
		
	

சுவாமி:அக்கினீசுவரர்;அம்பாள்:கருந்தார்குழலியம்மை. 10

திருச்சிற்றம்பலம்

Audio


அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : நான்காம்-திருமுறை

பண் : திருநேரிசை

நாடு : சோழநாடு காவிரி வடகரை

தலம் : ஐயாறு

Author : மதுரை முத்துக்குமரன்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.