சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.013 விடகிலேன் அடிநாயேன்

திருச்சிற்றம்பலம்

விடகிலேன் அடிநாயேன்
  வேண்டியக்கால் யாதொன்றும்
இடகிலேன் அமணர்கள்தம்
  அறவுறைகேட் டலமலந்தேன்
தொடர்கின்றேன் உன்னுடைய
  தூமலர்ச்சே வடிகாண்பான்
அடைகின்றேன் ஐயாறர்க்
  காளாய்நான் உய்ந்தேனே.   1 
  

 செம்பவளத் திருவுருவர்
  திகழ்சோதி குழைக்காதர்
கொம்பமருங் கொடிமருங்குற்
  கோல்வளையா ளொருபாகர்
வம்பவிழும் மலர்க்கொன்றை
  வளர்சடைமேல் வைத்துகந்த
அம்பவள ஐயாறர்க்
  காளாய்நான் உய்ந்தேனே.   2 
 

நணியானே சேயானேநம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே
  சுண்ணவெண் ணீற்றானே
மணியானே வானவர்க்கு
  மருந்தாகிப் பிணிதீர்க்கும்
அணியானே ஐயாறர்க்
  காளாய்நான் உய்ந்தேனே.   3 
 

ஊழித்தீ யாய்நின்றாய்
  உள்குவார் உள்ளத்தாய்
வாழித்தீ யாய்நின்றாய்
  வாழ்த்துவார் வாயானே
பாழித்தீ யாய்நின்றாய்
  படர்சடைமேற் பனிமதியம்
ஆழித்தீ ஐயாறார்க்
  காளாய்நான் உய்ந்தேனே.   4 
  

   சடையானே சடையிடையே
  தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறிப்
  புரமெரித்த வித்தகனே
உடையானே உடைதலைகொண்
  டூரூருண் பலிக்குழலும்
அடையானே ஐயாறர்க்
  காளாய்நான் உய்ந்தேனே.   5 
  

 
நீரானே தீயானே
  நெதியானே கதியானே
ஊரானே உலகானே
  உடலானே உயிரானே
பேரானே பிறைசூடீ
  பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத ஐயாறர்க்
  காளாய்நான் உய்ந்தேனே.   6 
  

 கண்ணானாய் மணியானாய்
  கருத்தானாய் *அருத்தானாய்
எண்ணானாய் எழுத்தானாய்
எழுத்தினுக்கோர் இயல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 

* அருத்தனாயென்பதற்கு - உண்ணப்படும் பொருள்களாயின
எனப் பொருள்படுகின்றது.   7 

 மின்னானாய் உருமானாய்
  வேதத்தின் பொருளானாய்
பொன்னானாய் மணியானாய்
  பொருகடல்வாய் முத்தானாய்
நின்னானார் இருவர்க்குங்
  காண்பரிய நிமிர்சோதி
அன்னானே ஐயாறர்க்
  காளாய்நான் உய்ந்தேனே.   8 
  

 முத்திசையும் புனற்பொன்னி
  மொய்பவளங் கொழித்துந்தப்
பத்தர்பலர் நீர்மூழ்கிப்
  பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்கள்
  எம்பெருமா னெனஇறைஞ்சும்
அத்திசையாம் ஐயாறர்க்
  காளாய்நான் உய்ந்தேனே.   9 
  

 கருவரைசூழ் கடலிலங்கைக்
  கோமானைக் கருத்தழியத்
திருவிரலால் உதகரணஞ்
  செய்துகந்த சிவமூர்த்தி
பெருவரைசூழ் வையகத்தார்
  பேர்நந்தி என்றேத்தும்
அருவரைசூழ் ஐயாறர்க்
  காளாய்நான் உய்ந்தேனே.
  

சுவாமி : செம்பொற்சோதீசுவரர்; அம்பாள் : அறம்வளர்த்தநாயகி. 10

திருச்சிற்றம்பலம்

Audio


அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : நான்காம்-திருமுறை

பண் : பழந்தக்கராகம்

நாடு : சோழநாடு காவிரி வடகரை

தலம் : ஐயாறு

Author : மதுரை முத்துக்குமரன்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.