சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.014 பருவரை யொன்றுசுற்றி

திருச்சிற்றம்பலம்

பருவரை யொன்றுசுற்றி அரவங்கை விட்ட
  இமையோர் இரிந்து பயமாய்த்
திருநெடு மால்நிறத்தை அடுவான் விசும்பு 
  சுடுவா னெழுந்து விசைபோய்ப்
பெருகிட மற்றிதற்கொர் பிதிகார மொன்றை 
  அருளாய் பிரானே எனலும்
அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட 
  அவனண்டர் அண்ட ரரசே.   1 
  

 நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்ட மூட 
  நிலநின்று தம்ப மதுவப்
பரமொரு தெய்வமெய்த இதுவொப்ப தில்லை 
  யிருபாலு நின்று பணியப்பிரமனு மாலுமேலை முடியோடு பாதம் 
  அறியாமை நின்ற பெரியோன்
பரமுத லாயதேவர் சிவனாய மூர்த்தி 
  யவனா நமக்கோர் சரணே.   2 
  

காலமு நாள்கள்ஊழி படையா முன்ஏக 
  உருவாகி மூவர் உருவில்
சாலவு மாகிமிக்க சமயங்க ளாறின் 
  உருவாகி நின்ற தழலோன்
ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழு முண்டு 
  குறளாயொ ராலின் இலைமேல்
பாலனு மாயவற்கோர் பரமாய மூர்த்தி 
  யவனா நமக்கோர் சரணே.   3 
 

நீடுயர் மண்ணுவிண்ணும் நெடுவேலை குன்றொ 
  டுலகேழு மெங்கு நலியச்
சூடிய கையராகி இமையோர் கணங்கள் 
  துதியோதி நின்று தொழலும்
ஓடிய தாரகன்றன் உடலம் பிளந்து 
  ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மாநடத்தெ மனலாடி பாதம் 
  அவையா நமக்கோர் சரணே.   4 
  

 
நிலைவலி இன்றியெங்கும் நிலனோடு விண்ணும் 
  நிதனஞ்செய் தோடு புரமூன்
றலைநலி வஞ்சியோடி அரியோடு தேவர் 
  அரணம் புகத்தன் அருளாற்
கொலைநலி வாளிமூள அரவங்கை நாணும் 
  அனல்பாய நீறு புரமா
மலைசிலை கையிலொல்க வளைவித்த வள்ள 
  லவனா நமக்கோர் சரணே.   5 
  

 நீலநன் மேனிசெங்கண் வளைவெள் ளெயிற்ற 
  னெரிகேசன் நேடி வருநாள்
காலைநன் மாலைகொண்டு வழிபாடு செய்யும் 
  அளவின்கண் வந்து குறுகிப்
பாலனை ஓடவோடப் பயமெய்து வித்த 
  உயிர்வவ்வு பாசம் விடுமக்
காலனை வீடுசெய்த கழல்போலும் அண்டர்
  தொழுதோது சூடு கழலே.   6 
  

 உயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்வி தன்னில் 
  அவியுண்ண வந்த இமையோர்
பயமுறு மெச்சனங்கி மதியோனு முற்ற 
  படிகண்டு நின்று பயமாய்
அயனொடு மாலுமெங்க ளறியாமை யாதி 
  கமியென் றிறைஞ்சி யகலச்
சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணன் எந்தை 
  கழல்கண்டு கொள்கை கடனே.   7 
  

 நலமலி மங்கைநங்கை விளையாடி யோடி 
  நயனத் தலங்கள் கரமா
உலகினை ஏழுமுற்றும் இருள்மூட மூட 
  இருளோட நெற்றி ஒருகண்
அலர்தர அஞ்சிமற்றை நயனங்கை விட்டு 
  மடவாள் இறைஞ்ச மதிபோல்
அலர்தரு சோதிபோல அலர்வித்த முக்கண் 
  அவனா நமக்கோர் சரணே.   8 
  

 கழைபடு காடுதென்றல் குயில்கூவ அஞ்சு 
  கணையோன் அணைந்து புகலும்
மழைவடி வண்ணன்எண்ணி மகவோனை விட்ட 
  மலரான தொட்ட மதனன்
எழில்பொடி வெந்துவீழ இமையோர் கணங்கள் 
  எரியென் றிறைஞ்சி யகலத்
தழல்படு நெற்றிஒற்றை நயனஞ் சிவந்த 
  தழல்வண்ணன் எந்தை சரணே.   9 
  

 தடமலர் ஆயிரங்கள் குறைவொன்ற தாக 
  நிறைவென்று தன்க ணதனால்
உடன்வழி பாடுசெய்த திருமாலை யெந்தை 
  பெருமான் உகந்து மிகவும்
சுடரடி யான்முயன்று சுழல்வித் தரக்கன் 
  இதயம் பிளந்த கொடுமை
அடல்வலி ஆழியாழி யவனுக் களித்த 
  அவனா நமக்கோர் சரணே.   10 
  

 கடுகிய தேர்செலாது கயிலாய மீது 
  கருதேலுன் வீரம் ஒழிநீ
முடுகுவ தன்றுதன்ம மெனநின்று பாகன் 
  மொழிவானை நன்று முனியா
விடுவிடு வென்றுசென்று விரைவுற் றரக்கன் 
  வரையுற் றெடுக்க முடிதோள்
நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம் 
  நினைவுற்ற தென்றன் மனனே.   11 
		
  	

திருச்சிற்றம்பலம்

Audio


அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : நான்காம்-திருமுறை

பண் : பழம்பஞ்சுரம்

நாடு : பொது

தலம் : பொது

Author : மதுரை முத்துக்குமரன்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.