சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.020 காண்டலேகருத் தாய்நினைந்திருந்

திருச்சிற்றம்பலம்

காண்டலேகருத் தாய்நினைந்திருந் 
  தேன்மனம்புகுந் தாய்கழலடி
பூண்டுகொண் டொழிந்தேன் 
  புறம்போயி னாலறையோ
ஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை 
  மேலெழுகொடி வானிளம்மதி
தீண்டிவந் துலவுந் 
  திருவாரூ ரம்மானே.   1 
  
		
கடம்படந்நட மாடினாய்களை 
  கண்ணெனக்கொரு காதல்செய்தடி
ஒடுங்கி வந்தடைந் 
  தேனொழிப்பாய் பிழைப்பவெல்லாம்
முடங்கிறால்முது நீர்மலங்கிள 
  வாளைசெங்கயல் சேல்வரால்களி
றடைந்த தண்கழனி 
  அணியாரூ ரம்மானே.   2 
  

 அருமணித்தடம் பூண்முலை 
  அரம்பையரொ டருளிப்பாடியர்
உரிமையிற் றொழுவார் 
  உருத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர் 
  சைவர்பாசுப தர்கபாலிகள்
தெருவினிற் பொலியுந் 
  திருவாரூ ரம்மானே.   3 
  

 பூங்கழல்தொழு தும்பரவியும் 
  புண்ணியாபுனி தாவுன்பொற்கழல்
ஈங்கிருக்கப் பெற்றேன் 
  என்னகுறை யுடையேன்
ஓங்குதெங்கிலை யார்கமுகிள 
  வாழைமாவொடு மாதுளம்பல
தீங்கனி சிதறுந் 
  திருவாரூ ரம்மானே.   4 
  

   நீறுசேர்செழு மார்பினாய்நிரம் 
  பாமதியொடு நீள்சடையிடை
ஆறுபாய வைத்தாய் 
  அடியே அடைந்தொழிந்தேன்
ஏறிவண்டொடு தும்பியஞ்சிற 
  கூன்றவிண்ட மலரிதழ்வழி
தேறல்பாய்ந் தொழுகுந் 
  திருவாரூ ரம்மானே.   5 
  

 அளித்துவந்தடி கைதொழுமவர் 
  மேல்வினைகெடு மென்றிவையகங்
களித்துவந் துடனே 
  கலந்தாடக் காதலராய்க்
குளித்துமூழ்கியுந் தூவியுங்குடைந் 
  தாடுகோதையர் குஞ்சியுள்புகத்
தெளிக்குந் தீர்த்தமறாத் 
  திருவாரூ ரம்மானே.   6 
  

 திரியுமூவெயில் தீயெழச்சிலை 
  வாங்கிநின்றவ னேயென்சிந்தையுட்
பிரியுமா றெங்ஙனே 
  பிழைத்தேயும் போகலொட்டேன்
பெரியசெந்நெற் பிரம்புரிகெந்த 
  சாலிதிப்பிய மென்றிவையகத்
தரியுந் தண்கழனி 
  யணியாரூ ரம்மானே.   7 
  

 பிறத்தலும்பிறந் தாற்பிணிப்பட 
  வாய்ந்தசைந்துட லம்புகுந்துநின்
றிறக்குமா றுளதே 
  இழித்தேன் பிறப்பினைநான்
அறத்தையேபுரிந் தமனத்தனாய் 
  ஆர்வச்செற்றக்கு ரோதநீக்கியுன்
திறத்தனாய் ஒழிந்தேன் 
  திருவாரூ ரம்மானே.   8 
  

 முளைத்தவெண்பிறை மொய்சடையுடை 
  யாயெப்போதுமென் னெஞ்சிடங்கொள்ள
வளைத்துக் கொண்டிருந்தேன் 
  வலிசெய்து போகலொட்டேன்
அளைப்பிரிந்த அலவன்போய்ப்புகு 
  தந்தகாலமுங் கண்டுதன்பெடை
திளைக்குந் தண்கழனித் 
  திருவாரூ ரம்மானே.   9 
  

 நாடினார்கம லம்மலரய 
  னோடிரணியன் ஆகங்கீண்டவன்
நாடிக் காணமாட்டாத் 
  தழலாய நம்பானைப்
பாடுவார்பணி வார்பல்லாண்டிசை 
  கூறுபத்தர்கள் சித்தத்துள்புக்குத்
தேடிக் கண்டுகொண்டேன் 
  திருவாரூ ரம்மானே.
   


சுவாமி : புற்றிடங்கொண்டார்; அம்பாள் : அல்லியம்பூங்கோதை. 10

திருச்சிற்றம்பலம்

Audio


அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : நான்காம்-திருமுறை

பண் : சீகாமரம்

நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

தலம் : ஆரூர்

Author : மதுரை முத்துக்குமரன்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.