சமீபத்திய செய்தி

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவற்றுள், ஈழத்தில் வழங்கும் சமயங்கள் நான்கு, அவை சைவம்
நன்கொடை
English

+94 123 456 789

நன்கொடை
English

416 528 1407

04.012 சொன்மாலை பயில்கின்ற

திருச்சிற்றம்பலம்

சொன்மாலை பயில்கின்ற
  குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு
  பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கள்
  முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பன்என்
  புதுநலமுண் டிகழ்வானோ.   1  
       
  
 கண்டகங்காள் முண்டகங்காள்
  கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான்
  பாட்டோ வாப் பழனத்தான்
வண்டுலாந் தடமூழ்கி
  மற்றவனென் தளிர்வண்ணங்
கொண்டநாள் தானறிவான்
  குறிக்கொள்ளா தொழிவானோ.   2 
        
  
 மனைக்காஞ்சி* இளங்குருகே
  மறந்தாயோ மதமுகத்த
பனைக்கைமா வுரிபோர்த்தான்
  பலர்பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பெல்லாம்
  உரையாயோ நிகழ்வண்டே
சுனைக்குவளை மலர்க்கண்ணாள்
  சொற்றூதாய்ச் சோர்வாளோ. 

* மனைக்காஞ்சியென்பது வீட்டுக்குச் சமீபத்திலிருக்குங் காஞ்சிமரம்.   3 
        
 
புதியையாய் இனியையாம்
  பூந்தென்றால் புறங்காடு
பதியாவ திதுவென்று
  பலர்பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்விதனைமதித்திட்ட மதிகங்கை
விதியாளன் என்னுயிர்மேல்
  விளையாடல் விடுத்தானோ.   4 
   
 
மண்பொருந்தி வாழ்பவர்க்கும்
  மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும்
  வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த இசைபாடும்
  பழனஞ்சேர் அப்பனையென்
கண்பொருந்தும் போழ்தத்துங்
  கைவிடநான் கடவேனோ.   5 
   
 
பொங்கோத மால்கடலிற்
  புறம்புறம்போய் இரைதேருஞ்
செங்கால்வெண் மடநாராய்
  செயற்படுவ தறியேன்நான்
அங்கோல வளைகவர்ந்தான்
  அணிபொழில்சூழ் பழனத்தான்
தங்கோல நறுங்கொன்றைத்
  தாரருளா தொழிவானோ.   6 
   
 
துணையார முயங்கிப்போய்த்
  துறைசேரும் மடநாராய்
பணையார வாரத்தான்
  பாட்டோ வாப் பழனத்தான்
கணையார இருவிசும்பிற்
  கடியரணம் பொடிசெய்த
இணையார மார்பன்என்
  எழில்நலமுண் டிகழ்வானோ.   7  
  
  
கூவைவாய்* மணிவரன்றிக்
  கொழித்தோடுங் **காவிரிப்பூம்
பாவைவாய் முத்திலங்கப்
  பாய்ந்தாடும் பழனத்தான்
கோவைவாய் மலைமகள்கோன்
  கொல்லேற்றின் கொடியாடைப்
பூவைகாள் மழலைகாள்
  போகாத பொழுதுளதே. 
 
*கூவைவாய்மணி என்பது பூமியினிடத்தில் பொருந்திய முத்துக்கள் - அவையாவன - யானைக்கொம்பு, பன்றிக்கொம்பு, நாகம், பசுவின்பல், 
மூங்கிற்கணு, கொக்கின்கழுத்து, கற்புள்ள மாதர்கண்டம் என்னுமிவ்விடங்களி லுண்டாயிருக்கு முத்துக்களாம்.

**காவிரிப்பூம்பாவைவாய் முத்து என்பது நீர்முத்து எனக்கொள்க. அவை - சங்கு, இப்பி, மீன், தாமரை மலர் என்னு மிவைகளி லுண்டாகு முத்துக்கள். இதனை 
"சிறைகொள் நீர்த்தரளத் திரல்கொணித்திலத்த" எனத் திருமாளிகைத்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பா, 2-வது பதிகம் 5-வது திருப்பாடலானு முணர்க.   8 
 
 
புள்ளிமான் பொறியரவம்
  புள்ளுயர்த்தான் மணிநாகப்
பள்ளியான் தொழுதேத்த
  இருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினைதீர்க்கும்
  என்றுரைப்பர் உலகெல்லாங்
கள்ளியேன் நான்இவற்கென்
  கனவளையுங் கடவேனோ.   9 
   
 
வஞ்சித்தென் வளைகவர்ந்தான்
  வாரானே யாயிடினும்
பஞ்சிக்காற் சிறகன்னம்
  பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போய்க் கலிமெலிய
  அழலோம்பும் அப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற
  சேவடியாய் கோடியையே.
   
		

சுவாமி : ஆபத்சகாயர்; அம்பாள் : பெரியநாயகியம்மை. 10

திருச்சிற்றம்பலம்

Audio


அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : நான்காம்-திருமுறை

பண் : பழந்தக்கராகம்

நாடு : சோழநாடு காவிரி வடகரை

தலம் : பழனம்

Author : மதுரை முத்துக்குமரன்

Copyrights © 2022 to Saivaneethi. All rights reserved.