சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.026 நம்பனே எங்கள்

திருச்சிற்றம்பலம்

நம்பனே எங்கள் கோவே 
  நாதனே ஆதி மூர்த்தி
பங்கனே பரம யோகி 
  என்றென்றே பரவி நாளுஞ்
செம்பொனே பவளக் குன்றே 
  திகழ்மலர்ப் பாதங் காண்பான்
அன்பனே அலந்து போனேன் 
  அதிகைவீ ரட்ட னீரே.   1 
 
 
பொய்யினால் மிடைந்த போர்வை 
  புரைபுரை அழுகி வீழ
மெய்யனாய் வாழ மாட்டேன் 
  வேண்டிற்றொன் றைவர் வேண்டார்
செய்யதா மரைகள் அன்ன 
  சேவடி இரண்டுங் காண்பான்
ஐயநான் அலந்து போனேன் 
  அதிகைவீ ரட்ட னீரே.   2 
 
 
நீதியால் வாழ மாட்டேன் 
  நித்தலுந் தூயே னல்லேன்
ஓதியும் உணர மாட்டேன் 
  உன்னையுள் வைக்க மாட்டேன்
சோதியே சுடரே உன்றன் 
  தூமலர்ப் பாதங் காண்பான்
ஆதியே அலந்து போனேன் 
  அதிகைவீ ரட்ட னீரே.   3 
 
 
தெருளுமா தெருள மாட்டேன் 
  தீவினைச் சுற்ற மென்னும்
பொருளுளே அழுந்தி நாளும்
  போவதோர் நெறியுங் காணேன்
இருளுமா மணிகண் டாநின் 
  இணையடி இரண்டுங் காண்பான்
அருளுமா றருள வேண்டும் 
  அதிகைவீ ரட்ட னீரே.   4 
 
 
அஞ்சினால் இயற்றப் பட்ட 
  ஆக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப் பட்டிங் 
  குழிதரும் ஆத னேனை
அஞ்சினால் உய்க்கும் வண்ணங் 
  காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி 
  அதிகைவீ ரட்ட னீரே.   5 
 
 
உறுகயி றூசல் போல 
  ஒன்றுவிட் டொன்று பற்றி
மறுகயி றூசல் போல 
  வந்துவந் துலவு நெஞ்சம்
பெறுகயி றூசல் போலப் 
  பிறைபுல்கு சடையாய் பாதத்
தறுகயி றூச லானேன் 
  அதிகைவீ ரட்ட னீரே.   6 
 
 
கழித்திலேன் காம வெந்நோய் 
  காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி 
  உணர்வெனும் இமைதி றந்து
விழித்திலேன் வெளிறு தோன்ற 
  வினையெனுஞ் சரக்குக் கொண்டேன்
அழித்திலேன் அயர்த்துப் போனேன் 
  அதிகைவீ ரட்ட னீரே.   7 
 
 
மன்றத்துப் புன்னை போல 
  மரம்படு துயர மெய்தி
ஒன்றினால் உணர மாட்டேன் 
  உன்னையுள் வைக்க மாட்டேன்
கன்றிய காலன் வந்து 
  கருக்குழி விழுப்ப தற்கே
அன்றினான் அலமந் திட்டேன் 
  அதிகைவீ ரட்ட னீரே.   8 
 
 
பிணிவிடா ஆக்கை பெற்றேன் 
  பெற்றமொன் றேறு வானே
பணிவிடா இடும்பை யென்னும் 
  பாசனத் தழுந்து கின்றேன்
துணிவிலேன் தூய னல்லேன் 
  தூமலர்ப் பாதங் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன் 
  அதிகைவீ ரட்ட னீரே.   9 
 
 
திருவினாள் கொழுந னாருந் 
  திசைமுக முடைய கோவும்
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் 
  இணையடி காண மாட்டா
ஒருவனே எம்பி ரானே 
  உன்திருப் பாதங் கண்பான்
அருவனே அருள வேண்டும் 
  அதிகைவீ ரட்ட னீரே.
  

சுவாமி:வீரட்டானேஸ்வரர்;அம்பாள்:திரிபுரசுந்தரி.10


திருச்சிற்றம்பலம்

Audio


அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : நான்காம்-திருமுறை

பண் : திருநேரிசை

நாடு : நடுநாடு

தலம் : அதிகை வீரட்டானம்

Author : மதுரை முத்துக்குமரன்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.