சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.015 பற்றற் றார்சேற்

திருச்சிற்றம்பலம்


பற்றற் றார்சேர் பழம்பதியைப் 
  பாசூர் நிலாய பவளத்தைச்
சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் 
  தீண்டற் கரிய திருவுருவை
*வெற்றி யூரில் விரிசுடரை 
  விமலர் கோனைத் திரைசூழ்ந்த
ஒற்றி யூரெம் உத்தமனை 
  உள்ளத் துள்ளே வைத்தேனே.

* வெற்றியூரென்பது வைப்புத்தலங்களிலொன்று.   1 

  ஆனைக் காவில் அணங்கினை 
  ஆரூர் நிலாய அம்மானைக்
கானப் பேரூர்க் கட்டியைக் 
  கானூர் முளைத்த கரும்பினை
வானப் பேரார் வந்தேத்தும் 
  வாய்மூர் வாழும் வலம்புரியை
மானக் கயிலை மழகளிற்றை 
  மதியைச் சுடரை மறவேனே.   2 
  

 மதியங் கண்ணி ஞாயிற்றை 
  மயக்கந் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை 
  ஐயா றமர்ந்த ஐயனை
விதியைப் புகழை வானோர்கள் 
  வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை 
  நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே.   3 
  

  புறம்ப யத்தெம் முத்தினைப் 
  புகலூர் இலங்கு பொன்னினை
*உறந்தை யோங்கு சிராப்பள்ளி 
  உலகம் விளக்கு ஞாயிற்றைக்
கறங்கு மருவிக் கழுக்குன்றிற் 
  காண்பார் காணுங் கண்ணானை
அறஞ்சூழ் அதிகை வீரட்டத் 
  தரிமான் ஏற்றை அடைந்தேனே.

* உறந்தையென்பது உறையூர்.   4 

 கோலக் காவிற் குருமணியைக் 
  *குடமூக் குறையும் விடமுணியை
ஆலங் காட்டி லந்தேனை 
  அமரர் சென்னி யாய்மலரைப்
பாலிற் றிகழும் பைங்கனியைப் 
  பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
சூலத் தானைத் துணையிலியைத் 
  தோளைக் குளிரத் தொழுதேனே.

*குடமூக்கென்பது கும்பகோணம்.   5 

 மருக லுறையுமா ணிக்கத்தை 
  வலஞ் சுழியின் மாலையை
கருகா வூரிற் கற்பகத்தைக் 
  காண்டற் கரிய கதிரொளியைப்
பெருவே ளூரெம் பிறப்பிலியைப் 
  பேணு வார்கள் பிரிவரிய
திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் 
  சிந்தை யுள்ளே வைத்தேனே.   6 
  

 எழிலார் இராச சிங்கத்தை 
  இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக்
குழலார் கோதை வரைமார்பிற் 
  குற்றா லத்தெங் கூத்தனை
நிழலார் சோலை நெடுங்களத்து 
  நிலாய நித்த மணாளனை
அழலார் வண்ணத் தம்மானை 
  அன்பி லணைத்து வைத்தேனே.   7 
  

 மாலைத் தோன்றும் வளர்மதியை 
  மறைக்காட் டுறையும் மணாளனை
ஆலைக் கரும்பி னின்சாற்றை 
  அண்ணா மலையெம் அண்ணலைச்
சோலைத் துருத்தி நகர்மேய 
  சுடரிற் றிகழுந் துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை 
  விருப்பால் விழுங்கி யிட்டேனே.   8 
  


 சோற்றுத் துறையெஞ் சோதியைத் 
  துருத்தி மேய தூமணியை
ஆற்றிற் பழனத் தம்மானை 
  ஆல வாயெம் மருமணியை
நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள் 
  நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத்
தோற்றக் கடலை அடலேற்றைத் 
  தோளைக் குளிரத் தொழுதேனே.   9 
  

 புத்தூ ருறையும் புனிதனைப் 
  பூவ ணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை 
  வேள்விக் குடியெம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் 
  பொதியில் மேய புராணனை
வைத்தேன் என்றன் மனத்துள்ளே 
  *மாத்தூர் மேய மருந்தையே.

* மாத்தூரென்பது - திருவாமாத்தூர்.   10 

 முந்தித் தானே முளைத்தானை 
  மூரி வெள்ளே றூர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை 
  அரக்க னாற்றல் அழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச் 
  செஞ்சொன் மாலை யடிச்சேர்த்தி
எந்தை பெம்மான் என்னெம்மான் 
  என்பார் பாவ நாசமே.   11 
  
 
		
  	

திருச்சிற்றம்பலம்

Audio


அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : நான்காம்-திருமுறை

பண் : பழம்பஞ்சுரம்

நாடு : பொது

தலம் : பொது

Author : மதுரை முத்துக்குமரன்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.