சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.037 காலனை வீழச்

திருச்சிற்றம்பலம்

காலனை வீழச் செற்ற 
  கழலடி இரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன் 
  மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங் 
  குளிர்பொழிற் கோயில் மேய
நீலம்வைத் தனைய கண்ட 
  நினைக்குமா நினைக்கின் றேனே.   1 
 

காமனை யன்று கண்ணாற் 
  கனலெரி யாக நோக்கித்
தூபமுந் தீபங் காட்டித் 
  தொழுமவர்க் கருள்கள் செய்து
சேமநெய்த் தான மென்னுஞ் 
  செறிபொழிற் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம் 
  வாழ்வுற நினைந்த வாறே.   2 
 

பிறைதரு சடையின் மேலே 
  பெய்புனற் கங்கை தன்னை
உறைதர வைத்த எங்கள் 
  உத்தமன் ஊழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ 
  நின்றநெய்த் தான மென்று
குறைதரும் அடிய வர்க்குக் 
  குழகனைக் கூட லாமே.   3 
 

வடிதரு மழுவொன் றேந்தி 
  வார்சடை மதியம் வைத்துப்
பொடிதரு மேனி மேலே 
  புரிதரு நூலர் போலும்
நெடிதரு பொழில்கள் சூழ 
  நின்றநெய்த் தானம் மேவி
அடிதரு கழல்கள் ஆர்ப்ப 
  ஆடுமெம் அண்ண லாரே.   4 
 

காடிட மாக நின்று 
  கனலெரி கையி லேந்திப்
பாடிய பூதஞ் சூழப் 
  பண்ணுடன் பலவுஞ் சொல்லி
ஆடிய கழலர் சீரார் 
  அந்தண்நெய்த் தானம் என்றுங்
கூடிய குழக னாரைக் 
  கூடுமா றறிகி லேனே.   5 
 

வானவர் வணங்கி யேத்தி 
  வைகலும் மலர்கள் தூவத்
தானவர்க் கருள்கள் செய்யும் 
  சங்கரன் செங்கண் ஏற்றன்
தேனமர் பொழில்கள் சூழத் 
  திகழுநெய்த் தானம் மேய
கூனிள மதியி னானைக் 
  கூடுமா றறிகி லேனே.   6 
 

காலதிற் கழல்க ளார்ப்பக் 
  கனலெரி கையில் வீசி
ஞாலமுங் குழிய நின்று 
  நட்டம தாடு கின்ற
மேலவர் முகடு தோய 
  விரிசடை திசைகள் பாய
மாலொரு பாக மாக 
  மகிழ்ந்தநெய்த் தான னாரே.   7 
 

பந்தித்த சடையின் மேலே 
  பாய்புன லதனை வைத்து
அந்திப்போ தனலு மாடி 
  அடிகள்ஐ யாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று 
  வாழ்த்துவார் வாயி னுள்ளார்
சிந்திப்பார் சிந்தை யுள்ளார் 
  திருந்துநெய்த் தான னாரே.   8 
  

சோதியாய்ச் சுடரு மானார் 
  சுண்ணவெண் சாந்து பூசி
ஓதிவா யுலகம் ஏத்த 
  உகந்துதாம் அருள்கள் செய்வார்
ஆதியாய் அந்த மானார் 
  யாவரும் இறைஞ்சி யேத்த
நீதியாய் நியம மாகி 
  நின்றநெய்த் தான னாரே.   9  
 

இலையுடைப் படைகை யேந்தும் 
  இலங்கையர் மன்னன் றன்னைத்
தலையுடன் அடர்த்து மீண்டே 
  தானவற் கருள்கள் செய்து
சிலையுடன் கணையைச் சேர்த்துத் 
  திரிபுரம் எரியச் செற்ற
நிலையுடை யடிகள் போலும் 
  நின்றநெய்த் தான னாரே.
		

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமி:நெய்யாடியப்பர்;அம்பாள்:பாலாம்பிகையம்மை. 10

திருச்சிற்றம்பலம்

Audio


அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : நான்காம்-திருமுறை

பண் : திருநேரிசை

நாடு : சோழநாடு காவிரி வடகரை

தலம் : நெய்த்தானம்

Author : மதுரை முத்துக்குமரன்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.